ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்! விஜய்யின் ராஜதந்திரம் 

Vijay ADMK DMK

அ.தி.மு.க.-வின் வாக்குகளை கவரவும் அதே நேரத்தில் தி.மு.க.-வின் எதிர்ப்பு வாக்குகளை அப்படியே முழுமையாக அள்ளிக் கொள்வது தான் விஜய்யின் ராஜதந்திரம் என்று அரசியல் விமர்சகர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். இதன் மூலம், நடிகர் விஜய் தற்போது தமிழக அரசியலில் சரியான ஆட்டத்தை ஆடி வருகிறார் என்றே பலரும் கணிக்கின்றனர். விஜய்க்கு கூட்டம்: சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில், மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறியதாவது: “ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக மக்கள் கூட்டம் ஈர்க்கக்கூடிய தலைவர் என்றால், அது விஜய் தான். … Read more

“அரசியல் டைம்பாஸ் செய்யாதீங்க; முழுமையாக இறங்குங்கள்!” – விஜய்யை தாக்கும்  நடிகை ரோஜா 

Actress Roja

திரையுலகத்தில் வெற்றி பெற்ற நடிகர்கள் அரசியலுக்கு வரும் போதும், அதை முழுமையான பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டுமென்றும், மக்கள் நலனுக்காக மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், தற்போதைய நடிகர்கள் போல் “டைம்பாஸ்” அரசியல் செய்யக்கூடாது என்றும் நடிகையும் ஆந்திரா அமைச்சருமான ரோஜா, நடிகர் விஜய்க்கு நேரடியாக அறிவுரை கூறியுள்ளார். இந்த கருத்துக்கள், நடிகர் விஜய் தனது புதிய அரசியல் கட்சியான “தமிழக வெற்றிக்கழகம்” எனும் பெயரில் அரசியலுக்கு களமிறங்கியிருக்கும் நேரத்தில் அவரை நேரிடையாக தாக்கும் வகையில் வெளியாகி, அரசியல் … Read more

4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகள் செல்ல தடை: உயர் நீதிமன்ற உத்தரவால் பயணிகள் அச்சம்!

Government buses banned from pass at 4 toll plazas: Passengers fear due to High Court order!

சென்னை: தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் செல்ல தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்துகள் தடை செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, கடந்த காலத்தில் செலுத்தப்பட வேண்டிய சுங்கக் கட்டணங்கள் நிலுவையில் இருந்ததை காரணமாகக் கொண்டு வந்தது. பெரிய அளவில் நிலுவைத் தொகை – பாதிக்கப்பட்ட சாலைகள் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கும் சுமார் 70-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில், மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகள் வழக்கம்போல் கட்டணங்கள் … Read more

ராமதாஸ் Vs அன்புமணி –  மருமகளா? மகளா? ராமதாஸின் அடுத்த ஆட்டம்?

Ramadoss Vs Anbumani – Daughter-in-law? Daughter? Ramadoss' next Plan?

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) இப்போது நடந்து வரும் அதிகார மோதல் முடிவே இல்லாமல் தொடர்கதையாக மாறி பரபரப்பாகக் கிளம்பியுள்ளது. கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நீண்ட நாட்களாக இருந்த கருத்து வேறுபாடு, தற்போது செயல்பாடுகளாக வெளிப்படத் தொடங்கியுள்ளது. இரு தரப்பிலும் இதுவரை நீண்ட நாட்களாக நிலவி வந்த அதிருப்தி, தற்போது வெடிக்கும் நிலைக்கு வந்து விட்டது. பாமக கட்சியை கட்டுப்படுத்த விரும்பும் அதிகார மையமாக, ஒருவர் … Read more

ஜெயலலிதா என்னை தம்பி என்று அழைத்தார் – திருமாவளவன் அதிமுகவுக்கு எச்சரிக்கை

You can listen to your father rather than what someone else says - Thirumavalavan's advice to Anbumani

சென்னை: “அம்மா எனக்கு தம்பி என்று வாழ்த்து தெரிவித்தவர். அதை அ.தி.மு.க. தலைவர்கள் தெரிந்திருப்பார்கள்; இப்போது எடப்பாடி பழனிசாமி மட்டும் அதை மறந்தது ஏன் என்று புரியவில்லை,” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சமீப நாட்களில் நடந்த அரசியல் விவகாரங்களைப் பற்றி விளக்கம் அளித்தார். “அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய பிறகு, ஜெயலலிதா எனக்கு ‘தம்பி வாழ்க’ என்று வாழ்த்து தெரிவித்திருந்தார். எனவே, எனது அரசியல் பயணம், … Read more

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை

rain

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வானிலை மாறுபாடுகள் தொடரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பில், 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை அல்லது மிதமான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வாய்ப்பு உள்ளதாகவும், வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, திருநெல்வேலி … Read more

கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர், வேன் ஓட்டுநர் உள்ளிட்ட 13 பேருக்கு விசாரணை நோட்டீஸ்!

Cuddalore train accident: Investigation notice issued to 13 people including gatekeeper and van driver!

செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த பேரழிவான விபத்து தொடர்பாக 13 பேருக்கு விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணை, திருச்சி ரயில்வே கோட்டத்தின் பாதுகாப்பு அதிகாரி மகேஷ் குமார் தலைமையில் நடைபெறவுள்ளது. விபத்துக்குப் பின்னணி: செம்மங்குப்பம் பகுதியில், லெவல் கிராசிங் வழியாக பள்ளி வேன் கடந்து சென்றபோது, விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் நேரடியாக மோதி, மூன்று மாணவர்கள் – ஒரு மாணவியர் உட்பட – … Read more

குஜராத்தில் பாலம் இடிந்து பெரும் விபத்து: 9 பேர் உயிரிழப்பு, வாகனங்கள் ஆற்றில் மூழ்கிய சோகம்!

Major accident as bridge collapses in Gujarat: 9 dead, vehicles sink into river, tragedy!

குஜராத்தின் வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் காம்பிரா பாலம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்ததில், பல வாகனங்கள் மஹிசாகர் ஆற்றில் கவிழ்ந்தன. இதில் 9 பேர் உயிரிழந்தனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போது நடந்தது? விபத்து இன்று காலை 7:30 மணியளவில் வதோதராவின் பத்ரா தாலுகா பகுதியில் நடைபெற்றது. பாலம் இடிந்ததும், அதனை கடக்க முயன்ற 5 வாகனங்கள் – இதில் 2 லாரிகள், 1 எஸ்யூவி, 1 பிக்-அப் வேன் ஆகியவை – … Read more

நாளை நடக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தம்! அரசு ஊழியர்கள் பங்கு பெற்றால் என்ன நடக்கும்? தலைமை செயலாளர் எச்சரிக்கை!

Nationwide strike tomorrow! What will happen if government employees participate? Chief Secretary warns!

நாளை (8.7.2025) இந்தியா முழுவதும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும், தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட 4 சட்ட மசோதாக்களை உடனடியாக அரசு கைவிட வேண்டும் என்கிற மொத்தம் 17 கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபடப்போகிறார்கள். வங்கிகள் கூட இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பேருந்து ஊழியர்கள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு … Read more

கண்துடைப்புக்காக கொடுப்பதை போல கொடுத்து ஏமாற்றிய அரசாங்கம்!  கொதித்தெழுந்த அஜித்குமாரின் சகோதரர்!

Sivaganga youth Ajith Kumar's death: Govt job, DMK govt gives 5 lakh compensation to brother

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்ற கோவில் காவலாளி 10 பவுன் நகை காணாமல் போன வழக்கில் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்டு காவல் துறையினரால் கொடூரமான முறையில் அடித்து துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆளும்கட்சியான் திமுகவையும், காவல்துறையினரையும் மக்களும், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களும் கழுவி ஊற்ற ஆரம்பித்தனர். அஜித்குமார் குடும்பத்தை சேர்ந்தவர்களும் எங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் … Read more