எப்பேர்ப்பட்ட கை கால் மூட்டு வலியும் ஒரே நாளில் குணமாகும்!! இதை மட்டும் தடவுங்கள்!!

0
179
all-types-of-hand-and-foot-joint-pain-will-be-cured-in-one-day-just-apply-this
all-types-of-hand-and-foot-joint-pain-will-be-cured-in-one-day-just-apply-this

எப்பேர்ப்பட்ட கை கால் மூட்டு வலியும் ஒரே நாளில் குணமாகும்!! இதை மட்டும் தடவுங்கள்!!

இந்த காலகட்டத்தில் 30 வயதை கடந்து விட்டாலே ஆண்கள் பெண்கள் என இருவருக்கும் கால்சியம் குறைபாடு உண்டாகி கை கால் மூட்டு வலி வந்து விடுகிறது. இவற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் உணவு உட்கொள்வதில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
அதுமட்டுமின்றி ஒரு சிலர் பல வேலைகளை செய்யும் பொழுது திடீரென்று சுளுக்கு மற்றும் பிடிமானம் போன்றவை ஏற்பட்டு விடும்.
இவற்றையெல்லாம் சரி செய்யவும், கை கால் மூட்டு வலியை குணப்படுத்தவும் வீட்டில் இருந்தே தயாரிக்கும் இந்த எண்ணெய் தைலத்தை குறித்து காண்போம்.

தேவையான பொருட்கள்:
நன்னாரி வேர்
எலுமிச்சை சாறு
தேங்காய எண்ணெய்
விளக்கெண்ணெய்
கற்றாழை ஜெல்
இவை அனைத்தையும் ஒரு படி என்ற சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இதனுடன் நன்னாரி வேரை நன்றாக அரைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இத்துடன் விளக்கெண்ணெய்,எடுத்து வைத்துள்ள தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்த கொள்ள வேண்டும்.
இதனையடுத்து கலவையை அனல் வைத்து கொதிக்க விடும் பொழுது சக்கை அனைத்தும் கீழே சென்று விடும்.
இதனை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேல் கொதிக்க விட வேண்டும்.
எண்ணெய் ஆனது மிகவும் தெளிவான பதத்திற்கு வந்தவுடன் தீயை அணைத்து விட வேண்டும்.
அவ்வளவுதான் மூட்டு வலியை சரி செய்யும் எண்ணெய் தைலம் ரெடி.
இந்த தைல எண்ணெயை தடவி அதன்மேல் காட்டன் துணி கொண்டு 11 நாட்கள் கட்டி வர வேண்டும்.
இவ்வாறு கட்டி வர எப்பேர்ப்பட்ட கை கால் மூட்டு வலியும் குணமாகும்.