ஊரை ஏமாற்ற உத்தமர் வேடமா? தமிழக முதல்வரை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்

MK Stalin-News4 Tamil Latest Online Tamil News

ஒரு விவசாயி என்பவர், விவசாயிகளின் திட்டத்திலேயே ஊழல் செய்ய மாட்டார் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, குடிமராமத்துத் திட்டத்தில் ஊழல், விவசாயிகளுக்கும் தண்ணீர் வழங்கும் கால்வாய்கள் தூர்வாரும் பணிகளில் ஊழல் – மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் (PM Kisan)’ திட்டத்தில் கூட லட்சக்கணக்கான போலிகளைச் சேர்த்து நிதியைச் சுரண்டிய அ.தி.மு.க. ஆட்சியின் முதலமைச்சர் பழனிசாமிக்கு … Read more

குஜராத்தில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளியை திறக்க வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

மாணவர்களின் சேர்க்கையை காரணமாக வைத்து குஜராத்தில் பிரதமர் மோடி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில் செயல்பட்டு வந்த தமிழ் வழியிலான பள்ளியை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இது குறித்த முழுமையான செய்தியை படிக்க: மோடியின் தொகுதியிலிருந்த ஒரே தமிழ் பள்ளியும் மூட உத்தரவு! இது தான் தமிழுக்கு அளிக்கும் முக்கியத்துவமா? இந்நிலையில் மாணவர் சேர்க்கையை காரணமாக வைத்து குஜராத்தில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளியை திறக்க வேண்டும் என பாமக நிறுவனர் … Read more

நில அபகரிப்பு புகாரில் தலைமறைவாக இருந்த திமுக நிர்வாகி கைது

Police Arrested DMK Person

நாகை மாவட்டத்தை சேர்ந்த கீழையூர் ஒன்றிய திமுக செயலாளரான தாமஸ் ஆல்வா எடிசன் நில அபகரிப்பு புகார் காரணமாக சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன் நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்தவர். திமுகவை சேர்ந்தவரான இவர் கீழையூர் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தாமஸ் ஆல்வா எடிசன் மீது நாகை அதிமுக நகர செயலாளரான தங்க.கதிரவன் நாகை நில அபகரிப்பு பிரிவு காவல்துறை அதிகாரிகளிடம் … Read more

தொடர்ந்து புறக்கணிக்கும் தமிழக முதல்வர்! அடுத்த திட்டத்தை கையிலெடுத்த அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

தொடர்ந்து புறக்கணிக்கும் தமிழக முதல்வர்! அடுத்த திட்டத்தை கையிலெடுத்த அன்புமணி ராமதாஸ் கடந்த மக்களவை தேர்தலின் போது அதிமுக மற்றும் பாமக கூட்டணியின் சார்பாக தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாசை ஆதரித்து தமிழக முதல்வரான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்த போது தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என பாமக இளைஞர் அணி தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் … Read more

மோடியின் தொகுதியிலிருந்த ஒரே தமிழ் பள்ளியும் மூட உத்தரவு! இது தான் தமிழுக்கு அளிக்கும் முக்கியத்துவமா?

Modi-News4 Tamil Online Tamil News

மோடியின் தொகுதியிலிருந்த ஒரே தமிழ் பள்ளியும் மூட உத்தரவு! இது தான் தமிழுக்கு அளிக்கும் முக்கியத்துவமா? அகமதாபாத்தில் உள்ள ஒரே ஒரு தமிழ் மேனிலைப் பள்ளியை மூடும் நடவடிக்கைக்கு மாணவர்களும், பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மணிநகரில் உள்ளது அகமதாபாத் தமிழ் மேனிலைப் பள்ளி. கிருஷ்ணமாச்சார்ய பண்டித் என்பவர் தமிழ் மக்களுக்காகவும், அவர்களது கல்விக்காகவும் மட்டுமே இந்த இடம் பயன்பட வேண்டும் என்று இடத்தை ஒதுக்கி இந்தப் பள்ளியை நிறுவியுள்ளார். இந்தியாவின் … Read more

நாடே விமர்சித்து வரும் விவசாய மசோதா குறித்து கருத்து தெரிவித்த மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss

நாடு முழுவதும் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் விவசாய மசோதா குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேளாண் விளைபொருட்கள் கொள்முதல்,லாபத்துடன் கூடிய விலையை அரசு சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும்! என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட உழவர்களின் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (மேம்பாடு மற்றும் வசதிகள்) மசோதா, உழவர்களுக்கான (அதிகாரமளித்தல் … Read more

மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்! புதியவர் நியமனம்

Pugazhendhi appointed as dmk central district secretary in villupuram

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளராக பதவி வகித்து வந்த முன்னாள் அமைச்சரான பொன்முடி சமீபத்தில் துணைப் பொதுச் செயலாளராக பதவி உயர்வு பெற்றார். இதனையடுத்து அவர் ஏற்கனவே வகித்து வந்த மாவட்ட செயலாளர் பதவி யாருக்கு என திமுக நிர்வாகிகள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்நிலையில் திமுக பொதுச் செயலாளரான துரைமுருகன் இன்று இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, “துணைப் பொதுச் செயலாளராக பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டதால், ஒருவருக்கு ஒரு பதவி என்கிற அடிப்படையில் … Read more

தமிழகத்தை சேர்ந்த எம்பி கைதா? ஆதாரத்துடன் புகார்! சிக்கலில் கட்சி தலைமை

Parliament-News4 Tamil Online Tamil News

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் மீது இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதே நேரத்தில் அவரை கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளரும்,”உதயசூரியன்” சின்னத்தில் வெற்றி பெற்ற விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு துரை. ரவிக்குமார் அவர்கள், இணையவழி கருத்தரங்கத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.   அதில் … Read more

தனக்கு தமிழ் தெரியாது என மீடியாவிடம் சரண்டர் ஆன தருமபுரி எம்பி

DMK MP Senthil Kumar Criticise Tamil Media-News4 Tamil Online Political News

சமூக வலைத்தளமான ட்விட்டர் அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவிக்கும் தளமாக விளங்கி வருகிறது. இதைப்பயன்படுத்தி பெரும்பாலான தலைவர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக சில சமயங்களில் முக்கிய விவகாரங்கள் குறித்து அரசியல் கட்சி தொண்டர்கள் ட்விட்டரில் டிரண்டிங் செய்வதும் வழக்கமாகியுள்ளது. இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் தருமபுரி தொகுதியில் பாமகவின் அன்புமணி ராமதாஸை எதிர்த்து திமுகவின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரான டாக்டர் செந்தில்குமார் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். குறிப்பாக … Read more

விதிகளை மதிக்காமல் விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் மத்திய அமைச்சகம்! மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

விதிகளை மதிக்காமல் விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் மத்திய அமைச்சகம்! மருத்துவர் ராமதாஸ் கண்டனம் காவிரி டெல்டாவில் 8 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. காவிரி பாசன மாவட்டங்களில் 8 இடங்களில் எண்ணெய் கிணறுகளை அமைப்பதற்காக அளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி காலாவதியாகவுள்ள நிலையில், அந்த அனுமதியை 2023-ஆம் ஆண்டு வரை நீட்டித்து மத்திய சுற்றுச்சூழல் … Read more