5 வது முறையாக விஜய் அவர்களுடன் இணையும் நடிகர்!!! தளபதி 68 படம் பற்றி வெளியான அசத்தலான அப்டேட்!!!

0
53
#image_title

5 வது முறையாக விஜய் அவர்களுடன் இணையும் நடிகர்!!! தளபதி 68 படம் பற்றி வெளியான அசத்தலான அப்டேட்!!!

நடிகர் விஜய் தற்பொழுது நடித்து வரும் தளபதி 68 திரைப்படம் குறித்து அசத்தலான தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. மேலும் தளபதி 68 திரைப்படத்தில் அந்த நடிகர் நடிப்பதன் மூலமாக 5 வது முறையாக நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

லியோ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் நடிகர் விஜய் நடிக்கும் 68வது திரைப்படம் ஆகும். நடிகர் விஜய் நடிக்கும் 68 வது திரைப்படமான தளபதி68 திரைப்படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. யுவன் சங்கர் ராஜா அவர்கள் தளபதி68 திரைப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார்.

தளபதி 68 திரைப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, தெலுங்கு நடிகை மீனாட்சி சௌவுத்ரி, லைலா ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றார். தற்பொழுது தளபதி68 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த திரைப்படத்தின் தகவல்களும் அடிக்கடி வெளியாகி வருகின்றது.

மேலும் தளபதி 68 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அனைத்தும் லியோ திரைப்படம் வெளியான பிறகே அறிவிக்கப்படும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் கூறியிருந்தார். இதற்கு மத்தியில் தற்பொழுது தளபதி68 திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் குறித்த முக்கியமான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

அதாவது பிரபல நடிகர் எஸ்.ஜே சூர்யாஅவர்களையும் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க வைக்க இயக்குநர்வெங்கட் பிரபு அவர்கள் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. நடிகர் எஸ்.ஜே சூர்யாஅவர்கள் நடிகர் விஜய் நடித்த குஷி திரைப்படத்தை இயக்கியுள்ளார். அது மட்டுமில்லாமல் நடிகர் விஜய் நடித்த நண்பன், மெர்சல், வாரிசு ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இதையடுத்து தளபதி 68 திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் எஸ்.ஜே சூர்யா அவர்கள் ஒப்புக் கொண்டால் நடிகர் விஜய் அவர்களுடன் சேர்ந்து நடிக்கும் 5வது திரைப்படமாக இருக்கும். மேலும் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடிக்கும் இரண்டாவது திரைப்படமாகவும் தளபதி 68 திரைப்படம் இருக்கும்.

நடிகர் எஸ்.ஜே சூர்யா அவர்கள் ஏற்கனவே இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்கப்படுகின்றது.