தூத்துக்குடி மாவட்டத்தில் கணவன் கவனமின்றி செய்த செயலால் இளம்பெண் உயிரிழப்பு! போலீசார் தீவிர விசாரணை!

0
94
A young woman died due to her husband's careless actions in Thoothukudi district! Police serious investigation!
A young woman died due to her husband's careless actions in Thoothukudi district! Police serious investigation!

தூத்துக்குடி மாவட்டத்தில் கணவன் கவனமின்றி செய்த செயலால் இளம்பெண் உயிரிழப்பு! போலீசார் தீவிர விசாரணை!

தூத்துக்குடி மாவட்டம் சாமுவேல் புரத்தை சேர்ந்தவர் யோனஸ். இவருடைய மனைவி சகாயதன்யா (22). நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் குரூஸ்புரம் கடைவீதிக்கு சென்றுள்ளனர். அந்த மோட்டார் சைக்கிளில் யோனஸ் இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது குரூஸ்புரம் ரவுண்டான அருகே வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த வேகத்தடையின் மீது மோட்டார் சைக்கிளை யோனஸ் ஏற்றி இறக்கினார். அப்போது சகாயதன்யா  தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துள்ளார். அதில் பலத்த காயமடைந்த சகாயதன்யாவை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவர்  சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் சகாயதன்யா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து தூத்துக்குடி வடவகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த  தகவலின் பேரில் போலீசார் சகாயதன்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K