என்ன செய்ய முடியும் மோடி சார்! பிரதமர் மோடியை உருக வைத்த காணொளிப் பதிவு!

0
77

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி தனக்கு வெகு நேரமாக இணையதள வகுப்புகள் எடுக்கப்படுவதாக பிரதமர் மோடியிடம் புகாரளிக்கும் காணொளி ஒன்று தற்சமயம் வைரலாகி வருகிறது.

நோய்த்தொற்று பரவல் காரணமாக, உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இது எல்லோருடைய தினசரி வாழ்க்கையிலும் மாற்றங்களை உண்டாக்கி இருக்கிறது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இணையதளத்தில் படிக்கும்போது ஜம்மு காஷ்மீரில் 6 வயது சிறுமி நீண்ட நேரம் எடுக்கப்படும் இணையதள வகுப்புகள் காரணமாக, சோர்ந்து போயிருக்கிறார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் புகார் அளிக்க முடிவு செய்து வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டிருக்கிறார்.

அந்த சிறுமி வெளிப்படுகின்ற காணொளியில் தன்னுடைய இணையதள வகுப்பு அவனது காலை 10 மணிக்கு ஆரம்பித்து மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. கணிதம், ஆங்கிலம் உருது டிவிஎஸ் மற்றும் கணினி போன்ற வகுப்புகள் இணையதளத்தில் நடத்தப்படுகிறது. குழந்தைகளுக்கும் நிறைய வேலை இருக்கிறது என்று கைகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் சிறுமிகள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தை சுட்டிக்காட்டுகிறார் அந்த சிறுமி.

அத்தோடு சிறிய குழந்தைகள் ஏன் இவ்வளவு வேலைகளையும் சமாளிக்க வேண்டும் என்று அவருடைய மழலை மொழியில் கேள்வி கேட்டு என்ன செய்ய வேண்டும் மோடி சார் தெரிவித்துவிட்டு பை சொல்லிவிட்டு முடிவடைகிறது அந்த காணொலி.

தற்போது இந்த காணொளி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளியை 57 ஆயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள் 5000 பேர் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். 1200 பேர் ரீட்டிவிட் செய்து இருப்பது மட்டுமல்லாமல் சிறுமியின் புகாருக்கு பதிலும் தெரிவித்து இருக்கிறார்கள்.

அந்த சிறுமி பரதம் அவருக்காக வெளியிட்ட இந்த வீடியோவிற்கு பிரதமர் நரேந்திரமோடி இதுவரையில் எந்த ஒரு பதிலும் தெரிவிக்கவில்லை ஆனாலும் காஷ்மீரில் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா தன்னுடைய அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

அதோடு அவர் தெரிவித்திருப்பதாவது மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புகார் பள்ளி குழந்தைகள் மீதான வீட்டுப் பாடங்களின் சுமையைக் குறைப்பதற்கு 48 மணி நேரத்திற்குள் முடிவு எடுக்குமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. குழந்தைப்பருவம் கடவுளின் பரிசு மற்றும் அவர்களுடைய நாட்கள் கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஆனந்தமும், நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.