கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 135 டன் பெரிய வெங்காயம் இறக்குமதி!

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 135 டன் பெரிய வெங்காயம் இறக்குமதி!

தற்போது வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக பெரிய வெங்காயத்தை ஏற்றுமதி செய்து வரும் லாரிகள் தமிழகத்திற்கு வர தடை உருவாகியுள்ளது. இதனால் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு ஏற்கனவே விற்கப்பட்டு இருந்தது.  ஆனால் புதிய லோடுகள் வராததால் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர் சூழ்நிலையை தவிர்ப்பதற்கு எகிப்திலிருந்து பெரியவெங்காயம் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது. அதாவது … Read more

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பெண்ணுக்கு ஐஏஎஸ் பணி மறுப்பு :! மத்திய அரசுக்கு நோட்டீஸ்

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பெண்ணுக்கு ஐஏஎஸ் பணி மறுப்பு :! மத்திய அரசுக்கு நோட்டீஸ்

சிவில் சர்வீஸ் தேர்வில் 286- ஆம் இடம்பிடித்த மதுரையை சேர்ந்த பெண்ணொருவருக்கு ஐஏஎஸ் பதவி மறுக்கப்பட்டதனை தொடர்ந்து மத்திய அரசு பதிலளிக்க மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் மணிநகரை சேர்ந்த எம் பூர்ண சுந்தரி என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு நான்காவது முறையாக சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் 286 இடத்தை பிடித்தார். ஆனால் அவருக்கு ஐஏஎஸ் பதவி வழங்காமல் ஐஆர்எஸ் (இந்திய வருவாய் பணி வருமான வரி … Read more

குட் நியூஸ்! அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!!

குட் நியூஸ்! அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. புது தில்லியில், பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 30 … Read more

பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! நவ.02 முதல் பள்ளிகள் திறப்பு… முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! நவ.02 முதல் பள்ளிகள் திறப்பு... முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வரும் நவ. 02ம் முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. அடுத்த கல்வி ஆண்டு (2020 – 21) தொடங்கிய நிலையில் பல பள்ளிகள் ஆன்லைன் மூலம் … Read more

விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் தூங்காமல் தவிக்கும் மக்கள் !!

விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் தூங்காமல் தவிக்கும் மக்கள் !!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழையின் காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சேலத்தில் உள்ள முக்கிய பகுதியான கிச்சிபாளையம் , ராஜபிள்ளை காடு, நாராயண நகர் , அம்மாபேட்டை, பச்சப்பட்டி, சீலாவரி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் … Read more

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த மாவட்டங்களை எச்சரிக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் !!

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த மாவட்டங்களை எச்சரிக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் !!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திர பிரதேசம், தெலுங்கானா ,ஒடிசா ,மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிகபட்சமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வங்க கடலில் காற்றழுத்த காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று அடிக்க கூடும் என்பதால்  … Read more

வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர்களை சேர்க்க சிறப்பு முகாம் அமைப்பு !! தமிழக அரசு !!

வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர்களை சேர்க்க சிறப்பு முகாம் அமைப்பு !! தமிழக அரசு !!

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 2021-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க , வாக்களிக்கும் பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான சிறப்பு முகாம் அந்தந்த பள்ளிகளில் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த சிறப்பு முகாமில் வாக்காளர் தங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். சிறப்பு முகாம் நடைபெறும் … Read more

TET தேர்வு சான்றிதழ் குறித்து தமிழக அரசு வெளியிட்ட அதிரடி தகவல்  !!

TET தேர்வு சான்றிதழ் குறித்து தமிழக அரசு வெளியிட்ட அதிரடி தகவல்  !!

இனி ஆயுள் முழுவதும் TET தேர்வு சான்றிதழ் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்றவர்கள் ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே சான்றிதழ் செல்லும் என்று இருந்து வந்த நிலையில், தற்போது புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.,அதன்படி  இனி டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்  ஆயுள் முழுவதும்  செல்லும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட … Read more

ஆயுத பூஜை அன்று  திரையரங்கம் திறக்கப்படுமா ?? அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை !!

ஆயுத பூஜை அன்று  திரையரங்கம் திறக்கப்படுமா ?? அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை !!

கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொரோனா ஏற்பட்டதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தற்பொழுது மத்திய மாநில அரசு, பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் படப்பிடிப்புகளுக்கு ஒரு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி நடத்திவருகின்றனர் . இதனால் தற்போது திரைத்துறை பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் , திரையரங்குகள் திறக்கப்படாத நிலை தொடர்ந்து நீடித்து வருகின்றது. இதுகுறித்து மத்திய அரசு அனுமதி வழங்கியும், பல்வேறு மாநிலங்களில் நிலைகளைப் பொருத்தே திரையரங்கங்கள் திறக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் … Read more

கோழிப் பண்ணையில் திடீர் தீ விபத்து! பல லட்சம் ரூபாய் நஷ்டம்!

கோழிப் பண்ணையில் திடீர் தீ விபத்து! பல லட்சம் ரூபாய் நஷ்டம்!

கோழிப் பண்ணையில் அமைத்து இரண்டு வாரங்களே ஆன நிலையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு பண்ணை முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமானது. சென்னை கேளம்பாக்கத்தை சேர்ந்த பிரேம்குமார் (வயது 50). இவர் பொன்னேரி அடுத்த கல்மேடு பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக ஷெட் அமைத்து கோழிப் பண்ணை நடத்தி வருகிறார். இதில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான கோழிக்குஞ்சுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை திடீரென மின்கசிவு ஏற்பட்டு கோழிப் பண்ணையில் தீப்பிடித்தது. இதனைப் பார்த்த கோழிப் பண்ணை … Read more