ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் மாயமான நகைகள்! இவர் மீது தான் சந்தேகம் போலீசில் புகார்!

0
164
Aishwarya Rajinikanth's Magic Jewels at Home! Complain to the police on suspicion of him!
Aishwarya Rajinikanth's Magic Jewels at Home! Complain to the police on suspicion of him!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் மாயமான நகைகள்! இவர் மீது தான் சந்தேகம் போலீசில் புகார்!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலமாக ஐஸ்வர்யா இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதனை தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான வை ராஜா வை படத்தை இயக்கினார். இவர் தற்போது லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் லால் சலாம் திரைப்பட பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்கின்றனர். மேலும் ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் நடிக்கிறார். ஐஸ்வர்யா கடந்த ஆண்டு நடிகர் தனுஷ் உடன் விவாகரத்து பெற்றுக் கொண்டார். அதன் பிறகு மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் தனியாக வசித்து வருகின்றார். இந்நிலையில் சென்னையில் தேனாம்பேட்டையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் லாக்கரில்  வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான வைர மற்றும் தங்க நகைகள் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் அது தொடர்பாக ஐஸ்வர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வீட்டில் பணியாற்றும் பணியாளர்கள் திருடி இருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்திருக்கும் அந்த புகார் மனுவில் கடந்த 2019 ஆம் ஆண்டு லாக்கரில்  வைக்கப்பட்டிருந்த நகை  மூன்று முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை.

சென்னை செயின்ட்  மேரி சாலை வீடு, தனுஷின் சி ஐ டி நகர் வீடு, போயஸ் கார்டனில்  உள்ள ரஜினியின் வீடு என்று லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்தது. இந்த லாக்கரையில் இருந்த நகைகள் பற்றிய விவரம் வீட்டில் பணிபுரியும் மூன்று வேலைக்காரர்களுக்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் இந்த புகாரை அளித்திருந்தார். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகள் குறித்து விவரம் தெரிந்த மூன்று வேலைக்காரர்களின் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

author avatar
Parthipan K