நொடியில் ரயில்வே பாலம் உடைந்து  தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பகீர் சம்பவம் !..

Photo of author

By Parthipan K

நொடியில் ரயில்வே பாலம் உடைந்து  தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பகீர் சம்பவம் !..

Parthipan K

Bagheer incident in which the railway bridge broke and was washed away in the water!..

நொடியில் ரயில்வே பாலம் உடைந்து  தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பகீர் சம்பவம் !..

உலக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும், மாநிலங்களில் பருவமழை காரணமாக விடாது கனமழை பெய்து வருகிறது.இந்த மழை வெள்ளக்காடாக மாறியது.அந்த வகையில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தற்போது கனமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது.

குறிப்பாக அந்த மாநிலங்களில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை காரணமாக  வெள்ளபாதிப்பு ஏற்பட்டது.மேலும் சில பகுதியில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்படுகிறது.

இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக காங்கரா மாவட்டத்தில் உள்ள சக்கி ஆற்றின் மேல் ஒரு ரயில்வே பாலம்  மழை வெள்ளம் காரணமாக திடீரென்று அந்த பாலம் உடைந்து விழுந்துள்ளதாகவும், ஆற்றில் வெள்ளப்பெருக்கு இன்னும் குறையவில்லை என்றும் வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் கங்கரா, சம்பா, பிலாஸ்பூர், சிர்மூர், மண்டி ஆகிய மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மண்டி மாவட்டத்தில் இன்று அதிகாலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.மேலும் அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

மேலும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தியது.சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக வாகனங்கள் சில நீரில் அடித்து செல்லப்பட்டது.படு மோசமான வானிலை காரணமாக ஆறுகள் மற்றும் ஓடைகளுக்கு அருகில் செல்வதை தவிர்க்குமாறு உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை மிக அதிக கனமழை பெய்யும் என்பதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.பாலம் இடிந்து விழும் காட்சி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.