மாஜிஸ்திரேட்டை அடிக்க முயன்றதால் நகைச்சுவை நடிகர் ஜெயமணி திடீர் கைது!!

0
44
#image_title

மாஜிஸ்திரேட்டை அடிக்க முயன்றதால் நகைச்சுவை நடிகர் ஜெயமணி திடீர் கைது!!

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ஜெயமணி. இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு நகைச்சுவை நடிகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். புகழ்ப்பெற்ற நகைச்சுவை ஜாம்பவான்களான கவுண்டமணி, வடிவேலு உள்ளிட்டவர்களுடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவையான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நன்கு அறியப்படுபவராக உள்ளார்.

இந்நிலையில் கடந்த புதன் கிழமை அன்று வேளச்சேரியில் உள்ள மாநகராட்சி பூங்கா ஒன்றில் நடைப்பயிற்சி மேற்கொள்ள அவரது நண்பர் ஒருவருடன் ஜெயமணி சென்றுள்ளார். அந்த சமயத்தில் மாஜிஸ்திரேட் திருமால் என்பவர் அங்கு உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்பொழுது ஜெயமணி அவர்கள் மாஜிஸ்திரேட் திருமாலை ஆபாச வார்த்தையால் திட்டி தகராறில் ஈடுபட்டு இருக்கிறார்.

இதனை தொடர்ந்து மாஜிஸ்திரேட் திருமால் அவர்கள் கிண்டி காவல் நிலையத்தில் ஜெயமணி மீது புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நகைச்சுவை நடிகர் ஜெயமணியை கிண்டி காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். அதேபோல் ஜெயமணி உடன் இருந்த அவரது நண்பர் மாரிமுத்துவையும் காவல் துறையினர் கைது செய்து இருக்கின்றனர். இவர்கள் இருவரும் ஆபாசமாக திட்டுதல், மிரட்டல் விடுத்தல், சட்டவிரோதமாக தடுத்து நிறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.