Home Blog Page 100

தினகரன் வைத்த டிமாண்ட்.. அண்ணாமலையின் பேச்சு வார்த்தையில் மீண்டும் தோல்வி!!

0

AMMK NDA: தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து முன்னணி தலைவர்கள் பலரும் விலகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக அதிமுகவில் முக்கிய முகமாக அறியப்பட்ட டிடிவி தினகரன் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இபிஎஸ்-யால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.

2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அதிமுக, பாஜக உடன் கூட்டணியை அமைத்தது. அப்போது சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோர் கூட்டணியில் இருக்க கூடாது என்று இபிஎஸ் நிபந்தனை விதித்தார். ஆனால் அப்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது அவர் கூறியபடி NDA கூட்டணியிலிருந்து ஒவ்வொருவராக விலகி வருகின்றனர்.

இந்த பிரிவு பாஜக தலைமையின் அழுத்தத்தால் அல்ல என்றும், நாங்கள் கூட்டணியிலிருந்து வெளியேறியதற்கு தற்போதைய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தான் காரணம், அவர் இபிஎஸ்-க்கு சாதகமாக செயல்படுகிறார் என்று டிடிவி தினகரனும், ஓபிஎஸ்-ம் கூறினார்கள். இதனை தொடர்ந்து NDA கூட்டணியில் இணையும் படி பலரும் இவர்களிடம் கேட்டனர்.

ஆனால் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை நாங்கள் கூட்டணியில் இணைய மாட்டோம் என்று டிடிவி தினகரன் உறுதியாக இருந்தார். அண்ணாமலைக்கும், தனக்கும் நல்ல நட்புறவு உள்ளதாக பலமுறை தினகரன் கூறியுள்ளார். இதனால் அண்ணாமலை அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினால் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது என்று நினைத்த டெல்லி தலைமை அவரை அனுப்பியது.

அப்போதும் டிடிவி தினகரன் மறுத்து விட்டார். இதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூட்டணியின் தலைமையை அதிமுக வகிப்பதில் எந்த வித பிரச்சனையும் இல்லை, ஆனால் யார் சொன்னாலும் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை, அமமுக NDA கூட்டணியில் இணையாது என்று திட்டவட்டமாக கூறினார்.

கே.பி.முனுசாமி வைத்த ட்விஸ்ட்.. அதிர்ச்சியில் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள்!!

0

ADMK: அதிமுகவில் எடப்பாடிக்கும், செங்கோட்டையனுக்கும் தொடர் யுத்தம் நடைபெறுவது தற்போது அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது. இபிஎஸ் செங்கோட்டையனை கட்சி பதவியிலிருந்து நீக்கிய போதும் கூட அவருடைய 10 நாள் கெடு தொடரும் என்று கூறியிருந்தார். 10 நாட்களுக்கு பிறகும் செங்கோட்டையன் எந்த கருத்தையும் கூறாமல் இருந்தார்.

அவரின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். என்ன ஆனாலும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று இபிஎஸ் திட்ட வட்டமாக இருக்கிறார். அண்மையில் செங்கோட்டையனின் தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் இபிஎஸ்-க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அதிமுக கழக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமியிடம் செங்கோட்டையனுக்கு அதிமுகவில் எதிர்காலம் இல்லையா? எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற முன்னாள் தலைவர்களே கட்சியிலிருந்து நீக்கியவர்களை மன்னித்து மீண்டும் கட்சியில் இணைத்துள்ளனர். ஆனால் இபிஎஸ் மட்டும் ஏன் பிடிவாதமாக இருக்கிறார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கே.பி.முனுசாமி இபிஎஸ் தலைமையிலான அதிமுகவிலும் கூட பிரிந்தவர்களை மீண்டும் இணைத்துள்ளோம். அவர்கள் அதிமுக தலைமையிடம் மன்னிப்பு கேட்டு இணைந்தனர். ஆனால் இந்த விவகாரம் சற்று மோசமானது. இப்போது கூட செங்கோட்டையன் மன்னிப்பு கடிதமோ, அல்லது மீண்டும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை பற்றி பேசாமல் இருந்தால் அவரை மீண்டும் கட்சியில் இணைப்பது சாத்தியம் என்று கூறினார்.

அதிமுகவில் செங்கோட்டையனுக்கு எதிர்காலம் இருக்கிறதா இல்லையா என்பது அவரின் முடிவை பொறுத்து தான் உள்ளது என்றும் கூறினார். கட்சியின் மூத்த தலைவராக அறியப்பட்டு வந்தவரிடம் மன்னிப்பு கடிதம் கேட்டது செங்கோட்டையனின் ஆதரவாளர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவில் இணையும் அதிமுக அமைச்சர்.. உதயநிதி போடும் பிளான்!!

0

ADMK DMK: தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் ஆளுங்கட்சியான திமுகவில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும், தலைவர்களும் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் அவரது தொகுதியிலேயே சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்து தோல்வியை தழுவினார்.

2026லும் இது தான் நடக்குமென்று அவர் நினைக்கிறார் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இதனால் சிறிது காலம் அதிமுகவிலிருந்து விலகியிருந்தார். எந்த அரசியல் நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல், அதிமுக தலைமை மேல் அதிருப்தியில் இருந்தார். மேலும் அவருக்கு அதிமுக, பாஜக உடன் கூட்டணி அமைத்திருப்பதில் துளியும் விருப்பமில்லை. இதனை மையமாக வைத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பு அவரை திமுகவில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.

இது தொடர்பாக ஜெயக்குமாரிடம் கேள்வியெழுப்பிய போது பதவிக்காக யார் முன்பும் நிற்கும் ஆள் நான் கிடையாது. நான் திமுகவில் இணைய போகிறேன் என்ற செய்தி வெறும் வதந்தி தான் என்றும், நான் என்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் செல்ல கூடியவன் என்றும் கூறி இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் இவர் திமுகவில் இணைய மாட்டார் என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அவரை இணைக்கும் முயற்சியில் மீண்டும் திமுக களமிறங்கி உள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர் ஒருவேளை திமுகவில் இணைந்தால் அவருடைய தொகுதியில் 2026 சட்டமன்ற தேர்தல் வேட்பாளராக அதிமுக சார்பில் யார் நிறுத்தப்படுவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அன்புமணியிடம் உள்ளது வெறும் கூட்டம் தான்.. ஆதங்கத்தை வெளிப்படுத்திய பாமக ஒருங்கிணைப்பாளர்!!

0

PMK: அதிமுகவை போலவே பாமகவிலும் உட்கட்சி பூசல் தொடர்கிறது. இந்த பிரச்சனையை தீர்க்க அதிமுக டெல்லி சென்று மத்திய அமைச்சர்களின் உதவியை நாடியதை போல, பாமக நிறுவனர் ராமதாசும் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இது அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து கட்சியின் முகவரியை மாற்றியதாக அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு குற்றம் சாட்டியிருந்தது.

ஆனால் அன்புமணி தரப்பு முகவரி மாற்றப்படவில்லை எனக் கூறி வந்தது. தற்போது கட்சியின் மூத்த தலைவர்கள் ராமதாஸ் பக்கமும், இளையஞர்கள் அன்புமணி பக்கமும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திண்டிவனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக மாநில ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் அன்புமணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அன்புமணியிடம் உள்ளது வெறும் கூட்டம் தான் என்றும், பாட்டாளி மக்கள் கட்சி ராமதாசிடம் உள்ளது தான் என்றும் தெளிவுப்படுத்தினார். முகவரியை வைத்துக்கொண்டு தலைவர் என்று சொல்ல முடியாது. அன்புமணியின் பதவி எப்போதோ பறிபோய் விட்டது, பதவி போனபிறகு பொது குழுவை கூட்டுவது, பிரச்சாரம் மேற்கொள்வது போன்ற செயல்கள் ஒருபோதும் பலனளிக்காது.

சிறிய கட்சியாக இருந்த பாமகவை இவ்வளவு தூரம் வளர்த்தவர் ராமதாஸ் என்றும், அவரை நம்பி தான் பாமக செயல்படுகிறது என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். டாக்டர் ராமதாஸ் இருக்கும் வரை கட்சியியை அவரே நிர்வகிப்பார் என்றும் கூறினார்.

பாஜகவில் மீண்டும் நிலை நாட்டப்படும் அண்ணாமலை!! புதிய பொறுப்பு வழங்கிய பாஜக தலைமை!!

0

BJP: இன்னும் சில மாதங்களில் 2026 க்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்காக கட்சிகள் அனைத்தும் தீவிரமாக முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன. இந்த பரபரப்பான சூழலில் புதிய உதயமாக நடிகர் விஜய்யின் தவெகவும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போகிறது. இந்த சூழ்நிலையில் அதிமுகவிலும், பாஜகவிலும் உட்கட்சி பிரச்சனைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அண்ணாமலை, NDA கூட்டணியிலிருந்து விலகிய டிடிவி தினகரன், ஓபிஎஸ், அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று கூறிய செங்கோட்டையனை இபிஎஸ் பதவிகளிலிருந்து நீக்கியது போன்ற பல்வேறு சிக்கல்கள் முளைத்து வருகின்றன. இந்நிலையில் இவர்கள் அனைவரும் ஒரு கூட்டணியாக செயல்படுவார்கள் என்று சொல்லப்பட்டது. அதே போல் தான் அண்ணாமலை, டிடிவி தினகரனின் சந்திப்பு இருந்தது.

ஆனால் பாஜக மேலிட உத்தரவின் காரணமாக தான் அண்ணாமலை டிடிவி தினகரனை சந்தித்ததாகவும் தமிழக பாஜக கூறியது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாஜக தலைமை, முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கியுள்ளது. சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கும் பாஜக 5 குழுக்களை நியமித்திருக்கிறது. இதன் ஒருங்கிணைப்பாளராக அண்ணாமலையை தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

பதவியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்தே பாஜகவிலிருந்து சற்று ஒதுங்கியிருந்த அண்ணாமலை தனிக்கட்சி துவங்க போகிறார் என்ற தகவலும் பரவி வந்தது. ஆனால் தற்போது வெளியான செய்தி, அண்ணாமலை மீண்டும் பாஜகவில் இணைந்து தனது பழைய அங்கீகாரத்தை மீட்டெடுக்க முயல்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் கட்சிக்குள்ளிருந்தே நயினார்க்கு எதிரான செயல்பாடுகளை செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இபிஎஸ் நயினாருக்கு எதிராக புதிய கூட்டணி!! கேள்வியை எழுப்பும் அண்ணாமலையின் அசைவுகள்..

0

ADMK BJP: முன்னாள் பாஜக தலைவரான அண்ணாமலை தலைமை பதவி பறிக்கப்படத்திலிருந்தே பாஜக நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் அமமுக பொதுச்செயலாளரான டிடிவி தினகரனை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து அவரிடம் கேட்ட போது, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார் என்றும் கூறினார்.

டிடிவி தினகரனை தொடர்ந்து ஓபிஎஸ்யும் சந்திப்பேன் என்று கூறியிருந்தார். அண்ணாமலையின் இந்த சந்திப்பு பாஜக மேலிடத்தின் உத்தரவா இல்லை இபிஎஸ், நயினார்க்கு எதிரான சதி திட்டமான என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது. ஏனென்றால் இபிஎஸ் NDA கூட்டணியில் இணையும் முன்பு அண்ணாமலையை தமிழக பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தான் இணைந்தார்.

அதுமட்டுமல்லாமல் தற்போது பாஜக மாநில தலைவராக உள்ள நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகளும் அண்ணாமலைக்கு எதிராகவே உள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது. டிடிவி தினகரன், நாங்கள் NDA கூட்டணியிலிருந்து விலகியதற்கு காரணம் நயினார் நாகேந்திரன் என்றும், கட்சியில் அனைவருக்கும் சம உரிமை கொடுக்காமல் இபிஎஸ் பேச்சை மட்டும் நயினார் கேட்டு நடப்பதாகவும் கூறினார். ஓபிஎஸ்-யிடமும் இந்த கருத்தே தென்பட்டது.

மேலும் தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கும், சிறிது நாட்களாகவே பாஜகவில் தனது வலிமை குறைந்து வருவதற்கும் இபிஎஸ் மற்றும் நயினார் நாகேந்திரன் தான் காரணம் என்றுணர்ந்த அண்ணாமலை இவ்வாறு செய்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் தான் நயினார்க்கு எதிராக உள்ளவர்களையும், அதிமுக மேல் அதிருப்தியில் உள்ளவர்களை மட்டுமே அண்ணாமலை சந்தித்து இபிஎஸ், நயினாரை வீழ்த்த முயற்சி செய்து வருவதாகவும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்.

ஒரே கொள்கை.. விஜய் திமுக பக்கம் வருவார்!! நாங்க தான் சீட் கொடுப்போம்!!

0

DMK MNM: திமுகவின் தலைமை கழக பேச்சாளரும் திரைப்பட இயக்குனருமான கரு.பழனியப்பன் திமுகதான் விஜய்க்கு அடுத்த முறை ராஜ்யசபா சீட்டு கொடுக்க வேண்டும், அதனால் நான் எந்த மேடையிலும் விஜய்யை விமர்சிப்பது கிடையாது என பேசியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் கரு. பழனியப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

புதிதாக கட்சி தொடங்கிய விஜய் ஹிந்தியை எதிர்த்து தானே அரசியல் செய்கிறார். அதையே தான் நாங்களும் செய்கிறோம் எங்களுடன் வந்து நிற்க வேண்டியதுதானே? என்று கேள்வி எழுப்பினர். புது பொருள் விற்றல் தான் தனி கடை போட முடியும் என்றும், நான் விஜய்யை விமர்சிக்க விரும்பவில்லை, ஏனென்றால் திமுக எதிர் காலத்தில் விஜய்க்கு ராஜ்யசபா சீட் தர வேண்டிய நிலை வரும், ஏனென்றால் அவர் திமுகவிற்கு வந்து விடுவார் என்றும் விமர்சித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், கமலுக்கும் தான் ஆசை இருந்தது. கட்சி தொடங்கிய போதே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டையும் எதிர்த்தார். ஆனால் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவினார். பின்பு கமலுக்கு திமுக ராஜ்யசபா சீட் வழங்கியது, இதை தான் வைத்து கரு.பழனியப்பன் சூசகமாக சொல்கிறார் என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருக்கும் சிநேகனிடம் கேட்ட போது, தகுதி, தராதரம் பார்த்து தான் ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த விவகாரத்தால் கமலுக்கும், திமுகவிற்கும் இடையே சலசலப்பு நிலவும் என்றும் சொல்லப்படுகிறது.

திமுகவை எதிர்க்க தவெக தான்!! விஜய்யின் அறியாமை பேச்சு-அதிமுக பாஜக எதிர்ப்பு!!

0

ADMK TVK: நடிகரும் தவெக தலைவருமான விஜய் கட்சி தொடங்கிய 1 வருடத்திலேயே இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு மற்றும் அரசியல் ஆதரவையும் பெற்றுள்ளார். அவர் நடிகராக இருந்த போதே தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நாயகனாக திகழ்ந்தார். தற்போது அவரின் அரசியல் வருகை அரசியல் களத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. முக்கியமாக அவரின் ரசிகர்கள் அனைவரும், கட்சியின் தொண்டர்களாகி விடுவார்கள் என்று அவர் எண்ணி கொண்டிருப்பதாக சிலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் 2 பெரிய மாபெரும் மாநாடுகள் , பிரச்சாரங்கள் நடத்தியுள்ள விஜய் தனது பிரதான அரசியல் எதிரி திமுக தான் என திமுக அரசையும், அதன் தலைமையையும் கடுமையாக வஞ்சித்து வருகிறார். இக்கருத்தை  பலரும் விமர்சித்து வந்தனர். இதனை தொடர்ந்து இவர் அதிமுக உடன் கூட்டணி அமைப்பார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அது குறித்து விஜய் இன்னும் முடிவெடுக்காமல் உள்ளார்.

திமுகவிற்கும் தவெகவிற்கும் தான் போட்டி என்று விஜய் கூறியது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வியெழுப்பிய போது புதியதாக எந்த கட்சி உதித்தாலும் சரி, அப்போது முதல் இப்போது வரை திராவிட கட்சிகளாக திகழும் அதிமுகவிற்க்கும், திமுகவிற்கும் தான் போட்டி என்று கூறினார். இபிஎஸ்யை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனிடமும் செய்தியாளர்களால் இந்த கேள்வி எழுப்பட்டபோது, திமுகவிற்கு தமிழக வெற்றிக் கழகம் தான் போட்டி என்ற கருத்தை யார் சொல்கிறார்கள்.

விஜய் தானே சொல்லிக் கொண்டிருக்கிறார். வேறு யாராவது இதைப்பற்றி சொன்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார். மேலும் திமுகவுக்கு எதிராக, திமுகவை வீழ்த்துகின்ற ஒரே சக்தி தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமே. வேறு யாராலும் வீழ்த்த முடியாது. அதிமுக-பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்திருக்கும் கூட்டணி தான் திமுகவை வெல்வதற்கான ஒரே கூட்டணி என்றார். இவர்கள் இருவரின் இந்த கருத்து அதிமுகவில் தவெகவிற்கான எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்பதற்கு எடுத்துகாட்டாக உள்ளது என்று சொல்லப்படுகிறது.

வருமான வரித்துறை உத்தரவை எதிர்த்து வழக்கு.. காசு முக்கியமில்லை நெட்டிசன்களின் கடும் விமர்சனம்!!

0

TVK: தவெக தலைவரும், நடிகருமான விஜய் 2016-2017ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்திருந்தார். அப்போது அந்த ஆண்டிற்கான வருமானமாக 36 கோடி ரூபாய் பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவர் நடித்த புலி படத்திற்கான 15 கோடி ரூபாயை வருமானத்தில் மறைத்ததற்காக 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது விஜய் தரப்பு, அபராதம் விதித்து கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதிக்கு முன்பே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால் காலதாமதமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டது. இதற்கு எதிர் வாதமாக வருமான வரித்துறை தரப்பிலிருந்து, வருமானவரி சட்டப்படி நடிகர் விஜய்க்கு விதித்த அபராதம் சரிதான் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இதே போன்று வேறொரு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் நகலைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய் தரப்புக்கு உத்தரவிடப்படுகிறது எனத் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பணம், காசெல்லாம் முக்கியமில்லை; அதை வைத்து என்ன செய்ய போகிறோம் என்று விஜய் தனது பிரச்சாரத்தில், உணர்ச்சி போங்க பேசியதையெல்லாம் வைத்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

டீலிங்கை ஓகே செய்த திமுக.. குஷியில் பாமக!! கேள்விக்குறியாகிய அன்புமணியின் நிலை?

0

DMK PMK: பாமகவில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே சமீப காலமாகவே தலைமை போட்டி நிலவி வருகிறது. அன்புமணி மீது சுமத்தப்பட்ட 16 குற்றச்சாட்டிற்கு அவர் பதிலளிக்காததால் அவரை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கினார் டாக்டர் ராமதாஸ். ஆனால் தேர்தல் ஆணையம் கட்சியின் தலைவர் மற்றும், சின்னத்தின் உரிமையாளர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது.

இப்போது பாமக நிர்வாகிகள் யார் பக்கம் நிற்பதென்று தெரியாமல் திணறுகின்றனர். அதிமுக அதன் உட்கட்சி பூசலை தீர்க்க டெல்லி சென்று மத்திய அமைச்சர்களின் உதவியை நாடியதை போலவே, பாமகவும் நரேந்திர மோடியிடம் உதவி கேட்க உள்ளதாக தகவல் வெளியானது. இவர்களை இணைக்க பாமகவின் உயர் மட்ட நிர்வாகிகள் சிலர் அன்புமணிக்கும், ராமதாசுக்கும் தெரியாமல் சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சிலர் அதிமுகவிடம் உதவி கேட்டதாகவும் சொல்கின்றனர். இந்த நிலையை அதிமுக பயன்படுத்தி கொண்டு பாமகவை தம் பக்கம் இணைக்க முயல்வதாக சொல்லப்படுகிறது. ராமதாசிடம் திமுக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதற்கு ராமதாஸ் சம்மதம் தெரிவிக்கும் நிலையில் உள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஒருமுறை ராமதாஸ், தனது உயர்மட்ட பொதுக்குழு கூட்டத்தில் அதிக தொகுதிகளை ஒதுக்கும் கட்சியில் தான் பாமக இணையும் என்று கூறியுள்ளார்.

அந்த வகையில் திமுக இந்த நிபந்தனைக்கு ஒப்புகொண்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால் திமுகவை கடுமையாக வஞ்சித்து வரும் அன்புமணி இதற்கு சம்மதம் தெரிவிப்பாரா என்பது தற்போதைய கேள்விக்குறியாக உள்ளது. அன்புமணியின் ஆதரவு அதிமுக பக்கம் தான் என்று அன்புமணியின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.