மகிழ்ச்சி செய்தி: ஐபிஎல் எஞ்சிய பிரீமியர் லீக் போட்டியின் அட்டவணை!!

0
88

மகிழ்ச்சி செய்தி: ஐபிஎல் எஞ்சிய பிரீமியர் லீக் போட்டியின் அட்டவணை!!

கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன. 29 போட்டிக்கும் நடைபெற்றுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அத்துடன் 14வது ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 லீக் ஆட்டங்களினை துபாய் மற்றும் ஷார்ஜா போன்ற நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் போட்டிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

செப்டம்பர் 18 முதல் 15 வரை போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கு முழு அட்டவணை நேற்று வெளியானது. இதனைத் தொடர்ந்து 27 நாட்களில் 31 போட்டிகளை நடத்த பிசிசி திட்டமிட்டிருக்கின்றது. செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ள முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகின்றன.

இவ்விரண்டு அணிகளுக்கும் ரசிகர்கள் அதிகளவில் இருப்பதால், முதல் போட்டியிலேயே எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கின்றது. கடைசி போட்டியாக கொல்கத்தா மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன. அக்டோபர் 10ஆம் தேதி பிளே ஆப் சுற்றில் முதல் போட்டியும், 11ஆம் தேதி 2-வது போட்டியும், 15-ஆம் தேதி 3-வது போட்டியும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இறுதிப் போட்டி அக்டோபர் 15ம் தேதி பிரமாண்ட முறையில் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கின்றது. 13 போட்டிகள் துபாயிலும், 10 போட்டிகள் சார்ஜாவிலும், 8 போட்டிகள் அபிதாபியில் நடைபெற இருப்பதாக தகவல் வெளிவந்திருக்கின்றது.

author avatar
Jayachithra