சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றீர்களா? இந்த ஒரு பொருளை மட்டும் சாப்பிட்டால் போதும்!

0
83

சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றீர்களா? இந்த ஒரு பொருளை மட்டும் சாப்பிட்டால் போதும்!

சமீப காலமாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பதினால் இந்தியா நீரழிவு நோய் தலைநகரம் என்றும் கூறப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகள் அதனை கட்டுப்படுத்த பல்வேறு வகையான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். சர்க்கரை நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். நாம் தினமும் சர்க்கரை அளவை கண்காணித்து வரவேண்டும் அவ்வாறு செய்தால் மட்டுமே சர்க்கரை அளவை நாம் படிப்படியாக குணப்படுத்த முடியும்.

மேலும் இந்த சர்க்கரை நோய் இதயம், சிறுநீரகம் மற்றும் பல உறுப்புகளையும் அடிப்படையாக செயலிழக்க வைக்கிறது. வெங்காயத்தை போல் இருக்கும் நூல் கோல் சர்க்கரை நோயாளிகள் அதிகம் எடுத்துக் கொள்ளும் பொழுது வைட்டமின்கள், நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றது. இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

நூல்கோல்கறி:

நூல்கோல் சாப்பிடுவதற்கு மிகவும் பொதுவான வழி. அதனை சரியாக செய்து சாப்பிடுவதாகவும் மிகுந்த சுவையாக இருக்கும். சமைக்கும் பொழுது எண்ணெய் அதிகளவு பயன்படுத்தக்கூடாது.

காயாக இல்லாமல் நூல்கோலை சாப்பிட விரும்புவர்கள் இதனை தயிருடன் சேர்த்து ராய்த்தாவாக உட்கொள்ளலாம். மேலும் தற்போது நிலவிவரும் குளிர்காலங்களில் சர்க்கரை நோயாளிகள் நூல் கோல் சூப்பு செய்து குடித்தால் குளுக்கோஸ் அளவை சீராக வைக்க உதவும்.

மேலும் நூல்கோலை தவிர அதன் இலைகள் தக்காளி, கேரட், மஞ்சள், பூண்டு, கருப்பு உப்பு மற்றும் சில மசாலா பொருட்களுடன் சேர்த்து சூப் போல செய்து சாப்பிடலாம். அதனைத் தொடர்ந்து சர்க்கரை நோயாளிகள் சாலட் வடிவில் நூல்கோலை செய்து சாப்பிட்டு வரும் பொழுது சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.

author avatar
Parthipan K