திங்கட்கிழமை, அக்டோபர் 27, 2025
Home Blog Page 12

உருவாகும் அதிமுக-தவெக கூட்டணி.. கழட்டி விடப்பட்ட பாஜக.. இபிஎஸ்யின் திடீர் முடிவு!!

0

ADMK TVK BJP: தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் இன்னும் 6 மாதத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஆயத்த பணிகள் அனைத்து கட்சிகளாலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுக பாஜக கூட்டணி கை கோர்த்து விட்டது. ஆனாலும் அவர்களுக்குள் வெளிவராத பல்வேறு சலசலப்புகள் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது.

தற்போது நடிகர் விஜய்யின் தவெக உதயமாகி உள்ள நிலையில், பாஜகவும் அதிமுகவும், தவெகவை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் விஜய் பாஜகவை தனது கொள்கை எதிரி என்று கூறி வருவதால் இதனை ஏற்க மறுக்கிறார். இந்த சமயத்தில் பாஜக அதிமுகவிடம் அதிக தொகுதிகளையும், கொங்கு மண்டலத்தையும் கேட்டதாகவும் இதற்கு இபிஎஸ் மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் இபிஎஸ் பாஜக கூட்டணியிலிருந்து விலகி விடலாம் என்ற முடிவை எடுத்துள்ளாராம். மேலும், ஏற்கனவே அதிமுக-பாஜக கூட்டணியில் சில சச்சரவு நிலவி வருவதாலும், தவெகவின் வளர்ச்சி பெருகி வருவதாலும் இபிஎஸ் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அண்மையில் அதிமுக பிரச்சாரத்தில், தவெக கொடி பறந்ததை பலரும் விமர்சித்து வந்தனர்.

அப்போது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தவெக அதிமுக கூட்டணிக்கு வந்தால் இபிஎஸ் பாஜகவை கழட்டி விட்டு விடுவார் என்று கூறியிருந்தார். தற்போது இபிஎஸ்யின் நிலைப்பாடு தினகரனின் வாதத்தை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

விஜய்யிக்கு ஆதரவு என்பதை விட திமுகவுக்கு எதிர்ப்பு என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.. தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!!

0

BJP DMK: கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக சார்பாக நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து தமிழக அரசு சார்பாக தனிநபர் குழு அமைத்து விசாரிக்கப்பட்டு வந்தது. மேலும் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விபத்திற்கு காரணம் திமுக அரசு தான் என்று தவெக தரப்பு கூறி வந்த நிலையில், இந்த வழக்கை மாநில அரசு விசாரித்தால் உண்மை வெளிவராது என்று கூறிய தவெக சிபிஐ விசாரணையை கேட்டு மனு தாக்கல் செய்தது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திமுக அரசை கடுமையாக சாடினார். போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றிற்கு ஆளுங்கட்சிக்கு ஒரு மாதிரியாகவும், மற்ற கட்சிகளுக்கு ஒரு மாதிரியாகவும் பாதுகாப்பும், நிபந்தனைகளும் விதிக்கப்படுகிறது. இதற்கு உச்ச நீதிமன்றம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரவேற்கதக்கது என்றும் கூறினார். மேலும் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்த 2 பேர் சிபிஐ விசாரணையை கேட்டுள்ள நிலையில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் எந்த பயனும் இல்லையென்று திமுக வழக்கறிஞர் கூறுவது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர் கரூர் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக பாஜக நிற்கும் என்றும், விஜய்யிக்கு நேர்ந்தது போல கொடூரம் திமுக அரசால் இங்கு பல கட்சிகளுக்கு நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக நிற்பதை விட, திமுக அரசுக்கு எதிராக இருக்கிறோம் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.

தவெகவினர் மீது தீவிரவாதிகளுக்கு ஒப்பான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.. ஆதவ் அர்ஜுனா பகீர்!!

0

TVK: செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தது தமிழகத்தை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தவெக பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அந்த நாளின் நிகழ்வுகளை விளக்கமாக பகிர்ந்தார்.

விஜய் தாமதமாக வந்தார் என்பது முற்றிலும் அபாண்டமான குற்றச்சாட்டு. கரூரில் காவல்துறையினரே எங்களை வரவேற்றனர். காவல்துறை அனுமதி அளித்த நேரமான பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரைதான் பிரச்சாரம் நடைபெற்றது. இதற்கு முன் எங்கும் எங்களை வரவேற்காத நிலையில், கரூரில் மட்டும் வரவேற்பு நிகழ்ந்தது என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். கூட்ட நெரிசல் நிகழ்ந்ததும், மாவட்ட எல்லையில் நாங்கள் காத்திருந்தோம்.

ஆனால் நீங்கள் வந்தால் கலவரம் ஏற்படும் என காவல்துறையினர் கூறியதால் நாங்கள் செல்ல முடியவில்லை. இதற்கான அனைத்து ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் கூறினார். மேலும், தவெகவை முடக்க திமுக திட்டமிட்டு செயல்பட்டது. தவெகவினர் மீது தீவிரவாதிகளுக்கு ஒப்பான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மாவட்டச் செயலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, அரசு அதிகாரிகள் ஒவ்வொருவராக வந்து கட்சியைக் குற்றம்சாட்டும் வகையில் பேட்டி அளித்தனர். அதையெல்லாம் இப்போது சுப்ரீம் கோர்ட் கண்டறிந்து, எங்கள் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும், 41 உயிரிழந்த குடும்பங்களை விஜய் தத்தெடுப்பதாக முடிவு செய்துள்ளார். அவர்களுடன் இணைந்து பயணிப்பது எங்கள் கடமை என்றும், அவர்களுக்கு முழுமையான நீதியினை பெற்றுத் தரும் வரை தவெக தொடர்ந்து போராடும் என்றும் ஆதவ் அர்ஜுனா உறுதி பூர்வமாக தெரிவித்தார்.

கூட்டணிக்கு இன்னும் ஸ்ட்ராங்கான ஆட்கள் வர போகிறார்கள்.. பொடி வைத்து பேசும் வானதி சீனிவாசன்!!

0

BJP: தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி கூட்டணி வியூகங்கள் வலுப்பெற தொடங்கியுள்ளது. விஜய் தலைமையிலான தவெக கூட்டணி தற்போது யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது தான் ஆர்வத்தை தூண்டியுள்ளது. திமுக அரசை தனது அரசியல் எதிரி என்று கூறி வந்த விஜய் திமுகவை கடுமையாக சாடி வருகிறார்.

மேலும் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறி வரும் இவர் கரூர் சம்பவத்திற்கு பிறகு பாஜகவுடன் இணக்கம் காட்டுவதாக தெரிகிறது. ஏனென்றால், கரூர் விவகாரத்தில் பாஜக அமைத்த குழுவை பற்றி விஜய் இது வரை எந்த கருத்தும் கூறவில்லை. மேலும் சிபிஐ விசாரணையை கோரியுள்ளார். இந்நிலையில் நேற்று கோவையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்த போது, அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் சிபிஐ பாஜகவின் கைப்பாவை என்று விஜய் விமர்சித்துள்ளார். ஆனால் கரூர் விவகாரத்தில் சிபிஐ வழக்கை கேட்டுள்ளார். மேலும் விஜய் பாஜகவின் பின்னணியில் தான் இயங்குகிறார் என்றும் சொல்லப்படுகிறது என்று கேட்ட கேள்விக்கு, விஜய் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக நம்புகிறார். அவர் அதையே பாலோ பன்னட்டும் என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய அவர் நயினார் நாகேந்திரனின் பிரச்சாரத்திற்கு இபிஎஸ் ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பிய போது அதை பற்றி நாங்களே கவலைப்படவில்லை என்று ஆவேசமாக கூறினார்.

மேலும் அவர், பாஜகவிற்கு ஒரு பெரிய கூட்டணி வரபோகிறது, நீங்கள் யாரை நினைக்கிறீர்களோ அவரையே வைத்து கொள்ளுங்கள் என்று மரைமுகமாக கூறினார். இவர் இவ்வாறு கூறியது தவெகவை தான் என்று பலரும் கூறி வருகின்றனர். விஜய்க்கு பாஜக வலை வீசுகிறது என்ற கேள்விக்கு நாங்கள் யாருக்கும் வலை வீச வேண்டிய அவசியம் இல்லை. பாஜக அது போன்ற கட்சியும் கிடையாது என்று கூறி முடித்தார்.

துரைமுருகனை சந்தித்த எடப்பாடி பழனிசாமி.. கவனம் பெற்ற உரையாடல்!!

0

ADMK DMK: சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று சட்டசபை அலுவல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை தொடர்பாக பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு தமிழக சட்டசபை கூட்டம் அக்டோபர் 14 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

இதில் பொதுநல விவாதங்கள் தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது என்றும் கூறினார். மேலும் கரூர் கூட்ட நெரிசலில் இறந்த 41 பேருக்கும், அண்மையில் இறந்த முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் இரங்கல் தெரிவித்தார். இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை முடிவடைந்த நிலையில், ஆலோசனையில் பங்கேற்ற எம்.எல்.ஏக்கள் வெளியே வந்தனர்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சுமார் 5 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி துரைமுருகனிடம், உடல் நலம் எப்படி இருக்கிறது. பரவயில்லையா? என்று கேட்டார். இவர்கள் அருகில் இருந்த அமைச்சர்கள் அதனை பார்த்த வண்ணம் நின்றனர். அதிமுக-திமுக இடையே எப்போதும் பனிப்போர் நிலவு வரும் வேளையில் இவர்கள் இருவரின் உரையாடல் அரசியலில் கவனத்தை பெற்றுள்ளது.

சிபிஐ என்ற ரிமோட் மூலம் விஜய்க்கு பாதகமான அறிக்கையை பெற முயற்சிக்கும் பாஜக.. சூழ்ச்சி வலையில் விஜய்!!

0

TVK BJP: செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது திமுகவின் கோட்டையாக அறியப்படும் கரூரில் நடைபெற்றதால், இது திமுகவின் சதி வேலை என்று தவெகவினர் கூறி வந்தனர். தவெகவின் அரசியல் அறியாமை மற்றும் விஜய் தாமதமாக வந்தது தான் இதற்கு காரணம் என்று திமுகவினர் கூறி வர, இதனை விசாரிக்க அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.

பிறகு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டது. இதனை எதிர்த்த தவெக சிபிஐ கோரி மனு தாக்கல் செய்ய, உச்ச நீதிமன்றம் அதற்கு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் விஜய் இதனை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். ஆனால் சிபிஐ பாஜகவின் கைப்பாவையாக இருக்கிறது என்று ஏற்கனவே ஒரு முறை விஜய் கூறியிருக்க தற்போது அதனை வரவேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஆனால் பாஜக ஒரு பார்வையில் விஜய்க்கு உதவுவது போல காட்டிக்கொண்டாலும், மற்றொரு புறம் விஜய்க்கு எதிராக செயல்படுவதற்காகவே சிபிஐ விசாரணையை கோரி இந்த வழக்கை தான் வசப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சிபிஐயை தன் கையில் வைத்திருக்கும் பாஜக அதன் மூலம் விஜய்யிக்கு எதிரான ஆதாரங்களை திரட்ட முயற்சித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. சிபிஐ விசாரணைக்கு விஜய் மகிழ்ச்சி தெரிவித்தற்க்கு காரணம் கரூர் சம்பவம் அவருக்கு எதிராக திரும்பி விட கூடாது என்பதற்காக தான் என்றும் சிலர் கூறுகின்றனர்.

தொடங்கியது பாஜகவின் பிரச்சாரம்.. வெற்றிநடை போடும் தமிழனின் பயணம்!!

0

BJP: சென்னை அண்ணாநகரில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பெயரில் பாஜக சார்பாக மிகப்பெரிய தொடக்க விழா இன்று நடைபெற்றது. வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த தொடக்க விழாவில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா, என பலரும் பங்கேற்றனர்.

அப்போது உரையாற்றிய அண்ணாமலை, பாஜக – அதிமுக கூட்டணி வரவிருக்கும் தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெறும். மழை, வெயில், புயல் எதுவானாலும் அடுத்த நான்கு மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் காசை வைத்து தேர்தலில் வெல்லலாம் என நினைக்கிறார். ஆனால் மக்கள் அதற்கு தகுந்த பதிலை கொடுப்பார்கள் என்றார். மேலும் அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. கரூரில் 88 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர்.

ஆனால் அதற்கு திமுக அரசு எந்த பொறுப்பையும் ஏற்கவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக 1500 போலீசார் பாதுகாப்பில் இருந்தனர். ஆனால் மக்களின் உயிரைக் காக்க யாரும் முன்வரவில்லை. இதுவே திமுக ஆட்சியின் முகம் என கடுமையாக விமர்சித்தார். 2026-ஆம் ஆண்டு முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி இருக்கையில் அமர வைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக உள்ளார். இது தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றத்தின் தொடக்கம்.

சினிமா உலகில் நடிப்பவர்கள் அரசியலை விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியாது. மக்கள் இப்போது விழித்துள்ளனர் என்றும், ஸ்டாலினை நேரடியாக குறிவைத்து முதல்வருக்கு ஆய்வு கூட்டம் நடத்தத் தெரியாது. ஆனால் வெளிநாடுகளிலும் டெல்லியிலும் தேவையில்லாமல் சண்டை போடுகிறார். திமுக ஆட்சியில் முதல்வர் பேண்ட் போடுவது, உதயநிதி நாயோடு போட்டோ எடுப்பது இதுவே ஆட்சியாக மாறியுள்ளது என்று கடுமையாக தாக்கினார்.

இந்த நிகழ்வின் மூலம் பாஜக தனது 2026 தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக ஆரம்பித்துள்ளது. தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் எனப்படும் இந்த சுற்றுப்பயணம் மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்தையும் தொடும் விதமாக நடத்தப்படவுள்ளது. பாஜக-அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.

திமுகவை அகற்ற கொள்கை எதிரியுடன் கூட்டணி வைக்கும் விஜய்.. விஜய்யின் அதிரடி முடிவால் முழிக்கும் ஸ்டாலின்!!

0

TVK BJP: கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூரில் ஏற்பட்ட துயரம், தமிழகம் மட்டுமல்லாது உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க தனி நபர் ஆணையம் அமைக்க பின்னர் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால் விஜய் தரப்போ சிறப்பு புலனாய்வு குழுவில் நம்பிக்கை இல்லையென கூறி சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்தது. இதனால் உச்ச நீதிமன்றம் இதனை சிபிஐ கைக்கு மாற்றியது. இதனை தொடர்ந்து விஜய் தனது சமூக வலைத் தள பக்கதில் நீதி வெல்லும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் விஜய் இதற்கு முன் ஒரு முறை SIT இருக்க CBI எதற்கு என்று ஒரு போராட்டத்தில் கூறியிருந்தார். ஆனால் இப்போது அவர் இவ்வாறு கூறியிருப்பது பாஜக கூட்டணியில் அவர் இணைந்து விட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாக பார்க்கப்படுகிறது. மேலும் விஜய் பின்னால் பாஜக உள்ளது என்பதையும் இது தெளிவுப்படுத்துகிறது. விஜய் தனது அனைத்து பிரச்சாரங்களிலும் திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் கூறி வருகிறார்.

இதனால் இவர் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டார் என்று எதிர்பார்த்த சமயத்தில், கரூர் விவகாரத்திலிருந்து தப்பிப்பதற்காக பாஜகவுடன் சேர்ந்துள்ளார் என்றும் ஒரு தரப்பு கூறி வர, இன்னொரு தரப்பு திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் பாஜக, அதிமுக, இருப்பதால் தவெகஉடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் திமுக மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர கூடாது என்பதற்காக கொள்கை எதிரி என்று கூறி வந்த பாஜக உடன் விஜய் கூட்டணி அமைக்கிறார் என்ற கருத்தும் நிலவுகிறது.

விஜய்யுடன் இணையும் அண்ணாமலையின் புதிய கட்சி.. டீலிங்கை ஓகே செய்த விஜய்!!

0

BJP TVK: முன்னாள் தமிழக பாஜக தலைவராக இருந்தவர் அண்ணாமலை. ஒரு வருடத்திற்கு முன்பு அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் போது இபிஎஸ், அண்ணாமலையை மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்ற நிபந்தனையை முன் வைத்ததன் அடிப்படையில் அண்ணாமலை பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு பிறகு பாஜக விவகாரங்களில் அண்ணாமலை அவ்வளவாக தலை காட்டாமல் இருந்தார்.

இதனால் இவர் பாஜகவிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டார் என்ற தகவலும் பரவியது. இதன் பிறகு இவருக்கு தேசிய அளவிலான பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் 1 ஆண்டுக்கு மேலாகியும் அதற்கான பேச்சு வார்த்தை எதுவும் நடைபெறாததால் வருத்தத்தில் இருந்த அண்ணாமலை அவரது ஆதரவாளர்களை வைத்து புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற செய்தியும் பரவி வருகிறது. மேலும் நயினாருடன் ஏற்பட்ட வாக்குவாதமும் இவர் கட்சி துவங்குவதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

இவரின் இந்த கட்சி கூடிய விரைவில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைய போகிறது என்றும் சொல்லப்படுகிறது. தவெக ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையில், கரூர் சம்பவம் தவெகவிற்கு பூகம்பமாக வெடித்துள்ளது. இந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், சிபிஐ பாஜக வசம் இருப்பதால் விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க பாஜக முயற்சித்து வருகிறது.

ஆனால் இதற்கு விஜய்யிக்கு விருப்பம் இல்லாதது போல் தெரிகிறது. இந்நிலையில், இதனை பயன்படுத்த கொண்ட அண்ணாமலை விஜய்யுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அதில் முதல் இரண்டரை வருடம் நீங்கள் முதலமைச்சராகவும், அடுத்த இரண்டரை வருடம் நான் முதலமைச்சராகவும் இருக்கிறேன் என்ற நிபந்தனையை விதித்திருக்கிறார்.

இதற்கு விஜய், அண்ணாமலைக்கு இருக்கும் இளைஞர்கள் பட்டாளமும், தவெகவிற்க்கு இருக்கும் இளைஞர் பட்டாளமும் ஒன்று சேர்ந்தால் சட்டமன்ற தேர்தலில் குறைந்தது 150க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து விடலாம் என்ற நினைத்து இதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் தவெக வட்டாரங்கள் கூறுகின்றன.

கரூர் விபத்தின் பின்னணியில் சதி வேலை இருக்கிறது.. சிபிஐ விசாரணையை முதலில் கோரியது பாமக தான்!!

0

PMK: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூரில் நடைபெற்ற பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததுடன், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனை விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனி நபர் குழு அமைக்கப்பட்டது. இதற்கு பிறகு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைத்து விசாரிக்கப்பட்டது.

இதன் மேல் உடன்பாடில்லாத விஜய் தரப்பு சிபிஐ விசாரணையை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இது தமிழக அரசுக்கு பேரிடியாக இருந்தாலும், விஜய் தரப்பு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த உத்தரவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி இது பேசிய போது, கரூரில் நடைபெற்ற சம்பவம் முழுக்க முழுக்க சதி வேலை என்றும் கரூர் விபத்துக்கு முதல் முதலில் சிபிஐ விசாரணையை அமைக்க கோரியது பாமக தான் என்பதை இந்த நேரத்தில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என்றும் கூறினார். பரப்புரை கூட்டத்திற்கு வந்தவர்கள் என அனைத்து தரப்பினரும், பொறுப்பின்றி செயல்பட்டது மிகவும் வருத்தத்திற்குரியது.

இந்த விபத்து நடந்து சில நாட்களிலேயே தமிழக அரசு மிகவும் பதற்றத்தோடு இருந்தது சந்தேகத்திற்க்கு வழிவகுத்தது. மேலும் கரூர் விபத்து தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது என்றும் கூறினார். இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு தமிழக அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும், குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.