ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 24, 2025
Home Blog Page 11

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்! சிலைக்கு பெயிண்ட் ஊற்றியவரை பிடிக்க தனிப்படை! பாலியல் குற்றவாளிக்கு..?

திருவள்ளூர் மாவட்டம் சாலையில் நடந்து சென்ற 4 வயது பிஞ்சு குழந்தையை ஒரு காமக்கொடூரன் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அங்கிள் என்ன விட்டுருங்க, என்னை அடிக்காதீங்க, என்னை கஷ்டப்படுத்தாதீங்கன்னு அந்த பொண்ணு அழுதுருக்கு.

இதை எதையும் பொருட்படுத்தாத அந்த மிருகம் கத்தியை காட்டி அந்த சிறுமியை மிரட்டி சத்தம் போடாதே என்று சொல்லி பாலியல் வன்கொடுமைக்கு அந்த பிஞ்சுக்குழந்தையை ஆளாக்கி இருக்கிறான். பிள்ளையை அடிச்சு வாயெல்லாம் ரத்தம் வரவச்சு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான் அந்த கொடூரன். இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை அந்த கொடூரனை காவல்துறை கைது செய்யவில்லை.

ஆனால் சேலத்தில் கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றிய 77 வயதுமிக்க முதியவரை ஒரே நாளில் காவல் துறை கைது செய்துள்ளது. 77 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒரு மருத்துவர். அவர் பெயர் விஸ்வநாதன். காரில் சென்று கருணாநிதி சிலைக்கு கருப்பு பெயிண்ட் ஊற்றிவிட்டு சென்றிருக்கிறார். தனிப்படை போலீஸ் அதிகாரிகள் கார் என்னை வைத்து விஸ்வநாதனை ஒரே நாளில் மடக்கி பிடித்துள்ளனர்.

கருணாநிதி சிலைக்கு பெயிண்ட் ஊற்றிய முதியவரை தனிப்படை அமைத்து ஒரே நாளில் பிடிக்க தெரிந்த திமுக அரசுக்கு பிஞ்சு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கனை பிடிக்க தான் நேரம் இல்லை என்று சமூக வலைத்தளங்களில் திமுக அரசை மக்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

தந்தையின் அடையாளத்தால் அல்ல உழைப்பினால் வந்தவன் – ஸ்டாலினை சாடிய எடப்பாடி பழனிசாமி

மயிலாடுதுறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, திமுக ஆட்சியையும் முதல்வர் மு.க. ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தார். “நான் உங்களைப் போல தந்தையின் பெயரில் இல்ல, உழைப்பின் பேரில் வந்தவன்” என்ற அவரது பேச்சு, தமிழக அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சி = பொய்கள் + ஊழல்: 

மயிலாடுதுறையில் வாகனப் பேரணியில் மக்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி கடந்த 50 மாதங்களில் மயிலாடுதுறைக்கு ஒரு பெரிய திட்டம் கூட வழங்கவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய அவர் , “நாங்கள் புதிய மாவட்டம் அறிவித்ததால் தான் இங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டது. அதையும் திமுக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு கைப்பற்ற முயல்கிறது” என்றும் தெரிவித்தார்.

மன்னர் ஆட்சி – வாரிசு அரசியல் விமர்சனம்

“மக்கள் ஆதரவு குறைந்ததால், ஸ்டாலின் முதல்வர் பதவியை வாரிசுகளிடம் ஒப்படைக்கத் திட்டமிடுகிறார்” என்றும், “திமுக அரசின் அடிப்படையே வாரிசு அரசியல், அதில் ஜனநாயகத்திற்கே இடமில்லை” என்றும் எடப்பாடி பழனிசாமி உரையில் விமர்சித்தார்.

பிறக்கும் குழந்தைமேல் கூட கடன் 

திமுக ஆட்சியில், தமிழகத்தின் கடன் ரூ.5.38 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டதாகவும், இன்று பிறக்கும் குழந்தை மேல் கூட ரூ.1.5 லட்சம் கடன் சுமை இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.

தந்தையின் அடையாளம் 

“நான் ஏர் ஒட்டிய கை. கோட் சூட் போட்டுக் காட்சி அளிக்கத் தெரியாது. தந்தையின் அடையாளத்தில் நான் வரவில்லை; உழைத்து வந்தவன்” என்று ஸ்டாலினை நேரடியாக குறிவைத்து, தான் வந்த வழி வேறுபட்டது என்பதையும் அவர் குறிப்பிட்டு பேசினார்.

பொய்களை விற்று ஆட்சி பிடித்த அரசு

ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களில் 10% கூட செயல்படுத்தப்படவில்லை என பழனிசாமி சாடினார். மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்தியதையும் சுட்டிக்காட்டி, அதிமுக ஆட்சியில் அதை மீண்டும் செயல்படுத்துவோம் என உறுதியளித்தார்.

தேர்தல் விழிப்புணர்வு 

“முயற்சியால் வந்த அரசியல்வாதிகளுக்கு மதிப்பு இருக்காத திமுக அரசை மாற்ற, வரும் தேர்தலில் மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். திமுக வாரிசு ஆட்சிக்கு விடை கூற வேண்டிய தருணம் இது” என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் விமானி? – அமெரிக்க ஊடகம் வெளியிட்ட செய்திக்கு AAIB மறுப்பு

அகமதாபாத் விமான விபத்தில் விமானி தான் காரணம் என கூறி அமெரிக்க ஊடகம் வெளியிட்ட செய்தியை, விபத்திற்கான விசாரணையை மேற்கொண்டு வரும் இந்திய விமான விபத்து விசாரணை அமைப்பு (AAIB) தெளிவாக மறுத்துள்ளது.

அமெரிக்க ஊடகத்தின் குற்றச்சாட்டு

கடந்த மாதம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 2 நிமிடங்களுக்குள் கீழே விழுந்து, தீப்பற்றி விபத்தில் சிக்கியது. இதில் 270 பயணிகள் உயிரிழந்தனர், இது கடந்த காலங்களில் இந்தியா சந்தித்த மிகப்பெரிய விமான விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்தக் கோர விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்கா சார்ந்த ஒரு பிரபல இதழ், விமானி தான் இந்த விபத்திற்குக் காரணம் எனக் குற்றம்சாட்டும் வகையில் ஒரு கட்டுரையை வெளியிட்டது.

அதில், விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை விமானியே தவறுதலாக ஆஃப் செய்ததாக, அதுதான் விமானம் உயரம் இழந்து விழ காரணமாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டது.

AAIB தரப்பு மறுப்பு மற்றும் எச்சரிக்கை

இது தொடர்பாக AAIB இயக்குநர் ஜெனரல் ஜி.வி.ஜி. யுகாந்தர் கூறியதாவது:

“அமெரிக்க ஊடகங்களில் வெளிவரும் இத்தகைய முழுமையற்ற மற்றும் தவறான தகவல்கள், விசாரணையின் நம்பகத்தன்மையை பாதிக்கும் வகையில் உள்ளது. தற்போதைய அறிக்கைகள் அனைத்தும் மூல விசாரணை முடிவடையாத நிலையில் உள்ளன. ஆகையால், முழுவதுமான விசாரணை முடிவடையும் வரை ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் ஊகங்களிலோ அல்லது விவாதங்களிலோ ஈடுபட வேண்டாம்.”

விமானிகள் சங்கம் கண்டனம் 

அமெரிக்க ஊடகம் விமானியை குற்றம் சாட்டியது தொடர்பாக, இந்திய விமானிகள் கூட்டமைப்பு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. AAIB-ன் முதற்கட்ட அறிக்கையிலும் எந்த விமானியையும் நேரடியாக குற்றம் சாட்டவில்லை என்பதை சங்கம் வலியுறுத்தியது.

முதற்கட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

  • விபத்துக்குள்ளான விமானத்தில் உள்ள இரு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் ஒரே நேரத்தில் ‘கட் ஆஃப்’ நிலையிற்குச் சென்றதை AAIB குறிப்பிடுகிறது.

  • கருப்புப் பெட்டியில் பதிவு செய்யப்பட்ட காக்பிட் உரையாடலில், ஒரு விமானி “நீ ஏன் கட் ஆஃப் செய்தாய்?” எனக் கேட்டதற்கு மற்றொருவர், “நான் செய்யவில்லை” என பதிலளித்துள்ளார்.

  • இதன் அடிப்படையில் விபத்துக்கான காரணங்கள் பற்றி இன்னும் தெளிவாகவும், தொழில்நுட்பமாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

விமானி மீது குற்றம் சாட்டுவது சரியல்ல: விசாரணை முடிவை காத்திருக்க வேண்டுமென்று AAIB வலியுறுத்தல்

AAIB சுட்டிக்காட்டியது போல, விசாரணையின் இறுதிக் கட்ட அறிக்கையே விபத்துக்கான உண்மையான காரணத்தை வெளிப்படுத்தும். தற்போதைய சூழலில் விமானி மீது நேரடியாக குற்றம் சாட்டுவது குறைக்கூடியது அல்ல.

குறிப்பாக, அகமதாபாத் விமான விபத்துக்கு விமானி நேரடியாகக் காரணம் என கூறும் சர்வதேச ஊடகங்களின் அறிக்கைகள், இந்திய அதிகாரப்பூர்வ அமைப்புகளால் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு பின்னால் இருப்பது யார் என்று எனக்கு தெரியும்! சபாநாயகர் பேச்சால் அதிர்ந்த அரசியல் களம்!

0

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து திமுக மற்றும் பாஜக கட்சிகளை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறார். அண்மையில் கூட சிவகங்கை திருபுவனம் அஜித்குமார் லாக் அப் மரணத்தை எதிர்த்து ஆளும் திமுக கட்சியை எதிர்த்து சென்னையில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார் விஜய். இந்த கண்டன ஆர்பாட்டம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விஜய்யின் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் பற்றி திமுக கட்சியை சேர்ந்த சபாநாயகர் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி கொடுத்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜய்க்கு சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த நபர்களின் பெயர்கள் கூட சரியாக தெரியவில்லை. யார் அவருக்கு எழுதி கொடுத்து வாசிக்க வைக்கிறார்கள், யார் சொல்லி இப்படி விஜய் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் என்றும் தெரியவில்லை. அமித் ஷாவின் பின்னால் விஜய் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. விஜய்யின் தாயார் ஒரு கிறிஸ்துவர், சிறுபான்மை ஓட்டுக்களை பிரிப்பதற்காகத்தான் அவரை அமித் ஷா களத்தில் இறக்கி இருப்பதாகவும் தோன்றுகிறது என்று அய்யாவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் சபாநாயகர் அய்யாவுவை கடுமையாக விமர்சித்துள்ளார். தாயின் மதம் பற்றி பேசி திமுக ஒரு கரை வேட்டி கட்டிய சங்கி என்ற உண்மையை வெளிப்படுத்தலாமா? விஜய்யின் தாயார் சோபா ஒரு இந்து. அவர் ஒரு கிருஸ்துவராகவே இருந்தாலும் அதிலென்ன தவறு இருக்கிறது? மனிதரை மனிதராக பார்க்காமல் கிறிஸ்துவராக பார்ப்பது சிறுபான்மை விரோத சிந்தனை அல்லவா என்று சபாநாயகர் அய்யாவுவை கடுமையாக விமர்சித்துள்ளார் TVK ராஜ்மோகன்.

திருச்சி சிவா பேச்சால் கொந்தளிப்பில் காங்கிரஸ்! கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்த முயற்சி! வெகுண்டெழுந்த காங்கிரஸ் கட்சியினர்!

0

ஜூலை 15ஆம் தேதி கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. அந்த நேரத்தில் நிறைய அரசியல் தலைவர்கள் அய்யா காமராசர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அனுவித்து மரியாதையை செய்தனர். அந்த வகையில் திமுக கட்சியை சேர்ந்த சிவா கர்மவீரர் காமராஜர் பற்றி சர்ச்சையான பதிவு ஒன்றை வெளியிட்டார்.

காமராஜர் ஏ.சி. இல்லாமல் தூங்க மாட்டார் என்றும், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி இது பற்றி சிவாவிடம் கூறியதாகவும், காமராஜர் இறக்கும் தருவாயில் அவரை சந்திக்க சென்ற கருணாநிதியிடம் இந்த நாட்டையும், மக்களையும் நீ தான் காப்பாற்றவேண்டும் என்று காமராசர் கருணாநிதியிடம் கேட்டுக்கொண்டதாக சிவா அண்மையில் பேட்டி கொடுத்தார். இது தொடர்பான வீடியோக்களும், பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. திமுக கூட்டணி தங்களுக்கு தேவை என்பதால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாரும் இதுபற்றி விமர்சிக்க மாட்டார்கள் என்றே எல்லோரும் நினைத்தனர். ஆனால் நடந்ததோ வேறு.

வயல் வெளிகளில் கூட படுத்துக்கொள்ளும் குணம் படைத்தவர் காமராசர், அவரா ஏசி இல்லாமல் தூங்கமாட்டார்? காமராசரின் கடைசி காலகட்டத்தில் கருணாநிதி அவரை சந்திக்கவே இல்லை, பின் எப்படி காமராசர் கருணாவின் கைகளை பற்றி இருப்பார்? சுதந்திரத்துக்காக ஒன்பதரை ஆண்டுகள் போராட்டம் நடத்திய காமராசர் கருணாநிதியின் கைகளை பிடித்து நாட்டு மக்களை காப்பாற்றுங்கள் என்று கேட்டாரா? இந்த மாதிரியான பைத்தியக்காரத்தனமாக திமுகவினர் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று திருச்சி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேலுச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காமராசர் உயிரோடு இல்லை என்பதற்காக திருச்சி சிவா வாய்க்கு வந்தபடி பேசுகிறார் என்று நாம் தமிழர் கட்சி சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சி சிவா பேசுவது உண்மைக்கு புறம்பானது என்றும், திமுக கட்சியினர் அவிழ்த்து விட்ட கட்டுக்கதைகளால் தான் அந்த காலத்தில் காமராஜர் தேர்தலில் தோற்றார், காமராசருக்கு எதிராக பரப்பப்படும் கட்டுக்கதைகளுக்கு நாம் எதிர்வினை ஆற்றாவிடில் அவருடைய ஆன்மா நம்மை மன்னிக்காது என்று கரூர் எம்.பி. ஜோதிமணி பேட்டி கொடுத்துள்ளார்.

கூட்டணிக்கு அழைத்த எடப்பாடியை அசிங்கப்படுத்திய திருமா! பதிலுக்கு எடப்பாடி செய்த தரமான சம்பவம்!

0

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை எல்லா கட்சிகளும் இப்போதே ஆரம்பித்துவிட்டன. திமுக கட்சியின் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகள் என்ன நடந்தாலும் நாங்க திமுகவை விட்டுக்கொடுக்கவே மாட்டோம் என்கிற மனநிலையில் செயல்பட்டு கூட்டணியில் நீடிக்கின்றன.

விஜய் தனது தவெக கூட்டணிக்குள் சிறிய கட்சிகளை கொண்டுவருவதற்கான பணிகளையும் ஆரம்பித்துவிட்டார். அதிமுக பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துவிட்டது. இந்நிலையில் அதிமுக கூட்டணிக்குள் விடுதலை சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை கொண்டுவருவதற்காக அண்மையில் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

எங்கள் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ரத்தினக் கம்பளம் கொண்டு வரவேற்போம், அதிக தொகுதிகளை ஒதுக்குவோம் என்று பேட்டி கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. பழனிசாமியின் இந்த அறிவிப்பை விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் ஏற்கும் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி இது என்று விமர்சனம் செய்துள்ளார்.

அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஷண்முகம் எடப்பாடி விரிப்பது ரத்தினக்கம்பளம் அல்ல, வஞ்சக வலை என்று விமர்சித்துள்ளார். இந்நிலையில் விசிக குறித்து அதிமுக கல்யாணசுந்தரம் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதிமுகவை எவனாலும் அழிக்க முடியாது. எங்களை எச்சரிக்கும் விசிக தலைவர் அண்ணன் திருமாவளவனுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்.

விழிப்புடன் இருங்கள், விசிகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை திமுக விழுங்கிக்கொண்டிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைபொதுச் செயலாரராக இருந்த ஆதவ் அர்ஜுனாவை உங்கள் கட்சியை விட்டு நீக்க வைத்ததே முதல்வர் ஸ்டாலின் தான் என்பதை மறந்துவிடாதீர்கள் என்று பேட்டி கொடுத்துள்ளார் கல்யாணசுந்தரம். இவரின் பேச்சு விசிக நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MGR ஜெ கடைசி நேரத்தில் போட்ட திட்டம்.. நடைமுறைப்படுத்தும் விஜய்!! கோட்டையை விட்ட திமுக அதிமுக!!

0

TVK: தமிழகத்தில் பிரதானமாக திமுக அதிமுக என்ற ஆட்சி மாறி மாறி நடந்து வரும் நிலையில் இதன் ஓட்டு விகிதத்தை உடைப்பதற்காகவே தற்போது தமிழக வெற்றிக் கழகம் அரசியலுக்குள் நுழைந்துள்ளது. அதிலும், அரசியல் எதிரியாக திமுக மற்றும் பாஜகவை முன்னிறுத்தி உள்ளது. இந்நிலையில் விழுப்புரத்தில் தனது முதல் மாநாட்டை யாரும் எதிர்பாராத வகையில் நடத்த முடித்த விஜய் தற்போது வெளியே சொல்லாமல் இரண்டாவது மாநாட்டிற்கு அடிக்கல் நாட்டி விட்டார்.

இது ரீதியாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற உள்ளது. இதனை சொல்வதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பும் மற்றும் வெற்றி நிச்சயம் எனக் கூறியுள்ளார். அரசியலில் முக்கிய இடத்தைப் பெற்ற பெரிய தலைவர்கள் அனைவரும் சங்கம் வளர்த்த மதுரையை தான் மாநாட்டிற்கு தேர்வு செய்வர். அதேபோல விஜய்யும் முதல் மாநாட்டை இங்கே தான் நடத்த வேண்டும் என்று முடிவிலிருந்தார்.

ஆனால் அதனை ஆளும் கட்சி விடவில்லை. தொடர்ந்து அதிமுக திமுக என அனைத்து கட்சிகளும் தங்களுடைய பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை இங்கே தான் நடத்தியும் வருகிறது. அந்த வகையில் முக்கிய இடத்தை பிடிப்பதற்காக விஜய்யும் இவர்களுடன் போட்டி போட ஆரம்பித்துள்ளார். அதன் முதல் படியாக மதுரையில் மாநாடு நடைபெற உள்ளது. கடந்த மாநாட்டை போல் இம்மாநாட்டில் தனது தொண்டர்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்துவதுடன் போன மாநாட்டில் நடந்த அசம்பாவிதங்களை தவிர்க்கவும் முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கட்டாயம் இம்முறை சட்டமன்ற தேர்தலில் வாக்கு சதவீதத்தில் மாற்றம் ஏற்படும் என்று கூறுகின்றனர். மேலும் திமுக ஒழிய வேண்டும் என்பதில் அதிமுக விஜய் யின், தவெக உள்ளிட்ட கட்சிகள் திட்டவட்டமாக இருக்கின்றனர்.

அம்பேத்காரை தனது அரசியல் பயணத்துக்கு முன்னிறுத்துகிறது காங்கிரஸ்!!

0

“அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்று” போன்ற முழக்கங்களுக்குப் பின்னால் அணிவகுத்து, இந்தியாவின் அரசியலமைப்பு விழுமியங்களின் பாதுகாவலராக இந்திய தேசிய காங்கிரஸ் தொடர்ந்து தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. இந்த விவரிப்பு 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிக்கு 99 இடங்களைப் பெற உதவியது – 2014 முதல் அதன் சிறந்த செயல்திறன்.

இருப்பினும், இந்தக் கூற்று காங்கிரஸின் வரலாற்றுப் பதிவுக்கு முரணானது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்-குறிப்பாக டாக்டர் பி.ஆர் உடனான அதன் அமைதியற்ற உறவு. அம்பேத்கர் மற்றும் அரசியலமைப்பு தலையீடுகளின் பாரம்பரியம் ஜனநாயக நிறுவனங்களை அடிக்கடி பலவீனப்படுத்தியது.

அம்பேத்கரும் காங்கிரஸும் காங்கிரஸுக்கும் டாக்டர் பி.ஆருக்கும் இடையிலான கருத்தியல் உரசல். அம்பேத்கர் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு பழமையானவர். 1930களில் அம்பேத்கரின் தலித்துகளுக்கு தனித் தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கையை மகாத்மா காந்தி எதிர்த்து, சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். அம்பேத்கர், அழுத்தத்தின் கீழ், பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், ஒதுக்கப்பட்ட இடங்களுடன் கூட்டு வாக்காளர்களுக்கு தீர்வு காணும் – பல தலித்துகள் ஒரு சமரசம் நிர்ப்பந்திக்கப்பட்டதாகக் கண்டனர். முரண்பாடாக, அரசியலமைப்பை வடிவமைப்பதில் அம்பேத்கரின் முக்கிய பங்கு இருந்தபோதிலும், காங்கிரஸ் அவரை அரசியல் நிர்ணய சபைக்கு ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை. முஸ்லீம் லீக்கால் வசதி செய்யப்பட்ட வங்காளத்தில் இருந்து ஒரு இருக்கை வழியாக அவர் நுழைய வேண்டியிருந்தது. பிரிவினைக்குப் பிறகுதான் அவரது முக்கியத்துவத்தை உணர்ந்த காங்கிரஸ், பம்பாயிலிருந்து அவரைத் தேர்ந்தெடுக்க முடிந்தது.

சட்ட அமைச்சராகவும், அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராகவும் இருந்த அம்பேத்கர், நேருவின் அமைச்சரவையில் இருந்து குறிப்பிடத்தக்க பின்னடைவை எதிர்கொண்டார். இடஒதுக்கீடுகளின் அளவு மற்றும் நிரந்தரத்தன்மையை நேரு எதிர்த்தார், இன்றும் மீண்டும் தலைதூக்கும் சாதாரணமான வாதங்கள் பற்றிய கவலைகளை மேற்கோள் காட்டினார். இந்து தனிநபர் சட்டங்களை சீர்திருத்த அம்பேத்கர் ஆர்வத்துடன் முன்வைத்த இந்து கோட் மசோதா, நேருவின் அரசாங்கத்தால் ஸ்தம்பித்தது மற்றும் நீர்த்துப்போகச் செய்யப்பட்டது, இறுதியில் 1951 இல் அம்பேத்கரின் ராஜினாமாவுக்கு வழிவகுத்தது. தொடர்ந்து நடந்த தேர்தல்களில், காங்கிரஸ் அம்பேத்கருக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி அவரைத் தோற்கடிக்க தீவிரமாக பிரச்சாரம் செய்தது. அம்பேத்கரின் பட்டியலிடப்பட்ட சாதிகள் கூட்டமைப்பை எதிர்கொள்வதற்கு இணக்கமான தலித் தலைவர்களையும் அமைப்புகளையும் கட்சி முட்டுக் கொடுத்தது, இந்த நடவடிக்கையானது சுதந்திரமான தலித் அரசியல் வலியுறுத்தலை நீர்த்துப்போகச் செய்ததாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அரசியலமைப்புத் திருத்தங்கள் மற்றும் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு காங்கிரஸின் அரசியலமைப்பு ஒருமைப்பாடு பற்றிய சொந்தப் பதிவும் சரிபார்க்கப்பட்டது. 1951 இல் நேருவின் முதல் திருத்தம் பேச்சு சுதந்திரத்தை குறைத்தது – அம்பேத்கர் வெளிப்படையாக விமர்சித்தார். ஆனால் இந்திரா காந்தியின் எமர்ஜென்சியின் போது (1975-77) மிகவும் வெளிப்படையான துஷ்பிரயோகம் நடந்தது, 39 மற்றும் 42 வது திருத்தங்கள் பிரதமரை நீதித்துறை ஆய்வில் இருந்து தனிமைப்படுத்தவும் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்றவும் நிறைவேற்றப்பட்டன. இந்த நேரத்தில், காங்கிரஸும் 356 வது பிரிவை ஆயுதமாக்கியது, எதிர்க்கட்சி தலைமையிலான மாநில அரசாங்கங்களை விருப்பப்படி பதவி நீக்கம் செய்து, அதன் மூலம் இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை பலவீனப்படுத்தியது. தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகள் இறுக்கமான நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன, மேலும் அரசியலில் கட்சி விலகல்களையும் பணபலத்தையும் கட்டுப்படுத்தும் சீர்திருத்தங்கள் தாமதமாகவோ அல்லது நீர்த்துப்போகவோ செய்யப்படுகின்றன.

இன்று காலதாமதம் மற்றும் மறுப்பு வரலாறு, காங்கிரஸ் தலைவர்கள் ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் “ஜித்னி அபாடி, உத்னா ஹக்” (மக்கள் தொகை விகிதத்தில் உரிமைகள்) பற்றி பேசுகின்றனர். ஆனால் வரலாற்று ரீதியாக, காங்கிரஸ் அரசுகள் அந்த வழியில் செல்ல தயக்கம் காட்டின. 1980 இல் சமர்ப்பிக்கப்பட்ட மண்டல் கமிஷன் அறிக்கை, இந்திரா மற்றும் ராஜீவ் காந்தியின் ஆட்சியில் ஏறக்குறைய பத்தாண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இது காந்தி அல்லாத காங்கிரஸ் பிரதமர்-பி.வி.யால் மட்டுமே செயல்படுத்தப்பட்டது. நரசிம்மராவ்-1990களில். பல தசாப்தங்களில் முதல் தலித் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கேவை நியமிப்பது போன்ற சமீபத்திய நகர்வுகள் கூட பலரால் அடையாளமாக பார்க்கப்படுகின்றன. கட்சியின் உயர்மட்டத் தலைமைக்குள் அவரது அதிகாரத்தின் உண்மையான அளவு பற்றிய கேள்விகள் உள்ளன.

பிஜேபியின் எதிர்கதை இதற்கிடையில், அம்பேத்கரின் மரபு-பெயரிடுதல், “பஞ்சதீர்த்” போன்ற திட்டங்களை ஊக்குவித்தல் மற்றும் திரௌபதி முர்மு மற்றும் ராம்நாத் கோவிந்த் போன்ற தலைவர்களை மிக உயர்ந்த அரசியலமைப்பு அலுவலகங்களுக்கு உயர்த்தியதன் உண்மையான ஜோதியாக பாஜக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. விமர்சகர்கள் இதை மூலோபாய டோக்கனிசம் என்று கருதுகின்றனர், ஆனால் தலித் மற்றும் பழங்குடி சமூகங்களில் பலருக்கு இது பிரதிநிதித்துவத்தில் உறுதியான மாற்றத்தைக் குறிக்கிறது.

அரசியலமைப்பைப் பாதுகாப்பதில் காங்கிரஸின் புதிய உறுதிப்பாடு அதன் வரலாற்று முடிவுகளுடன் அமைதியின்றி அமர்ந்திருக்கிறது – அம்பேத்கரை எதிர்ப்பது மற்றும் அவரது சீர்திருத்தங்களை அவசரநிலையின் போது அரசியலமைப்பை மாற்றுவது மற்றும் சமூக நீதி நடவடிக்கைகளை தாமதப்படுத்துவது வரை. எந்தக் கட்சியும் குறைபாடற்ற சாதனையைக் கோர முடியாது என்றாலும், அம்பேத்கரின் பாரம்பரியத்தை வலியுறுத்துவது, சீரான நடவடிக்கையுடன் பொருந்தினால் மட்டுமே எடையைக் கொண்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு விவாதங்களின் சகாப்தத்தில் இந்தியா செல்லும்போது, கடந்த காலம் ஒரு கண்ணாடியாகவே உள்ளது-காங்கிரசுக்கு அந்த பிரதிபலிப்பு சிக்கலானது.

ரூ1000 உரிமைத்தொகை உடனே வேண்டுமா.. இதை செய்யுங்கள்!! ஸ்டாலின் கொடுத்த அப்டேட்!!

0

DMK: மகளிர் உரிமைத் தொகையானது கிட்டத்தட்ட 2 கோடிக்கும் மேற்பட்டோர் பெற்று வருகின்றனர். இருப்பினும் திமுக ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில் தற்போது வரை பலருக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை. மேற்கொண்டு பெண்களின் வாக்குகளை கவர ஸ்டாலின் விடுபட்டவர்களுக்கு மகளிர் தொகை கொடுப்பதாகவும் கூறியுள்ளார். இது ரீதியாக கடலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளையபெருமாள் உருவச் சிலையை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில் பெண்கள் பயனடையும் வகையில் மாவட்டந்தோறும் ஆயிரம் முகாம்கள் நிறுவப்பட்டு 46 சேவைகளுக்கு தீர்வு காணப்படும். அச் சமயத்தில் மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் கட்டாயம் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இது ரீதியாக வீடு தோறும் விண்ணப்ப படிவம் வரும் என்றும் கூறினார். அதில் தங்களது தேவைகளை எழுதி முகாம்  நடக்கும் நேரத்தில் கொடுக்க வேண்டும்.

ஸ்டாலின் கூறியது போல தற்போது அனைத்து மாவட்டங்களிலும் விண்ணப்ப படிவம் கொடுக்கும் பணியானது தீவிரமடைந்துள்ளது. பெண்கள் அந்த விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொண்டு தங்கள் உரிமைத் தொகையை வாங்கிக் கொள்ளலாம். இச்ச சமயத்தில் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் கட்டாயம் உரிமைத் தொகை கிடைப்பது சிரமம்தான் என கூறுகின்றனர். அதிலும் திமுக வரப்போகும் சட்டமன்ற தேர்தலுக்காக இவ்வாறான ஏற்பாடை செய்துள்ளதாகவும் மாற்றுக் கட்சி அரசியல் புள்ளிகள் பேசி வருகின்றனர்.

வனிதா சொன்ன வார்த்தைகளால் அதிர்ந்த இளையராஜா குடும்பம்! நான் காதலிச்சதே அந்த மனுசனை தான்!

0

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் வனிதா விஜயகுமார். இவர் அண்மையில் தன்னுடைய முன்னாள் கணவருடன் சேர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் என்னும் படத்தில் நடித்தார். இவருடைய மகள் இந்த படத்தை தயாரித்திருந்தார். வனிதா விஜயகுமார் இந்த படத்தின் கதையை எழுதி இயக்கமும் செய்திருந்தார்.

இந்த மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் படத்தில் இளையராஜா இசையமைப்பில் வெளியான மைக்கேல் மதன காமராசன் படத்தில் இடம்பெற்றிருந்த ராத்திரி சிவராத்திரி என்னும் பாடல் இடம்பெற்றிருந்தது. எப்பவும் போல என்னுடைய அனுமதி வாங்காமல் இந்த பாடலை இந்த படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று வழக்கு தொடர்ந்தார் இளையராஜா.

இதனை தொடர்ந்து வனிதா விஜயகுமார் இளையராஜாவை கடுமையாக விமர்சித்துள்ளார். ஆரம்பம் முதலே எங்களின் குடும்பத்திற்கும், இளையராஜா குடும்பத்திற்கும் பிரச்சனை இருந்து வருகிறது. இளையராஜா குடும்பத்தில் உள்ள எல்லோரும் எனக்கு நண்பர்கள் தான். பவதாரணி எனக்கு சகோதரி மாதிரி.

இளையராஜா குடும்பத்தில் உள்ள ஒரு பையன் என்கிட்ட கேட்டான். நீ என்னைய லவ் பண்ணுறியா இல்ல எங்க அப்பாவை லவ் பண்ணுறியா என்று. நான் உங்க அப்பாவை தான் லவ் பண்றேன் என்று அவனிடம் சொன்னேன். இதெல்லாம் இத்தனை நாட்களாக வெளியில் சொல்லாமல் இருந்தேன். இன்னைக்கு பணத்துக்காக இளையராஜா இப்படி வழக்கு தொடர்ந்ததால் இதெல்லாம் வெளிய சொல்ற மாதிரி ஆகிடுச்சு என்று பரபரப்பாக பேட்டி கொடுத்துள்ளார் வனிதா. வனிதாவின் இந்த பேட்டி திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.