பாமக நிர்வாகி வெட்டிக்கொலை!! போராட்டத்திற்கு குவியும் பொதுமக்கள்!!

0
50

பாமக நிர்வாகி வெட்டிக்கொலை!! போராட்டத்திற்கு குவியும் பொதுமக்கள்!!

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் மணிகூண்டு என்ற பகுதியில் பாமக நகர செயலாளராக இருந்த நாகராஜ் என்பவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம்போல் தனது வேலையை முடித்துவிட்டு கடையை பூட்டி கிளம்பும் போது திடீரென்று அவரை மர்ம கும்பல் ஒன்று சூழ்ந்தது.

அந்த மர்ம கும்பலானது நாகராஜை சரமாரியாக வெட்டியது. நாகராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் நாகராஜ் உறவினர்கள் அவரது உடலை வைத்து போராட்டம் நடத்த ஆரம்பித்து விட்டனர். இதனால் பிரேத பரிசோதனைக்கு நாகராஜ் உடலை அனுப்ப முடியாமல் போலீசார் தவித்து வந்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.

தற்பொழுது வரை 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் குவிந்து போராட்டம் நடத்தியே உள்ளனர். மேற்கொண்டு நாகராஜை கொலை செய்த மர்ம கும்ப கும்பலில் ஐந்து பேரில் ஒருவரை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர்.

நாகராஜ் கொலை குறித்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், ஒருவர் தப்பி ஓட முயன்ற பொழுது அவரது காலில் சுட்டு பிடித்துள்ளனர்.

இதேபோல தொடர்ந்து பாமக நிர்வாகிகள் கொல்லப்படுவது வழக்கமாக உள்ளது என்றும் அதனை போலீசார் கண்டு கொள்வதில்லை என்றும் போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.