Home Blog Page 12

ஜெயலலிதா பாணியை கையிலெடுத்த டிடிவி தினகரன்.. தொகுதியை பிக்ஸ் பண்ண அமமுக!! போட்டி உறுதி!!

0

AMMK: 2026 யில் நடக்க போகும் சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய தேர்தலை விட இம்முறை நடக்கும் தேர்தலில் ஏகப்பட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முறை அதிமுக உடன் பாஜக, தமாகா கூட்டணி அமைத்துள்ள நிலையில், ஆளுங்கட்சியாக உள்ள திமுக உடன், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக போன்ற கட்சிகள் தொடர்ந்து அங்கம் வகித்து வருகின்றன. இவ்வாறான நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின், இபிஎஸ்யின் துரோகத்தை எதிர்த்து கட்சி தொடங்கிய டிடிவி தினகரனின் நிலைப்பாடு என்னவென்றே தெரியவில்லை.

NDA கூட்டணியிலிருந்த இவர் அதிமுக-பாஜக கூட்டணி இணைந்ததாலும், இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்றும் கூறி அந்த கூட்டணியிலிருந்தும் விலகினார். மீண்டும் இவரை NDAவில் சேர்க்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அது கைகூடவில்லை. இதனால் இவர், திமுக அல்லது தவெகவில் இணைய வாய்ப்பிருக்கிறது என்ற கருத்தும் பரவியது. தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் கூட்டணி தொடர்பாக எங்களுடன் பேசி வருகிறார் என்று கூறிய செங்கோட்டையன் இந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதனால் அமமுக-தவெக கூட்டணி உறுதி அனைவரும் கூறி வந்தனர். இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், எங்களுக்கு ஆண்டிபட்டி தான் புனித பூமியாக திகழ்கிறது. ஆண்டிபட்டியில் போட்டியிட்டு நான் வெற்றி பெற்றேன். எனவே அந்த தொகுதியில் போட்டியிட சீட் கொடுத்தால் அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பேன். இல்லையென்றால் தனித்து நிற்பேன் என்று கூறியுள்ளார். 2002, 20026 தேர்தலில் ஜெயலலிதாவும், 1984 தேர்தலில் எம்ஜிஆர்-யும் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தினகரனும் இந்த தொகுதியை கைப்பற்ற நினைக்கிறார். இதனால் இவரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதிமுக களமிறக்கிய 10 பேர் கொண்ட குழு.. திமுகவை ஓவர் டேக் பண்ண இபிஎஸ் போட்ட மாஸ்டர் பிளான்!!

0

ADMK DMK: கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக இந்த முறையாவது வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமர வேண்டுமென பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. இதற்காக முதலாவதாக தேசிய கட்சியான பாஜகவுடன் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதனை கவனத்தில் கொள்ளாமல் அக்கட்சியுடன் ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டது. மேலும் பாஜக உடன் இணைந்து மூன்றாம் நிலை கட்சிகளான பாமக, தேமுதிக, தவெக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இது மட்டுமல்லாமல், மக்களை சந்திக்கும் பணிகளையும் மேற்கொண்டு வரும் இபிஎஸ் பாதியளவு தொகுதிகளில் மக்களை சந்திப்பை முடித்து விட்டார். மீதமிருக்கும் தொகுதிகளில் பாஜக மாநில தலைவர் நயினார் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் அதிமுக தற்போது புதிதாக 10 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவில், முன்னாள் அமைச்சர்களான அதிமுக துணை பொது செயலாளர் நத்தம் இரா. விஸ்வநாதன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் சி.பொன்னையன், தேர்தல் பிரிவு செயலாளர் வி.ஜெயராமன், அமைப்பு செயலாளர்கள் டி.ஜெயக்குமார், விழுப்புரம் மாவட்ட செயலாளர் சி.வி. சண்முகம் எம்பி, முன்னாள் அமைச்சர் செ.செம்மலை, மகளிரணி செயலாளர் பா.வளர்மதி, அமைப்பு செயலாளர் ஓ.எஸ். மணியன், ஆர்.பி உதயகுமார். எஸ்.எஸ் மணியன் போன்றோர் அங்கம் வகித்து உள்ளனர்.

இந்த குழு தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதை தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதற்கான வேலைகளில் ஈடுபடுவார்கள். ஆளுங்கட்சியாக உள்ள திமுக தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக கனிமொழி எம்.பி தலைமையில் ஒரு குழு அமைத்துள்ள நிலையில் அதனை பின்னுக்கு தள்ள எடப்பாடி பழனிசாமியும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். 

செங்கோட்டையன் போட்ட பக்கா ஸ்கெட்ச்.. தவெக வலையில் விழுந்த அதிமுக கூட்டணி கட்சி!!

0

ADMK TVK TMMK: 2021 தேர்தலை காட்டிலும் 2026 சட்டமன்ற தேர்தல் பல்வேறு திருப்பங்களை எதிர்கொண்டு வருகிறது. அதில் முதலாவது விஜய்யின் அரசியல் பிரவேசம் என்றே கூறலாம். விஜய் கட்சி தொடங்கி சுமார் ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் அதற்கான ஆதரவு யாரும் எதிர்பார்த்திராத அளவு உள்ளது. ஆதரவு அதிகம் இருந்தாலும், விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் அரசியல் அனுபவம் இல்லை என்ற விமர்சனம் அனைவராலும் முன்வைக்கப்பட்டது.

இதனை முறியடிக்கும் வகையில் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த நபரான செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின், தவெகவில் இணைந்து விஜய்க்கு பலத்தை கூட்டினார். இவர் கட்சியில் இணைந்த கையுடன் இன்னும் சில முக்கிய அமைச்சர்கள் தவெகவில் சேர உள்ளனர். அதற்கான பணிகளை நானே மேற்கொள்வேன் என்று கூறி பரபரப்பை கிளப்பினார். இவ்வாறான நிலையில் தான் அதிமுகவுடன் பாஜக, தமாகா தவிர வேறு எந்த கட்சியும் கூட்டணி சேராத காரணத்தினால் இபிஎஸ் மிகவும் அதிருப்தியில் இருந்ததாக அதிமுகவினர் கூறி வந்தனர்.

இந்த சமயத்தில் ஜான் பாண்டியனும் தமமுக கட்சி, அதிமுகவில் தொடருமா, தொடராதா என்பதை பற்றி உறுதியாக சொல்ல முடியாது என்று கூறி இபிஎஸ்க்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறார். இதுவே இவர் அதிமுகவிலிருந்து விலகுவதற்கான அறிகுறியாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் இபிஎஸ் மேல் அதிருப்தியில் உள்ள இவருடன் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக இபிஎஸ் உடன் கருத்து வேறுபாட்டில் உள்ள ஜான் பாண்டியன் தவெகவில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் யூகிக்கின்றனர்.

நீ தான் தைரியமான ஆளாச்சே சொல்லு.. பாஜக மூலம் விஜயை வம்பிழுத்த திமுக கூட்டணி கட்சி!!

0

TVK COMMUNIST BJP: நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியாக மாற்றி, இக்கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்ததிலிருந்தே இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் கூறிய விஜய் தற்போது வரை இதில் உறுதியாக உள்ளார். ஆனால் திமுகவை விமர்சிக்கும் அளவிற்கு பாஜகவை விஜய் விமர்சிப்பது இல்லையென்ற கருத்தும் மேலோங்கி இருக்கிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், விஜய் தனது பிரச்சாரம், அறிவிப்புகள் என அனைத்திலும் திமுகவை மட்டுமே கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜகவை மத்திய அரசு என்றும், மறைமுகமாகவும் விமர்சிப்பதை விஜய் வழக்கமாக வைத்திருக்கிறார். இதன் காரணமாக விஜய் பாஜகவின் பி டீம் என்றும் அழைக்கப்பட்டார். இந்நிலையில் கரூர் சம்பவத்திற்கு பிறகு, தவெக ஈரோட்டில் நடத்திய பரப்புரையில் பேசிய விஜய், திமுக ஒரு தீய சக்தி என்று பலமுறை கூறியிருந்தார். ஆனால் பாஜகவை விமர்சிப்பதற்கு நேரமில்லை. எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது என்று மறைமுகமாக கூறியிருந்தார்.

இவ்வாறான சூழலில், திமுக கூட்டணியில் இருக்கும், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், பாஜக தான் உண்மையான தீய சக்தி. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க நினைக்கும் பாஜகவை தீய சக்தி என்று சொல்ல விஜய்க்கு தைரியம் உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனை சொல்வதற்கு தயங்கும் விஜய் மத ரீதியான அரசியலை ஆதரிக்கிறார் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து தவெக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்காத அண்ணாமலை.. நைசாக நழுவி சென்றதால் பரபரப்பு!! உறைந்து போன டெல்லி மேலிடம்!!

0

DMDK BJP: பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி அடுத்த கட்டமாக தமிழக சட்டமன்ற தேர்தலை நோக்கி திரும்பியுள்ளது. பாஜகவிற்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத காரணத்தினால், அது அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறது. அதிமுக, பாஜக உடன் கூட்டணி அமைப்பதற்கு முன்பு ஒரு சில நிபந்தனைகளை முன்வைத்தது. அதில் ஒன்று தான் இபிஎஸ்க்கு எதிராக இருந்த அண்ணாமலை பதவியை பறிக்க வேண்டும் என்பது. அதன் அடிப்படையில் அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்டு, தேசிய அளவில் அவருக்கு பொறுப்பு வழங்கப்படுவதாக பேச்சுக்கள் எழுந்தது.

ஆனால் தற்போது வரை அதற்கான நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் அண்ணாமலை பாஜக விவகாரங்களிலிருந்து சற்று ஒதுங்கியே இருந்தார். இவ்வாறான நிலையில் 23 ஆம் தேதி தமிழக வந்த பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், இபிஎஸ்யிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் தேமுதிகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக தகவல் வந்தது. இதனை அறவே மறுத்த பிரேமலதா, இந்த செய்தியை வெளியிட்ட கட்சிக்கும், ஆலோசனையில் ஈடுபட்ட கட்சிக்கும் அழிவு காலம் வந்து விட்டது என்று கூறியிருந்தார். இவர் இவ்வாறு கூறியது, பாஜக, அதிமுகவை தான் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

இந்த சமயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் பிரேமலதாவின் கருத்து குறித்து கேட்ட போது, இந்த புகாருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. இதை யாரிடம் சொன்னார்களோ அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார். பிரேமலதா பாஜகவை தான் கூறியுள்ளார் என்பது வெளிப்படையாக தெரிந்தும் கூட அண்ணாமலை அதற்கு மாறாக எந்த கருத்தும் கூறாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அண்ணாமலை பாஜக மேல் அதிருப்தியில் உள்ளார் என்பது நிரூபணமாகியுள்ளது.

பிடி கொடுக்காத ஜான்பாண்டியன்.. ஸ்டன் ஆன இபிஎஸ்!! ரெட் சிக்னல் காட்டிய தமமுக!!

0

ADMK TMMK: அடுத்த 4 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான பணிகளும், கூட்டணி கணக்குகளையும், வெற்றி வியூகங்களையும் அனைத்து கட்சிகளும் வகுத்து வரும் வேளையில் பல்வேறு திருப்பங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், விஜய்யின் அரசியல் எழுச்சி, அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள், பாமகவில் ஏற்பட்டுள்ள தந்தை, மகன் பிரச்சனை போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த காலகட்டத்தில் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும், கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தனித்து நின்று ஆட்சியை பிடிக்க முடியாது.

இதனால் அதிமுக, திமுக, தவெக, தேசிய கட்சிகள் என அனைத்தும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. வழக்கம் போல நாதக தனித்து நின்று களம் காண போகிறது. இந்நிலையில், அதிமுக பாஜக, தமாகா உடன் மட்டுமே கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில் அடுத்ததாக பாமக, தேமுதிக போன்ற கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த இக்கட்டான சூழலில், ஜான் பாண்டியன் கட்சியான தமமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து சற்று விலகியே இருந்தது.

இதனால் தமமுக திமுக, பாஜக போன்ற கட்சியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பாஜக கூட்டணியில் இணைய ஜான் பாண்டியனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், பாஜகவோ அதிமுக உடன் கூட்டணியில் உள்ளது. இவ்வாறான நிலையில் அதிமுக கூட்டணியில் எங்கள் கட்சி தொடருமா இல்லையா என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்று ஜான்பாண்டியன் கூறியுள்ளார். இதன் காரணமாக ஜான் பாண்டியன் கூடிய விரைவில் அதிமுகவிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் OK சொல்லிட்டாரு.. முடிவு எடுக்க வேண்டியது ஓபிஎஸ் தான்!! போட்டுடைத்த செங்கோட்டையன்!!

0

TVK: தற்போது எல்லா ஊடகத்திலும் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்த செய்தி தான் பரவலாக பேசப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றதிலிருந்தே தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால் இதில் வெற்றி பெற தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஆனால் அக்கட்சியில் ஏற்பட்டுள்ள பிரிவுகளினால் அதிமுகவின் வாக்கு வங்கியில் மாற்றம் ஏற்படும் கணிக்கப்படுகிறது. அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் கொங்கு மண்டலத்தின் முக்கிய தலைகள் என்பதால், அங்கு அதிமுகவின் வாக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சசிகலாவிற்கு கிரீன் சிக்னல் காட்டிய இபிஎஸ், தினகரன், ஓபிஎஸ்யை கிடப்பிலேயே வைத்துள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்து தீவிரமாக பணியாற்றி வருகிறார். இவ்வாறு நான்கு திசையில் செயல்படும் இவர்களை, ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கையை 24 ஆம் தேதிக்குள் எடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ், எடப்பாடிக்கு கெடு விதித்திருந்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அதிருப்தியடைந்த ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அதிகமானோர் விஜய் கூட்டணியில் இணைய வலியுறுத்தியதாக தகவல் கசிந்தது.

இதனை தவெகவின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனும் செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து பேசிய செங்கோட்டையன், ஓபிஎஸ் மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானோர் தவெக-வில் இணைய வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளனர். இறுதி முடிவை ஓ.பன்னீர் செல்வமே எடுப்பார். கூட்டணி குறித்து தலைமை என்ன முடிவு செய்கிறதோ, அதையே நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து ஓபிஎஸ் கூட்டணிக்கு வர விஜய் சம்மதம் தெரிவித்து விட்டார் என்பதையும், ஓபிஎஸ் சில நிபந்தனைகள் காரணமாக தவெகவில் சேர்வதற்கான முடிவை ஒத்தி வைத்துள்ளார் என்பதையும் காட்டுகிறது. 

ரூட்டை மாற்றிய தேமுதிக.. ஓப்பனாக உடைத்து பேசிய பிரேமலதா!! ஹேப்பி மோடில் தளபதி!!

0

DMDK TVK: 2026யில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும், சிறிய கட்சிகள், திராவிட கட்சிகள், புதிய கட்சிகள் என அனைவரும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தான் கூட்டணி குறித்த பேச்சுகளும் வேகமெடுத்துள்ளது. அந்த வகையில் திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் பாமக, தேமுதிக போன்ற மூன்றாம் நிலை கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நடிகர் விஜய்யின் தவெகவும் விசிக, தேமுதிக, பாமக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பாமகவின் ஒரு பகுதி அதிமுக பக்கமும், மற்றொரு பகுதி திமுக பக்கமும் இருக்கும் நிலையில் தேமுதிகவின் நிலைப்பாடு என்னவென்றே தெரியவில்லை. ஜனவரி மாதம் கடலூரில் நடக்கும் மாநாட்டில் கூட்டணியை அறிவிப்பதாக பிரேமலதா கூறியுள்ளார். இந்நிலையில் தமிழக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் உடன் நடத்திய ஆலோசனையில் தேமுதிகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவியது. இதனால் ஆத்திரமடைந்த பிரேமலதா நாங்கள் இன்னும் கூட்டணியை அறிவிக்கவே இல்லை. இது போன்ற வதந்திகளை பரப்பும் கட்சிக்கு அழிவு காலம் தான் ஏற்படும் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதன் காரணமாக இவர் அதிமுக கூட்டணியை புறக்கணித்ததாகவே பார்க்கப்படுகிறது. எனவே விஜய் கட்சிக்கு ஆதரவு அதிகம் இருப்பதால் அவரது கூட்டணியில் இணையலாம் என்று தேதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பிரேமலதாவிற்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், விஜய் ஆட்சியில் பங்கு தருவதாக கூறியதால் பிரேமலதாவும் இதற்கு தலையசைத்ததாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக தேமுதிக-தவெக கூட்டணி உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சட்டமன்ற தேர்தலை ஓரங்கட்டுங்க.. ஷாக் கொடுத்த அண்ணாமலை!! ஆடிப்போன டெல்லி மேலிடம்!!

0

BJP: இன்னும் 4 மாதங்களில் தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக மும்முரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக, இன்னும் சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகிறது. மேலும் அதிமுகவிடம் அதிக தொகுதிகளையும், ஆட்சி பங்கையும் கேட்டு வருகிறது.

இவ்வாறான நிலையில் அதிமுக-பாஜக கூட்டணியினால் தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் இவர் கட்சி விவகாரங்களிலிருந்து சற்று விலகியே இருந்தார். டிடிவி தினகரன் NDA கூட்டணியிலிருந்து விலகிய சமயத்தில் தான், அவரை சமாதானம் செய்வதற்காக கட்சி செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். பாஜகவிற்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லாமல் இருந்தாலும், அண்ணாமலையின் வருகையால் அக்கட்சி ஊடக வெளிச்சத்தில் இருந்தது. இவரால் தான் பாஜக தமிழகத்தில் ஓரளவிற்கு பேசப்பட்டது என்றே கூறலாம். இப்படி இருந்த சமயத்தில் இவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது பாஜகவிற்கு பெரும் பின்னடைவாகவே கருதப்பட்டது. 

இந்த இக்கட்டான நிலையில் தமிழக தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பிய போது, டெல்லி ரொம்ப தூரத்தில் உள்ளது என்று ஹிந்தியில் பதிலளித்துள்ளார். இவரின் இந்த பதில் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்பதையே குறிக்கிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். அண்ணாமலைக்கு தமிழகத்தில் ஆதரவு இருக்கும் பட்சத்தில் அவர் தேர்தலில் போட்டியிட்டால், பாஜகவிற்கு அது வாக்கு வங்கியில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் இவர் போட்டியிட மாட்டேன் என்று மறைமுகமாக கூறியது பாஜகவிற்கு பாதகத்தை ஏற்படுத்த கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராமதாஸுக்கு விழுந்த பலத்த அடி.. அன்புமணியின் அதிரடி ஆக்சன்!! கையில் எடுத்த புதிய வியூகம்!!

0

PMK: அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் வெற்றி வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்த சமயத்தில் தான் பாமகவில் தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்டுள்ள தலைமை பிரச்சனை உச்சத்தை எட்டியுள்ளது. இந்த மோதல் போக்கு டெல்லி உயர் நீதிமன்றம் வரை செல்ல, பாமகவில் உட்கட்சி மோதல் இருப்பதால் தேர்தல் சமயத்தில் வேட்புமனுவில் யார் கையெழுத்திடுவது என்ற பிரச்சனை வரும் அதனால், பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படுவதாக உத்தரவிட்டது.

மேலும் அன்புமணி தான் தலைவர் என்று தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பை நீதிமன்றம் மறுக்காததால் அன்புமணியே தலைவராக தொடர்ந்து வருகிறார். தந்தை மகன் மோதலுக்கு மூலக் காரணமாக இருந்தது ராமதாஸின் வலதுகரமாக அறியப்பட்ட ஜி.கே. மணியின் மகனான தமிழ்குமரனை கட்சியின் இளைரணி தலைவர் பதவியில் அமர்த்தியது தான். இதில் தொடங்கிய கருத்து வேறுபாடு, ராமதாஸின் பேரன் முகுந்தனை இளைரணி தலைவர் பதவியில் அமர்த்திய போதும் தொடர்ந்த்து.

இதனையும் அன்புமணி விரும்பாததால் இந்த மோதல் போக்கு நீண்டு கொண்டே சென்றது. இந்நிலையில் கட்சியின் மூத்த தலைவர்கள் ராமதாஸ் பக்கமும், இளைய தலைமுறையினர் அன்புமணி பக்கமும் ஆதரவு தெரிவித்து வந்தனர். மேலும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை கூறி வந்த சமயத்தில், பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டு வருவதால், கட்சியின் அமைப்பு விதிப்படி ஏன் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்ககூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்கும் படி ஜி. கே மணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இவரின் கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஜி.கே மணி எந்த விளக்கமும் அளிக்காததால் இவர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவதாக கட்சி தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். இவரின் இந்த நீக்கம் ராமதாசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து ராமதாஸ் பக்கம் இருக்கும் முக்கிய முகங்கள் பலரையும் கட்சியிலிருந்து நீக்கும் பணியை அன்புமணி மேற்கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம் ராமதாஸ் பலவீனமடைந்து, பாமக தம்முடைய கட்டுப்பாட்டில் வந்து விடும் என்று அன்புமணி நினைப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.