வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 19, 2025
Home Blog Page 11

அதிமுக கூட்டணியில் வெடிக்கும் சர்ச்சை.. பாஜக முக்கிய தலைகளுக்கு கெட்டவுட் சொன்ன EPS!! கொந்தளிப்பில் மோடி!!

0

ADMK BJP: அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்த முறை சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியில் அமர வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளார். அதன் காரணமாகத்தான் மீண்டும் பாஜகவுடன் கூட்டணியும் வைத்துக் கொண்டார். ஆனால் கூட்டணி வைத்ததிலிருந்து இலையின் மீது தான் தாமரை மலரும், கூட்டணி ஆட்சி என அமித்ஷா முதல் கட்சியின் அடிமட்ட தொண்டன் வரை அனைவரும் கூறி வந்தனர்.

இதற்கு எடப்பாடி ஒரு இடத்திலும் முட்டுக் கொடுக்காமல் தனித்து தான் போட்டி எனக் தெரிவித்தார். இவ்வாறு மாறி மாறி தங்கள் கருத்தை தெரிவிக்கவே முதல்வர் வேட்பாளர் யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது. அதில் அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர் என பாஜகவே கூறிய பிறகு சற்று அதிமுக நிர்வாகிகள் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர். அதற்குள்ளேயே மீண்டும் கூட்டணி ஆட்சி குறித்து சர்ச்சைஆரம்பித்துவிட்டனர்.

இப்படி இருக்கவே எடப்பாடி சற்று பாஜகவிடமிருந்து விலகியே இருக்க நினைக்கிறார். இதில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தையும் எடப்பாடி மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று மதுரையில் பிரச்சாரம் செய்தபோது அங்கிருந்த பாஜக முக்கிய தலைவர்களை தன்னுடைய பிரச்சார வாகனத்தில் ஏற்க மறுத்துவிட்டார்.

வழக்கமாக ஒரு கட்சித் தலைவர் ஒரு தொகுதிக்கு செல்கிறார் என்றால், அங்கிருக்கும் கூட்டணி கட்சியினரையும் தங்களுடன் நிறுத்தி பேசுவது வழக்கம். ஆனால் இதனை முழுவதுமாக எடப்பாடி மறுத்து இருக்கிறார். இதனால் கோபமடைந்த பாஜக நிர்வாகிகள் அவர் பேசி முடிப்பதற்குள்ளையே அந்த இடத்தை விட்டு புறப்பட்டு சென்று விட்டனர். இதனால் கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த நிராகரிப்பு குறித்த தகவல் அமித்ஷா வரை சென்றுள்ளதால் பாஜக மேலிடம் எடப்பாடி மீது கொந்தளிப்பில் உள்ளார்களாம்.

அனல் பறக்கும் அரசியல் களம்: ஸ்டாலினுடன் திடீர் பந்தம்.. ஆட்டத்தை ஆரம்பித்த OPS!! ஷாக்கில் இபிஎஸ்!!

0

ADMK DMK: அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிகாரமோதல் போக்கானது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே இருந்தது. இதில் நிர்வாகிகள் மத்தியில் இபிஎஸ் தான் பலம் பெற்றவராக முன்னிறுத்தப்பட்டார். இதன் பிறகு பன்னீர்செல்வம் சசிகலா உள்ளிட்ட அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்கள் தங்களுக்கென்று அதிமுக ஒருங்கிணைப்பு குழு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சி தொடங்கினர்.

ஒரு கட்டத்தில் அதிமுக வாக்குகள் சிதறுகிறது இதனால் மீண்டும் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்று பல கோணங்களில் எடப்பாடி-யிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு பயனும் இல்லை. தற்போது வரை தான் எடுத்த முடிவில் மாறாமல் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டேன் எனக் கூறி வருகிறார். அதிமுக உதறிவிட்டாலும் பாஜக அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து தங்களின் தேவைக்காக வைத்திருந்தது.

எப்பொழுது அதிமுகவுடன் கைகோர்த்ததோ அப்போதையிலிருந்து சசிகலா, ஓபிஎஸ் தினகரன் என யாரையும் பாஜக கிட்ட நெருங்க விடுவதில்லை. இதனால் முதலில் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டார். தற்போது தினகரனும் அந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதில் ஓபிஎஸ் ஸ்டாலினுடன் கலந்துரையாடி உள்ளதால் வரும் நாட்களில் அவருடன் கூட்டணி வைப்பது உறுதி எனக் கூறுகின்றனர்.

அதிலும் இந்த செப்டம்பர் மாதம் இறுதிக்குள் திமுக உடனான கூட்டணியை உறுதி செய்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொங்கு மண்டலத்துக்கு மோடி தந்த பெரும் அடி.. பிளவுப்படும் கூட்டணி!! வெளியாகும் பரபர அறிவிப்பு!!

0

ADMK BJP: தமிழகத்தில் கொங்கு பகுதிகளில் எடப்பாடிக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் அதே தாக்கம் மோடிக்கு இருக்குமா என்பதில் சந்தேகம் தான். அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் திருப்பூர் இறக்குமதியானது நன்கு அடிவாங்கியுள்ளது. மேலும் நேற்று மட்டும் சுங்கச்சாவடி கட்டணம் 395 ஆக உயர்ந்துள்ளது. அத்தோடு தங்கம், பெட்ரோல் டீசல் என அனைத்தையும் அடுக்கிக் கொண்டே போகலாம். இது ரீதியாக மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் கொங்கு மண்டலத்தில் அதன் இழப்பீடு உச்சத்தை எட்டும்.

இந்நிலையில் அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கும் எடப்பாடி மீதும் அதிருப்தி உண்டாகும். இதனால் அந்த இடத்தை ஸ்கோர் செய்ய திமுக -வோ அல்லது மாற்றுக் கட்சி சார்ந்தவர்களோ முயல்வார்கள். இதனால் தன் பக்கம் இருந்த ஆதரவாளர்களை எடப்பாடி இழக்க நேரிடும். இதனை விரும்பாத எடப்பாடி பழனிச்சாமி, பாஜக உடனான உறவை முடித்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி கூட்டணி அமைத்ததிலிருந்து எந்த ஒரு தெளிவும் இல்லாமல் குழப்ப நிலையில் தான் செல்கிறது.

ஒரு பக்கம் கூட்டணி முறையில் ஆட்சி மற்றொரு பக்கம் தனித்து ஆட்சி என மாறி மாறி கூறி வருகின்றனர். இதனால் கூட்டணியில் வெற்றி பெற்றாலும் சிக்கலில் தான் முடியும், மேலும் பெருமான்மையான மக்கள் பாஜகவை எதிர்ப்பதால் கூட்டணி வைத்தும் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்ற முடிவை எடுத்துள்ளாராம். இது ரீதியான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

கூட்டணிக்கு எண்டு கார்டு.. அதிமுக வின் சீக்ரெட்டை உடைத்த பிரேமலதா!! உச்சக்கட்ட பிரஷரில் EPS!!

0

ADMK DMDK: தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைக்காது என்பதை நேற்று நடந்த பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய கருத்தை வைத்து தெரிந்துகொள்ள முடிந்தது. விஜயகாந்த் மறைவிற்கு முன்பிருந்தே அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து வருகின்றனர். அந்த வகையில் இம்முறை எம்பி சீட் தனது மகனுக்கு கிடைத்து விடும் என்ற அபார நம்பிக்கையை பிரேமலதா வைத்திருந்தார். இது ரீதியாக அவர்கள் ஒப்பந்தம் செய்ததாகவும் கூறினார்.

ஆனால் எம்பி சீட் தேர்வின் போது இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக தன் கட்சி சார்ந்த நிர்வாகிகள் இருவரையே தேர்ந்தெடுத்தார். இதனால் அதிருப்தி அடைந்த பிரேமலதா அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்ற முடிவெடுக்க துணிந்து விட்டனர். ஆனால் அதிமுகவிற்கு தேமுதிகவின் வாக்கு வங்கி மிகவும் முக்கியம். அதனால் அடுத்த ஆண்டு கட்டாயம் எம்பி சீட் தருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாறாக இது குறித்து எந்த ஒரு சம்மதத்தையும் தேமுதிக தெரிவிக்கவில்லை. தாங்கள் நடத்தப்போகும் மாநாட்டிற்கு பிறகு தான் கூட்டணி யார் என்பதை அறிவிப்போம் என தெரிவித்துவிட்டனர். ஆனால் நேற்று நடந்த பூத் கமிட்டி கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு பிரேமலதா அளித்த பேட்டியில், வாக்குறுதி கொடுத்து அதை நிறைவேற்றாமல் எடப்பாடி ஏமாற்றிவிட்டார்.

இதுதான் உண்மை. அவர் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் காத்திருந்தோம், அந்த காத்திருந்தமைக்கு எங்கள் முதுகில் சீட் தருவதாக கூறி குத்திவிட்டார். எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் கூட்டணி ஒப்பந்தம் செய்யும்போது எந்த ஒரு தேதியும் குறிப்பிடாமல் கையெழுத்திடுவது தான் வழக்கம். அதேபோல தான் எடப்பாடியும் தேதி குறிப்பிடாமல் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

அதுதான் நாங்கள் ஏமாறுவதற்கு முக்கிய காரணம். அதேபோல எடப்பாடி எதிர்பார்த்து எந்த ஒரு கூட்டமும் கூடவில்லை. அனைத்திற்கும் பணம் கட்டியே கூட்டத்தை அழைப்பதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். இவருடைய பேட்டியின் வாயிலாக தேமுதிக அதிமுக உடனான கூட்டணியை முறித்துக் கொள்ள தயாராகிவிட்டது என்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தை விட்டு வெளியேறும் அண்ணாமலை!! மத்தியிலிருந்து வந்த அதிரடி உத்தரவு!!

0

BJP ADMK: தமிழக பாஜகவில் அண்ணாமலையின் பங்கானது இன்றியமையாதது என்றே கூறலாம். அதுல பாதாளத்தில் இருந்த வாக்கு சதவீதத்தை முன்னுக்கு கொண்டு வந்ததின் முக்கிய பங்கு இவரையே சாரும். அந்த வகையில் கடந்த மக்களவை தேர்தலில் கூட அதிமுகவை பின்னுக்கு தள்ளு பாஜக பல இடங்களில் இரண்டாம் இடம் வகித்ததை பார்க்க முடிந்தது. ஆனால் இவர்கள் தனித்தனியே நின்றால் திமுகவிற்கு எதிரான ஆட்சியை கொண்டுவர முடியாது என்ற காரணத்தினால் மீண்டும் கூட்டணி வைத்துக்கொண்டனர். இதனால் அண்ணாமலை வெளியேற நேரிட்டது.

தமிழகத்தில் எந்த ஒரு பதவியும் கொடுக்காவிட்டாலும் டெல்லி மத்தியில் இவருக்கு மிகப்பெரிய பொறுப்பு காத்திருப்பதாக கமலாலய வட்டாரங்கள் பேசி வந்தனர். அது கூடிய விரைவிலேயே நடைபெற போவதாக கூறுகின்றனர். பாஜகவின் தேசிய தலைவராக தற்போது இருக்கும் ஜே பி நட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்தும் நீட்டித்து வைத்துள்ளனர். இதற்கு முக்கிய பாஜகவுடன் இணைந்து ஆர்எஸ்எஸ் முடிவெடுக்காதது தான்.

ஆனால் தற்போது அடுத்த பாஜக தேசிய தலைவர் யார் என்பதை தேர்வு செய்து விட்டதாகவும், கூடிய விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளனர். அச்சமயத்தில் அண்ணாமலைக்கான பதவி என்ன என்பதும் தெரிய வருமாம். அதாவது தேசிய தலைவரை தாண்டி அதற்கு கீழ் இருக்கும் முக்கிய பொறுப்புகளுக்கு தலைவர்கள் நியமன தரவரிசையில் தயார் நிலையில் வைத்துள்ளார்களாம்.

அதில் அண்ணாமலைக்கு மத்திய பொதுச் செயலாளர் பதவியை ஒதுக்கிருப்பதாக கூறப்படுகிறது. இது ரீதியான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கூறுகின்றனர்.

இந்தியாவின் 2025-26 நிதியாண்டு முதல் காலாண்டு (Q1) வளர்ச்சி! எதிர்பார்ப்புகளை மீறிய உயர்வு

0

இந்தியாவின் GDP 7.8% உயர்வு, எதிர்பார்ப்புகளை மீறி உயர்ந்துள்ளளது.

இந்தியாவின் 2025-26 நிதியாண்டு முதல் காலாண்டு (ஜூன் 30, 2025 முடிவடைந்த காலாண்டு) மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8% வளர்ச்சி கண்டுள்ளது என்று ஆகஸ்ட் 29 அன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான நிபுணர்கள் 6.5%–7% வளர்ச்சியை மட்டுமே கணித்திருந்த நிலையில், இது அனைத்து எதிர்பார்ப்புகளையும் மீறியுள்ளது.

கடந்த ஆண்டு அதே காலாண்டில் 6.5% வளர்ச்சியும், முந்தைய காலாண்டில் (Q4 FY25) 7.4% வளர்ச்சியும் இந்தியா கண்டது.

அரசு அறிக்கை:
“2024-25 முதல் காலாண்டில் 6.5% இருந்த வளர்ச்சி விகிதத்தை விட, 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் உண்மையான GDP 7.8% உயர்ந்துள்ளது” என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • உண்மையான GDP (நிலையான விலை அடிப்படையில்):
    ₹47.89 லட்சம் கோடி (Q1 FY26) vs ₹44.42 லட்சம் கோடி (Q1 FY25)

  • நாமினல் GDP (பணவீக்கம் உட்பட):
    8.8% வளர்ச்சி

GVA (மொத்த மதிப்பு கூட்டல்) வளர்ச்சி:
சேவைத் துறை முன்னேற்றத்தால், உண்மையான GVA வளர்ச்சி விகிதம் 7.6% ஆக உயர்ந்துள்ளது.

  • Q1 FY26: ₹44.64 லட்சம் கோடி

  • Q1 FY25: ₹41.47 லட்சம் கோடி

நாமினல் GVA:

  • Q1 FY26: ₹78.25 லட்சம் கோடி

  • Q1 FY25: ₹71.95 லட்சம் கோடி (8.8% உயர்வு)

துறைகள் வாரியான வளர்ச்சி

  • விவசாயம் மற்றும் இணைந்த துறைகள்: 3.7% (Q1 FY25 இல் 1.5% இருந்தது)

  • இரண்டாம் நிலைத் துறைகள் (உற்பத்தி, கட்டுமானம்):

    • உற்பத்தி – 7.7%

    • கட்டுமானம் – 7.6%

    • சுரங்கம் மற்றும் குவாரி – -3.1%

    • மின்சாரம், எரிவாயு, தண்ணீர் போன்ற உபயோக சேவைகள் – 0.5%

  • மூன்றாம் நிலை (சேவைத் துறை): 9.3% (கடந்த ஆண்டு 6.8%)

செலவுகள் மற்றும் முதலீடுகள்

  • அரசு இறுதி நுகர்வு செலவினம் (GFCE):
    9.7% (Q1 FY26) vs 4.0% (Q1 FY25)

  • தனியார் இறுதி நுகர்வு செலவினம் (PFCE):
    7.0% (Q1 FY26) vs 8.3% (Q1 FY25)

  • மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (GFCF):
    7.8% (Q1 FY26) vs 6.7% (Q1 FY25)

முதலீட்டாளர்களுக்கு பொன்னான வாய்ப்பு: ஜியோ IPO வரவிருப்பதை அறிவித்தார் அம்பானி!!

0

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) நிறுவனம், ஜியோ தனது ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டிற்கான (IPO) திட்டங்களைத் தொடங்கியுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பட்டியலிடப்படுவதை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. RIL நிறுவனத்தின் 48வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் (AGM) அம்பானி பங்குதாரர்களிடம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர், “ஜியோ IPO தாக்கலுக்கான அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. ஒப்புதல்களின் அடிப்படையில், 2026 முதல் பாதியில் பட்டியலிட திட்டமிட்டுள்ளோம்” என்றார். நிதியாண்டு 2025ல் ஜியோவின் வருவாய் ரூ.1,28,218 கோடியாகவும் (17% வளர்ச்சி), EBITDA ரூ.64,170 கோடியாகவும் இருந்தது. ஜியோ ஏற்கனவே 500 மில்லியன் வாடிக்கையாளர்களை கடந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அம்பானி, “ஜியோ உலகளாவிய நிறுவனங்களைப் போல் பெரும் மதிப்பை உருவாக்கும் திறன் கொண்டது. முதலீட்டாளர்களுக்கு இது மிகக் கவர்ச்சிகரமான வாய்ப்பாக இருக்கும்” என்றார்.

ஜியோவின் எதிர்கால திட்டங்கள் ஐந்து வலுவான உறுதிமொழிகளை அடிப்படையாகக் கொண்டவை: ஒவ்வொரு இந்தியரையும் மொபைல் மற்றும் பிராட்பேண்டில் இணைப்பது, ஒவ்வொரு இல்லத்தையும் டிஜிட்டல் சேவைகளால் மேம்படுத்துவது, வணிகங்களை டிஜிட்டல் மயமாக்குவது, AI புரட்சியை முன்னெடுப்பது, மற்றும் சர்வதேச அளவில் விரிவடைவது.

ஆகாஷ் அம்பானி, “ஜியோ ஒரு சுயாதீன நிறுவனமாக உருவெடுப்பதை காண்பது பெருமையும் மகிழ்ச்சியும் தருகிறது” என்று கூறினார்.

மீண்டும் ஆட்சியில் அமரும் திமுக.. எதிர்கட்சியாக உருமாறும் தவெக!! அபாய நிலையில் எடப்பாடி!!

0

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ளது. தி.மு.க  மீண்டும் ஆட்சிக்கு வர கூடாது என்னும் எண்ணத்தோடு  அ.தி.மு.க  செயல்பட்டு வருகிறது. முன்னொரு காலத்தில் ஆட்சியை மாறி மாறி பிடித்த அ.தி.மு.க  மற்றும் தி.மு.க, என்ற நிலை மாறி தற்போது  த.வெ.க மற்றும் தி.மு.க என்ற நிலை உருவாகியுள்ளது.

அ.தி.மு.க மிகவும் சிக்கலான நிலையில் உள்ளது. அ.தி.மு.க -வில் எம்.ஜி.ஆர் ,ஜெயலலிதா இருந்த காலத்தில் ஆட்சியை தன் வசம் வைத்திருந்தனர். தற்போது சற்று நிலை தடுமாறி உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது  அ.தி.மு.க  தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ள நிலையில், அந்த கட்சியில் உட்கட்சி பூசலும் , ஒபிஸ் யின் பிரிவு, பா.ஜ.க உடன் சரியான சமநிலை இல்லாதது போன்றவை அ.தி.மு.க  வை வலுவிலக்க செய்துள்ளது.

இந்நிலை தொடர்ந்தால் அ.தி.மு.க மூன்றாவது இடத்திற்கு பின் தள்ளப்பட வாய்ப்புள்ளது. அது நடந்துவிடக் கூடாது என்பதற்காக தேர்தலில் 150 தொகுதிகளில் வெற்றி பெற திட்டங்களை வகுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அ.தி.மு.க  வின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. செய்தியாளர் சந்திப்பில் தி.மு.க  வை ஆட்சியிலிருந்து விலக்கி தமிழகத்தை காக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த சுற்றுப் பயணம் என்று கூறியிருந்தார். 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு இந்த பிரச்சாரங்கள் வழிவகுக்குமா? கட்சி சந்திக்க போகும் சவால்கள் என்னென்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நடிகர் விஜய் -யின் அரசியல் ஆவேசம்!! திணறும் திராவிட கட்சிகள்!!

0

TVK DMK: 2024  யில் கட்சி தொடங்கிய  நடிகர் விஜய், தற்பொழுது வரை அதற்கான வேலைகளில்  சிறப்பாக செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர். மேலும் அவர் சமீபத்தில் நடத்திய மாநாட்டில் அவரது பேச்சு தொடர்பான சர்ச்சைகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. புதிதாக தொடங்கப்பட்ட கட்சிக்கு இவ்வளவு ஆதரவாளர்களும், தொண்டர்களும், சேர்த்திருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்கு திரையுலகில் மிக பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதனை தக்கவைத்துக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.
அது மட்டுமல்லாமல் புதிய கட்சிக்கு முதல்  மாநாட்டிலேயே அவ்வளவு கூட்டம் வந்தது இதுவே முதல் முறையாகும். விஜய் தனது இரண்டாவது மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை “அங்கிள்” என்று விமர்சித்தது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இது குறித்து நா.த.க வின் தலைவர் சீமான் அவர்கள், முந்தைய மாநாட்டில் சீ.எம் சார் -ஆக இருந்தவர், இரண்டவது மாநாட்டில் எப்படி அங்கிள் ஆனார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் .காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை -யும் அவர் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  விஜய் -யின் அரசியல் மாநாட்டில் தொண்டர் ஒருவர் பவுன்சர்களால்  தாக்கப்பட்டது தொர்பாக  விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பெரும் நகரங்களில் பிரச்சாரம் மேற்க்கொள்ளும் நிலையில்  விஜய் தனது  அரசியல் சுற்றுப்பயணத்தை கிராமப்புறங்களில் மேற்க்கொள்ள போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது அனைவரிடத்திலும் இருந்து தனித்து காணப்படுகிறது.

செப்டம்பர் 7 ஆம் தேதி விஜய் நடைப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இதற்கு ஆளும் கட்சிகளிடம் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது போன்ற முயற்சிகள் தமிழக அரசியலில் தனது இடத்தை வலுவாக அமைப்பதற்கான வீயூகமாக பார்க்கப்படுகிறது. திராவிட கட்சிகளின் எதிர்ப்பை சமாலிப்பதே விஜய்க்கு பெரிய சவாலாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

திடீர் ட்விஸ்ட்: திமுக-வுக்கு துரோகம் செய்யும் காங்கிரஸ்.. விஜய்யுடன் ரகசிய அக்ரிமெண்ட்!!

0

DMK: தி.மு.க உடன் கூட்டணியை அமைத்திருக்கும் காங்கிரஸ், தற்போது தமிழக வெற்றிக் கழகத்துடன்  சேர போவதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ், தி. மு. க. கூட்டணியில் தொடரும் நிலை ஏற்பட்டால் காங்கிரஸ் கட்சி வளராது என்ற கருத்து காங்கிரஸ்  எம்.பி.க்கல் மத்தியில் நிலவி வருகிறது. இதனை ராகுல் காந்தி- யிடம் முன்வைத்துள்ளனர். எதிர்காலத்தில் தமிழக வெற்றிக் கழகம் தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி,  த.வெ.க -உடன் கூட்டணி அமைப்பது நல்லது என்று நினைக்கின்றனர்.

அதனால் ராகுல் காந்தி விஜய்-யை நேரில் சந்தித்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன் வைத்துள்ளனர். இது தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.  தி.மு.க  கூட்டணி தொடர்ந்தால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல்  2025 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு அதிக பட்சம் 25 முதல் 30 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும், அது வெற்றி வாய்ப்புக்கு குறைவான தொகுதிகளாகவே இருக்கும் என்று நினைக்கின்றனர்.

இந்நிலை தொடர்ந்தால் தி. மு. க விற்கு காங்கிரஸ் அடிமையாக இருக்கவேண்டிய நிலை ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. விஜய்-யுடன் கூட்டணி அமைத்தல் காங்கிரசுக்கு குறைந்தபட்சம் 70 தொகுதிகள் வரை வழங்க வாய்ப்புள்ளது  என்றும், அதனோடு சேர்த்து த.வெ.க தேர்தலில் வெற்றி பெற்றால்  ராகுல் காந்திக்கு துணை முதல்வர் பதவியும்  வழங்கப்படலாம்  என்பது  காங்கிரஸ்  எம்.பி.க்- களின் கருத்து. இது தி.மு.க கூட்டணியில் கிடைக்கும் தொகுதிகளை விட அதிகம்.

இது தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறுகின்றனர். இந்த சந்திப்பு த.வெ.க விற்கு ஆழமான அடித்தளத்தை அமைப்பதோடு , தி.மு.க காங்கிரஸ் இடையே பெரிய விரிசலை ஏற்படுத்தலாம். த.வெ. க. தலைவர் விஜய் கூட்டணி அமைக்க தயார் என்ற அறிவிப்பை வெளியிட்டதிலிருந்தே தினமும் அது தொடர்பான சர்ச்சைகள் வந்த வண்ணமாக உள்ளது. இது 2025 தேர்தலில் பெரிய அளவில் மற்றத்தை ஏற்படுத்தலாம்.