அருள் வாக்கு ஜெயந்தி அம்மா வந்து இருக்கேன்.. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்தபடி வாக்குக் கூறிய பெண்!!

அருள் வாக்கு ஜெயந்தி அம்மா வந்து இருக்கேன்.. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்தபடி வாக்குக் கூறிய பெண்!! சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதன்படி ஏராளமான மக்கள் குறைகள் தொடர்பான மனுக்கள் கொடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தனர். இந்த நிலையில் துறவி வேடம் அடைந்த ஒரு பெண் நெத்தியில் பட்டையும் கழுத்தையும் கருப்பு நிற மணியும் அணிந்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போர்டிகோ பகுதியில் அமர்ந்து நான் சமயபுரத்து … Read more

சிறுவனிடம் சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோவில் கைது!!

சிறுவனிடம் சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோவில் கைது!! சூலூர் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா. இவர் தனது வீட்டின் அருகே உள்ள இரண்டாம் வகுப்பு படித்து வரும் சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்போது அந்த சிறியவனை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இதனால் சிறுவனுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது இது குறித்து … Read more

குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் சுமார் 9 கோடி ரூபாய் அபராதம் வசூலிப்பு!

குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் சுமார் 9 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறை விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கியகாரணங்களில் ஒன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுவதாகும். எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தடுப்பு நடவடிக்கையாக தண்டனை வழங்கப்படுகிறது. அபராதத் தொகை ரூ.10,000/ அதிகமாக இருப்பதால் பலர் அபராதத்தைச் செலுத்துவதில்லை, ஆனால் … Read more

தமிழக ஆளுநர் ரவி பிஜேபியாக இருந்தால் அந்த கட்சியிலேயே போய் சேர்ந்து கொள்ளலாம்- அவை முன்னவர் துரைமுருகன் ஆவேச பேச்சு!

தமிழக ஆளுநர் ரவி பிஜேபியாக இருந்தால் அந்த கட்சியிலேயே போய் சேர்ந்து கொள்ளலாம். நேற்று பிரதமர் வரும்போது மூஞ்சியை உர்ர்ர் என்று வைத்திருந்தார். மேற்கு வங்க ஆளுநருக்கு மக்களவை தலைவர் பதவி கிடைத்தது போல நமக்கு ஒன்று கிடைக்காதா என தமிழக ஆளுநர் செயல்படுகிறார். – அவை முன்னவர் துரைமுருகன் ஆவேச பேச்சு தமிழக ஆளுநருக்கு முதலமைச்சர் கொண்டுவந்த அரசினர் தனித் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து பேசினர். அப்போது திமுக … Read more

ராகுல் காந்தியை பார்த்து மோடி பயப்படுகிறார்- கரூரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேட்டி!!

ராகுல் காந்தியை பார்த்து மோடி பயப்படுகிறார். 2024 மோடி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் – கரூரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேட்டி. கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ஜோதிமணி, ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் 5 கேள்விகளை கேட்டார். கேள்வி கேட்ட 2 நாளில் தீ போல நாடு முழுவதும் பரவியது. இதற்கு உதாரணமாக இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நடந்தது குறித்து கேட்டார். இந்திய பிரதமர், அதானி … Read more

போக்குவரத்து விதிமீறல்களுக்காக சராசரியாக 6000க்கும் மேற்பட்ட வழக்குகள் தினசரி பதிவு!

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் நிலுவையில் உள்ள வழக்குகளை சிறப்பு தனிக்கையின் மூலம் தீர்வு காணப்பட்டு கடந்த மூன்று மாதங்களில் நிலுவையில் இருந்த சுமார் 95,567 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு சுமார் ரூ.3,77,16,320/- அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. மோட்டர் வாகன சட்டத்தை திறம்பட அமல்படுத்துவதன் மூலமும், விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஏற்பாடு செய்வதன் மூலமும் சாலை போக்குவரத்து விபத்துக்களில் ஏற்படும் விபத்து மற்றும் இறப்பு விகிதத்தை குறைக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். … Read more

திடீரென மூர்ச்சையான பச்சிளம் குழந்தை!! நொடியில் காப்பாற்றிய அவசர ஊர்தி ஊழியர்கள் வைரலாகும் வீடியோ!!

திடீரென மூர்ச்சையான பச்சிளம் குழந்தை!! நொடியில் காப்பாற்றிய அவசர ஊர்தி ஊழியர்கள் வைரலாகும் வீடியோ!! பிறந்து 23 நாட்கள் ஆகிய குழந்தை உயிருக்கு போராட, மூர்ச்சையான குழந்தைக்கு மருத்துவ பணியாளர்கள் உயிர்கொடுத்தனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சித்திபேட்டை பகுதியில் பிறந்து 23 நாட்கள் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளது. இதுகுறித்த தகவல் அவசர ஊர்தி ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்த மருத்துவ குழுவினர் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சையான சி.பி.ஆர் சிகிச்சை அளித்துள்ளனர். இதனால் குழந்தை சில … Read more

சிறைவாசிகள் வீடியோ கால் மூலம் பேசலாம்- அமைச்சர் ரகுபதி!!

சிறைவாசிகள் வீடியோ கால் மூலம் பேசலாம்- அமைச்சர் ரகுபதி!! சிறைவாசிகளுக்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் வீடியோ கால் மூலம் பேசும் வசதி ஏற்படுத்தப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையின் கிழ்ழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர். சிறைவாசிகள் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், சிறைவாசிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள தற்போது வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதிக்கான கால அளவை … Read more

பிரசவத்திற்காக அனுமதிக்க பட்ட பெண் உயிரிழப்பு – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் வாக்குவாதம்!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்க பட்ட பெண் உயிரிழப்பு – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் வாக்குவாதம். செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த நெடுமரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (32). இவருக்கு திருமணமாகி பிரமிளா (29) என்கிற மனைவி உள்ளார். கடந்த 3-ந்தேதி பிரமிளாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் கூவத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். … Read more

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடைவிதிக்க கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

திருப்பூர் மாவட்டம், அழகுமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடைவிதிக்க கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் அழகுமலையை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் பணம் பறிக்கும் நோக்கத்தில் ஜல்லிகட்டு நடத்துவதாக கூறி, அழகுமலை கிராம பஞ்சாயத்து தலைவர் தூயமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக மதுரையில் இருந்து மாடுகளும், சிவகங்கையில் இருந்து மாடுபிடி வீரர்களும், தினக்கூலிக்கு அழைத்து வரப்படுவதாகவும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக … Read more