நெல்லை மாவட்டத்தில் காரில் கைவரிசை காட்டிய வாலிபர்! போலீசார் விசாரணை!

0
104
A teenager who showed his hand in a car in Nellai district! Police investigation!
A teenager who showed his hand in a car in Nellai district! Police investigation!

நெல்லை மாவட்டத்தில் காரில் கைவரிசை காட்டிய வாலிபர்! போலீசார் விசாரணை!

நெல்லை மாவட்டம் என் ஜி ஓ ஏ காலனி சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி டவுனில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று உறவினர் வீட்டில் இருந்து அவரது வீட்டிற்கு பஸ்ஸில் புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். மேலும் மனைவியை அழைத்துச் செல்வதற்காக சங்கர் தனது காரில் புதிய பஸ்நிலையத்திற்கு  வந்துள்ளார். அப்போது அவர்  காரை பேருந்து நிலையத்தில் ஓரமாக நிறுத்திவிட்டு மனைவியை அழைத்து வருவதற்காக நட மேடைக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் மனைவியை அழைத்து வந்து காரில் பார்த்தபோது காரில் வைத்திருந்த சங்கரின்  கைபை காணவில்லை.

மேலும் அந்தகைப்பையில்  3500 பணம் மற்றும்  ஏடிஎம் அட்டைகள், விலை உயர்ந்த வாட்ச் உள்ளற்றவை இருந்தது. மேலும் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கர் மற்றும் அவரது மனைவி மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீஸ் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார்  பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தனர்.

மேலும் அந்த ஆய்வில் ஒரு வாலிபரை பிடித்தனர்  அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிவராஜபுரத்தை சேர்ந்த ராஜசெல்வம் (24)  என்பது தெரிய வந்தது. மேலும் கைபையை  திருடியது அவர்தான் என்பதும் தெரியவந்தது இதை அடுத்து போலீசார் ராஜசெல்வதை கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்த சங்கரின் கைப்பையும் மீட்டுக் கொடுத்தனர். ராஜ செல்வத்தின்  மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

author avatar
Parthipan K