ரூ.6 கோடி பங்களாவை தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுத்த நாகசைதன்யா.!!

0
169

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா இவர் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த இவர் குழந்தை பெற்றுக்கொள்ள தனக்கு விருப்பமில்லை என்று சொன்னதாக கூறப்படுகிறது. மேலும், திரைப்படங்களில் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்துவந்த தான் காரணமாக நடிகை சமந்தா நாக சைதன்யா தம்பதியினர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக, இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போவதாக சமூகவலைதளங்களில் வதந்தியாக வெளிவந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இருவரும் தங்களது விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியயை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக ரூபாய் 200 கோடி கொடுக்க நாகசைதன்யா குடும்பத்தினர் முன் வந்ததாகவும், நான் நன்றாக சம்பாதிக்கிறேன் எனக்கு பணம் தேவையில்லை எனக் கூறி அதை வாங்க சமந்தா மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நாகசைதன்யாவிடமிருந்து ஒரு பங்களா வீட்டை சமந்தா வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பங்களாவின் விலை ரூ . 6 கோடி மதிப்பில் திருமணமானதும் சமந்தா நாக சைதன்யா ஹைதராபாத்தில் சொந்தமாக வீடு வாங்கி குடியேறியுள்ளனர். அந்த வீட்டை அதிக செலவு செய்து உள் அலங்கார வேலைகளை செய்துள்ளனர். விவாகரத்து அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே நடிகர் நாக சைதன்யா அந்த வீட்டை விட்டு வெளியேறி விட்டார். மேலும், அந்த வீட்டை சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக நடிகர் நாக சைதன்யா கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது நடிகை சமந்தா அந்த பங்களா வீட்டில் தான் குடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.