மாணவர்களுக்கு குட் நியூஸ்! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

0
27

மாணவர்களுக்கு குட் நியூஸ்!பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

தமிழ்நாடு மற்றும் இதர மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. எனவே மாணவர்கள் பள்ளிக்கு வருவது கடினம் என்பதால் கூடுதல் விடுப்பு அளிக்கப்பட்டது. அந்த வகையில் பள்ளி திறப்பு தேதியானது மாற்றியமைக்கப்பட்டது.

மேலும் பள்ளிகள் திறந்து ஒரு வாரத்திற்குள்ளேயே கனமழை பெய்ய தொடங்கி விட்டது. இந்த கனமழை காரணமாக குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மீண்டும் இடுப்பு அளித்தனர்.

இதே போல கேரளா புதுச்சேரி போன்ற மாநிலத்திலும் மலைக்கேற்ப பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. இந்த வரிசையில் தற்பொழுது டெல்லி உள்ளது. டெல்லியில் எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு தற்பொழுது மழை பெய்து வருவதால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரவால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று தேதி எதையும் குறிப்பிடவில்லை.