Home Blog Page 106

திருச்சியை ஸ்தம்பிக்க வைத்த மதிமுக மாநில மாநாடு.. முதல் வெற்றியாக கொண்டாட்டம்

0

MDMK: நேற்று அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது திருவுருவபடத்திற்கு மாலை அணிவிப்பதும், கூட்டம் நடத்துவதுமாக இருந்தது. இதனை தொடர்ந்து திருச்சியில் அண்ணாவின் 177 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதிமுகவினர் சார்பிலும் மாநில மாநாடு நடைபெற்றது.

வருடா வருடம் அண்ணாவின் பிறந்தநாளில் மாநில மாநாடு நடத்துவது மதிமுகவின் வழக்கம். இந்த விழாவிற்கு யாரும் எதிர்பார்த்திராத அளவு கூட்டம் கூடியது. இந்த விழாவில் மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ பேசி முடிக்கும் வரை தொண்டர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவரின் பேச்சு மிகவும் உணர்ச்சி பூர்வமானதாகவும் இருந்தது.

இதனை பொது மக்கள் வியப்புடன் கண்டனர். மதிமுகவினரின் அணி திரள்வோம் ஆர்ப்பரிப்போம் அங்கீகாரம் பெறுவோம் என்ற முழக்கம் 2026 தேர்தலை எதிர்நோக்கி எதிர்பார்ப்பை உண்டாகியுள்ளது. இதற்கு முன் தவெக சார்பில் திருச்சியில் பிரச்சாரம் நடைபெற்ற போது கூடிய கூட்டம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் மதிமுகவின் மாநில மாநாட்டில் எந்த வித திரை பிரபலமும் இல்லாமல் கூட்டம் கூடியதை மதிமுகவினர் முதல் வெற்றியாக கருதுகின்றனர். இதன் மூலம் திருச்சி மக்களின் வாக்கு தவெகவிற்கு செல்லுமா இல்லை மதிமுகவிற்கு செல்லுமா என்பது மக்களிடையே விவாதமாக உள்ளது.

அன்புமணிக்கு அளிக்கப்பட்ட கடிதம் தவறானது..தேர்தல் ஆணையம் கதவைத் தட்டிய ராமதாஸ் தரப்பு!

0

PMK: தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில் அனைத்து கட்சிகளும் வெற்றி பெறுவதற்கான திட்டங்களை தீட்டி வரும் நிலையில் பாமகவில் உட்கட்சி பூசல் அதிகரித்து வருகிறது. அது தற்போது தேர்தல் ஆணையம் வரை சென்றுள்ளது. இந்த சூழல் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணிக்கு வழங்கப்பட்ட கடிதம் தொடர்பாக பாமகவில் குழப்பம் தீவிரமாகியுள்ளது.

இந்நிலையில், கட்சியின் தலைமை பதவியை அன்புமணி வகிக்கிறார் என்ற வகையில் சிலர் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை சமர்ப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், உரிய நடைமுறை ஏதும் பின்பற்றாமல் அன்புமணிக்கு அந்தக் கடிதம் வழங்கப்பட்டதாகக் கூறி, ராமதாஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளனர்.

பாமக நிர்வாக விதிகளின்படி, தலைமைப் பொறுப்புகள் மற்றும் அதனுடன் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அனைத்தும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும், தனிநபர் எடுக்கப்பட்ட முடிவு செல்லாது என்றும் ராமதாஸ் அணியினர் வலியுறுத்துகின்றனர்.

இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளதால், பாமகவின் சின்ன உரிமை மற்றும் தலைமை பதவி தொடர்பான பிரச்சனை மேலும் சிக்கலான நிலையை எட்டியுள்ளது. அன்புமணி தரப்பு இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை. எங்களை கேட்காமலே இந்திய தேர்தல் ஆணையம் இவ்வாறான கடிதத்தை வழங்கியுள்ளது என்றும், இருவரையும் அழைத்து பேசி பாமக சின்னத்தையும், கட்சி பொறுப்புகளையும் அங்கீகாரத்தையும் வழங்க வேண்டும் என்று மனு அளிக்கபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வரலாறு தெரிந்து பேச வேண்டும்.. விஜய்க்கு நடிகை குஷ்பு வார்னிங்!

0

TVK BJP DMK: 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், புதிதாக நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகமும் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. இதற்காக விஜய் பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்து வருகிறார். தனது பிரதான எதிரியான திமுகவை கடுமையாக சாடி வருவதோடு, பாஜகவையும் குறை கூறி வருகிறார். இதனை தொடர்ந்து பாஜகவின் மையக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் பாஜகவின் தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் மற்றும் தமிழக பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய மாநில துணை தலைவர் குஷ்பு தேர்தலுக்கான பணிகளும், கூட்டணி குறித்த ஆலோசனையும் நடைபெற்று கொண்டிருக்கிறது என்றும், எங்களுக்கும் அதிமுகவிற்கும் இடையே எந்த பிரச்சனையும் கிடையாது என்றும் கூறினார். மேலும் பேசிய அவர் திமுக பற்றியும், இளையராஜாவுக்கு நடைபெற்ற பாராட்டு விழா குறித்தும் பேசினார்.

திமுகவை குடும்ப அரசியல் என்றும், திமுக அரசு பெண்களை பற்றி பெருமையாக பேசுகிறது ஆனால், இளையராஜாவுக்கு நடத்திய பாராட்டு விழாவில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்ததாக தெரியவில்லை என்று கூறியிருந்தார். விஜய் பாஜகவை கூறியதை பற்றி பேசிய அவர் எல்லோரும் விமர்சனம் செய்வார்கள் ஆனால், அந்த விமர்சனத்தை மக்கள் ஏற்க வேண்டும் என்றும், விஜய் வெற்றி பெறுவாரா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும் என்றும் கூறினார்.

ஏற்கனவே விசிக கட்சியை சேர்ந்த மோசஸ் என்பவர் விஜய் அரசியலில் கற்று கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்று கூறியிருந்தார், அதே போல் இப்பொழுது குஷ்புவும் அரசியல் வரலாறு என்ன சொல்கிறது என்பதை விஜய் தெரிந்து கொண்டு பேச வேண்டும் என கூறியிருக்கிறார்.

பாஜக வலியுறுத்தியும் முரண்டு பிடிக்கும் எடப்பாடி! டெல்லியில் நடந்த ரகசிய சந்திப்பு சொல்வதென்ன?

0

ADMK BJP: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று அதிமுக தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. ஆனால் கட்சி பல பிரிவுகளாக பிரிந்துள்ளது. குறிப்பாக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை பதவிகளிலிருந்து இ.பி.எஸ் நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்து பேசினார்.

இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியிடமும் பேச்சுவார்த்தை நடந்தபடும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது நடந்துள்ளது. இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கூட்டணித் திட்டங்கள் குறித்து இருவரும் நீண்ட நேரம் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் பாஜக-அதிமுக இடையே ஏற்பட்டிருந்த தகராறு மற்றும் இடைவெளி சரியாகும் சூழல் உருவாகுமா என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, தனது கட்சியின் நிலைப்பாடு, அடுத்தடுத்த கூட்டணி மற்றும் அரசியல் சூழ்நிலைகளை அமித்ஷாவிடம் விளக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக தமிழகத்தில் திமுகவை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த வலுவான கூட்டணி தேவை என்பதில் அமித்ஷா வலியுறுத்தியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் செங்கோட்டையன் வலியுறுத்தியதை குறிப்பிட்டு நீக்கியவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வலியுறுத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் பிரிந்தவர்களை கட்சியில் சேர்க்க மாட்டேன் என்று இ.பி.எஸ் பிடிவாதமாக இருக்கும் நிலையில் அமித்ஷாவின் வேண்டுகோளுக்கு பணிவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த சந்திப்பு நிறைய புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால், இ.பி.எஸ்-பாஜக உறவில் புதிய பரிமாணம் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

பாமக தலைமை அலுவலக முகவரி மாற்றம் திட்டமிட்ட சதியா! உண்மை என்ன?

0

PMK: பாமகவில் சில மாதங்களாகவே தந்தைக்கும் மகனுக்கும் தலைமை போட்டி குறித்த சச்சரவு நிலவி வருகிறது. இதனால் அன்புமணியை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் ராமதாஸ் நீக்கினார். இதனை தொடர்ந்து அன்புமணியின் இடத்தில் யார் அமர போகிறார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், தேர்தல் ஆணையம் கட்சியின் தலைவருக்கான அதிகாரம் அன்புமணியிடமே உள்ளது என்று அதற்கான கடிதத்தை அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியானது.

இது பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய திருப்பமாக அன்புமணி பாமகவின் நிரந்தர முகவரியான தேனாம்பேட்டையை 10, திலக் தெரு, தி.நகர் என்று மாற்றியுள்ளார் என கட்சியின் முன்னாள் தலைவர் ஜி.கே.மணி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த முகவரி மாற்றம் என்பது ஏமாற்று வேலை என்றும் கூறி இருந்தார்.

இதற்கு பதிலளித்த அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு 2022 ஆம் ஆண்டு கட்சியின் தலைவராக அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே கட்சியின் தலைமை அலுவலக முகவரியாக தி.நகர் தான் இருந்து வருகிறது என்றும் அன்புமணி பத்திரிகையாளர்களுக்கு கொடுக்கும் அறிக்கையிலும் தி.நகர் முகவரி தான் கொடுக்கப்பட்டது என்றும் கூறினார்.

மேலும் பேசிய அவர் இது ஒன்றும் திடிரென்று நிகழ்ந்த நிகழ்வு அல்ல அன்புமணி மீது வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்று. ஆனால் ஜி.கே மணி இது திடீரென தெரிந்தது போல் பதட்டமாகி விட்டோம் என்று சொல்கிறார். அன்புமணி கட்சியின் நிரந்தர முகவரியை மாற்றிவிட்டதாக கூறப்படுவது தற்போது பேசுபொருளாகியுள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறியிருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அன்புமணி தனது அரசியல் நிலையை வலுப்படுத்தும் நோக்கில், தேர்தல் ஆணையத்தில் முகவரி மாற்றத்தை தவறான முறையில் செய்திருக்கலாம் எனக் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. இந்த முகவரி விவகாரம் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்ட விசாரணைக்கு பின்னர் இதிலுள்ள உண்மை வெளிச்சம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் கூட்டம் ஓட்டாகாது.. விஜய் இன்னும் அரசியலில் நிறைய கற்க வேண்டும்! மோசஸ் கருத்து

0

V.S.K: நடிகர் விஜய்யால் ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. அது சிறப்பாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விஜய் கட்சி தொடங்கியதிலிருந்தே, எந்த ஒரு சமூக பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு சமூக வலைதளங்கள் மூலமாக மட்டுமே தன்னுடைய கருத்தை கூறி வந்தார்.

ஆனால் தற்போது களத்தில் குதித்த அவர் 2 மிகப்பெரிய மாநாடுகளையும், தேர்தல் பிரச்சாரங்களையும் நடத்தி வருகிறார். இதற்கு யாரும் எதிர்பார்த்திராத அளவு கூட்டம் கூடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது தொடர்பாக பேசிய விசிக கட்சியை சேர்ந்த மோசஸ் என்பவர் இது பொது நல அரசியல் என்றும், அரசியல் தலைவர் மக்கள் பிரச்சினைகளை நோக்கி நகர்ந்து செல்ல வேண்டும்.

ஆனால், விஜய் தான் இருக்கும் இடத்தை நோக்கி மக்களை வர வைக்கிறார் என்றும் கூறினார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று விஜய் எண்ணுகிறார். விஜய்யின் மாநாடு மற்றும் பரப்புரைக்கு அதிக அளவில் கூட்டம் கூடுவதாக கூறுகின்றனர். ஆனால் அந்த கூட்டம் அனைத்தும் ஓட்டாக மாறாது.

அது அவரின் ரசிகர்கள் கூட்டம் தானே தவிர, வாக்காளர்கள் கூட்டம் அல்ல என்று தன்னுடைய கடுமையான வாதத்தை முன் வைத்தார். மேலும் பேசிய அவர் விஜய் அரசியலை பற்றி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவர் தனது சினிமா முகத்தை வைத்து வெற்றி பெற்று விடலாம் என்று எண்ணுகிறார் அது நடக்காத காரியம் என்றும் கூறினார். நேரம் கிடைக்கும் போது மட்டுமே பேசக்கூடாது, அனைத்து நேரங்களிலும் அரசியலில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

“தன்மானமே முதன்மை”.. பா.ஜ.க -அ.தி.மு.க கூட்டணியில் தற்காலிக விரிசல் உருவானதா ?

0

A.D.M.K B.J.P: அதிமுக-வில் பல்வேறு உட்கட்சி பிரச்சனைகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக செங்கோட்டையனை கட்சி பதவிகளை இருந்து நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் நெருங்கும் கால கட்டத்தில் அதிமுக அதன் ஒற்றுமையை இழந்து பல பிரிவுகளாக பிரிந்திருப்பது கட்சிக்கு நல்லதல்ல என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனாலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவருடைய முடிவில் உறுதியாக இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இப்பொழுது அவருடன் இருப்பவர்கள் கூட வேறு கட்சிக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இது 2026 தேர்தலில் அதிமுக-விற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்ற கருத்தும் நிலவுகிறது. பதவியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து ஒருங்கிணைப்பு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இ.பி.எஸ்-யிடமும் பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் தனது பிரச்சாரத்தை ஒதுக்கி வைத்தது இதற்காக தான் என்று பலரும் கூறி வந்தார்.

ஆனால் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வானிலை காரணமாக மட்டுமே பிரச்சாரம் ஒதிக்கிவைக்கப்பட்டது, நான் யாரையும் சந்திக்க செல்லவில்லை என்று கூறினார். மேலும் பேசிய அவர் நான் யாருடைய மிரட்டலுக்கும் பயப்படமாட்டேன், எனக்கு ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம் என்று கூறினார். சிலர் கைக்கூலிகளாக செயல்படுகின்றனர், அவர்களுக்கு முடிவு கட்டப்படும். அதிமுக-வை உடைக்க எவராலும் முடியாது.

அதிமுகவில் பிரிவினையை ஏற்படுத்தியவர்களை எப்படி மீண்டும் கட்சியில் சேர்க்க முடியும் என்று கூறி இருந்தார். இவ்வாறு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் போன்றோரை மறைமுகமாக சாடிய அவர், அவர்களை கட்சியில் இணைக்க வாய்ப்பே இல்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

மத்திய அமைச்சர்களுடன் இ.பி.எஸ் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் இவ்வாறு கூறியது பாஜக என்னுடன் பேச்சு வார்த்தை நடத்தினாலும் அதில் எந்த பயனுமில்லை நான் என்னுடைய முடிவில் உறுதியக இருப்பேன் என்று கூறியதாக கருதப்படுகிறது. இதன் மூலம் அதிமுக-விற்கும், பாஜக-விற்கும் இடையே விரிசல் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

ஒரு வேளை அவ்வாறு நிகழ்ந்தால் அது செங்கோட்டையன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் ஆகியோருக்கு சாதகமாகவும், பாஜக-வை மட்டுமே நம்பியிருக்கும் இ.பி.எஸ் தலைமயிலான அதிமுக-விற்க்கு மிக பெரிய பாதகமாகவும் அமையும் என்று சொல்லப்படுகிறது.

காங்கிரஸ்-தி.மு.க உறவில் பிளவு? கார்த்திக் சிதம்பரத்தின் கடும் குற்றச்சாட்டு! சிக்கலில் தி.மு.க

0

D.M.K: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் கட்டத்தில் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக வியூகங்களை வகுத்து வரும் வேளையில், அதிமுக, பாமக கட்சிகளிடையே தலைமை போட்டியும், முக்கிய தலைவர்களின் பிரிவும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஆளுங்கட்சியான திமுக மிகவும் நேர்த்தியான முறையில் கூட்டணி கட்சிகளிடமும், மக்களிடமும் தங்களின் ஒற்றுமையையும், நிலைப்பாட்டையும் உறுதி செய்து வருகிறது.

இதனால் அடுத்த தேர்தலிலும் திமுகவே வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில், காங்கிரஸ் திமுக இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விசிக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திமுக கூட்டணியில் எங்களுக்கு வெறும் இரண்டு சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினர்.

இதனை தொடர்ந்து கார்த்திக் சிதம்பரமும் அவருடைய கருத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் திமுக தலைமையிலான ஆட்சியில் காங்கிரஸ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அதிரடி கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அரசு முடிவுகளில் காங்கிரஸ் கருத்துகள் மதிக்கப்படவில்லை என்றும், கூட்டணி கட்சிகளை ஆலோசிக்காமல் திமுக தனிப்பட்ட முடிவுகளை எடுத்து வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினர்.

“கூட்டணியின் பலம், அனைவரின் பங்களிப்பில் தான் இருக்கிறது. ஆனால், காங்கிரசுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை” என்ற அவரது கூற்று, கூட்டணி அரசில் புதிய பிளவைஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியில் கூட, திமுக-வுடனான கூட்டணி குறித்து கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த தேர்தலில் தனித்து போட்டியிடும் வாய்ப்புகள் குறித்து காங்கிரஸ் கட்சியில் தீவிர ஆலோசனைகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. கார்த்திக் சிதம்பரத்தின் இந்த கூற்றுகள், அரசியல் வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. திமுக தரப்பில் இதற்கு என்ன பதில் வரும் என்பது அடுத்த கேள்வியாக உள்ளது.

அ.தி.மு.க-வில் உருவாகும் புதிய கூட்டணி! த.வெ.க கூட்டணியில் பங்கு பெறுமா?

0

A.D.M.K: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைப்பதிலும், மக்கள் மனதில் தங்களை நிலை நிறுத்துவதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மிக பெரிய கட்சியாக அறியப்பட்டு வந்த அதிமுக தற்போது பல்வேறு சிக்கல்களையும், உட்கட்சி பிளவுகளையும் சந்தித்து வருகிறது. இது நடைபெறவிருக்கும் தேர்தலில் அதிமுக-விற்கு பாதகமாக அமையலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

ஆனாலும் மற்ற கட்சிகளை போலவே தேர்தலுக்கு தயாராகி கொண்டிருக்கும் அதிமுக கடந்த 1 வருடத்திற்கு முன்பே பாஜக உடன் கூட்டணியை அமைத்துவிட்டது. இந்த கூட்டணி தொடரும் பட்சத்தில், பாஜக கூட்டணியில் இருந்து டி.டி.வி தினகரன் விலகி எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த கூடாது என்று கூறி புதிய திருப்பத்தை ஏற்படுத்தினர்.

இதனால் அதிமுக-வில் மேலும் சலசலப்பு ஏற்பட்டது. அதிமுக பல அணிகளாக பிரிந்திருக்கும் நிலையில் அக்கட்சியுடன் யார் கூட்டணியில் இணைய போகிறார்கள் என்ற கேள்வி மேலோங்கியுள்ளது. இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் கேட்ட போது அதிமுக எங்களுக்கு நிரந்தர எதிரியும் அல்ல; நிரந்தர நண்பனும் அல்ல என்று கூறினார்.

இதனால் அவர் அதிமுக-வில் இணைய போவதாக சொல்லப்படுகிறது. மேலும் விஜய்யின் தலைமையில் உருவாகியுள்ள தமிழக வெற்றிக் கழகம், அதிமுக-வின் நிரந்தர எதிரியான திமுக-வை எதிர்த்து வருவதால், இ.பி.எஸ் தவெக-விற்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விஜய் எந்த பதிலும் கூறாமல் இருப்பது அவர் எதிர்காலத்தில் அதிமுக-உடன் கூட்டணி அமைப்பார் என்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது.

அதிமுக-வுடன் தேமுதிக, மதிமுக, தவெக போன்ற கட்சிகள் இடம் பெறுமா என்பது சட்டமன்ற தேர்தலில் தான் தெரியவரும். அதிமுக தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி, வரவிருக்கும் தேர்தலில் திமுக-வுக்கு கடுமையான சவாலாக அமையுமா என்பது அரசியல் ஆர்வலர்களின் கேள்விக்குறியாக உள்ளது.

வெறிச்சோடிய ஒரத்தநாடு கூட்டம்.. பிரேமலதாவின் வெளிப்படையான அதிருப்தி!

0

D.M.D.K:தேமுதிக தலைவராக விஜயகாந்த் இருந்த போது அக்கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு, தேர்தல் பிரச்சாரத்திற்கும் பெருமளவு தொண்டர்களும், ஆதரவாளர்களும் குவிந்தனர். ஆனால் தற்போது அந்த நிலை மாறி தேமுதிக கட்சி பின்தள்ளப்பட்டதோடு மட்டுமல்லாமல், கட்சிக்கான மக்களின் ஆதரவும் குறைந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் தேமுதிக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆனால், அந்த கூட்டத்தில் எதிர்பார்த்த அளவில் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்கவில்லை. இதனால் கோபமடைந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தனது அதிருப்தியை வெளிப்படையாக காட்டியிருந்தார். “கூட்டம் இல்லாத ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதலும், கடைசியும் ஆகும்” என்று கூறினார்.

இவ்வாறான குறைந்த பங்கேற்பு, தேமுதிக தலைமைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, பொதுச்செயலாளர் பதவியை பிரேமலதா விஜயகாந்த் ஏற்ற பிறகு, கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதற்காக கூட்டணி அமைப்பதும், பிரச்சாரம் செய்வதும் என பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால் அந்த முயற்சிகள் எதுவும் கைக்கொடுப்பதாக தெரியவில்லை. தலைமை மாற்றத்திற்கு பிறகு தேமுதிக பல இடங்களில் பலவீனமடைந்துள்ளதை இந்த சம்பவம் காட்டுகிறது. இது, தேமுதிக-வின் எதிர்கால வளர்ச்சிக்கு சவாலாக இருக்கும் என பார்க்கப்படுகிறது. அதேசமயம், அடுத்தடுத்த தேர்தல்களை முன்னிட்டு பிரேமலதா, நிர்வாகிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கடுமையான நடவடிக்கைகள் எடுப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.