கணவரின் மது பழக்கத்தால் எரிந்து சாம்பலான பெண்!! பரபரப்பு சம்பவம்!!

0
29
A woman burned to ashes by her husband's alcoholism!! Sensational incident!!
A woman burned to ashes by her husband's alcoholism!! Sensational incident!!

கணவரின் மது பழக்கத்தால் எரிந்து சாம்பலான பெண்!! பரபரப்பு சம்பவம்!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள டி.நல்லி கவுண்டன் பாளையம் என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் ரங்கநாயகி ஆவார். கணவரை இழந்த இவருக்கு மகேஷ்வரி என்று ஒரு மகள் இருக்கிறார்.

ரங்கநாயகி தன் மகள் மகேஸ்வரியை சரவணகுமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில், சரவணகுமார் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது அருந்திவிட்டு வந்து ரங்கநாயகியுடன் சண்டை போடுவதையே வழக்கமாக வைத்துள்ளார். இதனை ரங்கநாயகி தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார்.

கடந்த ஜூலை 17 ஆம் அன்று சரவணகுமாருக்கு பிறந்தநாள். அன்றைக்கும் இவர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இப்படியே குடித்துக் கொண்டே இருந்தால் நம் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என்று ரங்கநாயகி கணவரை கண்டித்துள்ளார். இதன் பிறகு மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த ரங்கநாயகி ஒரு விபரீத முடிவை எடுத்துள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ரங்கநாயகி தனது உடலின் மீது மண்ணெண்ணையை ஊற்றி பற்ற வைத்துக்கொண்டார். இவரின் கதறல் ஒலி கேட்டு அருகில் இருந்தவர்கள் இவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் இவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு புகார் கொடுக்கப்பட்டது. எனவே, காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இப்பெண்ணின் கணவனை தேடி விசாரித்து வருகின்றனர்.

author avatar
CineDesk