Home Blog Page 103

அதிமுக-பாஜகவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டும் அண்ணாமலை! உடனிருப்பது யார் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்..

0

AMMK BJP: பாஜகவின் முக்கிய முகமாக திகழ்ந்த அண்ணாமலை தற்போது பாஜகவிலிருந்து விலகி புதிய பாதையை அமைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அவர் ரஜினியிடம் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் அண்ணாமலைக்கும், எனக்கும் நல்ல உறவு இருக்கிறது என்றும், நாங்கள் தினமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம் என்றும் கூறியிருந்தார்.

இதனால் அமமுக கட்சியில் அண்ணாமலை இணைவார், அல்லது இவர்கள் இருவரும் பாஜக கூட்டணியில் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அண்ணாமலை தொடர்பாக வெளிவந்த செய்தி அதனை உறுதி செய்யும் வகையில் உள்ளதாகவும் பேசப்படுகிறது. மற்றொரு புறம் அண்ணாமலை புதிதாக கட்சி தொடங்குவார் என்றும், இந்த கட்சிக்கு தினகரனின் ஆதரவு கிடைக்கும் என்றும் வியூகங்கள் எழுந்துள்ளது.

பாஜக தமிழகத்தில் காலூன்ற வேண்டுமென போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் பாஜகவின் முக்கிய முகமாக அறியப்படும், அண்ணாமலை விலகி தினகரனுடன் கூட்டணி வைத்தால் அது பாஜகவின் வளர்ச்சியை தடுக்கும். இது பாஜகவிற்கு மட்டுமல்லாமல் அதிமுகவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். டிடிவி தினகரன் முன்னாள் அதிமுக வாக்காளர்களிடம் இன்னும் ஒரு அளவிற்கு செல்வாக்கு வைத்துள்ளார்.

அதேபோல அண்ணாமலை இளைஞர்களிடையே ஒரு தனி ஆதரவை பெற்றிருக்கிறார். இருவரும் இணைந்தால், அதிமுகவின் பாரம்பரிய வாக்கு சிதறக்கூடும். டிடிவி தினகரன் இபிஎஸ் மேல் அதிருப்தியில் இருப்பதாலும், அண்ணாமலை பாஜகவின் மேல் அதிருப்தியில் இருப்பதாலும், இவர்கள் இருவரும் இணைந்து அதிமுக-பாஜக கூட்டணியை சிதைக்க திட்டம் தீட்டுகிறார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.

அதிமுக ஒருங்கிணைப்பில் ஆர்வம் காட்டாத பாஜக.. தேர்தலில் வெற்றி பெற்றால் இபிஎஸ் ஒதுக்கப்படுவாரா?

0

ADMK BJP: தமிழகத்தில் முன்னணி கட்சியாக திகழும் அதிமுக 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி ஒரு வருடத்திற்கு முன்பே பாஜகவுடன் கூட்டணியை அமைத்து விட்டது. பாஜகவிற்கு தமிழகத்தில் காலூன்ற வேண்டுமென்ற ஆசையினால் மட்டுமே அதிமுக உடன் கூட்டணி வைத்திருப்பதாகவும், தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் தமிழகத்தில் அதிமுக ஆட்சியை தவிர்த்து பாஜக முன்னிலை பெரும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இதற்காக தான் கொங்கு மண்டலத்திலுள்ள தொகுதிகளை கேட்டதாகவும் கூறப்படுகிறது. என்ன தான் அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென்று பாஜக கூறினாலும் அந்த முயற்சியில் அது ஈடுபடவில்லை என்றும் சொல்லப்படுகிறது. தற்போது அதிமுக இபிஎஸ் கையில் இருப்பதால் அவர் சொல்வதே வேதவாக்கு என்று கருதி ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோரை ஒருங்கிணைப்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறது.

பாஜக தலைமை அதிமுகவை புறக்கணித்து பெரிய மாற்றங்களை செய்ய தயாராக இல்லை என்பதை இது வலியுறுத்துகிறது. அதிமுக வட்டாரங்கள், பாஜக முக்கிய பங்காளியாக இருந்தாலும், 2026 தேர்தலில் கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமை வகிக்க வேண்டுமென வலியுறுத்துகிறார்கள். அதிமுகவிலிருந்து பிரிந்திருக்கும் சிலரை பாஜக தற்போது ஏற்க தயார் இல்லையென தோன்றுவதாக பேசப்படுகிறது.

தற்போது அதிமுக 5 அணிகளாக பிரிந்திருப்பதால் பாஜக யார் பக்கம் நிற்பதென்று தெரியாமல் திணறுகிறது என்ற கருத்தெல்லாம் பொய் என்றும், அதன் கவனம் முழுவதும் தமிழகத்தில் நிலைபெற வேண்டுமென்பது தான் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

முடிவுக்கு வரும் அன்புமணியின் ஆட்டம்.. ராமதாஸ் வைத்த ட்விஸ்ட்!

0

PMK BJP: பாமக-பாஜக உறவில் ஏற்பட்டிருக்கும் பதற்றம், தமிழக அரசியல் சூழ்நிலையையே பாதித்துள்ளது. அன்புமணி ராமதாஸ், மாநில வளர்ச்சி திட்டங்கள், வேலைவாய்ப்பு பிரச்சினைகள், போன்ற பல முக்கிய விஷயங்களில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால் பாஜக கூட்டணியில் பாமக தொடருமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் பிரதமர் மோடி, ராமதாஸுக்கு நீண்டகாலமாக மரியாதை செலுத்தி வருவதோடு, பல்வேறு சந்தர்ப்பங்களில் அதை வெளிப்படையாகவும் கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அன்புமணியுடன் சமரசம் செய்யும் நோக்கில் தான் ராமதாஸ் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ராமதாஸ்-மோடி சந்திப்பு நடைபெறுமானால், அன்புமணியின் எதிர்ப்புகளைத் தணிக்கும் வகையிலான பேச்சுவார்த்தை நடைபெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாமக, தமிழகத்தில் வாக்கு வங்கியாக கருதப்படும் வன்னியர் சமூகத்தில் பெரும் ஆதரவை பெற்றிருப்பதால், அந்தக் கட்சியை கூட்டணியில் வைத்திருப்பது பாஜகவிற்கு மிகவும் அவசியமானதாக பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக கூட்டணியில் பாமக தொடருமா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. ராமதாஸ்-மோடி சந்திப்பு நடைபெற்றால், பாமக கூட்டணியில் நீடிக்கக் கூடிய சூழல் உருவாகும் என்றும், அதனால் தமிழகத்தில் கூட்டணி கணக்கில் புதிய திருப்பம் ஏற்படும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

சேலத்தில் அதிமுகவிற்கு வலு சேர்த்த இணைப்பு.. இபிஎஸ் தலைமையில் அதிரடி!

0

ADMK: சேலம் மாவட்டத்தில் அதிமுகவின் வலுவை அதிகரிக்கும் நோக்கில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் கட்சி ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். திமுகவுக்கு போட்டியாகவும், அதிமுக தனது ஆளுமையை நிலைநிறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், திமுக சேலம் மாநகர் மாவட்ட விவசாய பிரிவு துணைச் செயலாளர் ஜி.பி. ராஜா உட்பட 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இபிஎஸ், புதிதாக இணைந்தவர்களுக்கு தேர்தல் அடையாள அட்டைகளை வழங்கியதோடு, அதிமுகவின் கதவு எப்போதும் உழைப்பாளிகளுக்கும், மக்கள் சேவையை விரும்புவோருக்கும் திறந்தே இருக்கும். 2026 சட்டமன்ற தேர்தலில் நமது இலக்கு, திமுகவை தோற்கடித்து அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதே என்று வலியுறுத்தினார்.

மேலும், இணைந்துள்ள புதிய நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் தீவிரமாக மக்கள் தொடர்பில் ஈடுபட்டு, அதிமுகவின் கொள்கைகள் மற்றும் சாதனைகளை பரவலாக எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். சமீப காலமாக பல்வேறு மாவட்டங்களில் பிற கட்சியினர் அதிமுகவில் இணைவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக திமுகவிலிருந்து தொடர்ந்து விலகி வரும் நிர்வாகிகள், அதிமுகவில் இணைந்து எதிர்காலத்தில் அதிமுகவின் வலிமையை உயர்த்துவார்கள் என கருதப்படுகிறது.

இது ஒரு தொடக்கம் மட்டுமே. தேர்தல் நெருங்கும் போது மேலும் பல்வேறு மாவட்டங்களில் இத்தகைய இணைப்பு நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. இது திமுகவுக்கு சவாலாக மாறும் எனவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிகழ்வு கொங்கு மண்டலம் எப்போதும் அதிமுகவின் கோட்டை தான் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்றும் அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

பஞ்சாயத்துக்கு வரும் அமித்ஷா.. பாமக தலைமை பதவிக்கு வரும் எண்டு!! அன்புமணியை ஓரங்கட்ட மாஸ்டர் பிளான்!!

0

PMK BJP: தமிழக அரசியல் களத்தில் ஒவ்வொரு கட்சியும் தனது தமிப்பெருமான்மையை இழந்து வருகிறது. அதிமுக கட்சிக்குள்ளேயும் உட்கட்சி மோதல் தீவீரமடைந்துள்ளது. அதேபோல பாமக தற்சமயம் இரு அணிகளாக பிரியும் சூழலில் நிற்கிறது. அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் சம்மந்தப்பட்டவர்கள் எப்படி டெல்லி சென்றார்களோ அதேபோல பாமக தனது உட்கட்சி பிரச்சனையை முடிக்க அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது எடப்பாடி அமித்ஷாவை சந்தித்தும் எந்த ஒரு பயனும் இல்லை. தனது நிலைப்பட்டிலிருந்து மாறுவதாக தெரியவில்லை. ஒருபோதும் ஓபிஎஸ் டிடிவி சசிகலா தற்சமயம் செங்கோட்டையன் உள்ளிட்டவர்களை தனது இணக்கத்தில் வைக்க மாட்டேன் என்பதில் தீர்க்கமாக உள்ளார். அதே பிரச்சனை தான் தற்போது பாமக-விழும் நிலவி வருகிறது. வாரிசு அரசியலை கொண்டு வர வேண்டாம் என்று எதிர்த்த அன்புமணி தனது மனைவியை மட்டும் ஏன் தேர்தலில் நிற்க வைக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

இதை முன் வைத்துதான் ராமதாஸ் மகள் வழி பேரனுக்கு பொறுப்பு வழங்கினார். ஆனால் அங்கிருந்து தான் அதிகார மோதலே உச்சத்தை எட்ட தொடங்கியது. அதிலிருந்து தனித்தனியே நிர்வாகிகளை அமர்த்துவது, நீக்குவது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தனர். அதுமட்டுமின்றி இரு பொதுக்குழு கூட்டம் நடந்ததோடு அன்புமணி நடத்தியத் பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று வழக்கும் தொடரப்பட்டது.

அத்தோடு விடாது ராமதாசும் தனது பொதுக்குழுவில் அன்புமணிக்கு எதிராக 16 குற்றச்சாட்டுக்களை முன் வைத்து தீர்மானம் நிறைவேற்றி பதிலளிக்கும் படி கெடு வைத்தார். ஆனால் அன்புமணி எதையும் கண்டுக்கொள்ளவில்லை. இதனால் கெடு தேதி முடிந்ததும் அன்புமணியை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.

இதற்கிடையே தேர்தல் ஆணையத்திடமிருந்து 2026 வரை அன்புமணி தான் கட்சியின் தலைவராக தொடர்வார் என்று கடிதம் வந்துள்ளதாக அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு கூறியது அனைவரும் பெரும் அதிர்ச்சியை அளித்தது.

ஆனால் அது முற்றிலும் பொய், அப்படியொரு தகவலை இவர்களே சித்ரித்திருப்பதாவும் அலுவலக இடத்தின் முகவரியை அன்புமணி மாற்றியுள்ளதாக அவர் மீது தொடர் குற்றம்ச்சாட்டை ராமதாஸ் தரப்பு வைத்து வருகின்றனர். இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக தான் தற்சமயம் ராமதாஸ் அமித்ஷாவை சந்தித்து அவர்களது ஆதரவை பெற உள்ளாராம். இது ரீதியாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் போது தான் தெரிய வரும்.

நாதகவிலிருந்து தவெகவில் இணையும் முக்கிய புள்ளி.. நாகையில் வெளியாகும் அறிவிப்பு!

0

TVK NMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணியிலும், மக்களை சந்தித்து தங்களை நிலைநாட்டுவதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதோடு கட்சியில் தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்று கூறி முன்னணி கட்சிகளை சேர்ந்த முக்கிய முகங்கள் பலரும் வேறு கட்சிக்கு மாறி வருகின்றனர்.

இந்த நிலை அதிமுகவிலும், திமுகவிலும் மட்டும் தான் நீடிக்கிறது என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இது, நாம் தமிழர் கட்சியிலும் நிகழ்ந்துள்ளது. நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முக்கிய உறுப்பினரான காளியம்மாள் அந்த கட்சியிலிருந்து வெளியேறியுள்ளார். அடுத்த கட்டமாக அவர் எந்த கட்சியில் இணைய போகிறார் என்று கேள்வி எழுந்த நிலையில் விஜய் தலைமையிலான தவெகவில் இணைய போகிறார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

பல்வேறு பிரச்சனைகளை தாண்டி இன்று நாகையில் நடக்கும் தவெக பிரச்சாரத்தில், காளியம்மாள் அக்கட்சியில் அதிகாரபூர்வமாக இணைக்கப்பட உள்ளார் என்றும், இது உறுதி செய்யபட்டுவிட்டால் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் நாகை மாவட்டத்தின் தவெக வேட்பாளராக அவர் நிறுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது. தவெகவில் பல கட்சிகளை சேர்ந்தவர்களும் இணைந்து வருவது, அக்கட்சிக்கு புதிய பலமாகவும், சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையையும் அதிகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு! இபிஎஸ் மேல் குற்றம் சாட்டிய கிருஷ்ணசாமி!!

0

PTK TVK: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வரும் வேளையில், யார் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும் தங்கது கூட்டணிகளை மாநாடுகளிலோ அல்லது பிரச்சாரத்திலோ அறிவிப்போம் என்று கூறி வருகின்றனர். ஆனால் இதுவரை முன்னணி கட்சிகளான அதிமுகவின் கூட்டணியும், திமுக கூட்டணியும் தவிர வேறு எந்த கட்சியின் கூட்டணியும் உறுதி செய்யப்படாமல் இருக்கிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தேர்தல் நேரத்தில் சமூக வாக்குகளை வாங்குவதற்காக விமான நிலையத்திற்கு தலைவர்கள் பெயரை சூட்டுவேன் என இபிஎஸ் அறிவித்திருப்பதால் மற்ற சமுதாயத்தின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், முடிந்த பிரச்சனையை மீண்டும் தூண்டி விடுகிறார் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

 மேலும் பேசிய அவர், கூட்டணி குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாகவும், ஜனவரி 7ஆம் தேதி மதுரையில் நடக்கும் புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் எந்த கட்சியுடன் இணையப்போகிறார் என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதுள்ள அனைத்து கட்சிகளும் பெரும்பாலாக தவெகவுடன் இணைந்து வருவதால் இவரும் அக்கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தவெகவில் இணையும் திமுக கூட்டணி! அதிருப்தியில் ஸ்டாலின்!!

0

DMK TVK: திமுக கூட்டணியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வைத்துள்ள கருத்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை கூடுதல் தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் பெறுவோம் அதோடு சிதம்பரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று கே.எஸ் அழகிரி வலியுறுத்தி கூறியிருப்பது பெரும் விவாதமாகியுள்ளது.

திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்த பரபரப்பு 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேலும் தீவிரமடையும் எனக் கூறப்படுகிறது. காங்கிரஸ் தமிழ்நாட்டில் தனித்த அடையாளத்தை உருவாக்க வேண்டுமென தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்து வலுவான கோரிக்கை வைப்பது அவர்களின் அடுத்த கட்ட அரசியல் யோசனையின் பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

இது சாதாரண கூற்று அல்ல, மறைமுகமாக காங்கிரஸ் தனது விருப்பத்தை காட்டும் சிக்னலாகவே இருக்கிறது என்றும் கூறுகின்றனர். இதனால் திமுக தனது கூட்டணியை காப்பாற்ற உறுதியாக இருப்பதால், காங்கிரஸின் கோரிக்கைகளை ஏற்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.

அதே சமயம் விஜய்-காங்கிரஸ் உறவு கடந்த சில மாதங்களாக வலுப்பெற்று வருவதாலும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் புதிய தலைமுறை வாக்காளர்களை பெரிதும் ஈர்த்துள்ளதாலும் காங்கிரஸ்-விஜய் கூட்டணி அமைய சாத்தியமுள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணி அமைந்தால் திமுக-காங்கிரஸ் உறவு சீர்குலையும். அது தமிழக அரசியலில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துவதோடு, திமுகவிற்கு வாக்கு எண்ணிக்கையில் குறைவு ஏற்படும்.

அண்ணாமலையின் புதிய திருப்பம்.. மூன்றாவது சக்தியாக மாறுமா?

0

BJP: தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை, தற்போது கட்சியிலிருந்து விலகி புதிய பாதையை தேர்ந்தெடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவில் சேர்ந்த சில ஆண்டுகளில் மக்கள் மனதில் தனக்கான இடத்தை உருவாக்கிய அண்ணாமலை, சமீப காலமாகவே கட்சியிலிருந்து சற்று விலகி இருப்பது கவனிக்கப்பட்டது.

கடந்த சில  மாதங்களாகவே அவர் பாஜகவின் முக்கிய நிகழ்வுகளில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தார். பாஜகவில் தனக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதாக உணர்ந்த அண்ணாமலை, ரஜினியிடம் தனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாகவும், இதனை டெல்லி தலைமைக்கு தெரிவிக்குமாறும் அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்குவாரா இல்லை கட்சிக்குள் மீண்டும் வலிமையாக செயல்படுவாரா, அல்லது ரஜினியின் ஆலோசனைக்கு பிறகு தனது முடிவை மாற்றிக் கொள்வாரா என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது.

அடுத்த சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவி வரும் வேளையில் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கினால், அது மூன்றாவது பெரிய சக்தியாக அமையக்கூடும் என்று அரசியல் வல்லுனர்கள் கணிக்கின்றனர். இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

திமுக எடப்பாடிக்கு போடும் தடை.. பொதுக்கூட்டத்திற்கு வந்த சிக்கல்!!

0

ADMK: கரூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்காக மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நிராகரித்ததை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் வலியுறுத்தியதாவது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டம் ஜனநாயக உரிமைக்குட்பட்டது என்பதுடன், எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சினையையும் ஏற்படுத்தாது என்று கூறப்பட்டது.

எனவே போலீசார் மறுப்பு தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று மனு அளிக்கப்பட்டது. எதிர் தரப்பு வழக்கறிஞர், மனுதாரர் கோரும் இடத்தில் அனுமதி வழங்க இயலாது. இதனால் மாற்று இடத்தை பரிந்துரைக்குமாறு கூறினார். இந்நிலையில், கரூர் போன்ற பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பொதுக்கூட்டம் நடைபெறுமா என்பது மீண்டும் அரசியல் வட்டாரங்களில் கேள்வியாக எழுந்துள்ளது.

தேர்தலை முன்னிட்டு அதிமுக பல்வேறு இடங்களில் மக்கள் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதால், இந்த உத்தரவு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. மேலும் இது எதிர்க்கட்சியின் சதி என்றும் அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே தவெகவின் பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்காமல், அலைக்கழித்து வந்தது அதன் மேல் உள்ள பயத்தினால் தான் என்று கூறி வந்த நிலையில், எதிர்கட்சியான அதிமுகவிற்கும் அனுமதி அளிக்காமல் இருப்பது அந்த வாதத்தை உறுதி செய்வதை போல் உள்ளது என்றும் கூறுகின்றனர்.