நடிகர் சிரஞ்சீவி மருத்துவமனையில் அனுமதி!

0
30

நடிகர் சிரஞ்சீவி மருத்துவமனையில் அனுமதி!

 

 

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிரஞ்சீவி.மெகாஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் பெரும் நடிகர்களில் ஒருவராக இருக்கின்றார்.அரசியல் மீது இருந்த ஆர்வத்தால் இவர் சில வருடங்ளுக்கு முன் சினிமாவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபொழுது மத்திய அமைச்சராக இருந்துள்ளார்.பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் வர தொடங்கி தற்பொழுது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.இவர் ரீமேக் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஆவார்.இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘போலா சங்கர்’.இது அஜித் அவர்களின் வேதாளம் படத்தின் ரீமேக் ஆகும்.

 

இந்நிலையில் நீண்ட நாட்களாக முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்த சிரஞ்சீவிக்கு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டது.

முழுமையாக குணமடைந்த பிறகு வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.இவருக்கு தொடர் ஓய்வு தேவைப்படுவதால் உடனடியாக படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் தற்பொழுது இருக்கின்றார்.இதையடுத்து பூரண குணமடைந்த பிறகு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நீண்ட நாட்களாக தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்த இவர் 2016 ஆம் ஆண்டு அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.