மணப்பாறை அருகே தன் ஆசை எல்லாம் முடித்துவிட்டு!.. பாதியில் கழட்டி விட்ட காதலன்!..

0
107
After finishing all his desires near Manaparai!.. the lover who took off half!..
After finishing all his desires near Manaparai!.. the lover who took off half!..

மணப்பாறை அருகே தன் ஆசை எல்லாம் முடித்துவிட்டு!.. பாதியில் கழட்டி விட்ட காதலன்!..

மணப்பாறை அடுத்துள்ள கே.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தான் சசிகலா.இவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று ஒரு புகார் மனுவை கொடுத்தார். அந்தப் புகாரில் திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுக்கா கருணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தான் அபிமணி இவரை நான் ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தேன்.

நாங்கள் இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் வீட்டில் கூறினால் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என எண்ணி ஒரு முடிவை எடுத்தோம்.அந்த முடிவில் இருவரும் கோவிலில் சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தோம்.

அதன்படி அபிமணியின் நண்பர்கள் மற்றும் அவரது உறவினர்கள் எங்களை அழைத்துச் சென்று சாணிப்பட்டி விநாயகர் கோவிலில் திருமணம் செய்து வைத்தனர். பின் அவரது உறவினர் மூலமாக அவரக்குறிச்சியிலுள்ள ஒரு வீட்டில் வைத்து என்னுடன் பாலியல் உறவு கொண்டார்.

அதன் பிறகு இருபது நாட்களுக்குப்பிறகு வையம்பட்டி காவல் நிலையத்திலிருந்து எங்களை அழைப்பதாக கூறி என்னிடமிருந்த தொலைபேசி மற்றும் நான் கையில் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் பணமும் மற்றும் ஆதார் கார்டையும் வாங்கிவிட்டு வலுக்கட்டாயமாக என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் அவரது உறவினர்கள்.

இந்த காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் நல்லதம்பி என்னை குடும்பத்தினருடன் வீட்டிற்கு திரும்பிச் செல்லுமாறு வற்புறுத்தினார். அதற்கு நான் போகமாட்டேன் என்று கூறினேன். வலுக்கட்டாயமாக என்னை குடும்பத்தாரர்களுடன் அனுப்பி வைத்தனர்.

சதி திட்டம் செய்து என்னை திருமணம் செய்து என்னுடன் பாலியல் உறவு கொண்டு பின்னர் என்னை சாதி பெயரை சொல்லி விலக்கி வைத்த என்னுடைய கணவன் அபிமணி மற்றும் அவருக்கு உதவி செய்த நண்பர்கள், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தக்க தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என சசிகலா அப்புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதனால் சிறிது நேரம் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

author avatar
Parthipan K