திங்கட்கிழமை, அக்டோபர் 27, 2025
Home Blog Page 10

நலன் விசாரிக்காத விஜய்.. மறைமுகமாக வருத்தம் தெரிவித்த ராமதாஸ்.. என்னவா இருக்கும்.. குழப்பத்தில் தேர்தல் களம்!!

0

PMK TVK: பாமக நிறுவனர் ராமதாஸ் சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரை காண பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வந்து சென்றனர். நேரில் வர முடியாதவர்கள் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தனர். இந்நிலையில், பரிசோதனை முடிந்த அடுத்த நாளே ராமதாஸ் வீட்டிற்கு திரும்பினார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், அன்புமணி கூறிய கருத்துக்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

மருத்துவர் ஐயா நல்லா தான் இருக்கிறார். ஆனால் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறி சிலர் என்னை வந்து பார்க்க சொல்கிறார்கள். ஐயாவை யார் யாரோ வந்து பார்த்து செல்கிறார்கள். அவர் என்ன காட்சிபொருளா என்றும், அவரின் உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்தால் அவருடன் இருப்பவர்களை சும்மா விட மாட்டேன் என்று கூறியிருந்தார். இதற்கு இன்று பதிலளித்த ராமதாஸ் படிக்காத மாடு மேய்க்கும் சின்ன பையன் கூட இப்படி பேச மாட்டான் என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய அவர், என்னை காண பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முன்னணி தலைவர்களும் வந்து சென்றனர்.

நேரில் வர முடியாதவர்கள் போனில் விசாரித்தனர். ஆனால் புதிதாக கட்சி தொடங்கிய யாரும் என்னை வந்து பார்க்கவோ, தொலைபேசி மூலமோ விசாரிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். இவர் இவ்வாறு கூறியது, தவெக தலைவர் விஜய்யை தான் என்று பலரும் கூறி வருகின்றனர். விஜய் வந்து சந்திக்க வேண்டுமென்று ராமதாஸ் ஏன் நினைக்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வர, கூட்டணி குறித்து டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி நடைபெறும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று ராமதாஸ் தெரிவித்தார். 

அதிமுகவினர் ரூட்டை பாலோ செய்த பாமகவினர்.. சட்டசபையில் அமளி!!

0

ADMK PMK: 6 மாதங்களுக்கு பிறகு 14ஆம் தேதி கூடிய சட்டசபை 17 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் 3 வது நாளாக இன்று கூடிய சட்டசபையில் பாமகவை சேர்ந்த அன்புமணி ஆதரவு எம். எல். ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். பாமக சட்டமன்ற குழுத் தலைவர் ஜி.கே. மணி மற்றும் கொறடா அருளை  மாற்ற அன்புமணி தரப்பு கோரிக்கை விடுத்த நிலையிலும், சபாநாயகர் அதை ஏற்காததால் மீண்டும் அதனை வலியுறுத்தும் விதமாக கருப்பு சட்டை அணிந்து வந்ததாக அவர்கள் கூறினார்கள்.

இதனை தொடர்ந்து பாமக எம். எல். ஏக்கள் 3 பேர் சட்டசபை வளாகத்தில் தர்ணாவிழும் ஈடுபட்டனர். இதனால் சட்டசபை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை கண்ட பேரவை தலைவர் இந்த பிரச்சனையை பின்னர் பார்த்து கொள்ளலாம் என்று கூறினார். நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் அதிமுகவினர் கையில் கருப்பு பட்டை அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையிலும், அவர்களின் துயரத்தில் பங்கெடுக்கும் வகையிலும் இந்த செயல் அரங்கேறியதாக அதிமுகவினர் கூறினார். இதனை கண்ட சபாநாயகர் அப்பாவு ரத்த கொதிப்பா என்று கிண்டலடித்தார். அதிமுகவினரை தொடர்ந்து பாமகவினரும் இந்த செயலில் ஈடுபட்டிருப்பது பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. பாமகவின் எதிர்க்கட்சிகள் அதிமுகவினரை பார்த்து பாமகவினர் காப்பி  அடிப்பதாகவும் கூறுகின்றனர்.  

காங்கிரஸா அதிமுகவா.. எந்த திசையில் திரும்புவது.. திணறும் தலைவர் விஜய்!!

0

ADMK TVK CONGRESS: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், யாரும் அசைக்க முடியாத இடத்திலும்  இருப்பவர் தான் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கியதிலிருந்தே அது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக இன்னும் உச்ச நிலையை தான் எட்டியுள்ளது. இந்த விபத்திற்கு பிறகு பாஜக விஜய்யை கூட்டணியில் சேர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் விஜய் அதற்கு இணங்கி வருவதாக தெரியவில்லை.

விஜக்கு அதிமுக அல்லது காங்கிரஸ் பக்கம் தான் செல்லும் ஐடியா இருக்கிறது என்று தவெக வட்டாரங்ககள் கூறுகின்றன. அதிமுக கூட்டணிக்கு சென்றால் விஜயகாந்தின் நிலைமை வந்து விடுமோ என்று விஜய் பயப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் அதிமுக கூட்டணியில் விஜய்க்கு துணை முதல்வர் பதவி தான் வழங்கப்படும் என்று கூறியதால், அக்கட்சியுடன் கூட்டணியில் சேர்வதற்கு விஜய் தயங்குகிறார். சரி, காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்கலாம் என்று பார்த்தால் அதிமுகவிற்கு தமிழகத்தில் இருக்கும் அந்தஸ்தும், மதிப்பும் காங்கிரசிற்கு இல்லை.

ஆனால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முதல்வர் வேட்பாளராக விஜய் இருக்க சம்மதம் தெரிவித்ததாகவும் சிலர் கூறுகின்றனர். தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிமுக கூட்டணியில் சேர்ந்தால்   தான் ஆட்சி அமைக்க முடியும் என்றும், பிறகு 2031 தேர்தலில் தனித்து  போட்டியிடலாம் என்றும் அறிவுரை கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது.    இந்நிலையில் முதல்வர் வேட்பாளரா இல்லை தமிழகத்தில்,வலுவாக நிலைபெற்ற கட்சியுடன் கூட்டணியா என்று விஜய் குழப்பத்தில் உள்ளார். 

நான் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என கிளம்பியுள்ளனர்.. விஜய் பேரை சொல்வதற்கு கூட அஞ்சும் திமுக கூட்டணிகள்!!

0

TVK DMK: இன்னும் 6 மாதத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை விட தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தான் அன்றாடம் வந்த வந்த வண்ணம் உள்ளது. திமுகவை தனது அரசியல் எதிரி என்று விஜய் கூறியிருந்த நிலையில், திமுக தரப்பிலிருந்து அவருக்கு எதிர்ப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியிலிருக்கும் தொல்.திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

எங்கள் கட்சி தமிழகத்தில் தவிர்க்க  முடியாத கட்சியாக மாறியுள்ளது. மக்களுக்காக எதையும் செய்யாமல் நான் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று சிலர் கிளம்பியுள்ளனர் என்று விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார். ஏற்கனவே ஒரு முறை முதல்வர் ஸ்டாலின் புதிய எதிரிகள் என்று தவெகவை மறைமுகமாக விமர்ச்சித்தால் அவருக்கு விஜய்யின் மீது பயம் என்று கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி  ஸ்டாலினும் பாஜகவிற்கு ஏற்கனவே இருக்கும் அடிமைகள் போதாதென்று, புதிய அடிமைகளை கூட்டணியில் சேர்க்க நினைக்கிறது என்று தவெகவை மறைமுகமாக சாடியிருந்தார். விஜய்யை விமர்சித்தால் தேவையில்லாமல் பல்வேறு பிரச்சனைகள் வருவதால் திமுக கூட்டணி கட்சிகள் விஜய்யை பற்றி விமர்சிக்க வேண்டமென திமுக தலைமை அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக தான், நேற்று சட்டசபையில் கூட கரூர் விவகாரத்தை பற்றி பேசும் போது விஜய்யை பற்றி ஒரு வார்த்தை கூட ஸ்டாலின் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், திருமாவளவனின் விஜய்யைப் பற்றிய இந்த மறைமுக விமர்சனம், திமுகவிற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் தவெக மீது இருக்கும், பயத்தை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் வகையில் உள்ளது என்பதற்கு சான்று என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். 

விஜயகாந்திடம் காண்பித்த வியூகத்தை விஜய்யிடமும் முயற்சிக்கும் அதிமுக.. சிக்குவாரா விஜய்!!

0

ADMK  TVK: தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற  தேர்தலில் போட்டியிட இருக்கிறது. கட்சி ஆரம்பித்த ஒன்றரை வருடங்களிலேயே தவெகவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் விஜய்யுடன் கூட்டணியில் சேரும் கட்சி தேர்தலில் ஆளுங்கட்சியாகவோ அல்லது எதிர்க்கட்சியாகவோ வர வாய்பிருக்கிறது. இதன் காரணமாக அதிமுக தவெகவை கூட்டணியில் சேர்க்க முயன்று வருகிறது.

இதற்கு விஜய்யும் அரைமனதாக சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. இந்நிலையில் விஜய் அதிமுக தலைமையின் கீழ் கூட்டணியில் சேர்ந்தால் அவருக்கும் விஜயகாந்தின் நிலைமை தான்  ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், 2006 ஆம் ஆண்டு விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அப்போது அக்கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதன் பிறகு 2011 சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக உடன் தேமுதிக கூட்டணி வைத்தது. 234 தொகுதிகளில் தேமுதிகவிற்கு  41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் 29 இடங்களில் தேமுதிக வெற்றி பெற்று, அதிமுக 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பிறகு, விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார்.

ஆனால் அதிமுக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, அதிமுக தரப்பிலிருந்து, விஜயகாந்த்  கட்சிக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. மேலும், சட்டசபையில் தேமுதிகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பல முறை அவமதிக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல், கூட்டணியில் விஜயகாந்தின் கருத்துக்கு அதிமுக செவி சாய்க்காமல் அவமதித்தனர். இதனால் தேமுதிக தொண்டர்கள் பலரும் கட்சியிலிருந்து விலகினர்.

இதனை தொடர்ந்து, 2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக-அதிமுக கூட்டணி முறிவு அடைந்தது. அதிமுகவில் தங்களுக்கு பல்வேறு துரோகங்கள் நிகழ்ந்து விட்டதாக விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும் பலமுறை வெளிப்படையாக கூறியுள்ளனர். இந்த வியூகத்தை விஜய்யிடமும் பயன்படுத்தலாம் என்று அதிமுக திட்டம் தீட்டுவதாக தெரிகிறது. விஜய்க்கு ஆதரவு அதிகம் இருப்பதால் தேர்தல் நேரத்தில் கூட்டணி என்று கூறிவிட்டு வெற்றி பெற்ற பிறகு விஜய்யை கூட்டணியிலிருந்து புறக்கணிக்கலாம் என்று அதிமுக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்ற கருத்தும் நிலவுகிறது. 

அபேஸ் ஆகும் அதிமுக கோட்டை.. தவிக்கும் எடப்பாடி பழனிசாமி!!

0

ADMK DMK: அதிமுகவின் கோட்டை என்றாலே நம் நினைவிற்க்கு வருவது சேலம் மற்றும் மதுரை மேற்கு சட்டமன்ற  தொகுதி தான். சேலம் எடப்பாடி பழனிசாமியின் பூர்விகம் என்பதால் இங்கு காலூன்ற முடியாது என்பதை அறிந்த திமுக தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் தனது சித்து வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது. கடந்த 25 வருடங்களாக அதிமுக தான்  இங்கு நிலை பெற்று வருகிறது.

அதிலும் 2011 தொடங்கி 2021 சட்டமன்ற  தேர்தல் வரை அங்கு  அதிமுகவை சேர்ந்த செல்லூர் ராஜு தான்  வெற்றி பெற்று வருகிறார். இதனை உடைத்து திமுகவை தக்க வைத்து கொள்ள வேண்டுமென நினைத்த ஸ்டாலின் திமுக அமைச்சர் மூர்த்தி & கோ விற்க்கு  மதுரை மேற்கு சட்டமன்ற  தொகுதியை திமுக வசம் ஆக்கும் படி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் பேரில் செயல்பட்டு வரும் மூர்த்தி & கோ மக்களை கவர்வதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

முக்கியமாக மக்களுக்கு இலவசமாக பல்வேறு பொருட்களை வழங்கி வருகிறது. இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட பயந்த செல்லூர் ராஜு வேறு தொகுதியில் போட்டியிடும்  நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இதனால் அதிமுக என்னசெய்வதென்று  தெரியாமல் திணறி வருகிறது. ஏற்கனவே அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்த வண்ணம் இருப்பதால் மக்கள்  அக்கட்சியின்  மீது அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்தநிலையில் மதுரை மேற்கு தொகுதியில் திமுக காலூன்றி விட்டால், அதிமுக சட்டமன்ற  தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலைக்கு தள்ளப்படும் என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர் . 

மதுரை மேற்கு தொகுதியில் காலூன்றும் திமுக.. இலவச பொருட்கள் மூலம் மக்களை ஈர்க்கும் பணியில் மும்முரம்!!

0

ADMK DMK: சட்டமன்ற தேர்தலுக்கான நேரம் நெருங்கி வருவதால் அதிமுக தமிழகத்திலுள்ள தொகுதிகள் அனைத்தையும், தன்  வசப்படுத்தி விட வேண்டுமென்ற நோக்கில் உள்ளது. இதனால் தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளில் சுமார் 160 தொகுதிகளுக்கும் மேலாக இபிஎஸ் சுற்றுப்பயணம்  செய்து விட்டார். மீதமிருக்கும் தொகுதிகளுக்கு அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவை சேர்ந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில் மதுரை மேற்கு சட்டமன்ற  தொகுதி பல வருடங்களாக அதிமுக வசம் உள்ளது. இதனை எப்படியாவது திமுக வசம் கொண்டு வர வேண்டுமென ஸ்டாலின், அமைச்சர்  மூர்த்திக்கு கட்டளையிட்டதாக தெரிகிறது. அவரின் செயல்பாடுகளும் அதனை நிரூபிக்கும் வகையில் உள்ளது.

எப்போதும் இல்லாமல் கடந்த சில மாதங்களாகவே அமைச்சர் மூர்த்தி & கோ மதுரை மேற்கு தொகுதியில் உள்ள கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இலவசமாக சில பொருட்களையும், வாரத்திற்கு ஒரு முறை அசைவ விருந்து போன்ற  பல வேலைகளை  செய்து வருகின்றார். இதனை தடுக்க செல்லூர் ராஜு எவ்வளவு முயன்றும் அவர்களை தடுக்க முடியவில்லை.

இதனால் இபிஎஸ்யிடம் சென்ற செல்லூர் ராஜு மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இதற்கு மறுத்த இபிஎஸ் எல்லோரும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தான்  போட்டியிட வேண்டுமென்று திட்ட வட்டமாக கூறிவிட்டாராம். இதனால் திமுக மதுரை மேற்கு தொகுதியில் காலூன்ற போவதை அறிந்த செல்லூர் ராஜு என்ன செய்வதென்று  தெரியாமல் திணறி கொண்டிருக்கிறார். 

எடப்பாடியில் நிறுத்தப்படும் திமுக வேட்பாளர் இவர் தான்.. புது முகத்தை மாற்றிய திமுக தலைமை!!

0

ADMK DMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுகவும், திமுகவும் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதை பற்றியும், மக்களை  சந்திக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அதிமுகவின் கோட்டையாக அறியப்படும் சேலத்தில் வெற்றி பெற வேண்டுமென திமுக பல வருடங்களாக முயற்சித்து வருகிறது.

ஆனால் அது ஈடேரிய பாடில்லை. அவர்களின் பகல் கனவு பலிக்காது என்ற நம்பிக்கையில் அதிமுகவும் அதனை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் அவர் யாருடனும்  கூட்டணி வைக்காமல் தனித்து நின்று போட்டியிட்டாலும் அவர் தான்  வெற்றி பெறுவார். இந்த சூழலில் சட்டமன்ற  தேர்தலில், திமுக எப்போதும்  எடப்பாடி  தொகுதியில் அதிக கவனம் செலுத்தும்.

2026 தேர்தலில் எடப்பாடி தொகுதியில் திமுக சார்பாக இபிஎஸ்க்கு எதிராக யாரை நிறுத்தலாம் என்று  ஸ்டாலின் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். இதற்கான இறுதி முடிவு இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், கடந்த முறை எடப்பாடி தொகுதியில் சம்பத்குமார் என்ற புதிய முகத்தை நிறுத்தி தோல்வியை சந்தித்தது போல இந்த முறையும் நிகழ கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது.

அதனால் இந்த முறை மக்களால்  நன்கு அறியப்பட்டு வரும் முகமாக இருப்பவர்களை தான்  அங்கு நிறுத்த வேண்டும் என்பதில் திமுக தெளிவாக உள்ளது. அந்த வகையில் பார்த்தால் சேலம் முன்னாள் எம்.பி. பார்த்திபன் மற்றும் தற்போதைய சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சுற்றுலா துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் இவர்களில் ஒருவர் தான்  இதற்கு சரியாக இருப்பார்கள் என்று திமுக தலைமை நம்புகிறது.

சிபிஐ விசாரணை விஜய்யின் இமேஜை காப்பாற்றுவதற்காக தான்.. மக்களுக்காக அல்ல.. உமாபதி விளக்கம்!!

0

TVK : கரூர் கூட்ட நெரிசல் வழக்கைச் சுற்றி பல்வேறு அரசியல் மற்றும் சட்ட ரீதியான விவாதங்கள் கிளம்பி வரும் நிலையில், மூத்த பத்திரிகையாளர் உமாபதி தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். அவர் அளித்த நேர்காணலில், விஜய் உச்சநீதிமன்றத்தை அடைந்ததன் முக்கிய நோக்கம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு தெரிவித்திருந்த கடுமையான கருத்துக்களை நீக்கச் செய்வதே என்று கூறினார்.

இது வழக்கின் விசாரணை குறித்து அல்ல, அவரின் தனிப்பட்ட மரியாதையும், அரசியல் இமேஜையும் காப்பாற்றும் முயற்சி என்று அவர் தெரிவித்தார். மேலும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பின்னர் சிபிஐ விசாரணை உத்தரவு வந்தது. ஆனால் அதனைச் சுற்றி பாஜக மற்றும் தவெக இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் உமாபதி சுட்டிக்காட்டினார். நயினார் நாகேந்திரன் விஜய்க்கு பாதுகாப்பு தேவை என கூறுகிறார்.

ஆனால் அதே கட்சியை சேர்ந்த  அண்ணாமலை அதற்கு எதிராகப் பேசி, அவருக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று கூறுகிறார். இது அவர்களுக்குள் உள்ள போட்டியையும், அரசியல் வயிற்றெரிச்சலையும் காட்டுகிறது என்று அவர் விமர்சித்தார். அதிமுக குறித்து பேசும் போது, எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை முடிவை நோக்கி செல்கிறது. கூட்டணி அரசியலின் திசை மாறிவிட்டது. பீகார் தேர்தல் முடிவுகள் கூட அவரது எதிர்காலத்தை தீர்மானிக்கும் என உமாபதி கூறினார்.

மேலும், ஜனநாயகன் திரைப்படம் தெலுங்கு படம் பவந்த் கேசரியின் ரீமேக் என்றும், அதன் படப்பிடிப்பின் போது கரூர் நெரிசல் சம்பவம் நடந்ததாகவும் தெரிவித்தார். மேலும் விஜய் தற்போது தன் அரசியல் முகத்தை காப்பாற்றிக் கொள்ளவே நீதிமன்றத்தை நாடுகிறார். அவர் உண்மையில் கரூருக்கு செல்வாரா, இல்லையா என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும் என உமாபதி தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

இறுதி முடிவில் பிரேமலதா.. எம்.பி பதவி யார் தருகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி!!

0

DMDK: தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் மிகவும் விறுவிறுப்பான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக அனைவராலும் எதிர்பார்க்கப்படும் வியம், தவெக, பாமக, தேமுதிக போன்ற மூன்றாம் நிலை காட்சிகள் யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது தான். தற்போது தவெக அதிமுக உடன் கூட்டணி அமைக்கப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், பாமகவும் அதிமுக கூட்டணிக்கு சம்மதித்தாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் தேமுதிக யார் பக்கம் செல்வதென்று  தெரியாமல் யோசித்து வருகிறது. ஏற்கனவே அதிமுகவுடன் ஏற்பட்ட ராஜ்யசபா சீட் பிரச்சனை காரணமாக அதனுடனான உறவு முறிந்தது. அதனால் பிரேமலதா மீண்டும் அதனை வலியுறுத்துவதாக தகவல் வந்துள்ளது. மேலும் அதிக தொகுதிகளையும், 8 எம்.எல். களையும் தருவதற்கு யார் சம்மதிக்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என்பதில் பிரேமலதா தெளிவாக உள்ளார் என்றும் தேமுதிக வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த கோரிக்கையை அதிமுக, திமுக என இரண்டு பக்கத்திலும் தெரிவித்துள்ளதாகவும், இந்த கோரிக்கை தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் பேசப்பட்டு வருகிறது. இதனால் தான் தனது கூட்டணி முடிவை பிரேமலதா ஜனவரியில் அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். மேலும் அதிமுக கூட்டணி தற்சமயம் வலுப்பெற்று வருவதை உணர்ந்த பிரேமலதா, அதிமுக விடம் வைக்கப்பட்ட கோரிக்கையை விட திமுகவிடம் அதிகம் கேட்டு உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. அதிமுக கூட்டணி பலமடைந்து வருவதால் திமுகவும் பிரேமலதாவின் கோரிக்கைக்கு சம்மதம் தெரிவிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.