இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாத ஆத்திரம்!! இளம்பெண்ணுக்கு பக்கத்து வீட்டினரால் நேர்ந்த துயர முடிவு!!

0
68
Fury of not attending the funeral!! Young woman's tragic end by the neighbors!!
Fury of not attending the funeral!! Young woman's tragic end by the neighbors!!

இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாத ஆத்திரம்!! இளம்பெண்ணுக்கு பக்கத்து வீட்டினரால் நேர்ந்த துயர முடிவு!! 

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாததால் இளம்பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

மும்பை காட்கோபர்- மன்சூர்த் சாலையில் அருகே வசித்து வருபவர் கிருஷ்ணா பவார். இவரது சகோதரர் கடந்த செவ்வாய்கிழமை இறந்து விட்டார். அவரது இறுதிச் சடங்கில் அந்த பகுதியை சேர்ந்த அஞ்சலி போசலே மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணா பவார் நேற்று அஞ்சலி  போசலே வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அஞ்சலி போசலேவின் தாயாரை கத்தியால் தாக்கி உள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அஞ்சலிபோசலே மற்றும் அவரின் 25 வயது சகோதரி இருவரும் அவரை தடுக்க முயன்றனர். அப்போது ஆத்திரம் தீராத கிருஷ்ணாபவார் அஞ்சலி போசலேயின் சகோதரியை  சரமாரியாக கத்தியால் பலமுறை குத்தி உள்ளார்.  இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தப்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் காயமடைந்த அஞ்சலி போசலே தாயாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அஞ்சலி போசலே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

அந்த புகாரின் பெயரில் போலீசார் கிருஷ்ணா பவார் மற்றும் அவரது மனைவி மற்றும் மற்றொரு கணவன்- மனைவி ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் 4 பேருக்கும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளதாக கருதப்படுகிறது. இவர்களின் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.