மீண்டும் மூன்று நாட்கள் மழைக்கு வாய்ப்பு!! வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!!

0
70
Another chance of three days of rain!! Announcement issued by Meteorological Department!!
Another chance of three days of rain!! Announcement issued by Meteorological Department!!

மீண்டும் மூன்று நாட்கள் மழைக்கு வாய்ப்பு!! வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக்கண்ணன் செய்திக்குறிப்பில் தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் வரை மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த மழைக்கு காரணம் கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியே தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும்  ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இந்த நிலையில் சென்னை வானிலை மையம் அறிவிப்பின் படி  இன்று முதல் அடுத்த மூன்று நாட்கள் வரை மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.

மேலும் மேற்கு திரை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னையில் சில இடங்களில் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதனையடுத்து ஜூலை 3 ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை வாய்ப்புதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

author avatar
Jeevitha