புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை!!

0
189
புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை
புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை

புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை!!

கடந்த 2006 ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, மற்றும் புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இதன் மீதான தடை உத்தரவை சென்னை உச்ச  நீதிமன்றம் ரத்து செய்ததது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என புகையிலை நிறுவனங்களின் சார்பாக கூறப்பட்டது.

தமிழக அரசின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர், பொதுமக்களின் நலன் கருதியே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது எனவும் புகையிலை பொருட்களுக்கான தடை உத்தரவு சரிதான் எனவும் கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் , சென்னை உச்ச நீதிமன்றத்தின் தடை உத்தரவிற்கு, இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்த தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட புகையிலை நிறுவனங்கள், நிவாரணம் வேண்டி சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் முறையிட வாய்ப்பளித்துள்ளது.

author avatar
CineDesk