ஒரே நாளில் எப்பேர்பட்ட கருப்பு முகமும் பால்போல வெண்மையாக மாறும்!! இதை வீட்டிலேயே செய்யலாம்!!

0
39

ஒரே நாளில் எப்பேர்பட்ட கருப்பு முகமும் பால்போல வெண்மையாக மாறும்!! இதை வீட்டிலேயே செய்யலாம்!!

வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து சருமம் வெள்ளையாக நன்கு பளிச்சென்று மாறுவதற்கான ஒரு பவுடரை தயாரிப்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த பவுடரை பயன்படுத்துவதால் இயற்கையாகவே நம் சருமத்திற்கு அழகையும், பொலிவையும், வெள்ளை நிறத்தையும் கொடுக்கும்.

பெண்கள் அழகு நிலையங்களில் தனது பாதி பணத்தை செலவழிக்கின்றனர். அதற்கு பதிலாக வீட்டிலேயே இதை செய்வதால் இயற்கையான அழகையும் பொலிவையும் பெறலாம். இப்போது இதை செய்வது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை:
இதை செய்வதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு தேக்கரண்டி அளவு பச்சரிசியை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இதனுடன் இரண்டு தேக்கரண்டி அளவு வெள்ள உளுந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது இவை இரண்டையும் தண்ணீர் சேர்க்காமல் ஒரு பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அரைத்து வைத்த இந்த பவுடருடன் இரண்டு தேக்கரண்டி அளவு கோதுமை மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து விட்டு ஒரு ஈரம் இல்லாத காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளவும். இப்போது இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றால், இந்த பவுடரில் இருந்து இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளவும்.

இதனுடன் சிறிதளவு தயிரை சேர்க்க வேண்டும். பின்பு இதனுடன் தேவையான அளவு பாலை சேர்த்துக் கொள்ளவும். பச்சை பால் அல்லது கொதிக்க வைத்த பால் என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். பால் இயற்கையாகவே நம் சருமத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள் இறந்த செல்களை நீக்கி ஒரு பொலிவை கொடுக்கும்.

இவற்றை எல்லாம் சேர்த்து நன்கு கலந்து கொண்டு இதை முகம் கை கால்களில் என எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். சருமம் கருமையாக இருக்கும் எந்த இடங்களில் வேண்டுமானாலும் இந்த பேஸ்டை பயன்படுத்திக் கொள்ளலாம். இதை சருமத்தில் அப்ளை செய்து ஒரு இரண்டு நிமிடங்களுக்கு நன்கு தேய்த்து வரவும். பிறகு 5 லிருந்து 10 நிமிடங்களுக்கு அப்படியே விடவும்.

பத்து நிமிடங்களுக்கு பிறகு தண்ணீரில் கழுவி விடவும். இவ்வாறு செய்வதால் நம் சருமம் இயற்கையாகவே வெள்ளையாக அழகாக பொலிவுடன் காணப்படும். இதில் பயன்படுத்தி உள்ள அத்தனை பொருட்களும் சருமத்தை இயற்கையாகவே பொலிவாக்கும்.

இதில் சேர்க்கப்பட்டுள்ள வெள்ளை உளுந்து ஆனது நம் சருமத்திற்கு இயற்கையான பொலிவை தருவதுடன் மட்டுமல்லாமல் சுமத்திற்கு ஒரு நெகிழ்வு தன்மையை அளித்து தோல் சுருக்கம் வரவிடாமல் தடுக்கிறது.இதை தொடர்ந்து செய்து வந்தால் சருமத்திற்கு பொலிவான தோற்றத்தை நிரந்தரமாக தரும்.