Home Blog Page 107

ஓ.பன்னீர்செல்வத்தை மறைமுகமாக சாடிய இ.பி.எஸ்! கைக்கூலிகள் எனவும் விமர்சனம்..

0

A.D.M.K: நீண்ட நாட்களாகவே அதிமுக-வில் பிரிவுகள், தலைமை பிரச்சினை என பல்வேறு நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன், சசிகலா ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கிய இ.பி.எஸ் தற்போது கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனையும் பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார்.

அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டுமென்று செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். அந்த கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், செங்கோட்டையன் எந்த விதமான கருத்தும் கூறாமல் இருப்பது இ.பி.எஸ் பாஜக-விடம் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருக்கிறார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தர்மபுரியில் நடைபெறவிருந்த அதிமுக பிரச்சாரத்தை வானிலை நிலவரத்தை காரணம் காட்டி இ.பி.எஸ் ஒதுக்கி வைத்திருப்பது அவர் டெல்லி செல்வதற்கான அறிகுறி என்றும், அமித்ஷா-விடம் பேச உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதற்கு பதிலளித்த இ.பி.எஸ் மழை காரணமாக மட்டுமே பிரச்சாரம் தள்ளி வைக்கப்பட்டதே தவிர, நான் டெல்லி செல்கிறேன் மத்திய அமைச்சர்களை சந்திக்கிறேன் என்று கூறுவதெல்லாம் வெறும் வதந்தி என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், துணை முதலமைச்சர் பதவி கொடுத்ததும் சிலர் திருந்தவில்லை என்று ஓ.பி.எஸ்-யை மறைமுகமாக சாடியுள்ளார். எனக்கு ஆட்சியை விட தன்மானமே முக்கியம். கைகூலிகளை வைத்து ஆட்டம் போட்டனர். அவர்கள் இப்போது கண்டெடுக்க பட்டுவிட்டனர். சிலர் அதிமுக-வை அழிக்க பார்த்தார்கள். ஆனால் அது நடக்க நான் விட மாட்டேன்.

அதிமுக உடைய காரணமாக இருந்தவர்களை எப்படி கட்சியில் சேர்க்க முடியும் என்று கூறி இருந்தார். இவர் இவ்வாறு பேசி இருப்பது பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க முடியாது என்பதில் அவர் திட்டவட்டமாக இருக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளது.

“எதையும் எதிர்ப்பது தி.மு.க வழக்கம்”-நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

0

D.M.K B.J.P: பல வருடங்களாகவே பாஜக தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றது. என்னதான் மத்திய அரசில் வலுவாக இருந்தாலும், தமிழகத்தில் நிலை பெறுவது பாஜக-விற்கு போராட்டமாகவே இருந்து வருகிறது. தனியாக தேர்தலை சந்தித்தால் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்த பாஜக, கூட்டணி வைத்தாவது திமுக-வை ஆட்சியில் இருந்து விரட்ட வேண்டும் என்று அதிமுக உடனான கூட்டணியில் திட்டம் தீட்டி வருகிறது.

இந்நிலையில் மதுரை அண்ணா நகரில் பாரதிய ஜனதா கட்சியின் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி கூட்டம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், ஜி.எஸ்.டி குறைப்பு மத்திய அரசு மக்களுக்கு வழங்கிய தீபாவளி பரிசு என்றும், இதன் மூலம் பொதுமக்கள், தொழில் அதிபர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் லாபம் அடைந்துள்ளனர்.

ஆனால், தமிழக முதலமைச்சர் இதனை பாராட்ட மறுக்கிறார். வேண்டாத பொண்டாட்டி கைப்பட்டால் குத்தம், கால்ப்பட்டால் குத்தம் என்ற பழமொழியை போல் மத்திய அரசு எதை செய்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கும் பழக்கம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உண்டு என்றும், மக்களுக்கு நன்மை பயக்கும் எந்த தீர்மானமாக இருந்தாலும் அதனை, பாராட்டுவதற்கு முதல்வர் தயக்கம் காட்டாமல் இருக்க வேண்டும் என்றும் விமர்சித்தார்.

மேலும் பேசிய அவர் அதிமுக-வில் ஜனநாயகம் உள்ளதால் அதிமுக தலைவர்கள் அமித்ஷா-வை சந்தித்து வருகிறார்கள். திமுக-வில் ஜனநாயகம் இல்லாததால் திமுக தலைவர்கள் அமித்ஷா-வை சந்திக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். அதே போல் அதிமுக ஒன்றிணைய வேண்டுமென்பதே என்னுடைய கருத்து என்றும் கூறினார்.

இளைஞர் ஆதரவுக்கான நேரடி போட்டி: உதயநிதி VS விஜய்?

0

T.V.K D.M.K: சேலம் எப்போதுமே அதிமுக-வின் வலுவான கோட்டையாக கருதப்பட்டாலும், சமீபத்தில் ஏற்பட்ட பிரிவுகள், செங்கோட்டையன், ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன் போன்றோரின் பிரிவுகள் அதிமுக ஆதரவாளர்களை குறைத்துள்ளது. இந்த சூழலில் திமுக தனது செல்வாக்கை விரிவாக்க உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறது.

திமுக-வின் இளைஞர் முகமாக திகழும் உதயநிதி, சேலம் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் இளைஞர்களை ஈர்க்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஆனால், இந்த முன்னேற்றம் வெறும் அதிமுக-வுக்கு மட்டுமல்ல, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துக்கும் சவாலை ஏற்படுத்தும். காரணம், சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞர்கள் மீது விஜய்க்கு அதிக ஆதரவு இருக்கிறது.

திமுக அதே இளைஞர் வாக்காளர்களை கவர முயற்சி மேற்கொண்டால், விஜய்யின் வாக்கு வங்கியில் குறைவு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், விஜய்யின் அரசியல் வளர்ச்சிக்கும் சவாலை ஏற்படுத்தும். விஜய்க்கு முக்கிய பலமாக கருதப்படும் இளைஞர்கள் மீது உதயநிதி தாக்கம் செலுத்துவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது விஜய்க்கு நேரடி போட்டியாக மாறும் அபாயம் உள்ளது.

ஆனால், இதை மறுபுறமாக பார்க்கும்போது, உதயநிதியின் வருகை விஜய்க்கு ஒரு மறைமுக வாய்ப்பையும் தரலாம். காரணம், அதிமுக கோட்டையில் திமுக வலுப்பெறும் பட்சத்தில், அதிமுக-வில் அதிருப்தியடைந்த வாக்காளர்கள் புதிய மாற்றத்திற்காக விஜய்யை நாடலாம். இதனால், விஜய்க்கு முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களின் ஆர்வம், தவெக-வுக்கு இன்னும் பெரிய பலமாக இருக்கும்.

சேலத்தில் உதயநிதி வருகை இரண்டு விதமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் . ஒன்று, விஜய்க்கு இளைஞரின் வாக்கில் குறைவு ஏற்படும். இரண்டாவது, அதிமுக பிளவு காரணமாக விஜய்க்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. மொத்தத்தில், இந்த அரசியல் போட்டி யாருக்கு பலன் தருகிறது என்பதை அடுத்தடுத்த தேர்தல் சூழ்நிலைகள் தான் தீர்மானிக்கும்.

சேலத்தில் திமுக வியூகம் தீவிரம்! இளைஞர் வாக்காளர்களை கவர உதயநிதியின் சேலம் மிஷன்..

0

A.D.M.K  D.M.K: சேலம் எப்போதுமே அதிமுக-வின் கோட்டையாக கருதப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதால், அதிமுக வாக்காளர்கள் இங்க அதிகம் இருக்கின்றனர். ஆனால், சமீபத்தில் கட்சியில் ஏற்பட்ட பிளவுகள், தலைமை மாற்றம், செங்கோட்டையன், ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன் ஆகியோரின் பிரிவுகள், அதிமுக வலிமையை குறைத்துவிட்டன.

இந்த சூழ்நிலையில், திமுக மிகவும் நுணுக்கமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேலத்திற்கு வருகை தருகிறார். இது ஒரு சாதாரண நிகழ்ச்சி அல்ல; இது தி.மு.க-வின் தேர்தல் யுக்தியாக கருதப்படுகிறது. இளைஞர்களிடையே தனக்கு அதிக வரவேற்பு இருப்பதாக திமுக நம்புகிறது.

இதனால் இளைஞர்களிடையே தன்னுடைய செல்வாக்கை மேலும் விரிவாக்கும் முயற்சியோடு, அதிமுக-வின் பாரம்பரிய கோட்டையை சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. திமுக-வின் மூத்த தலைவர்கள், “அதிமுக தற்போது பலவீனமடைந்துள்ளது. இந்த சூழலில் அதிமுக-வின் கோட்டையாக கருதப்படும் சேலம் போன்ற பகுதிகளில் திமுக வலிமை பெற வாய்ப்புள்ளது” என நம்புகின்றனர்.

அதேவேளை, எடப்பாடி அணியினர் சேலம் எங்கள் கோட்டை, எங்கள் வாக்காளர்கள் அசைய மாட்டார்கள் என்று உறுதியாக கூறி வருகின்றனர். சேலத்தில் திமுக வலுவடையும் பட்சத்தில், அது பெரிய அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும். அதிமுக-வின் அடிப்படை வாக்காளர்கள் குறைந்தால், அது வரவிருக்கும் தேர்தலில் அதிமுக-வுக்கு பெரிய சவாலை உருவாக்கும்.

இதை உணர்ந்த திமுக, சேலத்தில் தன் நிலையை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக செயல்படுகிறது. உதயநிதியின் இந்த வருகை அரசியல் ரீதியாக பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. இளைஞர்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருக்கும் உதயநிதி, அதிமுக-வின் பாரம்பரிய ஆதரவாளர்களிடமும் தாக்கம் ஏற்படுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. உதயநிதியின் வருகையால் திமுகவு-க்கு சேலத்தில் புதிய நிலை கிடைக்குமா? அல்லது அதிமுக தனது கோட்டையை தக்க வைத்துக் கொள்கிறதா? என்பது தான் அடுத்த கட்ட அரசியல் கேள்வி.

எனக்கு பதவியெல்லாம் முக்கியமில்லை.. எடப்பாடி பகீர் பேச்சு!! பரபரப்பில் டெல்லி தலைமை!!

0

ADMK BJP: அதிமுக கட்சியானது நான்கு முனைகளாக பிரிந்துள்ளது. அதிலும் சமீபத்தில் செங்கோட்டையன் ஒன்றிணைந்த அதிமுக வேண்டும் எனக் கூறி எடப்பாடிக்கு கெடு விதித்திருந்தார். அவர்கள் கெடு விதித்த மறுநாளே அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவரை நீக்கி எடப்பாடி உத்தரவிட்டார். இந்த சலசலப்பு அடங்குவதற்குள் செங்கோட்டையன் உடனடியாக டெல்லி சென்று நிதியமைச்சர் உள்ளிட்டவர்களை பார்த்து வந்தார். கூட்டணி அமைத்திலிருந்தே பாஜக சைலன்டான முறையில் அதிமுகவை கையாள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

அந்த வகையில் கட்சியிலிருந்து நீக்கிய மற்றவர்களை கூட பார்க்க நேரம் ஒதுக்காமல் செங்கோட்டையனிடம் என்ன பேச்சுவார்த்தை நடந்திருக்கும் என்று பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இவர் மீண்டும் கட்சியிலிருந்தால் மட்டும்தான் கோபிசெட்டிபாளையம் எனத் தொடர்ந்து சாதிய வாக்குகள் என அனைத்தும் கிடைக்கும். ஆனால் தொடர் பிரச்சனைகளால் அதிமுக வலுவிழந்து வந்தால் சட்டமன்றத் தேர்தல் மட்டுமின்றி எதிலும் தலை தூக்க இயலாது. இந்த நிலைமை மாறவேண்டுமென்றால் எடப்பாடி ஒரு அடி கீழே இறங்கிதான் வரவேண்டும்.

அதற்காக இவர் டெல்லி செல்ல உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. மேலும் கட்சியிலிருந்து வெளியேறிய செங்கோட்டையனை மீண்டும் இணைக்க சமாதானம் பேசுவதாகவும் கூறியிருந்தனர். இது ரீதியாக நேரடியாகவே எடப்பாடி யிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, என் தன்மானத்தை இழந்து நான் எதையும் செய்ய மாட்டேன், அதிகாரத்தை காட்டிலும் சுயமரியாதை முக்கியம் எனக் கூறியுள்ளார். அப்படி பார்க்கையில் இவர் டெல்லி செல்ல வாய்ப்பில்லை மீண்டும் செங்கோட்டையன் கட்சியில் எந்த ஒரு பதவியிலும் தொடர முடியாது என்பது திட்ட வட்டமாக தெரிகிறது.

அ.தி.மு.க தலைமை மாற்றம்!! எடப்பாடி தலையில் விழும் பெரும் இடி!!

0

A.D.M.K: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி-யின் தலைமையை ஏற்க விரும்பாத சில முக்கிய தலைவர்கள் குறிப்பாக டி.டி.வி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்பை தேடி வருகின்றனர். இ.பி.எஸ்-யை தவிர வேறு யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினாலும் கூட்டணியில் இணைவோம் என்று டி.டி.வி தினகரன் கூறி இருந்தார்.

இந்நிலையில் செங்கோட்டையனுக்கு ஆதரவு அதிகம் இருப்பதால் செங்கோட்டையனை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்துவார்களா? என்பது பெரிய கேள்வியாக உள்ளது. பிரிந்த குழுக்களை இணைக்கும் திறன் அவரிடம் அதிகம் உள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் இதற்கு தடையாக இருப்பது இ.பி.எஸ் தான். ஏனென்றால் கட்சியின் அதிகாரம், சட்டபூர்வ அங்கீகாரம் தற்போது அவர் கையில் தான் உள்ளது.

எனவே தலைமை மாற்றம் உடனடியாக நிகழ வாய்ப்பு இல்லை. இ.பி.எஸ் தலைமையில் அதிமுக செல்லும் பட்சத்தில் பிரிந்த குழுக்கள் தனித்தனியாக செல்லலாம். மாறாக செங்கோட்டையன் முதல்வர் வேட்பாளர் ஆனால் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெற முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது. அதிமுக-வின் தலைமை மாற்றமே அடுத்த தேர்தலில் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

இ.பி.எஸ் ஒதுங்கினால் தான், செங்கோட்டையன் முதல்வர் வேட்பாளராகவும், பிரிந்த அணிகள் ஒருங்கிணையவும் முடியும். இல்லையென்றால், அதிமுக பிரிந்த நிலையிலே தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். இது எடப்பாடி-யின் தலைமைக்கு ஆபத்தாக மாறுவதோடு, அதிமுக சட்டமன்ற தேர்தலிலும் பின்னடைவை சந்திக்கும் என்றும் கூறுகின்றனர்.

காலையிலேயே பரபரப்பு: பாமக தலைவர் அன்புமணி கிடையாது.. செக் வைக்கும் ராமதாஸ்!!

0

PMK: பாமக தற்போது இரண்டு அணிகளாக பிரிந்து உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் அதன் முழு அங்கீகாரத்தையும் அன்புமணிக்கு கொடுத்துள்ளதாக வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக அன்புமணி மற்றும் ராமதாஸ் சார்பாக இரு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இருவரும் நடத்திய பொதுக்குழுவின் தீர்மானங்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தனர். இதில் யாருடைய பொதுக்குழு கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் பச்சைக்கொடி காட்டும் என்று விமர்சனம் செய்து வரும் போதே அன்புமணியை கட்சியை விட்டு ராமதாஸ் நீக்கிவிட்டார்.

ஆனால் நேற்று அன்புமணியின் பொதுக்குழு தான் செல்லும் எனவும்  2026 வரை அவர் தான் தலைவர் அவர் எடுக்கும் முடிவுகள் தான் இறுதி எனக் கூறி தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளதாக வழக்கறிஞர் பாலு கூறினார். இதனை ராமதாஸ் அணியினர் சிறிதும் கூட ஏற்கவில்லை. தேர்தல் ஆணையம் எந்த ஒரு இடத்திலும் ராமதாஸ் தான் தலைவர் என்று குறிப்பிடவில்லை. அப்படி இருக்கும்போது கட்சிச் சின்னம் மற்றும் அதன் முடிவுகளை பறிக்கவே இப்படி செய்கின்றனர் என தனது கொந்தளிப்பை எம்எல்ஏ அருள் வெளிப்படுத்யுள்ளார்.

மேலும் இது ரீதியாக அவர் கூறுகையில், 46 வருடமாக இந்த இயக்கத்தை கட்டி காத்து வந்த நிறுவனரிடமிருந்து பறிக்க நினைக்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த கட்சிக்காக 21 பேர் உயிர்த் தியாகமும் செய்துள்ளனர். அப்படி இருக்கையில் வழக்கறிஞர் பாலு பொய்யான தகவலை பரப்பி வருகிறார். இதனால் கட்சி கொடி சின்னம் என எதையும் ஆக்கிரமிக்க முடியாது. இது ரீதியான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ராமதாஸ் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

சுக்குநூறாகும் அதிமுக.. அட்வைஸ் கொடுத்த செங்கோட்டையன்!! பாஜக வலையில் சிக்கும் எடப்பாடி!!

0

ADMK BJP: அதிமுக கட்சிக்குள் நான்கு முனைகளாக பிளவு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஒற்றை தலைமைக்காக ஓபிஎஸ் சசிகலா வெளியேறிய நிலையில் அச்சமயம் இரண்டு அணிகளானது. மேலும் செங்கோட்டையன் ஒன்றிணைந்த அதிமுக வேண்டும் எனக் கூறியதோடு எடப்பாடிக்கு 10 நாள் கெடுவும் வைத்துள்ளார். இதனை சிறிதும் கூட பொருட்படுத்தாமல் எடப்பாடி மறுநாளே அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டார். அதன் சூடு குறைவதற்குள் செங்கோட்டையன் டெல்லி சென்று நிதியமைச்சர் மற்றும் மத்திய மத்திரியை சந்தித்துள்ளார்.

இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன் கட்சியிலிருந்து வெளியேறியவர்களை பாஜக நேரில் பார்க்க அனுமதி வழங்காத போது இவரை மட்டும் பார்க்க காரணம் என்ன என்று குழப்ப நிலையிலேயே உள்ளனர். பாஜக தங்கள் கீழ் அதிமுக-வை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பது தான் மாஸ்டர் பிளான். அதனால் தான் கூட்டணி ஆட்சி என கூறி வருகின்றனர். ஆனால் இதற்குள் ஏதேனும் உள் சதி ஏதேனும் இருக்குமா என்ற சந்தேகமும் உள்ளது. இன்று செங்கோட்டையன் கெடு வைத்த கடைசி நாள். இவரது அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், மறப்போம் மன்னிப்போம் என்ற அண்ணாவின் எழுத்துக்களை நினைவூட்டுகிறேன், எம்ஜிஆர் ஜெயலலிதா கட்டி காத்த இந்த கட்சியை 100 ஆண்டு காலத்துக்கு ஆட்சி கட்டிலில் அமர வேண்டும். என் கருத்தை நான் தெரிவித்ததன் பெயரில் பலரது மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிமுக பிளவுபட்டு இருப்பதால் அதன் வலிமைக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.

பாஜக தந்த ஐடியா.. சைலன்டான செங்கோட்டையன்!! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!!

0

A.D.M.K: அரசியல் களத்தில் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் ஒரு நிகழ்வு செங்கோட்டையன் பதவி நீக்கம் செய்யபட்டதே ஆகும். அதிமுக-வின் மூத்த தலைவரான செங்கோட்டையன் செப்டம்பர் 5 ஆம் தேதி கட்சியிலிருந்து நீக்கியவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும், அதற்காக கட்சியின் தலைமை எடப்பாடிக்கு 10 நாட்கள் கெடுவும் விதித்திருந்தார்.

10 நாட்களுக்குள் இதற்கான நடவடிக்கையை எடுக்காவிட்டால் என்னைப்போன்ற ஒருமித்த கருத்துடைய அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுவோம் என்று கூறியிருந்தார். அவர் கெடு விதித்த அடுத்த நாளே தலைமைக்கு எதிராக கேள்வி எழுப்பியதாக கூறி, இ.பி.எஸ் செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார்.

இதனை தொடர்ந்து செங்கோட்டையன் அவர்கள் டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கட்சி ஒருங்கிணைப்பு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினார் என்று கூறப்படுகிறது. செங்கோட்டையன் விதித்த கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், இன்று செங்கோட்டையன் அவரின் இறுதி முடிவை கூறுவார் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் அவர் இது வரை மௌனம் காப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒரு சிலர் அவர் மௌனம் காப்பதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமியிடம் பா.ஜ.க மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கான அறிகுறியாகும் என்றும் சொல்கின்றனர். இந்த பேச்சு வார்த்தையின் மூலம் அதிமுக மீண்டும் ஒன்றிணையுமா? இல்லை எடப்பாடி பழனிச்சாமி அவருடைய முடிவில் உறுதியாக இருப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விஜய்யின் கூட்டம் கண்டு பதறிய ஸ்டாலின்.. தி.முக போடும் அரசியல் கணக்கு!!

0

T.V.K D.M.K: கட்சி தொடங்கிய சில வருடங்களிலேயே அதிகளவு தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் கவர்ந்த விஜய், வெற்றி பெறுவதற்கான பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். அதில் ஒரு பகுதியாக மாநாடுகளையும் , தேர்தல் பிரச்சாரங்களையும் முன்னெடுத்துள்ளார். எந்த ஒரு கட்சிக்கும் இல்லாத கூட்டம் விஜய்யின் பரப்புரைக்கு கூடியது.

தமிழக வெற்றிக் கழகம் முன்னேறி வருவது திமுக-விற்கும் அதிமுக-விற்கும் மிக பெரும் சவாலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. விஜய்யின் வளர்ச்சியை தடுக்க திமுக பல்வேறு உத்திகளை கையாள்வதாக சொல்லப்படுகிறது. முதலில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஜய் பிரச்சாரம் தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே அவருடைய பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.

அடுத்து கரூரில் முத்தமிழ் விழாவும் கொண்டாட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக முதலில் மக்களிடம் நேரடி தொடர்பை வலுப்படுத்தும் விதமாக “உங்களுடன் ஸ்டாலின்” பிரசாரத்தை மேலும் விரிவுபடுத்த உள்ளனர். இதன் மூலம் மக்களின் வீட்டு வாசலில் சென்று நேரடியாக அரசு திட்டங்களை அறிமுகம் செய்தல், குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் முகாம்கள் போன்ற முயற்சிகளை கையில் எடுத்துள்ளது.

அடுத்தாக பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான திட்டங்களை முன்னிலைப் படுத்துவது, மாதந்தோறும் உதவித்தொகை போன்றவற்றை தனது ஆயுதங்களாக பிரச்சாரத்தில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், திராவிட மாடல் 2.0 என்ற பெயரில் அடுத்தடுத்த வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து, விலைவாசி குறைப்பு, சுகாதார வசதி, விவசாய நலத்திட்டங்கள் போன்ற தளங்களில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முயற்சிக்கிறது.

அதுமட்டுமல்லாமல் தவெக பிரச்சாரத்திற்க்கு அனுமதி தராமல் தொடர்ந்து மறுத்து வந்தது. இதற்கு பதிலடி கொடுத்த விஜய் தவெக-வின் வளர்ச்சியை தடுக்க ஆளுங்கட்சி இது போன்ற சூழ்ச்சியை செய்து வருகின்றது. யாராலும் எங்களின் வளர்ச்சியை தடுக்க முடியாது என்று கூறி இருந்தார். எதிர்கட்சிகளுக்கு கூட இல்லாத கட்டுப்பாடுகளும், அனுமதி மறுப்பும் புதிதாக உதயமாகி உள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கு மட்டும் ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திமுக விதிக்கும் கட்டுபாடுகளும், தேர்தல் பிரச்சாரங்களும் விஜய்யை மையமாக வைத்தே இயங்குகிறது என்ற கருத்தும் நிலவுகிறது. தவெக-வின் எழுச்சியை கட்டுபடுத்தவும், வாக்காளர்களை தக்க வைத்துக் கொள்ளவும் திமுக தீவிரமாக தயாராகி வருகிறது.