கொரோனா தடுப்பு: நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் நிதியுதவி!

Photo of author

By Jayachandiran

கொரோனா தடுப்பு: நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் நிதியுதவி!

Jayachandiran

Siva Karthikeyan

கொரோனா தடுப்பு: நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் நிதியுதவி!

தமிழகத்தில் தொடர்ந்து பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் கொரோனோ நிதியுதவியாக ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகத்தில் 144 தனைவிதித்த நிலையில் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். இதன்பின்னர் வ இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் தனியார் நிறுவனங்கள் மற்றும் நடிகர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இக்கட்டான சூழலில் நடந்து வந்தாலும், நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை, படுக்கை வசதிகள், தனிமைபடுத்த அவசிய வார்டுகள் மற்றும் பிற ஏற்பாடுகளை தமிழக அரசு துரிதமாக செயல்படுத்தி வருகிறது. இதனிடையே மருத்துவ சிகிச்சை மற்றும் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிதியுதவி அளிக்குமாறு அரசு அறிவித்திருந்தது.

இதனையடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துவரும் தடுப்பு முயற்சிக்கு உதவும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் ரூபாயை நிதி உதவியாக அளித்துள்ளார். இந்த நிதி தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பப்படும். சினிமா படப்பிடிப்பு தடை செய்யப்பட்டதால் அந்த துறையில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் 10 லட்சம் ரூபாயை சிவகார்த்திகேயன் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.