தீராத வயிற்று வலியால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி!!

0
96
A worker committed suicide by drinking poison due to intractable stomach pain!!
A worker committed suicide by drinking poison due to intractable stomach pain!!

தீராத வயிற்று வலியால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி!!

பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே மாத்தூர் ஒத்த வீடு பகுதியில் வசித்து வந்தவர் கார்த்திகேயன். இவரது வயது 32. இவர் திருமணம் ஆகாதவர். இவர் விவசாயம் செய்து கொண்டு வந்திருந்தார்.சில நாட்களுக்கு முன்பு இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. வெறும் வயிற்று வலி என்பதால் அருகில் உள்ள மெடிக்கலுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி  சாப்பிட்டு உள்ளார். மாத்திரையில் சரியாகாத வயிற்று வலி மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

இதனை கட்டுப்படுத்த முடியாமல் மனம் நொந்து வெறுத்துப் போய் இருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் வயல்வெளிக்கு சென்றார். செல்லும்போது விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தையும் எடுத்துச் சென்றுள்ளார்.அவர் வயல்வெளி அருகிலுள்ள வாய்க்காலில் மருந்தை அருந்திவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் வர சொல்லி அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். மேலும் இது குறித்து புகாரின் பேரில் அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் சத்தியநாதன் மற்றும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K