அரண்மனை3 படத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!!

0
80

இயக்குனர் சுந்தர் சி-யின் வெற்றிப்படமாக திகழும் அரண்மனை படத்தின் முதல் இரண்டு பாகங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

அரண்மனை படத்தில் எப்போதுமே திகிலுக்கு பஞ்சம் இல்லாமல் பஞ்சமில்லாமல், ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்குவதே இயக்குனர் சுந்தர் சி-யின் வழக்கம்.

அரண்மனை மூன்றாம் பாகத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால், யோகி பாபு, விவேக் ஆகிய நடித்திருப்பதால் சுவாரசியம் கூடுதலாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

எனவே அரண்மனை மூன்றாம் பாகத்தையும் பிரமாண்டமாக உருவாக்க வேண்டும் என்ற முடிவில் படப்பிடிப்பின் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள 10 சதவீதபடமானது, கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கிளைமேக்ஸ் காட்சி மட்டுமே பாக்கி இருந்த நிலையில் அரசு தளர்வுகளை அறிவித்த பின்னர் படப்பிடிப்புகள் தொடங்கலாம்  என்று இயக்குனர் சுந்தர் சி காத்துக் கொண்டிருக்கும் நிலையில், கொரோனாவுக்கு ஒரு விடிவுகாலம் வருவதற்கு தாமதமாகும் என்ற முடிவில் படத்தின் கதையை மாற்றி உள்ளாராம் இயக்குனர்.

ஏனென்றால் கிளைமாக்ஸில் ஆயிரம் பேரை வைத்து எடுக்க வேண்டும் என்பதால், இந்த சூழ்நிலையில் அது முடியாத காரியம் என்பதை உணர்ந்த இயக்குனர் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் கதைகளை மாற்றி வருகிறாராம். எனவே தளர்வுக்கு பின் மீதமுள்ள 10 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விரைவில் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

author avatar
Parthipan K