தலைப்பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி குழந்தையுடன் பரிதாப மரணம்!! போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் !!

0
147
A tragic death with a pregnant child who was admitted to the government hospital for cephalic delivery!! Relatives involved in the struggle !!
A tragic death with a pregnant child who was admitted to the government hospital for cephalic delivery!! Relatives involved in the struggle !!

தலைப்பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி குழந்தையுடன் பரிதாப மரணம்!! போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் !! 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை இறந்தே பிறந்த நிலையில் அந்தப் பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முறையான சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு அரசமரத்து தெருவை சேர்ந்தவர் உதயராஜ் வயது 28. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரி வயது 21.  என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் ராஜேஸ்வரி கர்ப்பமாக இருந்தார். இவர் சின்ன காஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சையை பெற்று வந்தார்.

இந்த சூழ்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜேஸ்வரிக்கு பிரசவ வலி வந்ததை தொடர்ந்து அவர் சின்ன காஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு  உடல் நிலை குன்றியதால் காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதையடுத்து ராஜேஸ்வரிக்கு அதிக எடையுடன் குழந்தை பிறந்தது. சில மணி நேரமே இருந்த அந்த குழந்தை பிறகு இறந்து விட்டது. அதைத்தொடர்ந்து ராஜேஸ்வரியின் உடல் நிலையும் மோசமானதால் அவர் சென்னை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி உயிரிழந்தார். இதை அறிந்ததும் ராஜேஸ்வரியின் உறவினர்கள் சின்ன காஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். முறையான சிகிச்சை தராத காரணத்தினால் ராஜேஸ்வரி மற்றும் குழந்தை இறந்ததாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முறையான சிகிச்சை அளிக்காத டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர், சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.