ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த தமிழ்நாட்டு வீராங்கனை!! முதல் சுற்றெ வெற்றி !!

0
168

ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த தமிழ்நாட்டு வீராங்கனை!! முதல் சுற்றெ வெற்றி !!

ஒலிம்பிக்ஸ் போட்டி மட்டும் மட்டுமல்லாது சர்வதேச அளவிலான போட்டிகளிலும் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை வென்று வருகின்றனர்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஃபென்சிங் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் முதல் வீராங்கனை தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானிதேவி ஆவார். அத்துடன் அவருடைய சைபர் பிரிவு ஃபென்சிங் போட்டிகள் தொடங்கின. முதல் சுற்றில் இவை இவர் நாடியாவை எதிர்த்து சண்டை செய்தார்.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி பவானிதேவி 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலமாக இந்தியா சார்பில் முதன்முறையாக ஒரு வீராங்கனையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வரலாறு சாதனை படைத்திருக்கிறார்.

அடுத்து இரண்டாவது சுற்று போட்டியில் பிரான்ஸ் நாட்டின் ப்ரூனட் மானன் என்பவரை இன்று காலை 7:10 சந்திக்கின்றார். உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான பிரான்ஸ் நாட்டின் ப்ரூனட் மானன் உலக கோப்பை வென்ற பிரான்ஸ் வீராங்கனை ஆவார்.

இதனால் இரண்டாவது சுற்று போட்டிகள் சற்று சவாலாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியா சார்பில் முதல் முறையாக ஃபென்சிங் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனை படைத்திருக்கிறார் அவர். இதன் காரணமாக பிரபலங்கள் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள அனைவரும் பவானி தேவியின் சாதனையை பாராட்டி வருகின்றனர்.

author avatar
Jayachithra