தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு !!

தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு !!

தொல்லியல் துறை படிப்பிற்கு தமிழ் புறக்கணிக்கப்பட்டதனை கண்டித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு தொடரப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், பண்டிட் தின்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்திற்கு தொல்லியல் துறை சம்பந்தப்பட்ட முதுகலை படிப்பில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், விண்ணப்பதாரர்கள் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் உள்ளிட்ட மொழிகளில் எம். ஏ முடித்தவராக இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் செம்மொழியான சமஸ்கிருதம் ,பாலி, பிராகிருதம், போன்ற மொழிகள் இடம்பெற்றிருந்த நிலையில் ,செம்மொழியான தமிழ் இடம்பெறவில்லை. … Read more

புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் இந்தப் பகுதி மீனவர்களுக்கு எச்சரிக்கை!! வானிலை மையம்!

புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் இந்தப் பகுதி மீனவர்களுக்கு எச்சரிக்கை!! வானிலை மையம்!

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக கடந்த சில வாரங்களாகவே அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு ஆந்திர கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக … Read more

உலக அளவில் 10.60 லட்சத்தை தாண்டிய உயிரிழப்பு: அக். 8 கொரோனா பாதிப்பு நிலவரம்!

உலக அளவில் 10.60 லட்சத்தை தாண்டிய உயிரிழப்பு: அக். 8 கொரோனா பாதிப்பு நிலவரம்!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 36,396,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 27,416,262 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 7,919,387 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 67,411 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,060,469 … Read more

யுஜிசி இன் புதிய அறிவிப்பு – போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல் ரிலீஸ்!

யுஜிசி இன் புதிய அறிவிப்பு - போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல் ரிலீஸ்!

UGC எனும் யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய அளவில் 24 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இந்த யுஜிசி அமைப்பு அனைவருக்கும் சமமான தரமான உயர் கல்வியை வழங்குவதற்காக அமைக்கப்பட்டதாகும். யுஜிசி அமைப்பு, நடப்பு ஆண்டில் நடத்திய ஆய்வில்,  இந்தியாவிலுள்ள 24 பல்கலைக்கழகங்கள் போலியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகங்களுக்கு பட்டம் அளிக்கும் அதிகாரமே இல்லை என்பதையும் திட்டவட்டமாக கூறியுள்ளது. அதில் மகாராஷ்டிரா, கேரளா, புதுச்சேரி, ஆந்திர பிரதேஷ், கர்நாடகா … Read more

அக். 8 பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

அக். 8 பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினமும் மாற்றி அமைத்து வருகிறது. அதன்படி இன்று தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 81.06 ரூபாய்க்கும், டீசல் விலை 70.46 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் தொடர்ந்து 17 வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல் லிட்டருக்கு 84.14 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் விலையிலும் 7வது நாளாக … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 78,524 பேருக்கு தொற்று பாதிப்பு! அக். 8 கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் ஒரே நாளில் 78,524 பேருக்கு தொற்று பாதிப்பு! அக். 8 கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 78,524 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,35,656 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 971 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,05,526 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 83,011 … Read more

15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்க்கை: பள்ளிக் கல்வித்துறை!

15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்க்கை: பள்ளிக் கல்வித்துறை!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டு பள்ளி மாணவா்களுக்கான பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தோச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசுப் பள்ளிகளில் நடப்பாண்டில் 1, 6, 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான மாணவா் சேர்க்கை … Read more

அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவால் திருப்தியடையாத சீனியர் உறுப்பினர்கள்! மீண்டும் குழப்பம் மூலமோ!  

அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவால் திருப்தியடையாத சீனியர் உறுப்பினர்கள்! மீண்டும் குழப்பம் மூலமோ!  

அதிமுகவில் முதல்வர்  வேட்பாளராக யாரை அறிவிக்கலாம் என்ற குழப்பம் நீண்ட காலமாக அக்கட்சியில் இருந்து வந்த நிலையில் நேற்று இதற்கு ஒரு முடிவு கிடைத்தது.  ஓபிஎஸ் கோரிக்கையின்படி 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில் உள்ள அமைச்சர்கள்: எஸ் பி வேலுமணி  தங்கமணி  திண்டுக்கல் சீனிவாசன்  சிவி சண்முகம்  ஆர் காமராஜ் ஜேசிடி பிரபாகர்  மனோஜ் பாண்டியன்  மோகன்  ஆர் கோபாலகிருஷ்ணன் மாணிக்கம் மேலும் கடந்த 2017ஆம் … Read more

தல அஜித்துக்கு மகனாக மாற உள்ள தளபதி விஜய்யின் மகன்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

தல அஜித்துக்கு மகனாக மாற உள்ள தளபதி விஜய்யின் மகன்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு எந்த அளவு வரவேற்பு உள்ளதோ அதே அளவான வரவேற்பைப் பெற்றவர் தான் தல அஜித்.  இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக தொலைத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் மெர்சல். இந்தப் படம் வசூல் ரீதியாக பெரிய சாதனையும் புரிந்தது. மேலும் இந்த படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் தளபதி விஜயின் மகனாகவும், சிறுவயதில் விஜய் ஆகவும் … Read more

ஓபிஎஸ்- ன் இல்லம் சென்று நன்றி கூறிய இபிஎஸ்!

ஓபிஎஸ்- ன் இல்லம் சென்று நன்றி கூறிய இபிஎஸ்!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் அவர்களால் நேற்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். மேலும் 11 பேர் கொண்ட அதிமுக வறுதல் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களின் பெயரையும் ஓபிஎஸ் அறிவித்தார். இதனை அடுத்து திமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் கடந்த சில மாதங்களாக கட்சியில் நீடித்து வந்த குழப்பம் நேற்று முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் … Read more