Home Blog Page 99

சி.வி.சண்முகம் நயினார் நாகேந்திரனின் புதிய திட்டம்.. சதி வலையில் அண்ணாமலை ஓபிஎஸ்!!

0

ADMK: அதிமுக ஒன்றிணைய வேண்டுமென பலரும் பிரிந்தவர்களை சந்தித்து பேசி வருகின்றனர். இந்த சமயத்தில் அமித்ஷாவை செங்கோட்டையனும், இபிஎஸ்யும் சந்தித்தது, அண்ணாமலையும், டிடிவி தினகரனும் சந்தித்தது, இபிஎஸ், நயினார் நாகேந்திரன் சந்திப்பு போன்ற பல நிகழ்வுகள் அரசியல் களத்தில் நிகழ்ந்து விட்டன. தற்போது புதிய திருப்பமாக அதிமுக முன்னாள் எம்.பி. சி.வி. சண்முகத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார்.

சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் பாஜகவில் நடைபெறும் விழாவிற்கு அழைப்பு விடுக்க வந்ததாகவும், பாமகவை கூட்டணியில் சேர்க்க என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பற்றியும் விவாதித்ததாக கூறினார். இந்த சந்திப்பிற்கு முன் சி.வி சண்முகம் அவர்கள், எந்தக் கட்சி அவர்களுக்கு அடையாளம் கொடுத்ததோ, எந்த கட்சி அவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்ததோ, அந்தக் கட்சியின் தலைமை கழக அலுவலகத்தை காலால் எட்டி உதைத்தவர்களை, துரோகிகளை அதிமுக கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறோம்.

அந்தக் கட்சி இணைய வேண்டும் என சொல்வதற்கு நீங்கள் யார்? என ஓபிஎஸ்யை மறைமுகமாக சாடியிருந்தார். இதற்கு பதிலடியாக ஓபிஎஸ், இப்போது யார் அவர் வீட்டின் முன் சென்று கட்சியில் சேர்த்து கொள்ளுங்கள் என்று கேட்டது என கூறியிருந்தார். தொடர்ந்து நயினார் நாகேந்திரனை எதிர்ப்பவர்களை அண்ணாமலை சந்திப்பதும், அண்ணாமலை, ஓபிஎஸ்யை எதிர்ப்பவர்களை நயினார் நாகேந்திரன் சந்திப்பதும் நடந்த வண்ணம் உள்ளது. நயினார் நாகேந்திரன், சி.வி.சண்முகத்தின் சந்திப்பு அண்ணாமலைக்கு எதிரானதாகவே இருக்குமென அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

இபிஎஸ்யை துரத்துவதே முதல் வேலை.. ஓபனாக பேசிய டி.கே.எஸ் இளங்கோவன்.. வெளிவந்த முக்கிய தகவல்!!

0

ADMK DMK: அதிமுகவில் ஜெயலலிதா காலத்தில் முறிந்த பாஜக கூட்டணி எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மீண்டும் இணைக்கப்பட்டது. ஆனால் சில முரண்பாடுகள் காரணமாக பிரிந்தது. தற்போது சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளது. பாஜக எவ்வளவு முயற்சி செய்தாலும் அதனால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை, அதே போல் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவாலும் வலுவான ஆட்சியை அமைக்க முடியாமல் இருக்கிறது.

இதனை சரி செய்யவே இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்ததாக கூறுகின்றனர். ஆனால் இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையே வெளிவராத சில சச்சரவுகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் பாஜக அதிமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்கிறது என்ற தகவலும் வந்தது. இதனை தொடர்ந்து அதிமுக தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் இபிஎஸ் பாஜகவால் ஒதுக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த திமுக செய்தி தொடர்பு துறை தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தலில் வெற்றி பெற்றால் தேசிய ஜனநாயக கூட்டணி அமையுமென்று தான் கூறியிருக்கிறாரே தவிர அதிமுக அல்லது கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறவில்லை.

அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க பாஜக முயல்வது கூட அதிமுகவின் ஒற்றுமைக்கு அல்ல; பாஜகவின் வளர்ச்சிக்கு தான் என பலரும் விமர்சித்து வருகின்றனர். பாஜக அதிக தொகுதிகள் கேட்டது, டி.கே.எஸ் இளங்கோவன் கூறிய கூற்றுக்கு அடித்தளமாக அமைகிறதென அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கடம்பூர் ராஜா.. அதிமுகவினர் இடையே பரபரப்பு!!

0

ADMK: 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக, பாஜக உடன் ஒரு ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டது. இந்த கூட்டணியால் மட்டுமே ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த முடியும் என்றும் அதிமுக கூறியது. சமீப காலமாக அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதனை சரி செய்ய அதிமுக முன்னாள் தலைவர்கள் பலரும் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து தீர்வு காண முயற்சித்தனர்.

ஆனாலும் இந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. அதிமுக உட்கட்சி பிரச்சனையில் பாஜக தலையிட கூடாது என்பதற்காக இபிஎஸ் டெல்லி பயணம் மேற்கொண்டார் என்றும் சொல்லப்பட்டது. அதிமுக-பாஜக உறவு வலுவாக இருக்குமென்று நினைத்த சமயத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜா செய்தியாளர்களிடம், இருக்கின்ற கூட்டணி கூட பிரியலாம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இவர் இவ்வாறு கூறியது பாஜகவை தான் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இதற்கு காரணம் பாஜக அதிமுகவின் உள் விவகாரங்களில் அதிகம் தலையிடுவதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை, அதுவும் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தை கேட்பதும் தான் என்ற செய்தியும் பரவி வருகிறது.

கடம்பூர் ராஜாவின் இந்த பேச்சு பாஜக-அதிமுகவிற்குள்ளும் விவாதங்கள் நடைபெறுவதை உறுதி செய்திருக்கிறது. ஒரு வேளை பாஜக கூட்டணி பிரிந்தால் அது அடுத்து யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது. மேலும் அதிமுக, தவெக உடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி.. தமிழிசை சௌந்தரராஜனின் ஸ்கேச்.. விரக்தியில் திமுக தலைமை!!

0

DMK BJP: திமுக கூட்டணியில் தற்போது தொகுதி பங்கீடு தொடர்பான பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் அதிமுக, திமுக போன்ற கட்சிகளில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவை ஆட்சியில் பங்கு மற்றும் அதிக தொகுதிகளையும் கேட்டு திமுக தலைமையை வலியுறுத்தி வருகின்றனர்.

சில வாரங்களுக்கு முன்பு விசிக தலைவர் திருமாவளவன் கூட்டணியில் தங்களுக்கு 2 சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறினார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி திமுகவை கடுமையாக விமர்சித்ததோடு அடுத்த தேர்தலில் ஆட்சியில் பங்கையும், அதிக தொகுதிகளையும் கேட்போம் என்று கூறியிருந்தார். இதனால் திமுக தலைமை என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தது.

இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் கூட்டணியிலிருந்து விலகுவோம் என்று கூறியதாக தகவல் பரவியது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் திமுக சமூக நீதியை பின்பற்ற கூடிய கட்சியாக இருந்தால், மீதமிருக்கும் 6 மாத காலத்திற்காவது விசிக கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவியை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே விசிகவிற்கு 2 சீட்டுக்கள் மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பதால் அக்கட்சியின் தொண்டர்கள் விரக்தியில் உள்ளனர். இந்த சமயத்தில் தமிழிசை சௌந்தரராஜனின் இந்த கருத்து கூட்டணிக்குள் மேலும் விவாதத்தை கிளப்பியுள்ளது. நீண்ட காலமாக திமுக கூட்டணியிலிருக்கும் விசிகவிற்கு இது ஏற்புடைய பதவி என்றும் பலர் கூறி வருகின்றனர்.

கே.எஸ்.அழகிரியின் கருத்துக்கு இபிஎஸ் வரவேற்பளித்தது மற்றும் தமிழிசை சௌந்தரராஜனின் இந்த பேச்சு, இதெல்லாம் பாஜகவும்-அதிமுகவும் திட்ட மிட்டு தான் செய்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது. திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது போல அவர்களின் கூட்டணியை கலைத்து விடலாம் என அதிமுக சதி திட்டம் திட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.

திமுக கூட்டணியை டார்கெட் செய்த இபிஎஸ்.. காங்கிரசுக்கு வரவேற்பு!!

0

ADMK DMK: மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற அதிமுக தேர்தல் பரப்புரை நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடந்தது. அப்போது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழக்கம் போல திமுகவை வஞ்சித்தார். அப்போது அவர் அதிமுகவில் தொண்டன் கூட அடிமை இல்லை என்றும், அதிமுக அனைவரையும் சமமாக நடத்த கூடிய கட்சி என்றும் கூறினார்.

மேலும் பாஜக- அதிமுக கூட்டணியை பார்த்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது என்றும் கூறினார். அதிமுக பாஜகவிற்கு அடிமையாக இருக்கிறது என்று பரவிய கருத்துக்கு, அதிமுகவை யாரும் அடிமையாக்க முடியாது என்றும் கூறினார். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே அதிமுக-பாஜக கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் திமுக அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை சுட்டி காட்டி பேசினார். அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி, 2026 சட்டமன்ற தேர்தலில் நாங்கள் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்றும் கூறினார்.

மேலும் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கே.எஸ். அழகிரி திமுக சாற்றை உறிஞ்சி விட்டு சக்கையை மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு தருகிறது என்று கூறியிருந்தது சரியான கருத்து என்றும், இது போன்ற மனநிலை திமுக தலைவர்களுக்கு மட்டுமே உள்ளது என்றும் கூறினார். இபிஎஸ் கே.எஸ். அழகிரிக்கு சாதகமாக பேசியது திமுக கூட்டணி கட்சிகளுக்கிடையே அவர் சலசலப்பை ஏற்படுத்த முயல்கிறார் என்ற செய்தியும் பரவி வருகிறது.

ஓபிஎஸ் முடிவில் மாற்றம்.. புதிய கூட்டணிக்கு அடிக்கல்.. அவுட் ஆகும் இபிஎஸ்!!

0

ADMK: மிக பெரிய திராவிட கட்சியாக அறியப்பட்டு வந்த அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பல முன்னணி தலைவர்கள் விலகுவதும், நீக்கப்படுவதுமான நிலை நீடித்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வமும் நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒன்றை தொடங்கினார். இதனையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இணைந்தார்.

ஆனால் கடந்த 1 மாதத்திற்கு முன்பு NDA கூட்டணியிலிருந்து விலகிய ஓபிஎஸ் கூட்டணியில் தனக்கு மரியாதை அளிக்கப்படவில்லை என்றும், அமிதாஷ்வையும், நரேந்திர மோடியையும் சந்திக்க அனுமதி கேட்டும் நயினார் நாகேந்திரன் அதற்கு செவிசாய்க்கவில்லை என்றும் கூறினார். இவரை தொடர்ந்து டிடிவி தினகரனும் விலகினார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் செங்கோட்டையனை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு செங்கோட்டையன் அண்ணன் விரும்பினால் நிச்சயம் அவரை சந்தித்து பேசுவேன் என்று கூறினார். இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்ற டிடிவி தினகரனின் கருத்துக்கு ஆதரவும் தெரிவித்துள்ளார். பாஜக தான் அதிமுகவை இயக்குகிறதா என்ற கேள்விக்கு அதிமுகவை யார் இயக்குகிறார்கள் என்பதை எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும் என்றும் கூறினார்.

விஜய் குறித்து கேட்ட போது, அவருக்கு மிகப் பெரிய கூட்டம் வருகிறது அதை மறுக்க முடியாது என்றும், தவெக பிரச்சாரத்திற்கு விதிக்கப்படும் நிபந்தனைகள் தேவையில்லாத கட்டுப்பாடுகள் என்றும் கூறினார். ஏற்கனவே தினகரன், செங்கோட்டையன் சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் இவர்களின் சந்திப்பும் நிகழ்ந்தால் இவர்கள் மூவரும் கூட்டணி அமைத்து இபிஎஸ்யை எதிர்ப்பார்கள் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் அடுத்ததாக செங்கோட்டையன்-ஓபிஎஸ் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணியில் பிளவு.. கலக்கத்தில் ஸ்டாலின்.. புது கேம் ஆடும் இபிஎஸ்!!

0

ADMK DMK: சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி ஆளுங்கட்சியான திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலும், எதிர்கட்சியான அதிமுக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரிலும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுக பல அணிகளாக பிரிந்திருப்பதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.

இதற்கு எதிர் வாதமாக அதிமுக ஒரு அணியாக தான் இருக்கிறது என்று இபிஎஸ் கூறியிருந்தார். ஆனால் தற்போது திமுகவிற்குள்ளும் கூட்டணி பிரச்சனை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக தனது தேர்தல் பரப்புரையில் பேசிய இபிஎஸ், திமுகவில் பிளவு ஏற்பட தொடங்கிவிட்டது என்றும், அதிமுக கூட்டணியை விமர்சித்து வரும் திமுகவிடம், பாஜக உடன் திமுக கூட்டணி வைக்கலாம் ஆனால் அதிமுக வைக்ககூடாதா என்று கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து பேசிய அவர் காங்கிரஸ் தொண்டர்களும், தலைவர்களும் கூட்டணி ஆட்சி கேட்கிறார்கள், ஆனால் செல்வபெருந்தகை மறுக்கிறார். செல்வபெருந்தகை காங்கிரஸ் கட்சியை வளர்க்க விரும்பவில்லை என்றும் அவர் எந்த கட்சிக்கு சென்றாலும் அந்த கட்சியின் கொள்கையை கடைப்பிடிப்பார் என்றும் கூறியிருந்தார். உண்மையான காங்கிரஸ் தொண்டனாக இருந்திருந்தால், ஆட்சியில் பங்கு கேட்காதீர்கள் என்று சொல்லியிருக்க மாட்டார் மாறாக அதற்கு ஆதரவு தெரிவித்திருப்பார்.

மேலும் கே.எஸ் அழகிரி போன்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ஆட்சியில் பங்கு கேட்க தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக திமுக கூட்டணிக்கு உள்ளேயும் பிளவு ஏற்பட தொடங்கி விட்டது என்று கூறியிருந்தார். அதிமுகவில் ஏற்பட்ட பிளவை திமுகவை சேர்ந்த பலரும் விமர்சித்து வந்ததற்கு பதிலடியாக இந்த கருத்தை கூறியுள்ளார் இபிஎஸ்.

ஓரங்கட்டும் ஓபிஎஸ்.. அதிருப்தியில் டிடிவி.. தினகரன் ஓபிஎஸ் நிலைப்பாட்டில் மாற்றம்!!

0

ADMK NDA: அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக உள்ளது. அதற்கான காரணம் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அவர்கள் காலூன்ற வேண்டும் என்பதேயாகும் எனவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக சமீபத்தில் அண்ணாமலை டிடிவி தினகரனை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு வலியுறுத்தினார்.

அதற்கு டிடிவி தினகரன், கூட்டணிக்கான தலைமையை அதிமுக வகிப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை நாங்கள் NDA கூட்டணியில் இணைய மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை ஓபிஎஸ்யும் சந்திப்பேன் என்று கூறியிருந்தார்.

இதனால் நயினார் நாகேந்திரனை எதிர்ப்பவர்களை மட்டும் அண்ணாமலை சந்திப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்தது. இதற்க்கிடையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் அண்ணாமலை வந்த அழைத்தால் NDA கூட்டணியில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, அது குறித்து தற்சமயம் நான் எந்த பதிலும் கூற விரும்பவில்லை என்றும், டிடிவி தினகரன் இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்காததற்க்கு வரவேற்பளிப்பதாகவும் கூறினார்.

இவரின் இந்த பதில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இவர் NDA கூட்டணியில் இணையும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்சமயம் ஓபிஎஸ்யின் ஆதரவை சார்ந்திருக்கும் டிடிவி தினகரனுக்கு இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அமமுக தொண்டர்கள் கூறி வருகின்றனர். அண்ணாமலை ஓபிஎஸ் சந்திப்பு விரைவில் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டம் வாக்குகளாக மாறாது.. விஜய்யை அட்டாக் செய்யும் அதிமுக!!

0

TVK ADMK: பிரபல நடிகராக இருந்த விஜய் தற்போது தனது அரசியல் பயணத்தையும் தொடங்கியிருக்கிறார். இதற்கு அவரது ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வந்தாலும், மற்றொரு புறம் விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. விஜய் இன்னும் அரசியலை கற்க வேண்டும், ரசிகர்கள் கூட்டம் ஓட்டாக மாறாது என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

தவெக பிரச்சாரத்திற்கு வரும் கூட்டம் அவர் நடிகர் என்பதால் மட்டுமே வருகிறது, அதனை விஜய் தொண்டர்கள் கூட்டம் என்று தவறாக புரிந்து கொண்டிருக்கிறார் என்று பல கட்சி தலைவர்களும் கூறி வருகின்றனர். திமுகவிற்கும், தவெகவிற்கும் தான் போட்டி என்று விஜய் கூறிய நிலையில் அதற்கு இபிஎஸ், வானதி சீனிவாசன் போன்றோர் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை திராவிட கட்சிகளாக திகழும் அதிமுகவிற்கும், திமுகவிற்கும் தான் போட்டி என்று கூறினார்கள்.

இதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனும் விஜய்யை விமர்சித்துள்ளார். அதிமுகவில் முக்கிய முகமாக அறியப்பட்டு வரும் இவர் செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் குறித்த கேள்விக்கு, விஜய் ஒரு தொட்டில் குழந்தை, அரசியலுக்கு வந்த ஒரு வருடத்திலேயே திராவிட கட்சிகளுடன் மோதுவது முட்டாள் தனமான காரியம் என்றும், தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத நடிகராக இருந்தாலும், அரசியல் என்பது வேறு என்று கூறினார்.

விஜய் இன்னும் பக்குவப்படவில்லை என்றும், அவரது பேச்சுகள் அரைகுறையாக உள்ளது. அரசியலில் விஜய்யிக்கு அனுபவம் தேவை என்றும் அறிவுரை கூறினார். அண்மையில் அதிமுகவை சேர்ந்த பலரும் விஜய்யை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். விஜய் அதிமுகவில் இணைவார் என்று கூறப்பட்ட நிலையில், இந்த விமர்சனங்கள் காரணமாக அதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு என்றும் சொல்லப்படுகிறது.

முக்கிய பாயிண்டை பிடிக்கும் விஜய்.. அதிரப்போகும் செந்தில்பாலாஜி கோட்டை!!

0

TVK DMK: 2026 யில் நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தல் பலமுனை போட்டிகளை எதிர்கொண்டுள்ளது. ஒவ்வொரு உட்கட்சியிலும் போட்டி நிலவி இரண்டு துருவங்களாக உருவெடுக்க ஆரம்பித்துள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக இந்த சவாலை சந்திக்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட இம்முறை அதனுடன் சேர்ந்து பாமக-வும் இணைந்துக்கொண்டது என்றே சொல்லலாம். மேலும் அரசியல் பாதையில் புதிதாக அடியெடுத்து வைத்துள்ள விஜய்க்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இவ்வாறு இருக்கையில் ஆளும் கட்சி முதல் மாற்று கட்சியினர் வரை பலரும் பலவித சவாலை சந்தித்து தான் ஆட்சியில் அமரும் படி இருக்கும். இப்படி இருக்கையில் அதிமுக, பாஜக என மற்ற கட்சிகளின் நடவடிக்கைகள், அரசியல் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து ஓரளவிற்கு வியூகம் செய்ய முடியும். ஆனால் விஜய் இவர்களை எதிர்த்து முன் வர எந்த மாதிரியான திட்டங்களை தீட்டுவார் என்பது குறித்து அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இதில் தமிழகத்தை சேர்ந்த பலர் மாற்று ஆட்சி வேண்டும் என கேட்கவும் ஆரம்பித்துவிட்டனர். இவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு இவரது அடுத்தக்கட்ட பேச்சு நடவடிக்கை இருக்க வேண்டுமென்பது கருத்து. அந்தவகையில் மாநாட்டை கடந்து, வீக்கெண்டு சுற்றுப்பயணத்தை துவங்கியுள்ளார். இதில் மற்ற மேடைகளில் இல்லாத பேச்சு திறன் நாகையில் பேசியுள்ளதாக சோசியல் மீடியா எங்கும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அங்கிருக்கும் குறைகள், மறைந்த முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரிலே உள்ள தட்டுப்பாட்டை கூறிய விதம் என திமுக-வை மட்டும் நேரடியாகவே தாக்கி பேசியிருந்தார். அதேபோல வரும் சனிக்கிழமை கரூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இது செந்தில்பாலஜியின் கோட்டை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதில் தனது பலத்தை காட்ட விஜய் முனைப்புடன் இருப்பதாகவும் அவரின் டார்கெட்டே செந்தில்பாலஜி தான் எனவும் கூறுகின்றனர்.

அவரின் ஊழல் வழக்கிலிருந்து ஆரம்பித்து தற்போது நடந்த கிட்னி திருட்டு வரை ஒன்று விடாமல் கூறி திமுக-வை தரைமட்டமாக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன் மூலம் திமுக வாக்கு வங்கி விஜய் பக்கம் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக-வுக்கு நிரந்தர இடத்தை கொடுத்த கரூர் விஜய்க்கு எந்த இடத்தை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.