Mudakathan Keerai : மூட்டுவலியை போக்கும் முடக்கத்தான் கீரை..! இயற்கையின் வழியில் பக்காவான 10 டிப்ஸ்..!!

Photo of author

By Jayachandiran

Mudakathan Keerai : மூட்டுவலியை போக்கும் முடக்கத்தான் கீரை..! இயற்கையின் வழியில் பக்காவான 10 டிப்ஸ்..!!

Jayachandiran

Mudakathan Keerai Benefits in Tamil

மூட்டுவலியை போக்கும் முடக்கத்தான் கீரை குறித்தும் அதைபயன்படுத்தி  இயற்கையின் வழியில் மூட்டு வலியை (Mudakathan Keerai Benefits in Tamil) குணப்படுத்தும் பக்காவான 10 டிப்ஸ்.

மூட்டுவலியை போக்கும் டிப்ஸ்:

இயற்கை கொடுத்த மருத்துவத்தில் முடக்கத்தான் கீரையும் ஒன்றாகும். முடக்கு (முடக்குவாதம்) என்றால் நோயை குறிக்கும் சொல்லாகும். முடக்கு + அற்றான் என்றால் நோய் தீர்ப்பான் என்று பொருள். அதாவது நம் உடலில் உள்ள நோய்களை எளிதில் தீர்க்கும் மருந்தாகியதால் முடக்கத்தான் என்று பெயர் பெற்றது.

முடக்கத்தான் கீரையின் 10 பயன்கள் : Benefits Of Mudakathan Keerai

  • முடக்கத்தான் கீரையை மிதமாக குழைந்து வரும் நிலையில் அரைத்து தேங்காய் எண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய் சேர்த்து மூட்டுவலி இருக்கும் இடங்களில் பத்து (வைத்திய முறை) போட வேண்டும். இதனால் மூட்டுவலி மற்றும் வீக்கம் இருந்தாலும் குறைந்துவிடும்.
  • கீரையை கொதிக்க வைத்து சூப் குடிக்கும் முறையில் வாரம் இரண்டு முறை குடித்து வந்தால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, மூட்டுவாதம் போன்றவை வராமல் தடுக்கும்.
  • தோசை மாவுடன் கலந்து சுவையான தோசையாக உண்ணலாம் அல்லது கேழ்வரகு மாவில் வெல்லத்துடன் சேர்த்து கீரையை அடைதட்டி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் கூடும் இடங்களில் மூட்டுவலி என்ற பேச்சுக்கே இடமில்லை.
  • முடக்கத்தான் கீரையில் உள்ள தாலைட்ஸ் என்னும் இயற்கை வேதிப்பொருள், மூட்டுகளில் இருக்கும் தேவையற்ற யூரிக் அமிலத்தை கரைத்து சிறுநீராக வெளியேற்றுகிறது. இந்த சோதனையை இந்திய மற்றும் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இணைந்து கண்டுபிடித்தனர்.
  • கீரையை அளவான நெய்யில் வதக்கி அதனுடன் கொத்தமல்லி, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், இஞ்சி போன்றவற்றை சேர்த்து துவையல்போல சமைத்து வாரம் இரண்டுமுறை உண்டு வந்தால் மூட்டு சம்பந்தபட்ட நோய்கள் குணமாகும்.
  • முடக்கத்தான் கீரையை பொடியாக நறுக்கி எடுத்து அதனுடன் மிளகு, சீரகம் சேர்த்து ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த ரசம் வைத்து குடிக்கலாம்.
  • பாசிப்பருப்பு, துவரம் பருப்பு மற்றும் கல்ல பருப்பை கீரையுடன் கலந்து கூட்டு சமைத்து உண்டால் மூட்டு வலிகள் தீரும்.
  • வீக்கமான கட்டிகள் இருந்தால் முடக்கத்தான் கீரையை பாதியளவு அரைத்து கட்டுபோட்டால் விரைவில் கட்டிகள் உடைந்துவிடும்.
  • நீண்ட நாட்களாக வாயுத்தொல்லை உடையவர்கள் இந்த கீரையை பொரியல் செய்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும். வயிற்றுப் புண் அல்லது அல்சர் இருந்தாலும் குணமாகும்.
  • முடக்கத்தான் கீரையை காயவைத்து பொடியாக்கி குளிக்கும்போது பயன்படுத்தினால் தோல் பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.

குறிப்பு: இந்தியாவில் 65% மக்கள் மூட்டு வலியால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 85% பெண்களாவர். ( கீரையை பச்சையாக அதிகம் சாப்பிட்டால் பேதியாகும், சரியான ஆலோசனையின்படி உண்ணவும்)