மனைவியை ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற கணவன் !!

மனைவியை ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற கணவன் !!

பாகிஸ்தான் பகுதியை ஒட்டி உள்ள பஞ்சாப் மாகாணத்தில் வடக்கு சர்கோதா என்ற பகுதி அமைந்துள்ளது. அங்கு பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் மற்றும் தனது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார் . இந்நிலையில் கணவன், மனைவியை 4 பேர் கொண்ட கும்பலிடம் ரூபாய் 5 ஆயிரத்திற்கு விற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து 21 நாட்கள் கழித்து விற்கப்பட்ட பெண், 4 பேர் கொண்ட கும்பல் மூலம் தினமும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். தினமும் கொடுமையில் தவித்து வந்த அப்பெண், … Read more

வெடி விபத்து: இருவர் பலி! நடந்தது என்ன..?

வெடி விபத்து: இருவர் பலி! நடந்தது என்ன..?

வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள மாதேஸ்வரன் மலைப் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராஜா என்பவர் தனது குடும்பத்துடன் வாடகைக்கு குடியேறினார். ராஜா தீபாவளி பலகார சீட்டு நடத்தி வந்துள்ளார். தீபாவளி பண்டிகை நெருங்குவதால் சீட்டு போட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் கொடுப்பதற்காக ஏராளமான பட்டாசு பெட்டிகளை வாங்கி வந்து நேற்று மாலை … Read more

இனி மக்கள் தங்கள் கருத்துக்களை அரசிடம் எளிதில் பகிரலாம்..! புதிய இணையதளம் துவக்கம்!

இனி மக்கள் தங்கள் கருத்துக்களை அரசிடம் எளிதில் பகிரலாம்..! புதிய இணையதளம் துவக்கம்!

மக்கள், அரசை எளிதில் தொடர்பு கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உதவும் வகையில் புதிய இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள், அரசை எளிதில் தொடர்பு கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உதவும் வகையில் “நமது அரசு” என்ற இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் … Read more

தீயாய் பைக்கில் பறந்த தல அஜித்! விழுந்து விழுந்து தேடும் ரசிகர்கள்!

தீயாய் பைக்கில் பறந்த தல அஜித்! விழுந்து விழுந்து தேடும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் தல அஜித்.  இவர்  நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாம் ஹிட் ஆவது நாமறிந்ததே. தற்போது தல அஜித் பற்றி ஒரு முக்கியமான விஷயம் சமூக வலைத்தளத்தில்  வைரலாக பரவி வருகிறது. அதாவது தல அஜித் பைக்கிலேயே இந்தியாவின் கிழக்கு எல்லையான ஒடிசா வரை பைக்கிலேயே சென்று வந்திருக்கிறாராம். ஏற்கனவே தல அஜித்திற்கு  துப்பாக்கி சுடுதல் பைக் ரேஸ் கார் ரேஸ் போன்ற பல விஷயங்களில் ஆர்வம் இருப்பது நாம் … Read more

ஓபிசி பிரிவினரைக் கணக்கெடுப்பதில் ஏன் தயக்கம் – மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி!

ஓபிசி பிரிவினரைக் கணக்கெடுப்பதில் ஏன் தயக்கம் - மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி!

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி பிரிவினரை சரியாக கணக்கெடுப்பதில்லை என்று மதுரையை சேர்ந்த ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவும் இன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த விசாரணை நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தியை கொண்ட அமர்வு விசாரித்து உள்ளது. ஓபிசி பிரிவினருக்கு என்று 1992ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தேவையான சட்ட திட்டங்கள் பிறப்பித்துள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ளது நீதிமன்றம். அதைத்தொடர்ந்து, ஒபிசி பிரிவினரை கணக்கெடுப்பதில் என்ன தயக்கம்? என்றும் கேள்வி … Read more

நந்தா கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

நந்தா கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

நந்தா கல்வி நிறுவனம் ஈரோட்டில் உள்ளது, அது மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களிலும் இந்த நிறுவனத்தின் கிளைகள் செயல்பட்டு கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் சண்முகம் என்பவர் சில ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்து வருவதாக புகார்  எழுந்துள்ளது. நந்தா கல்வி நிறுவனத்திலும்,  அதற்கு சொந்தமான இடங்களிலும் மற்றும் பல்வேறு இடங்களில் இருக்கும் கிளை அலுவலகங்களிலும் வரித்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.  அப்போது தலைவர் சண்முகம் என்பவரின் இரண்டு மகன்களிடமும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மாலை தொடங்கிய அந்த … Read more

சிகிச்சையில் இருக்கும் அமைச்சருக்கு – கண்ணீர் அஞ்சலி என்ற போஸ்டரை வெளியிட்டதால் பரபரப்பு!

சிகிச்சையில் இருக்கும் அமைச்சருக்கு - கண்ணீர் அஞ்சலி என்ற போஸ்டரை வெளியிட்டதால் பரபரப்பு!

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் உறுப்புகள் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் அவருக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படுகிறது என்றும் அந்த மருத்துவமனை மருத்துவர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளனர். தற்போது அமைச்சர் தீவிர சிகிச்சையில் இருக்கின்ற நிலையில், நெல்லையைச் சேர்ந்த தால் சரவணன் என்பவர், அவரின் … Read more

சென்னையில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்படும் – அமைச்சர் நிதின்கட்காரி தகவல்!

சென்னையில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்படும் - அமைச்சர் நிதின்கட்காரி தகவல்!

சென்னையில் இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகத்தில் இருந்து கட்டப்படுகின்ற இந்த மேம்பாலம் புறநகர் வரை சென்று முடியுமாம்.  இந்த மேம்பாலம் கட்ட படுவதன் மூலம் சென்னையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்துவிடும் என்பதனை உறுதியாக தெரிவித்துள்ளார். அமைச்சர் நிதின்கட்காரி அவர்கள் ஆர்.ஏ.புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இவற்றை தெரிவித்துள்ளார்.  அதுமட்டுமன்றி தமிழக அரசு ஒப்புதல் வழங்கிய பின்னரே இந்த மேம்பாலப் பணிகள் கட்ட துவங்கும் என்றும் … Read more

நிலுவைத் தொகையை வழங்கும்படி கோரிய மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

நிலுவைத் தொகையை வழங்கும்படி கோரிய மனு தள்ளுபடி - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

தமிழகத்திலுள்ள உள்ளாட்சி அமைப்பிற்கான, 2016 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருக்கும் தொகையை வழங்குவதற்கு, மத்திய அரசிற்கு உத்தரவிடும் படி கோரிய மனு தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம். தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படாததால் –  சுகாதாரம், தெருவிளக்கு போன்ற பொதுமக்களின் அத்தியாவசிய பணிகள் உள்பட அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது மனுவை பரிசீலனை செய்த … Read more

கோவை மாநகராட்சி ஆணையர் அதிரடி அறிவிப்பு – கலக்கமடைந்த முக்கிய நிறுவனங்கள்!

கோவை மாநகராட்சி ஆணையர் அதிரடி அறிவிப்பு - கலக்கமடைந்த முக்கிய நிறுவனங்கள்!

கோவை மாநகராட்சியில் சில முக்கிய நிறுவனங்கள் சரியாக சொத்துவரி கட்டாததால் கோவை மாநகராட்சி ஆணையர் திடீர் என்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் அந்த அனைத்து முக்கிய நிறுவனங்களும் கலக்கம் அடைந்துள்ளது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட, எல்லை கோட்டிற்குள் இருக்கும் சில முக்கிய நிறுவனங்கள் சொத்து வரி செலுத்துவதற்கு கால தாமதம் காட்டி வருவதால், அச்செயலை கண்டித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தற்போது கோவை மாவட்டத்தில் பல தொழில் நிறுவனங்கள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் … Read more