தேர்வு எழுதும் அறையில் தூங்கிய மாணவர்!! எழுப்பிய ஆசிரியருக்கு மாணவரால் நேர்ந்த விபரீதம்!!

0
39
A student who slept in the examination room!! The tragedy happened to the teacher who woke up the student!!
A student who slept in the examination room!! The tragedy happened to the teacher who woke up the student!!

தேர்வு எழுதும் அறையில் தூங்கிய மாணவர்!! எழுப்பிய ஆசிரியருக்கு மாணவரால் நேர்ந்த விபரீதம்!!

தேர்வறையில் தூங்கிய மாணவரை தட்டி கேட்ட ஆசிரியரின் மூக்கை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள சக்திபுரத்தில் வசித்து வருபவர் சேகர் வயது 46. ஆசிரியருக்கு படித்துள்ள இவர் அதே பகுதியில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் இதே பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் ஒரு மாணவன் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. எனவே இது தொடர்பாக ஆசிரியர் மாணவரின்  பெற்றோரை அழைத்து  வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதி வாங்கிய நிலையில் வணிகவியல் தேர்வு எழுத மாணவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தேர்வு நடைபெற்ற அறையில் இந்த மாணவன் தேர்வு எழுதாமல் தூங்கி வழிந்து உள்ளான். இதனால் அந்த மாணவனை ஆசிரியர் சேகர் தட்டி எழுப்பி தேர்வினை எழுதுமாறு கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் அந்த மாணவர் ஆசிரியரின் பேச்சினை சட்டை செய்யாமல், தேர்வு எழுதாமல், தடை செய்யப்பட்ட  புகையிலையை வாயில் வைத்து மென்று கொண்டிருந்தான்.

இதைக்கண்டு  அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் மாணவனை விசாரித்த போது ஆத்திரம் அடைந்த மாணவன் ஆசிரியரை பயங்கரமாக தாக்கியுள்ளான். இதில் ஆசிரியரின் மூக்கு உடைந்து பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் சகஆசிரியர்கள் அவரை மீட்டு உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆசிரியரை  அனுமதித்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர்  திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார்  தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.