முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் எடப்பாடி பழனிசாமியின் சூளுரை! தமிழகமெங்கும் எதிரொலிக்கும் முழக்கம்!

முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் எடப்பாடி பழனிசாமியின் சூளுரை! தமிழகமெங்கும் எதிரொலிக்கும் முழக்கம்!

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பான பிரச்சனை பல நாட்களாக இருந்து வந்த நிலையில் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் கோரிக்கையின்படி 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு இருக்க முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் எடப்பாடிபழனிசாமி கழகத் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘குருதியிலே உறுதி கலந்து உழைப்போம்! புனித ஜார்ஜ் கோட்டையில் புது வரலாறு படைப்போம்’ என்று சூளுரைத்து … Read more

தமிழகத்தில் 10 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை! அக். 07 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் 10 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை! அக். 07 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,447 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,35,855 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் தொற்று காரணமாக 67 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 9,984 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 5,524 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து … Read more

முகக்கவசம் கையுறை அணியாமல் வருபவர் மீது நடவடிக்கை – மதுரை உயர் நீதிமன்றம் தகவல்

முகக்கவசம் கையுறை அணியாமல் வருபவர் மீது நடவடிக்கை - மதுரை உயர் நீதிமன்றம் தகவல்

கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது சில தளர்வுகள் உடன் அனைத்து துறைகளும் 50% இயங்கி வருகிறது. ஆனால் கொரோனா தொற்று முழுமையாக சரி செய்யப்படாத காரணத்தினால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பலரும் அதை பற்றி எந்த ஒரு கலக்கமும் இன்றி எப்பொழுதும் போல் பொது இடங்களில் நடந்துகொள்கின்றனர். இந்த செயல்களை கண்டித்து மதுரை  உயர் நீதிமன்றம் பொது இடங்களுக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணியாமலும், … Read more

புதுச்சேரியில் மேம்பாலம் திறப்பு! அமைச்சர் திறந்து வைத்தார்!

புதுச்சேரியில் மேம்பாலம் திறப்பு! அமைச்சர் திறந்து வைத்தார்!

புதுச்சேரியில் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது அரும்பார்த்தபுரத்தின் ரயில்வே கிராசிங் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இந்த மேம்பாலம் கட்ட பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மேம்பாலம் ரூபாய் 35 ஆயிரம் கோடி மதிப்பில் கட்டப்பட்டதாகும். இந்த மேம்பாலம் சுல்தான்பேட்டில் இருந்து துவங்கி அரும்பார்த்தபுரம் வரை ஒரு கிலோமீட்டருக்கு கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை மத்திய சாலை போக்குவரத்துத் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரான நிதின் கட்காரி அவர்கள் திறந்து வைத்துள்ளார் அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் … Read more

தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் கேள்வி! தமிழக அரசின் பதில் என்ன?

தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் கேள்வி! தமிழக அரசின் பதில் என்ன?

கொரோனா தொற்று காரணத்தினால் பள்ளி, கல்லூரி என அனைத்தும் மூடப்பட்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழக அரசின், அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் ஆல் பாஸ், தேர்வுகள் எழுத வேண்டிய அவசியமில்லை, தேர்வு எழுதுவதற்கு கட்டணம் செலுத்தி இருந்தால் போதும் அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் மறுப்பு. இந்த அரியர் மாணவர்கள் ஆல் பாஸ் என்ற விவகாரத்தில் தமிழக அரசும், யுஜிசியும், நவம்பர் 20ம் தேதிக்குள் உயர்நீதிமன்றத்திற்கு பதில் அளிக்க … Read more

சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சசிகலா என்பவர் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக 2017 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டவர். ஆனால் சசிகலா மற்றும் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா உள்பட சிலர் மீது வருமானத்திற்கு மேல் சொத்துக்களை குவித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கு உச்ச நீதிமன்றம் இவர்களை குற்றவாளி என்று தீர்ப்பளித்து தண்டனை அளித்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது தண்டனையில் இருக்கும் சசிகலா அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்றும் சசிகலா வெளியில் வந்தால் அரசியலில் மாற்றம் ஏற்படும் என்றும் … Read more

மு.க.ஸ்டாலின் முதலமைச்சருக்கு கடிதம்! கடிதம் எதற்கு தெரியுமா?

மு.க.ஸ்டாலின் முதலமைச்சருக்கு கடிதம்! கடிதம் எதற்கு தெரியுமா?

மத்திய அரசு கொண்டு வந்த  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் மத்திய அரசின் வேளாண் திட்டங்கள் தமிழகத்தில் உள்ள விவசாய மக்களுக்கு அதிருப்தி அளிப்பதாகவும், எதிர்ப்பு அலைகளை உருவாக்கி உள்ளதாகவும் கூறியுள்ளார். வேளாண் துறையை பொறுத்தவரையிலும் அரசமைப்பு சட்டப்பிரிவின் படி, தீர்மானம் நிறைவேற்றுவது என்பது மாநிலங்களுக்கே உரிய  அதிகாரமாகும் என்றும் வேளாண் சட்டங்களை, மாநில சட்டமன்றத்தில் தான் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அக்கடிதத்தில் திமுக … Read more

தேமுதிக கட்சி விஜயகாந்திற்கு சிகிச்சை – மியாட் மருத்துவமனை தகவல்!

தேமுதிக கட்சி விஜயகாந்திற்கு சிகிச்சை - மியாட் மருத்துவமனை தகவல்!

தேமுதிக கட்சி விஜயகாந்த் அவர்களுக்கும் அவரது மனைவி பிரேமலதா அவர்களுக்கும் அண்மையில் கொரோனா பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின் இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.  உடல் நிலையிலும் சீரான முன்னேற்றம் கண்டறிந்த பின்னரே வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் நேற்று இரவு திடீரென்று விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால்  மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். சென்னையில், நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட்  மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயகாந்திற்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, … Read more

அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களின் கருத்தை நீக்கியுள்ளது பேஸ்புக் நிறுவனம் – என்ன கருத்து தெரியுமா?

அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களின் கருத்தை நீக்கியுள்ளது பேஸ்புக் நிறுவனம் - என்ன கருத்து தெரியுமா?

அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.  ராணுவ மருத்துவமனையில் அவர் நான்கு நாட்கள் சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் வெள்ளை மாளிகையை வந்தடைந்தார். ஆனால் அப்போது அவருக்கு கொரோனா தொற்று முழுமையாக குணமடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அதிபர் டிரம்ப்  அமெரிக்க மக்களுக்கு கொரோனா தொற்றை கண்டு அச்சப்பட வேண்டாம் என்று ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார். தற்போது தனது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் “கொரோனா தொற்று என்பது, பருவ காலங்களில் வரும் … Read more

சைக்கிள் உபயோகத்தை ஊக்குவிக்க சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி !!

சைக்கிள் உபயோகத்தை ஊக்குவிக்க சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி !!

சென்னையில் வசிக்கும் பொதுமக்களிடம் சைக்கிள் உபயோகத்தினை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகின்றது. அதன்படி ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சைக்கிள் ஷேரிங் திட்டம், கடந்த ஜூன் மாதம் முதல் சென்னை மாநகராட்சியில் மீண்டும் துவங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம்  தற்போது வாடகை சைக்கிள்களை தங்களது வீட்டிற்கு எடுத்துச் செல்லும் புதிய வசதியை ஒன்றை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொதுமக்கள் வாடகை அடிப்படைகளில் சைக்கிள்களை வீட்டிற்கு எடுத்துச் … Read more