தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில்  தன்னைத்தானே குத்தி கொண்ட வாலிபர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

0
100
a-teenager-who-stabbed-himself-in-a-government-hospital-in-thanjavur-district-a-lot-of-excitement-in-the-area
a-teenager-who-stabbed-himself-in-a-government-hospital-in-thanjavur-district-a-lot-of-excitement-in-the-area

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில்  தன்னைத்தானே குத்தி கொண்ட வாலிபர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் அரசு மருத்துவமனையில் மஞ்சுளா என்ற செவிலியர் பணியாற்றி வந்தார். நேற்று இரவு பணியில் இருந்த போது இன்று அதிகாலை 3 மணி அளவில் மது போதையில் தள்ளாடியபடியே அப்துல் ரகுமான் என்பவர் மருத்துவமனைக்குள் வந்தார். அப்போது மது போதையில் அப்துல் ரகுமான் மஞ்சுளாவை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்தார். அதனைப் பார்த்த மருத்துவமனை ஊழியர் சதாசிவம் என்பவர் அப்துல் ரகுமானை தடுத்ததால் ஆத்திரமடைந்த அப்துல் ரகுமான் கையில் வைத்திருந்த பாட்டிலால்

சதாசிவத்தின் தலையில் அடித்தார். அந்த தாக்குதலால் சதாசிவத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது இதனை தொடர்ந்து மது போதையில் இருந்த அப்துல் ரகுமான் தனக்குத்தானே பாட்டிலால் குத்திக் கொண்டார். சம்பவம் குறித்து நாச்சியார் கோவில் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் பெயரில் அரசு மருத்துவமனைக்கு வந்த நாச்சியார் கோவில் போலீசார் பாட்டிலால் குத்திய அப்துல் ரகுமான் மற்றும் அடிப்பட்ட சதாசிவம் ஆகிய இருவரும் கும்பகோண அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அப்துல் ரகுமானுக்கு வெகு நேரம் ஆகியும் போதை தெரியாத உள்ளதால் தப்பித்து ஓடிவிடாமல் இருப்பதற்காக அவரது கை கால்கள் கட்டப்பட்டு பாதுகாப்புடன் மருத்துவமனை வளாகத்திலேயே வைத்துள்ளனர். இந்த சம்பவம் நாச்சியார் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்துல் ரகுமான் மஞ்சுளாவை எதற்காக கொலை செய்ய முயற்சித்தார் என்பது குறித்து நாச்சியார் கோயில் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு.

author avatar
Parthipan K