ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 24, 2025
Home Blog Page 12

அஜித்குமார் லாக்கப் மரணம்.. வெளியான மற்றொரு வீடியோ!! வசமாக சிக்கிய திமுக!!

0

DMK: திருபுவனம் மடப்புரம் கோவிலுக்கு வந்திருந்த நிகிதா தனது நகையை காவலாளி அஜித் குமார் திருடியதாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட அஜித் குமார் போலீசாரால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அஜித் குமாரை தாக்கிய வீடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் விசாரணையை தொடரவே, முதலில் அஜித்குமார் நகையை திருடவில்லை என்றும் அவரது நண்பர்கள் தான் திருடினார்கள் என்று பலவித கோணங்களில் திருப்பம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் காரில் நகை இருந்ததா என்று கேள்வியும் எழுந்தது?? இப்படி இருக்கவே எதிர் கட்சியினரின் தொடர் போராட்டம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் காவல்துறையை கட்டுப்பாட்டில் வைக்காத திமுக ஆட்சி குறித்தும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். அதிலிருந்து அவர்கள் பெயரை காப்பாற்றிக் கொள்ள அஜித் குமார் இறந்த போது அவரது தாயாரிடம் திமுக நிர்வாகிகள் மற்றும் போலீசார் உள்ளிட்டோர் பேரம் பேசியதாக புகார் கொடுக்கப்பட்டது.

 

இந்த புகார் ரீதியாக நீதிமன்றமும் விசாரணை செய்தது. இப்படி இருக்கையில் தற்போது அஜித் குமார் உடலை வாங்குமாறு திமுக நிர்வாகிகள் மற்றும் போலீசார் பேரம் பேசிய வீடியோவானது தற்போது வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட மாற்று கட்சியினர் அழுத்தம் கொடுத்து சிபிசிஐடிக்கு இந்த வழக்கை மாற்றவில்லை என்றால் கட்டாயம் மற்ற லாக்கப் மரணம் போல் இதுவும் நீர்த்துப் போகத்தான் செய்திருக்கும்.

வாக்குறுதியை நிறைவேற்ற வக்கில்லாத திமுக.. ஒரேயடியாக ஆப்படிக்கும் அரசு ஊழியர்கள்!! பிரஷரில் ஸ்டாலின்!!

0

DMK: திமுக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு மேலும் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்துதல் என்று ஏழு அம்ச கோரிக்கைகளை கூறியிருந்தது. ஆனால் அதில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. இதனை கண்டித்து நேற்று சென்னையில் பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் போராட்டம் நடத்தினர். தங்களுக்குரிய எந்த ஒரு அறிவிப்பையும் நிறைவேற்றாததால் கொந்தளிப்பில் இருந்தனர்.

இதே போல தான் பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் சங்கம் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. அதிலும் கடந்த மார்ச் மாதம் இது ரீதியாக உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது. இந்த போராட்டத்தை ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு தலைமை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களது மனக் குமுறல்களை தெரிவித்திருந்தனர்.

அதிலும் குறிப்பாக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு எதற்கு இன்றும் கேள்வி எழுப்பியிருந்தனர். அந்தப் போராட்டத்தில் கட்டாயம் திமுக 2026 யில் ஏமாற்றத்தை அடையும் என்றும் கூறியிருந்தனர். இதனால் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக திமுகவிற்கு எதிராகவே கொடி பிடிக்க போகின்றனர். கடந்த முறையை இவர்களின் வாக்குகளை தக்க வைத்துக்கொள்ள தற்சமய சமாதான அறிக்கைகளை வெளியிட்டு ஆட்சியை கைப்பற்றி விட்டது.

அதை வைத்து இத்தனை காலமும் கடந்துவிட்டனர். ஆனால் இம்முறை அரசு ஊழியர்கள் கடும் கோபத்தில் உள்ளதால் திமுக வுக்கு எதிராக தான் அவர்களது வாக்குகள் இருக்கும்.

அன்புமணியிடம் சமாதன தூது சென்ற தாய்.. சந்தோஷப்பட்ட ராமதாஸ்!! ஒன்றினையும் பாமக!!

0

PMK: பாமக கட்சிக்குள் தொடர் மோதல் போக்கானது தலைமை பதவிக்காக இருந்து வருகிறது. அதிலும், அப்பா நான் தான் தலைவர் என்று ஒரு பக்கம் அறிக்கை வெளியிட்டும், மறுபக்கம் மகன் நான் தான் தலைவர் என கூறி வருகிறார். அதிலும் கட்சிக்குள்ளேயே இரு அணிகளாக பிரிந்து நிர்வாகிகளை நியமனமும் செய்கின்றனர். இதனால் யார் யார் முக்கிய பொறுப்புகளுக்கு தலைவர் என்பதிலேயே குழப்பம் எழுந்துள்ளது. இந்த மோதல் போக்கால் இவர்களின் கட்சி மதிப்பானது மாற்று கட்சியினரிடம் குறைந்து கொண்டே போகிறது.

வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் கூட தேவையான சீட்டுகளை இதனால் கேட்டுக் கூட வாங்க முடியாது. அதிலும், இவர்களுக்குள் நடக்கும் சண்டையை ஊடகம் வரை கொண்டு வந்ததே மிகப்பெரிய அவமதிப்பு. இந்த சண்டையானது முற்றுப்புளியின்றி செல்வதால் இரண்டு அணிகளாக பிரியக் கூடும் என கூறிவந்தனர். ஆனால் ராமதாஸ் மனைவி சரஸ்வதி, அன்புமணியை பார்ப்பதற்காக அவரது இல்லத்திற்கே சென்றுள்ளார். அதுமட்டுமின்றி தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக அன்புமணியிடம் கலந்துரையாடியுள்ளார்.

மற்றொரு பக்கம் அன்புமணி கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளையும் புறக்கணித்து கௌரவ தலைவர் ஜிகே மணி தற்போது திருமண நிகழ்ச்சி ஒன்றில் அவருடன் கைகோர்த்து பேசியுள்ளார். இது ரீதியாக ராமதாஸிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன். மகன் தாய் சந்திப்பெல்லாம் மிகவும் சாதாரணமான ஒன்று. மேற்கொண்டு ஜிகே மணி பேசியது குறித்து நான் கேட்டு சொல்கிறேன்.

மேலும் செய்தியாளர்கள், தொடர்ந்து பாமகவில் உட்கட்சி மோதல் அதிகரித்துக் கொண்டு இருப்பதாக கூறியதற்கு, அரசியல் கட்சி என்றாலே மோதல் போக்கு இருக்க தான் செய்யும். நாளடைவில் அது சரியாகிவிடும் எனக் கூறி, காத்திருப்போம் காத்திருப்போம் காலங்கள் வரும் என்று பாட்டு பாடியுள்ளார். இவரது மனைவி அன்புமணியை காண சென்றது சமாதானம் செய்ய தான் என அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றனர்.

மீட்டரையே சூடேற்றும் கரண்ட் பில்.. கட்டமுடியவில்லை!! திரௌபதி இயக்குனர் புலம்பல்!!

0

DMK: தமிழகத்தில் தற்போதைய திமுக ஆட்சியானது மிகவும் பின்னோக்கி நிலையில் உள்ளது. ஏனென்றால் கொலை கொள்ளை வழக்குகள் அதிகரித்ததுடன் பொருளாதார ரீதியான விலைவாசியும் உயர்ந்துவிட்டது. விளம்பரத்திற்காக சில திட்டங்களை கொண்டு வந்து விட்டு அதனையை வைத்து படம் காட்டி வருகின்றனர். ஆனால் இம்முறை இவர்கள் ஆட்சி மீது மக்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளதை நேரடியாகவே பார்க்க முடிகிறது.

குறிப்பாக மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். இது ரீதியாக தனியார் ஊடகங்கள் பொது மக்களிடம் கேட்கையில், கடந்த முறை நாங்கள் இரண்டாயிரத்திற்குள்ள தான் மின் கட்டணத்தை கட்டினோம். தற்போது பத்தாயிரம் 12 ஆயிரம் என்று வருகிறது. அதிலும் ஒரு சிலர் பென்ஷனே 4000 ஆயிரம் தான் ஆனால் கரண்ட் பில் 8000 எப்படி சமாளிப்பது என்றும் கேட்டுள்ளனர். இதற்கு மின்கட்டணம் உயர்வுதான் காரணம் எனக் கூறி பேட்டியளித்துள்ளனர். இதனை பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, பகாசூரன்  உள்ளிட்ட படங்களை எடுத்த இயக்குனர் மோகன் ஜி, அதன் வீடியோவை பதிவிட்டு அவரும் தனது ரீதியான புலம்பலை தெரிவித்துள்ளார்.

எங்கள் வீட்டுக்கும் நாங்கள் மூன்றாயிரம் ரூபாய் தான் கரண்ட் பில் கட்டி வந்தோம். தற்போது பத்தாயிரத்திற்கும் தவறாமல் கட்டி வருவதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு மோகன் ஜி, திமுக ஆட்சி வந்ததால் தான் இப்படி விலைவாசி ஏறி விட்டதென தனது ட்விட்டர் பக்கத்தில் பொதுமக்கள் அளித்த பேட்டியை வைத்து சூசகமாக கூறியுள்ளார்.

உணவு இடைவேளையை தடுத்து நிறுத்திய முதலாளிக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய மேலாளர்!!

0

மதிய உணவு இடைவேளை எடுக்க விடாமல் தடுத்த தனது முதலாளிக்கு ஒரு ஊழியர் அளித்த வெளிப்படையான பதில் Reddit பயனர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மேலாளர் ஒருவருக்கு மதிய உணவு இடைவேளை மறுக்கப்பட்டது பற்றிய ரெடிட் பதிவும் , அந்த ஊழியர் தனது முதலாளிக்கு அளித்த பதிலானது பெரும்  விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலாளரின் அறிவுறுத்தலுக்கு அந்த தொழிலாளி அளித்த வெளிப்படையான பதில் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

“மதிய உணவு இடைவேளையை நிறுத்திவிட்டேன்,” என்று ஒரு ரெடிட் பயனர் எழுதினார், அந்த சம்பவம் அவர்களின் நண்பருடன் நடந்தது என்று கூறினார்.

“என் நண்பர் ஒரு நடுத்தர நிறுவனத்தில் பணிபுரிகிறார், இன்று அவர் மதிய உணவு இடைவேளைக்குச் சென்று கொண்டிருந்தார், எப்படியோ அவரது மேலாளர் முதலில் தனது வேலையை முடிக்கவும், பின்னர் மதிய உணவு இடைவேளைக்குச் செல்லவும் என உத்தரவிட்டார், ஆனால் அவர் மிகவும் பசியுடன் இருந்தார், பசியால் துடித்தார், அவரது மேலாளர் அவருக்கு மதிய உணவு இடைவேளையை மறுத்தபோது, அவர் கோபமடைந்ததாக ரெடிட் பயனர் எழுதினார்.

மேலாளரின் வேண்டுகோளுக்குப் பதிலளிக்கும் விதமாக, பணியாளர், “கானே கே லியே ஹாய் தோ காமா ரஹா ஹு, அவுர் யஹான் ஆப் முஜே கானா கானே சே ஹி ரோக் ரஹே ஹோ (நான் உணவு உண்பதற்காக சம்பாதிக்கிறேன், இங்கே நீங்கள் சாப்பிடுவதைத் தடுக்கிறீர்கள்)” என்று பதிலளித்ததாக அந்த நபர் கூறினார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மேலாளர் பணியாளரைப் புறக்கணிக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

சமூக ஊடகங்கள் இது ரீதியாக கருத்து தெரிவித்தது,

மேலாளருக்கு புரியும் படி பணியாளர் செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல், அந்த மேலாளர் வேறு யாரிடமும் அதே விஷயத்தைச் சொல்வதற்கு முன்பு இருமுறை யோசிப்பார்” என்று குறிப்பிட்டார்.

இன்னொருவர் நினைவு கூர்ந்தார், “எனது தற்போதைய நிறுவனத்தில் மட்டுமே இது நடந்தது, ஆனால் அது வேறு விதமாக இருந்தது. எனது மேலாளர் போன் செய்து, முதலில் அதை அனுப்பிவிட்டு பின்னர் சாப்பிடுவது முக்கியம் என்று கூறினார். நான் சாப்பிடும் நேரத்தில் இருந்தேன், ஆனால் நான் சென்று பணியை முடிக்க வேண்டியிருந்தது. நான் என் உணவை நடுவில் விட்டுவிட்டேன், நான் வீட்டிற்கு வந்ததும், ஒரு குழந்தையைப் போல அழுதேன். பின்னர் என் அம்மா, ‘பேட்டா கானே கே லியே ஹி காமா ரி ஹை அண்ட் கானே பி நி தேரே தோ ஈஸ் கைசே சலேகா’ என்று கூறினார், பின்னர் நான் என் மேலாளருக்கு புத்திசாலித்தனமாக பதிலளிக்க ஆரம்பித்தேன்.”

மூன்றாமவர், “உங்கள் நண்பர் ஒரு துணிச்சலான மனிதர். சில வருடங்களுக்கு முன்பு, நானும் இதேபோன்ற சூழ்நிலையில் இருந்தேன். எனக்காக நிற்க முடியாமல் போனதற்கும், என் மேலாளர் என்னை மோசமானவராக நடத்த அனுமதித்ததற்கும் நான் இன்னும் வருந்துகிறேன்!” என்று கூறினார்.

நான்காவது ஒருவர் எழுதினார், “அவர் சரியானதைச் செய்தார், ஆனால் நிச்சயமாக மேலாளர் அவர் மீது வெறுப்பைக் கொண்டிருந்தார். அவர்கள் இந்த விஷயங்களை நினைவில் வைத்து சரியான நேரத்தில் பயன்படுத்துகிறார்கள்.”

எடப்பாடி கோட்டையில் கருணாநிதி சிலைக்கு நேர்ந்த விபரீதம்.. சேலத்தில் தொடர் பரபரப்பு!!

சேலம் மாவட்டத்தில் நான்கு ரோடு பகுதிக்கு அருகில் அண்ணா பூங்கா உள்ளது. அங்கு மறைந்த முதல்வர் கருணாநிதியின் திருவருள் சிலையானது வைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு வருடங்களுக்கு முன்பு 75 ரூபாய் செலவில் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சிலை மீது மர்ம நபர்கள் கருப்பு மை ஊற்றி சென்றுள்ளனர். இதனால் அச் சுற்று வட்டார பகுதியில் பரப்பரப்பாக காணப்படுகிறது.

இது ரீதியாக போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். தற்சமயம் திமுக ஆட்சி மீது தொடர் அதிருப்தியில் பொதுமக்கள் உள்ளனர். தொடர்ந்து கொலை கொள்ளை வழக்கு அதிகரித்திருப்பதால் இந்நிலை உண்டாகியுள்ளது. மேலும் சேலம் மாவட்டமானது எடப்பாடியின் கோட்டை என்பதால் இந்த வேலையை அவர் ஆதரவாளர்கள் யாரேனும் செய்திருப்பாளர்களா என்று சந்தேகப்படுகின்றனர். இது ரீதியாக திமுக மேலிடத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுக ஆட்சி மீது மக்கள் பெரிதான பிடிப்பு இல்லை என்பதும் அப்பட்டமாக தெரிகிறது. தற்போது சேலம் மாவட்டத்தில் கருணாநிதி சிலை மீது கருப்பு மை போட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கணவனுடன் உள்ள கள்ள உறவை விட்டுவிட கெஞ்சிய மனைவி! கடைசியில் நடந்தது என்ன தெரியுமா?

கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்த 43 வயதான நபர் ஒரு தனியார் கார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்திற்கு வேலை செய்கிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை இவர்களின் குடும்ப வாழ்க்கை சிறப்பாகவே சென்றுள்ளது.

 

இந்நிலையில் அந்த கணவருக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அந்த பழக்கம் அதிகமாகி கள்ளக்காதலில் முடிந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாச உறவில் ஈடுபட்டுள்ளனர். இந்த கள்ள காதல் சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த தனியார் நிறுவன ஊழியரின் மனைவிக்கும் தெரிந்து விட்டது.

 

இந்த கள்ளக்காதலை தயவுசெய்து விட்டுவிடுங்கள் என்று தனது கணவரிடம் கெஞ்சி கேட்டுள்ளார். ஆனால் கணவர் இந்த கள்ளத்தொடர்பை விடுவதாக தெரியவில்லை. இந்நிலையில் அந்த பெண் தனது கணவரின் கள்ளக்காதலிக்கு போன் செய்து உங்களிடம் பேச வேண்டும் என்று அழைத்துள்ளார். அந்த பெண்ணும் இவரை சந்திக்க சென்றுள்ளார். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள், தயவு செய்து என் கணவரை விட்டு விடு என்று காலில் விழாத குறையாக அந்த பெண் கணவனின் கள்ள காதலியிடம் கெஞ்சியுள்ளார்.

 

சரி இனி உங்கள் விசயத்தில் தலையிட மாட்டேன் என்று பாசாங்கு செய்வதை போல சொல்லிவிட்டு அந்த பெண் சென்றுவிட்டார். இந்த சம்பவம் நடந்து இரண்டே நாட்களில் அந்த பெண்ணின் கணவர் தனது செல் போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு கள்ளக்காதலியுடன் ஓட்டம் பிடித்துவிட்டார். கள்ளக்காதலியை தொடர்பு கொள்ள முயற்சித்தால் அவருடைய நம்பரும் ஸ்விட்ச் ஆப். இதனால் செய்வதறியாது அந்த பெண்ணும், அவருடைய குழந்தைகளும் காவல் நிலையம் சென்று காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து தரவேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இதனால் கோவை சரவணம்பட்டி பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மலையாள படத்தை பார்த்து காப்பி”ப” வடிவ மாணவர்கள் அமரும் முறை! இது சாதகமா? பாதகமா?

0

மலையாள மொழியில் அண்மையில் “ஸ்தாணர்த்தி ஸ்ரீகுட்டன்” என்னும் படம் வெளியானது. இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக மாணவர்கள் பள்ளியில் அமரும் முறையில் மாற்றம் செய்து எல்லோரும் சமம், பின் வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் மோசமான மாணவர்கள் கிடையாது என்பதை மாணவர்களும் உணரவேண்டும் என்பதற்காக “ப” வடிவில் மாணவர்களை அமரவைத்து ஆசிரியர் மாணவர்களுக்கு இந்த படத்தில் பாடம் எடுப்பார்.

 

இந்த படத்தை பார்த்த நம் தமிழ்நாட்டு பள்ளிக்கல்வி துறையினர் நம்முடைய தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளிலும் இப்படி மாணவர்களை அமர வைக்க வேண்டும். அப்போது தான் யார் முன் வரிசை, யார் பின் வரிசை என்கிற பாகுபாடு மனப்பான்மை மாணவர்களுக்குள் வராது என்கிற கோணத்தில் இந்த ப வடிவ முறையை பள்ளி வழக்கத்திற்கு கொண்டுவர அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

 

உண்மையில் இந்த முறையை அமல்படுத்துவதால் நிச்சயம் மாணவர்களுக்கு இடையே உள்ள பாகுபாடு மனப்பான்மை முற்றிலும் குறைந்துவிடும். ஆனால் அதைவிட உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாணவர்களுக்கு நிறைய பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

 

தொடர்ச்சியாக தினமும் வாரத்திற்கு குறைந்தது 5 நாட்கள் இந்த மாதிரி அமர்ந்திருந்தால் குழந்தைகளின் கழுத்து எலும்பு மற்றும் நரம்புகள் பாதிக்கப்படும். கண்ணாடி அணிந்திருக்கும் மாணவர்கள் தங்களின் கண்ணாடி லென்ஸ் வழியாக பார்க்காமல் பக்கவாட்டின் வழியாக பார்ப்பதால் அவர்களின் கண்கள் பாதிக்கப்படும். தலை வலி, கழுத்து வலி பிரச்சனைகள் குழந்தைகளுக்கு அதிகரிக்கும். தொடர்ந்து இதே மாதிரி அமர்ந்திருப்பதால் கழுத்து மற்றும் கண்கள் பாதிப்படைய நிச்சயம் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். இவ்வளவு பேசுறமே, நம்மால் தொடர்ந்து ஒரு படத்தை டீவியில் பக்கவாட்டில் அமர்ந்து பார்க்க முடியுமா என்பதை யோசித்து பாருங்கள்.

விஜய் பக்கம் சாயும் ஓபிஎஸ்? அரசியலில் அடுத்த அதிரடி ஆரம்பம்! காரணம் இதுதான்!

0

தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் வளம் வருபவர் விஜய். கடைசியாக ஜனநாயகன் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்துடன் தன்னுடைய சினிமா பயணத்தை முடித்துக்கொண்டு அரசியலில் களமிறங்கிவிட்டார். தற்போது தவெக என்னும் கட்சியை ஆரம்பித்து அனுதினமும் நாட்டில் நடக்கும் அட்டூழியங்களுக்கு எதிராக விஜய் குரல் கொடுத்து வருகிறார்.

விஜய் கட்சி ஆரம்பித்த உடனே நடந்த முதல் மாநாட்டில் தன்னுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு எப்போதும் கூட்டணி கதவு திறந்தே இருக்கும் என்றும், கொள்கை எதிரி பாஜகவுடனும், அரசியல் எதிரி திமுகவுடனும் எப்போதும் கூட்டணி இல்லை என்கிற தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக விளக்கினார்.

திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் விசிக, மதிமுக, காங்கிரஸ், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற சிறிய கட்சிகளை கவரும் வகையில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு போன்ற கூட்டணி கொள்கைகளையும் விஜய் வெளியிட்டார். இதனால் எந்நேரத்திலும் சிறு கட்சிகள் விஜய்யின் கூட்டணிக்குள் வந்துவிடும் நிலை தற்போது அரசியலில் உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை ஆரம்பத்தில் இருந்தே கவனித்துக்கொண்டு தான் வருகிறேன். விஜய்யின் அரசியல் நகர்வுகள் சிறப்பாக உள்ளது என்றும், அவருக்கு எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு என்றும் பேட்டி கொடுத்துள்ளார் ஒபிஎஸ். விஜய்க்கு ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் இவர் ஏற்கனவே அதிமுகவில் இருந்து விலகி விட்டார். இவரே மீண்டும் அங்கு சென்றாலும் எடப்பாடி இவரை சேர்த்துக்கொள்ள மாட்டார். அதேபோல பாஜகவுடன் இணக்கமாக ஓபிஎஸ் இருந்தாலும் ஓபிஎஸ் பாஜக சேர எடப்பாடி விடமாட்டார். திமுகவுடனும் இவரால் கூட்டணிக்கு செல்ல முடியாது. சீமானுடன் சென்றால் டெபாசிட் கூட தேறாது. இந்த காரணங்களால் தான் ஓபிஎஸ் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் அரசால் புரசலாக பேசிக்கொள்கிறார்கள். ஓபிஎஸ் ஒன்னும் சாதாரண ஆள் கிடையாது, அவருக்கும் ஜாதி ரீதியான வாக்குகள் அதிக அளவில் இருக்கு என்றும் அரசியல் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Youtube கொண்டு வந்த புது விதிமுறைகள் என்னென்ன? யாரெல்லாம் இதனால் பாதிக்கப்படுவார்கள்?

இந்தியாவில் கொரோனா பரவல் ஆரம்பமான நேரத்தில் நிறைய பேர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது பலர் Youtube, Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை விளையாட்டுக்காக( ஒரு ஜாலிக்காக) பதிவு செய்து வெளியிட்டு வந்தனர். நாளடைவில் அந்த வீடியோக்கள் வைரல் ஆகி Youtube, Facebook போன்ற வலைத்தளங்கள் மக்களின் வீடியோவை அங்கீகரித்து அவர்களுக்கு பணம் கொடுக்க ஆரம்பித்தனர்.

இதனால் நிறைய பேர் பயனடைந்தனர். பலர் தங்கள் அன்றாட வேலையை விட்டுவிட்டு முழுநேரமாக Youtube ல் சம்பாதிக்க இறங்கிவிட்டனர். பலர் லட்சம் முதல் கோடிகளில் சம்பாதித்து செட்டில் ஆகிவிட்டனர். அதாவது தாங்கள் இத்தனை வருடங்களாக செய்துவந்த தொழில் மற்றும் வேலைகளை விட்டுவிட்டு முழு நேரமாக Youtube ல் இறங்கிவிட்டனர்.

இந்நிலையில் பல புது விதிமுறைகளை Youtube அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்த புது விதிமுறைகளை மீறுபவர்களுக்கு இனி பணம் கொடுக்க முடியாது என்று Youtube அறிவித்துள்ளது. அந்த விதிமுறைகள் பின்வருமாறு : மீண்டும், மீண்டும் ஒரே மாதிரியான விடீயோக்களை பதிவேற்றம் செய்பவர்களுக்கு இனி பணம் கிடைக்காது.

ஒரே மாதிரியான விடீயோக்களை பதிவேற்றம் செய்தால் பணம் கிடைக்காது. செயற்கை நுண்ணறிவு என்று சொல்லப்படும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோ வெளியிடுபவர்களுக்கு இனி பணம் கிடைக்காது. மிகக்குறைந்த முயற்சியில் உருவாக்கப்படும் வீடியோக்கள், அடுத்தவர்களின் வீடீயோவை காப்பி அடித்து சில மாற்றங்கள் மட்டும் செய்துவிட்டு வீடியோ வெளியிடுவது, தரம் இல்லாத வீடியோக்கள், டெம்ப்ளேட் அடிப்படையில் உருவாக்கப்படும் வீடியோக்கள் வெளியிடுபவர்களுக்கு இனி யூடியூபில் இருந்து பணம் கிடைக்காது என்கிற தகவல்களை Youtube அண்மையில் வெளியிட்டுள்ளது. இதனால் Youtube தான் கதி என்று இருந்தவர்களின் நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.