நடிகர் சிம்பு பற்றிய உண்மையை போட்டு உடைத்தார் நடிகர் மாரிமுத்து!!

0
39
#image_title

நடிகர் சிம்பு பற்றிய உண்மையை போட்டு உடைத்தார் நடிகர் மாரிமுத்து!!

நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து அவர்கள் நடிகர் சிலம்பரசன் குறித்தும், நடிகர் சூர்யா குறித்தும் தனது ஆரம்பகால நிகழ்வுகளை பகிர்ந்து உள்ளார்.

இயக்குநர் ராஜ்கிரன், சீமான் எஸ். ஜே. சூர்யா, வசந்த் உள்ளிட்ட பலரிடமும் உதவி இயக்குநராகம், துணை இயக்குநராகம் பணியாற்றியவர் நடிகர் மாரிமுத்து. “புலிவால், கண்ணும் கண்ணும்” ஆகிய இரண்டு படங்களில் இயக்கியுள்ளார். பல்வேறு படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்ற இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் அவர் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக பணித்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அதில் பல்வேறு திரைப் பிரபலங்களற பற்றி அவருடன் பழகிய அனுபவங்கள் பற்றி குறிப்பிட்டு வருகிறார்.

நடிகர் சிலம்பரசன் மற்றும் நடிகர் சூர்யா குறித்தும் ஒரு முக்கிய செய்தியை அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

எஸ்.ஜே. சூர்யா அவர்கள் இயக்கிய நியூ படத்தின் படத்தொகுப்பு – எடிட்டிங் வேலைகள் நடிகர் சிம்பு அவர்களின் வீட்டில் தான்  நடந்ததாக கூறினார். படத்தொகுப்பாளர் ஆண்டனி அவர்கள் இரவு நேரத்தில் தான் வேலை பார்ப்பார் இரவு முழுவதும் வேலை பார்த்து பகலில் தான் தூங்குவாரு என்று நடிகர் மாரிமுத்து குறிப்பிட்டுள்ளார். அப்போது, நானும் நடிகர் சிம்பு, நடிகர் சூர்யா ஆகிய மூன்று பேரும் இரவு முழுவதும் அரட்டை அடிப்போம் என்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுவோம் என்றும்  தெரிவித்தார்.

நடிகர் சிம்பு அவர்களை “ராக்கோழி” என்று குறிப்பிட்டுள்ள நடிகர் மாரிமுத்து அவர்கள் பகலில் தூங்குவார், இரவில் கண் விழித்து வேலைப்பார் என்றும் நடிகர் சிம்பு ஒரு மாறுபட்ட மனிதர் என்றும் கூறினார்.

நடிகை சிலம்பரசன் அவர்களின் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற மன்மதன் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர் நடிகர் மாரிமுத்து என்பது கூடுதல் செய்தி.

author avatar
Parthipan K