நடப்பு நிதியாண்டின் ஜிடிபி அறிவிப்பு – நிதி அமைச்சர் தகவல்!

நடப்பு நிதியாண்டின் ஜிடிபி அறிவிப்பு - நிதி அமைச்சர் தகவல்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. இதனால் இந்திய அளவில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை கண்டது என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் உற்பத்தியின் அளவு குறைந்துள்ளது. அதை தொடர்ந்து அரசு அறிவித்த சில தளர்வுகளின் காரணத்தினால் உள்நாட்டு உற்பத்தி விகிதம் தற்போது சீராக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் பண்டிகை காலகட்டங்களில் பொருளாதாரம் சீரான வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு இயல்பு நிலைக்கு விரைவில் … Read more

ஊழலுக்கு எதிராய் அனைவரும் ஒன்றிணைவோம் – பிரதமர் மோடி!

ஊழலுக்கு எதிராய் அனைவரும் ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி!

ஊழலுக்கு எதிராய் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கண்காணிப்பு, ஊழல் தடுப்பு மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் மோடி மக்களிடம் ஊழலுக்கு எதிராக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை திட்டவட்டமாக கூறியுள்ளார்.  ஊழல், பயங்கரவாத செயல், பொருளாதாரக் குற்றம், அனைத்தும் பண மோசடி, ஊழல் காரணமாகவே நடைபெறுகிறது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். அதுமட்டுமன்றி ஊழல் என்பது தலைமுறை தலைமுறையாக நடந்ததால் நாடே வெறுமையாக்கி கிடந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் ஊழல் … Read more

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் கொரோனா தொற்று காரணமாக  பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அவரின் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்கனவே இருப்பதால் மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். 90% உடலில் நுரையீரல் பகுதி வேலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.  ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ள காரணத்தினால் அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு – புதுச்சேரி முதலமைச்சர்!

அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு - புதுச்சேரி முதலமைச்சர்!

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு. இந்த அறிவிப்பால் அங்கிருக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்களுக்கு தங்களின் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்கள் கூறியதாவது : “நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான … Read more

நடிகை குஷ்பூ கைது செய்யப்பட்டுள்ளார் – போலீசார் தகவல்!

நடிகை குஷ்பூ கைது செய்யப்பட்டுள்ளார் - போலீசார் தகவல்!

பெண்களை இழிவாக பேசியதாக திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை குஷ்பூ ஏற்கனவே கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, ஏன் இதர கட்சிகள், திருமாவளவனை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது பாஜக கட்சியை சேர்ந்த குஷ்பூ, சிதம்பரத்தில், திருமாவளவனை எதிர்த்து  ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் பாஜக கட்சிக்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் அத்துமீறி வலுக்கட்டாயமாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு … Read more

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு! நிம்மதிப் பெருமூச்சு விட்ட மக்கள்..!

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு! நிம்மதிப் பெருமூச்சு விட்ட மக்கள்..!

தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,522 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 7,14,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்று காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் 10,983 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,029 பேர் கொரோனா தொற்றில் இருந்து … Read more

இ-பாஸ் ரத்து..!! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

இ-பாஸ் ரத்து..!! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் மாநிலங்களுக்கிடையேயான இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்ததால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடைமுறைகளை அமல்படுத்தியது. பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் கருத்தில்கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் … Read more

பள்ளிகள் தீபாவளிக்குப் பின் திறக்கப்படும்! அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

பள்ளிகள் தீபாவளிக்குப் பின் திறக்கப்படும்! அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

குரானா பொது முடக்கம் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. தற்போது பள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் சில மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது குஜராத்தில் தீபாவளி விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்க போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மாநில கல்வி அமைச்சர் பூபேந்திர சிங் சுதாசமா கூறுகையில், “ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கமான … Read more

அதிமுகவின் அராஜக ஆட்சியை கண்டித்த உதயநிதி ஸ்டாலின்!

அதிமுகவின் அராஜக ஆட்சியை கண்டித்த உதயநிதி ஸ்டாலின்!

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் அராஜக நடவடிக்கையை கண்டித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. மேலும் இந்த கூட்டத்தில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “இந்தப் போராட்டம் வெறும் போஸ்டர் ஓட்டியதற்காக மட்டுமல்ல. கோவையில் வேலுமணி அடிக்காத கொள்ளை கிடையாது. அந்த அளவிற்கு அனைத்திலும் கொள்ளையடித்து இருக்கிறார். தேர்தலில் மக்கள் அவரை துரத்தி துரத்தி அடிக்க போகின்றனர்” என தெரிவித்தார். மேலும் போஸ்டர்களில் … Read more

கடும் வெயிலில் மரக்கன்று விற்ற முதியவர் !! சமூக ஆர்வலர்கள் செய்த செயலால் குவியும் பாராட்டுக்கள் !!

கடும் வெயிலில் மரக்கன்று விற்ற முதியவர் !! சமூக ஆர்வலர்கள் செய்த செயலால் குவியும் பாராட்டுக்கள் !!

ரேவனா சிட்டப்பா என்பவர் கர்நாடகாவில் கனகபுரம் சாலையில் உள்ள சரக்கு சிக்னல் அருகே  தனது செடிகளை 10 முதல் 30 ரூபாய்க்கு கடும் வெயிலில் ஒரு குடையுடன் விற்று வந்துள்ளார். இதனைக் கண்ட ஐ.எம்.சுபம் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த செயல் குறித்து பதிவிட்டுள்ளார்.நேற்று பகிரப்பட்ட இந்த புகைப்படத்தை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டனர் .அதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். https://twitter.com/shubham_jain999/status/1320619850423660545?s=20 இந்த புகைப்படத்தை அஸ்வினி எம் ஸ்ரீதர் என்பவர் 10:45 … Read more