விராட் கோலியை மட்டம் தட்டும் பிசிசிஐ : எதற்காக தோனி!

விராட் கோலியை மட்டம் தட்டும் பிசிசிஐ : எதற்காக தோனி!

டி20 உலக கோப்பைக்காக்கான இந்திய அணியில் ஆலோசகராக தோனியை நியமித்தது விராட் கோலியை மட்டம் தட்டும் செயல் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்தனர். 2021 ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வளைகுடா நாடுகளில் நடைபெற உள்ளது. அந்த தொடருக்கான இந்தியா அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான அணியில் பெரும்பாலும் கணிக்கப்பட்ட வீரர்களே இடம்பெற்றுள்ளனர். 4 வருடங்களுக்கு பிறகு இடம் பிடித்துள்ள ரவிச்சந்திரன் அஷ்வின் மட்டுமே யாரும் கணிக்காத வீரர் ஆவார். … Read more

கேரள பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை !

கேரள பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை !

கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஓணம் பண்டிகைக்குப் பிறகு அங்குத் தினசரி பாதிப்பு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் எனப் பதிவாகி வருகிறது. இதையடுத்து தமிழக அரசின் மாநில சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகத்தில் உள்ள கேரள எல்லைப் பகுதிகளில் … Read more

இணையத்தை கலக்கும் தளபதி விஜய் மனைவி மகள் புகைப்படம்!

இணையத்தை கலக்கும் தளபதி விஜய் மனைவி மகள் புகைப்படம்!

தளபதி விஜய்யின் மனைவி மற்றும் மகளின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் செம வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது.இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக, நடிகை பூஜா ஹெக்டே மற்றும் இயக்குனர் செல்வராகவன் நடித்து வருகிறார்கள். நடிகர் விஜய்க்கு கடந்த 1999ஆம் ஆண்டு, சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் திவ்யா சாஷா மற்றும் சஞ்சய் என இரு பிள்ளைகள் உள்ளனர்.சில … Read more

வீட்டு விநாயகரையும் கடலில் கரைக்கக் கூடாது- அரசு தடை!

வீட்டு விநாயகரையும் கடலில் கரைக்கக் கூடாது- அரசு தடை!

சாந்தோம் முதல் நேப்பியார் வரையிலான கடற்கரை பகுதியில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி இல்லை என அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவால் கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்கும், ஊர்வலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி சிலைகள் வைக்கப்படும் என்று இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்தநிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் … Read more

2 லட்சத்துக்கும் அதிகமானோரை பலிகொண்டுள்ள ஏமன் உள்நாட்டு போர்!

2 லட்சத்துக்கும் அதிகமானோரை பலிகொண்டுள்ள ஏமன் உள்நாட்டு போர்!

ஏமன் உள்நாட்டு போரில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், வான்வெளி தாக்குதலில் மட்டும் 18 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதேபோல் ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையினான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்திவருகிறது. … Read more

அமைச்சர்களாக 14 பயங்கரவாதிகள் : ஆப்கனின் பரிதாப நிலை!

அமைச்சர்களாக 14 பயங்கரவாதிகள் : ஆப்கனின் பரிதாப நிலை!

ஆப்கானிஸ்தானின் தற்காலிக அரசில் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள முல்லா முகமது ஹஸன் அகுந்த் மற்றும் இரண்டு துணைபிரதமர்கள் உட்பட 14 பேர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத கருப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் இடைக்கால அரசை தலிபான்கள் அறிவித்துள்ளனர். இது அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய அரசாக இல்லாமல் தலிபான்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள அரசாக உள்ளது. இதில் பெண்களுக்கும் பதவிகள் வழங்கப்படவில்லை. இதில் தற்காலிக பிரதமராக முல்லா முகமது … Read more

ஆஸியை தொடர்ந்து நியூசிலாந்து- கதறவிடும் வங்கதேசம்!

ஆஸியை தொடர்ந்து நியூசிலாந்து- கதறவிடும் வங்கதேசம்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 தொடரை வென்றது போல் நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான டி20 தொடரையும் வங்கதேச அணி வென்றுள்ளது. வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. முதல் 3 ஆட்டங்களின் முடிவில் வங்கதேச அணி 2-1 என முன்னிலை வகித்தது. 4-வது டி20 ஆட்டம் டாக்காவில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பேட்டிங்குக்குக் கடினமான ஆடுகளத்தில் நியூசிலாந்து அணி 19.3 ஓவர்களில் 93 ரன்களுக்கு … Read more

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 1,587 பேருக்கு பாதிப்பு

கடந்த இரு நாள்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் செவ்வாயன்று 1,544 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், நேற்று 1,587 பேராக உயர்ந்துள்ளது. தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை புதன் கிழமை (செப்.8) வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 1,587 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,27,365-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை முந்தைய நாட்களை விட குறைவாக அதாவது … Read more

4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஸ்வின்!

4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஸ்வின்!

டி20 கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான அஷ்வின் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் டி20 அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். எந்த காரணத்துக்காக அணியிலிருந்து அஸ்வின் ஓரங்கட்டப்படுகிறார் என்பது இதுவரை யாருமே அறியாத புதிராக உள்ளது. ஏனெனில் 46 டி20 போட்டிகளில் அவர் 52 விக்கெட்டுகள் எடுத்ததோடு மட்டுமல்லாமல் எகோனமியை 7க்கும் குறைவாக வைத்திருந்தார். 7க்கும் குறைவாக எகோனமியை ஒரு சில இந்திய … Read more

டி20 உலக கோப்பை : மீண்டும் தோனி !

டி20 உலக கோப்பை : மீண்டும் தோனி !

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம் பெற்றுள்ளார். ஓய்வு பெற்ற இந்திய முன்னாள் கேப்டன் தோனி அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாகர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் பட்டேல், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, … Read more