வியாழக்கிழமை, செப்டம்பர் 18, 2025
Home Blog Page 10

தேர்தல் அதிர்ச்சி: அபாயத்தில் அதிமுக.. சிதறும் வாக்குகள்!! இனி எதிர்கட்சிக்கு கூட வாய்ப்பில்லை!!

0

ADMK: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்றத் தேர்தலால் தற்போதே அரசியல் களமானது அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக இம்முறை விஜய் போட்டியிட உள்ளதால் வாக்கு வங்கியில் பெரும் மாற்றத்தை காண முடியும். இதனை சமநிலைக்கு கொண்டு வரவே திமுக மற்றும் அதிமுக என இருவரும் அடிமட்டத்திற்கு இறங்கி வேலை செய்ய ஆரம்பித்துள்ளனர். இதர கட்சிகளை காட்டிலும் அதிமுக கட்சிக்குள்ளேயும், கூட்டணியிலும் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது.

இவை அனைத்தையும் சட்டமன்றத் தேர்தல் தொடங்குவதற்குள் சரி செய்யவில்லை என்றால் கட்டாயம் பின்னுக்கு தள்ளப்படுவது உறுதி. பின்பு எடப்பாடிக்கு போட்டியாக ஸ்டாலின் இருக்க மாட்டார் மாறாக சீமானுடன் போட்டி போடும் நிலை வந்துவிடும். இது ரீதியாக பெங்களூரு புகழேந்தி கூறுகையில், அதிமுக கட்சியை முறையாக நிலை நிறுத்தவில்லை என்றால் கட்டாயம் அரசியல் கட்சிகள் வரிசையில் நான்காவது இடத்திற்கு தள்ளப்படும். அதேபோல இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கும் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி இன்னும் ஆட்டத்தில் தான் உள்ளது என கூறியுள்ளார்.

அவ்வாறு அவர் கூறுவதற்கு முக்கிய காரணம், அதிமுகவின் அடையாளம் மற்றும் அரசியல் பலமாக பார்க்கப்படும் சின்னத்தை மீட்பதை வைத்து தான் தேர்தலில் அங்கம் வகிக்க முடியும். இல்லையென்றால் அதிமுக – வுக்கென்றே இருக்கும் பாரம்பரிய வாக்குகள் சிதைந்து புதிய அரசியலுக்கு இடமளிக்கும் வாய்ப்பை இவர்களே அமைத்து கொடுக்க நேரிடும். இதனால் எடப்பாடியின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு ஒவ்வொன்றும் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.

பரபரக்கும் பாமக சண்டை: அன்புமணிக் பதவிக்கு வேட்டு வைக்கும் ராமதாஸ்.. உச்சத்தை எட்டும் அதிகார மோதல்!!

0

PMK: பாமக கட்சிக்குள் அப்பா மகனுக்கிடையே அதிகார மோதல் போக்கானது உச்சத்தை எட்டிய நிலையில், தற்போது வரை தீர்வு கிடைக்காமல் இருந்து வருகிறது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள்ளே திடீரென்று ராமதாஸின் இரண்டாவது மனைவியுடன் 50 வது திருமணம் நாளை கொண்டாடிய புகைப்படம் வெளியாகி மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அறிந்தும் அறியாமலும் பேசிய தகவலை தற்போது வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளனர்.

மேலும் பாமக பொதுக்குழு கூட்டத்தை அப்பா மகன் இருவரும் தனித்தனியாக நடத்தினர். இதில் ராமதாஸ் நடத்திய சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிரான 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இது ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர். இந்த கோரிக்கையின் பெயரில் அன்புமணிக்கு இந்த தீர்மானம் குறித்து பதிலளிக்க கால அவகாசம் கொடுத்தனர். ஆனால் அன்புமணி எந்த பதிலும் அளிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.

இவ்வாறு அவர் நடந்து கொள்வது மரியாதை அற்ற தன்மை எனக் கூறி இது ரீதியாக இன்று தைலாபுர தோட்டத்தில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுடன் ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணியை கட்சியை விட்டு நீக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்படி அன்புமணி கட்சியை விட்டு நீக்கும் பட்சத்தில் பாமக வை ஒத்து அன்புமணி வேறு கட்சி ஆரம்பிக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் அப்பா மகனுக்கிடையே இருமுனை போட்டி நிலவும்.

பாஜக வில் டிடிவி.. எடப்பாடிக்கு விடும் நேரடி சவால்!! சத்தமின்றி கழட்டிவிடப்பட்ட அதிமுக!!

0

 ADMK BJP: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் , யார் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. இந்நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில், டி.டி.வி. தினகரன் பா.ஜ.க உடன் கூட்டணியில் இருப்பதாக  திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பா.ஜ.க – வும் அ.தி.மு.க -வும் கூட்டணியில் இருந்து பிரிந்து தற்போது இணைந்துள்ளனர்.  அப்போது அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில நிபந்தனைகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது.

அதில் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் கலந்து கொள்ளக்கூடாது . இவர்கள் மூவரையும் கூட்டணியில் சேர்க்க கூடாது, அவர்கள் இருக்கும் மேடையில் நான் ஏற மாட்டேன் என்றெல்லாம் கூறியுள்ளார்.  பல ஆண்டுகளாக கூட்டணியிலிருக்கும்  பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க-விற்கு இடையே தற்போது கருத்து வேறுபாடு நிலவி வரும் வேலையில் , நயினார் நாகேந்திரன் இவ்வாறு கூறியது, அ.தி.மு.க வின் நிலையை கேள்விக்குறியாக்கி உள்ளது.

இவர்கள் கூட்டணி அமைத்தது அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டணியின் தொடர்ச்சியாக பா.ஜ.க. பொது கூட்டத்தில் இனி டி.டி.வி. தினகரன் பங்கேற்பார்.  டி.டி.வி. தினகரன் கூட்டணியில் இணைந்ததால் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க கூட்டணியில் தொடர்வாரா  என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டணியையும் முறித்து கொண்டால் கட்சி வலுவிழக்கும் அபாயம் உள்ளது.

அ.தி.மு.க-விலிருந்து எடப்பாடி பழனிசாமியால் வெளியேற்றப்பட்ட டி.டி.வி. தினகரன் ” அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என்ற புதிய கட்சியை தொடங்கினார். அப்போதிலிருந்தே அ.ம.மு.க விற்கும் , அ.தி.மு.க விற்கும் போட்டி  நிலவி வருகிறது. இப்பொழுது அ.தி.மு.க  தனி கட்சியாக மாறும் நிலையில் , அடுத்து யாருடன் கூட்டணியி ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. கூட்டணியிலிருந்த தே.மு.தி.க உடனும் வாக்குறுதி அழித்துவிட்டு பின்வாங்கியதாக பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார் . பா.ஜ.க உடனும் முரண்பாடு உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையை எடப்பாடி பழனிசாமி எவ்வாறு கையாள்வர் என்பதை பொறுத்திருந்து தான்  பார்க்க வேண்டும்.

இது மட்டும் நடந்தால் எடப்பாடி பதவி அதோகதி தான்.. செங்கோட்டையன் வைக்கும் செக்!!

0

ADMK: சமீபத்தில் நடைப்பெற்ற அ.தி.மு.க தேர்தல் பிரச்சாரம் மேற்கு மண்டலத்தில் தொடங்கப்பட்டது. இதில் அ.தி.மு.க அமைச்சர்கள் மட்டுமல்லாது பா.ஜ. க அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த பயணம் தி.மு.க, பா.ஜ.க கூட்டணியை வலுப்படுத்தும் நோக்குடன் நடந்து வருகிறது. ஆனால் இந்த பேரணியில் மேற்கு மண்டலத்தில்  முக்கிய தலைவராக உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுத்தும் அவர் கலந்துக்கொள்ளவில்லை.

மேற்கொண்டு செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா, எம். ஜி.ஆர், அண்ணா புகைப்படங்களுடன் பெரியார் புகைப்படத்தையும் வைத்துள்ளார். இது அவர் தி.மு.க உடன் கூட்டணியில் சேர வாய்ப்பிருப்பதை காட்டுகிறது. அது மட்டுமல்லாமல் பா.ஜ.க அரசை சீண்டும் நோக்கத்தோடு வைக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். மற்றொரு பக்கம் வேறு கதையானது உலா வருகிறது. அதாவது ஒ. பன்னீர்செல்வம் , சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியிலிந்து நீக்கியதிலிருந்தே ,கட்சி வலுவிழந்து காணப்படுவதாக செங்கோட்டையன் வேதனை தெரிவித்திருந்தார்.

அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்தால் அ.தி.மு.க விற்கு பலம் கிடைக்கும் என்று எண்ணுகிறார். இதனை எடப்பாடியிடம் தெரிவித்த போது அவர் அதை ஏற்க மறுத்ததாக சிலர் கூறுகின்றனர். தனது தலைமை பதவி பறிபோய்விடுமோ என்ற பயத்தினால் அவர் இதனை மறுப்பதாகவும் கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.  ஆனால் எடப்பாடி பழனிசாமியும், செங்கோட்டையனும் விரும்புவது அ.தி.மு.க வின் முன்னேற்றத்தையே.

இதற்கு எடப்பாடி பழனிசாமி அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். அதோடு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய, கட்சியின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையனின் அறிவுரையையும் ஏற்று நடக்க வேண்டும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.  ஜெயலலிதாவும், எம். ஜி.ஆர்-வும் கட்சியை எவ்வாறு வழிநடித்தினார்கள் என்பதை மனதில் வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி சிந்தித்து செயல்பட வேண்டுமென்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

புதிய விதி: இனி மாதந்தோறும் மின் கட்டணம் வரும்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!!

0

DMK: ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி முடிந்ததும் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும். தி.மு.க வின்  தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான  மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக மின்சாரத் துறையிடம்  மக்கள் முன் வைத்தனர். ஒவ்வொரு வீட்டிற்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள்  மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

கட்டணம் செலுத்திய பிறகே இணைப்பு வழங்கப்படும். தற்போது 2 மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு வசூலிக்கப்படுவதால் மொத்த பயன்பாடு அதிகரிக்கிறது. மின் கட்டணமும் உயர்கிறது. இதனை ஒரு மாதத்திற்கு குறைத்தால் சிறிய தொகையை மாதந்தோறும் செலுத்த முடியும். இதனால் மக்களுக்கு ஒரு முறை அதிக பணம் செலுத்த வேண்டிய நிலை குறையும். ஸ்மார்ட் மீட்டர் மூலம் உண்மையான பயன்பாடு மட்டுமே கணக்கிடப்படும்.

கணக்கெடுப்பு தவறுகள் குறையும். இது தொடர்பாக  செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் “ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி முடிந்தவுடன், அதற்கேற்ப புதிய வசூல் முறை தொடங்கப்படும். முதலில் சில பகுதிகளில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தி , பின்னர் முழு மாநிலத்திற்கும் விரிவாக்கப்படும்” என்று  விளக்கம் அளித்துள்ளார். ஸ்மார்ட் மீட்டர் அமைக்கப்படும் பட்சத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்துவது மக்களுக்கு எளிமையாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.ஆனால் சிலர் இரண்டு மாத கட்டணத்தை மாத மாதம் பிரித்து கொடுப்பதில் சிறப்பு ஏதுமில்லை; அதே தொகை தான் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தீபாவளி அதிரடி: பெண்களே ரெடியா.. நேரடியாக அக்கவுண்டுக்கு வரும் ரூ 5000!! அரசின் மாஸ் பிளான்!!

0

DMK: திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதாக தெரிவித்திருந்தது. அந்த வகையில் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து உரிமைத்தொகை வழங்கியது. அதிலும் இந்த திட்டமானது அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வரையறுக்கப்படவில்லை. ஆரம்ப கட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழிருக்கும் பெண்களுக்கு மட்டுமே வழங்கி வந்தனர். ஏன் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மாணவிகளுக்கு கூட தரப்படவில்லை.

இதனால் பெருமளவில் இத்திட்டத்தின் மூலம் பெண்களுக்கு திருப்தி இல்லை. நாளடைவில் இத்திட்டம் ரீதியாக ஒவ்வொன்றையும் அப்டேட் செய்து வந்தனர். அந்த வகையில் தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் இனி அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கும், அதிலும் வருடம் தோறும் பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தற்போது வரை இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வரும் நிலையில், தற்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஆளும் கட்சி மாவட்டம் தோறும் உங்களுடன் ஸ்டாலின் என்ற முகாமை நடத்தி வருகிறது.

அதில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். அந்த வகையில் தீபாவளிக்கு முன்பு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு பணம் வழங்க அரசு ஏற்பாடு செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அத்தோடு திமுக ஆட்சி மீது பொதுமக்கள் பெருமளவில் அதிருப்தியில் இருப்பதால் முதலில் பெண்களை தங்கள் பக்கம் சாய்க்க வேண்டும் என்ற பாணியில் தீபாவளிக்கு குடும்ப தலைவிகளுக்கு மட்டும் ரூ.4,000 தர உள்ளார்களாம். இது ரீதியான அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரபரப்பு பேட்டி: எடப்பாடி செங்கோட்டையன் மோதல் உச்சம்!! எடுக்கப்போகும் அதிரடி முடிவு!!

0

ADMK: அதிமுகவில் எடப்பாடி மற்றும் செங்கோட்டையன் இடையே உரசல் போக்கானது ஆறு மாதங்களுக்கு மேலாக இருந்து வருகிறது. நடந்து முடிந்த சட்டப் பேரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டது என பலரும் நிம்மதி அடைந்தனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் மீண்டும் உட்க்கட்சிக் குள்ளேயே மோதல் போக்கானது தீவிரமடைந்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள கட்சி ரீதியான ஆயத்த பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் எடப்பாடி, மக்களை மீட்போம், தமிழகத்தை காப்போம் என்ற பரப்புரை செய்து வருகிறார். இதன் தொடக்க விழாவில் செங்கோட்டையன் கலந்து கொல்லாதது தான் தற்போது அதிமுக-வில் பஞ்சாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ரீதியாக அவரிடம் கேட்கையில், வரும் ஐந்தாம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து மனம் திறந்து பேசுகிறேன் எனக் கூறி முடித்துவிட்டார். அடுத்த கணமே அனைவரின் மத்தியிலும் இவர் கட்சியை விட்டு வெளியேறப் போகிறாரா என்று கேள்விதான் எழுந்தது??

மாறாக எடப்பாடி-யிடம் இது குறித்து கேட்கையில் இன்று மாலை பேட்டியளிக்கும் போது இது ரீதியாக பேசுகிறேன் எனக்கூறி உள்ளார். இதனால் அரசியல் களமே சற்று பரபரப்பாக உள்ளது. முன்னதாகவே எடப்பாடி ஒருமுறை, யாரையும் எதிர்பார்த்து கட்சி இல்லை என செங்கோட்டையனை சுட்டிக்காட்டி பேசியது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அவர் கட்சியை விட்டு வெளியேறுகிறேன் எனக் கூறுவதற்கு முன்பாகவே இவர் வெளியேற்றி விடுவாரா அதற்கான அறிவிப்பு தான் மாலையில் கூறப் போகிறாரா என பல கோணங்களில் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தலைவி வராங்க கிளம்பு கிளம்பு.. பூட்ஸ் காலால் காட்டுத்தனமாக எட்டி உதைக்கும் போலீசார்!! வைரலாகும் வீடியோ!!

0

நமது தமிழகத்தில் மட்டும் கோவில் போன்ற பொது இடங்களுக்கு சினிமா நட்சத்திரங்கள் அரசியல்வாதிகள் வருகை புரிகிறார்கள் என்றால் மட்டும் அங்கு முன்னேற்பாடுகள் தடபுடலாக இருக்கும். அதே நேரம் அவர்கள் வருகையால்  அங்கு பாதிக்கப்படும் மக்களும் உள்ளனர். குறிப்பாக அரசியல்வாதிகள் வருகிறார்கள் என்றால் அங்கு இருக்கும் கடைவீதிகள் என தொடங்கி கோவிலில் சாமி கும்பிட வருபவர்கள் வரை அனைவருக்கும் சிரமம் தான்.

இதனை வாய் திறந்து சொல்லி தான் தெரிய வேண்டும் என்பதில்லை. என்றைக்கும் இல்லாத அளவிற்கு தார் சாலைகள் உட்பட அனைத்தையும் அன்றைக்கு மட்டும் மிகவும் சுத்தமாக பராமரிப்பதோடு கோவில் சுற்றுவட்டாரங்கள் அனைத்திலும் தங்களது கவனத்தை செலுத்துவர். அந்தப் பெரிய ஜாம்பவான்கள் கிளம்புவதற்குள் அங்கிருக்கும் மக்கள் இன்னும் எண்ணற்ற துன்பத்திற்கு ஆளாகுவார்கள் என்பதை யாராலும் விவரித்து கூற முடியாது. அந்த வகையில் நாளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஸ்ரீரங்கம் வர உள்ளார்.

https://x.com/PttvNewsX/status/1962801411433078794

இவர் வருகையையொட்டி கோவில் முழுவதும் சுத்தம் செய்வதை விட்டுவிட்டு, அங்கு இருக்கும் யாசகம் வாங்குபவர்கள் வயதானவர்கள் என அனைவரையும் அப்புற படுத்தும் முயற்சியில் காவலாளிகள் இறங்கி உள்ளனர். அதாவது கோவிலை விட்டு அடாவடியாக வெளியேற்றி வருகின்றனர். அதிலும் ஒரு சில போலீசார் தங்களின் பூட்ஸ் கால்களால் ஒரு பெரியவரை எட்டி உதைத்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது. இது ரீதியாக பொதுமக்கள் கொந்தளிப்பில் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

ஸ்டாலினிடம் விடுதலை சிறுத்தை வைக்கும் டிமாண்ட்.. தவிக்கும் ஸ்டாலின்!! சீர்குலையும் கூட்டணி!!

0

DMK VSK: திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியானது இம்முறை அதிகளவு தொகுதிகளை கேட்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரீதியாக அக்கட்சியின் எம்பி துரை ரவிக்குமார் பேட்டி அளித்துள்ளார். அதில், 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடந்த போது கிட்டத்தட்ட 10 தொகுதிகளிலிருந்து ஆறு தொகுதிகள் மட்டுமே எங்களுக்கு ஒதுக்கப்பட்டது.

ஆனால் தற்போது எங்கள் கட்சி பலம் வாய்ந்ததாக மாறி உள்ளதோடு மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது என்பதால் அதற்கேற்ற தொகுதி வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ள நிலையில் தற்போதையிலிருந்து தங்களது டிமாண்ட்டை வைக்க ஆரம்பித்துள்ளனர். இது ஆளும் கட்சியான திமுகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.

மேலும் தற்போது புதிதாக ஆரம்பித்துள்ள விஜய் உட்பட பலரும் திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு அதன் தேவைகளை நிறைவேற்றி தரவில்லை என்றால் அதனை மையமாக வைத்து கூட்டணி கலைய கூடும்.

அதிலும் விஜய் மற்றும் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் விடுதலை சிறுத்தை கட்சியை பிரிக்க வேண்டும் என்பதையே தலையாய நோக்கமாக வைத்துள்ளனர். இவர்களின் எண்ணம் நிறைவேறக்கூடாது என்றால் கட்டாயம் கூட்டணி கேட்கும் டிமான்டுக்கு ஒப்புதல் கொடுத்து தான் ஆக வேண்டும். அந்த வகையில் ஸ்டாலின் மிகவும் இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளார்.

அதிர்ச்சி!! கட்சியை விட்டு விலக அதிரடி முடிவு.. தேதி குறித்த செங்கோட்டையன்!! ஆபத்தில் இபிஎஸ்!!

0

ADMK: அதிமுகவின் கட்சிக்குள்ளையே எடப்பாடி மீது மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் தான் உள்ளனர். அதிலும் எம்ஜிஆர் காலத்திலிருந்து இருக்கும் செங்கோட்டையன் முழுவதுமாக எடப்பாடியை எதிர்த்தது அனைவருக்கும் தெரிந்து ஒன்றுதான். இதன் ஆரம்ப கட்டமாக பொது நிகழ்ச்சி ஒன்றில் தற்போது வந்த அமைச்சர்கள் பெயர்களை விளம்பரப்படுத்தி தன்னை இறுதிக்கு தள்ளியது என பல காரணங்கள் இதற்கு பின்னணியில் கூறப்பட்டது.

நாளடைவில் சட்டப்பேரவை கூட்டத்தின் போது எடப்பாடிக்கு ஆதரவாக செங்கோட்டையன் மீண்டும் முன் நின்றார். அதேபோல எடப்பாடி முதல்வராகவில்லை என்றால் அந்த வாய்ப்பு ஓபிஎஸ்ஐ தாண்டி செங்கோட்டையனுக்கு தான் சென்றிருக்கும். இப்படி இருக்கும் வேலையில் இதனை சுதாகரித்துக் கொண்டுதான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் செங்கோட்டையனை எடப்பாடி நிராகரித்து வந்தார்.

இவையனைத்தும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்ததாக கட்சி நிர்வாகிகள் நம்பினர். அதற்கு முன் இதனை சமரசப்படுத்த பல கட்ட பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் மீண்டும் செங்கோட்டையன் முரண்டு பிடிக்க ஆரம்பித்துள்ளார். அதாவது எடப்பாடி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தை மேற்கண்டு வருகிறார்.

அதன் தொடக்க விழா நடைபெற்ற போது அழைப்பு விடுத்தும் செங்கோட்டையன் வரவில்லை. இது குறித்த பேச்சு தான் தற்போது அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாகவே செங்கோட்டையனை திமுகவினர் தங்கள் பக்க இழுக்க நினைத்தனர். ஆனால் அவர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. தற்போது மீண்டும் அதரீதியான பேச்சுவார்த்தையை கைவிடாமல் திமுகவின் முக்கிய அமைச்சர்கள் நடத்திக் கொண்டுதான் வருகின்றனர்.

அதன் விளைவாக தான் தற்போது இந்த தொடக்க விழாவில் செங்கோட்டையின் கலந்து கொள்ளவில்லை என பேச்சு அடிபட்டு வருகிறது. அதேபோல இம்மாதம் ஐந்தாம் தேதிக்குள் தனது முடிவை அவர் கூறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அதிமுகவிலிருந்து வெளியேறி விட்டு மாற்று கட்சியில் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்பதை கூற இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனர்.