ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 2020 21 ஆம் கல்வியாண்டு அனைத்துவகை பள்ளிகளிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் ஊரடங்கு முடிந்த பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து பேசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களும் மற்றும் இதர நலத் திட்டங்கள் பற்றியும் , ஊரடங்கும் முடிந்தபின்னர் பள்ளிகள் திறந்த உடன் வழங்குவது குறித்தும் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எந்த ஒரு மாணவர்களையும் தேக்க நிலையில் வைக்கக்கூடாது என்றும், பள்ளியை விட்டு வெளியேற்றக் கூடாது என்றும், தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை பதிவேட்டில் பதிவிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

