வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 19, 2025
Home Blog Page 12

சிதறும் கூட்டணி கட்சிகள்.. அதிகாரத்தை பிடிக்கும் விஜய்!! அதிமுக திமுகவுக்கு வரும் நெருக்கடி!!

0

TVK BJP: தமிழ்நாடு 2026 -ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில் , கூட்டணி குறித்த முடிவுகளும் , ஆலோசனைகளும் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராயப்படுகிறது. அ.தி.மு.க. வும் -பா.ஜ.க வும் கூட்டணியில் இருப்பது அனைவரும்  அறிந்த ஒன்று. இந்நிலையில்  அ.தி.மு.க. – பா.ஜ.க  கூட்டணி முறிந்தால்,  பா.ஜ க -வும்,  நம் தமிழர் கட்சியும் இணைந்து ஒரு கூட்டணி அமைத்து, அதில் நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பிருப்பதாக ஒரு புதிய கருத்து வெளியாகி உள்ளது.

பீகாரில் நடந்ததை போல ,தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக சீமானை நிறுத்தலாம் என்று கூறப்படுகிறது.  விஜய் அரசியலில் கால் பதித்த முதல் நாளிலிருந்தே அவருக்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்  அ.தி.மு.க.- வும் தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து கூட்டணி அமைத்தால் ,அது நடக்கவிருக்கும் 2026  சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது உறுதி என்ற கணிப்பும் வெளியாகி உள்ளது.

தி.மு.க கூட்டணியில் இருக்கும் கட்சிகள் விலகி த.வெ.க உடன் இணைந்தால் , த.வெ.க கட்சி வெற்றி பெற அது சாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நா.த.க மற்றும் த.வெ.க  தனித்து போட்டியிட்டாலும், அ.தி.மு.க. – பா.ஜ.க இணைந்து போட்டியிட்டாலும் தேர்தலில் தோல்வியை தழுவ வாய்ப்புள்ளது. தி.மு.க. அரசின் மீது இருக்கும் அதிருப்தி காரணமாக அதனுடன் இருக்கும் கூட்டணி கட்சிகள் சிதற வாய்ப்புள்ளது எனவும் கணிக்கப்படுகிறது.

இவ்வாறான பல்வேறு நிலைமைகள் தமிழக அரசியலில் நிலவுவதால் , எந்த கட்சி எதனுடன் இணையும் , எது தேர்தலில் வெற்றி பெரும் என்ற அனைவரின் எதிர்பார்ப்பும் அதிகமாக எழுந்துள்ளது. 2026 – சட்டமன்ற தேர்தல், தமிழக அரசியலில் வரலாறு காணாத ஒரு புதிய இடம் பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

“MGR பெயர்” “கேப்டன் மரியாதை”.. ADMK DMDK வாக்குகளை கவர நினைக்கும் விஜய்!! வெளிப்பட்ட குட்டு!!

0

ADMK TVK: விஜய் திமுகவுக்கு எதிரான அரசியல் களத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனக் கூறினார். ஆரம்ப கட்டத்தில் மறைமுகமாகவும் நேரடியாகவும் இதனை வரவேர்த்தனர். ஆனால் நாளடைவில் இதரக் கட்சிகள் அவர்களது கூட்டணி கட்சி மீது இந்த அழுத்தத்தை கொடுத்ததே தவிர விஜய்யுடன் கைகோர்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை. இதனால் அவர் போட்ட அனைத்து திட்டங்களும் தவிடு பொடியானது.

இதனால் தனதுடைய முதல் ஆயுதமே தோல்வி சந்தித்தது. தற்போது தனது இரண்டாவது ஆயுதமாக அரசியல் களத்தில் மவுசு குறைந்த கட்சியின் வாக்குகளை கவர முன்வந்துள்ளார். அந்த வகையில் தனது இரண்டாவது மாநில மாநாட்டில் அதிமுகவை சுட்டிக்காட்டி பேசியதோடு தொண்டர்கள் நிலைமை என்னவென்றும் கேட்டிருந்தார். இவையனைத்தும் விஜய் பக்கம் திரும்ப வைக்கும் ஓர் வியூகம் தான்.

இதே போல விஜயகாந்த்து-க்கு இருந்த மதிப்பும் மரியாதையும் அவர்களது மகன்களுக்கு கிடைக்காது என்று அரசியல் களத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது. அந்த வகையில் அந்த வாக்கையும் கவர நினைக்கிறார். இது ரீதியாக பிரேமலதாவிடம் கேள்வி கேட்ககையில், எங்களது வாக்குகளை ஒருபோதும் விஜையால் எடுக்க முடியாது. எங்களுக்கென்று தனி கட்சி, வாரிசு எல்லாம் உள்ளது என கூறினார்.

ஆனால் அவர் அதிமுகவை டார்கெட் செய்வது நன்றாக அறிய  முடிந்தது. ஏனென்றால் மாநாட்டில் எம்ஜிஆர்-ஐ  குறித்தும் அவர் ஆரம்பித்த கட்சியின் தற்போதைய நிலை குறித்தும் பேசி உண்மை தன்மையை விவரித்து இருப்பதாக கூறுகின்றனர்.இதனால் அதன் தொண்டர்கள் அக்கட்சி ஆதரவு மக்கள் வாக்குகள் கிடைக்க அதிகளவு வாய்ப்பு உள்ளது.

சூடுபிடிக்கும் அரசியல் களம்: விஜய்யை காலி செய்ய திமுக போட்ட ஸ்கெட்ச்.. வெளியான முக்கிய அறிவிப்பு!!

0

DMK TVK: திமுகவின் முப்பெரும் விழா அடுத்ததாக கரூர் மாவட்டத்தில் நடைபெற போவதாக திமுக தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் சென்னை மதுரை கோவை உள்ளிட்ட பெரும் நகரங்களில் மட்டுமே முப்பெரும் விழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இம்முறை திமுகவின் பலத்தை காட்டவே விஜய்க்கு எதிராக இந்த மாநாட்டை நடத்துகின்றனர். மேற்கொண்டு இதில் பெரியார் மற்றும் அண்ணா விருது உள்ளிட்டகைகளும் வழங்கப்பட இருக்கிறது.

முன்னதாகவே கொங்கு மண்டல பொறுப்பாளராக செந்தில் பாலாஜி இருக்கையில் இதன் அனைத்து கட்ட வேலையும் அவரது கவனத்திற்கு தான் வரும். அந்த வகையில் நேற்று சென்னை வந்தடைந்து விட்டார். இன்று இடம் குறித்த தேர்வு கிட்டத்தட்ட விஜய் மாநாட்டில் இரண்டரை லட்சம் பேர் கலந்து கொண்டதை அடுத்து இங்கு குறைந்தபட்சம் 4 லட்சம் பேருக்கு மேல் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறதாம்.

பணம் மோசடி வழக்கு, பதவியின்மை உள்ளிட்ட அனைத்தும் செந்தில் பாலாஜியை நெருக்கடிக்கு தள்ளிய நிலையில் அதன் வெளிப்பாட்டை இந்த முப்பெரும் விழாவில் காண்பிக்கலாம் என கூறுகின்றனர். முக்கிய டார்கெட்டாக இருப்பது விஜய் தானாம், அதனால் அவருக்கு எதிரான மாநாடாகத்தான் இது நடைபெறப்போகிறது என்று அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றனர். விஜய்யின் பேச்சுக்கு இந்த மாநாட்டில் பதிலடி கொடுக்க காத்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

மத்திய அரசுக்கு நேரடி சவால்.. தமிழக அரசு எடுத்த துணிச்சல் முடிவு!! அமைச்சர் பரபர அறிவிப்பு!!

0

DMK BJP: இந்தியாவிற்கு தேவையான பெட்ரோலியத்தை அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் வழங்கி வருகிறது. சமீபத்தில் வரி ஏய்ப்பு காரணமாக தொடர்ந்து விலையானது அதிகரித்துவிட்டது. இப்படி இதர நாடுகளிடம் தங்கள் தேவைகளின் வரி ஏய்ப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்த முயன்றும் தோல்வியையே சந்திக்கிறது. இதனால் மத்திய அரசு உள்நாட்டுக்குள்ளேயே எண்ணெய் கிணறு தோண்ட திட்டமிட்டனர்.

அந்த வகையில் வெளிநாட்டு அந்நிய செலவாணியை கட்டுப்படுத்த கிட்டத்தட்ட தமிழகத்தில் 20 இடங்களுக்கு அனுமதி பெறப்பட்டது. ஆனால் தற்சமயம் இந்த அனுமதி இனிவரும் நாட்களில் செல்லாது என மாநில அரசு தெரிவித்துள்ளது. அதாவது நமது நாட்டிலேயே பெட்ரோலியத்தை உற்பத்தி செய்ய முக்கியமாக காரணியாக பார்க்கப்படுவது ஹைட்ரோ கார்பன்.

அதனை கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற வளங்களை தேடி ஆய்வு செய்து பிரித்தெடுக்கும் திட்டங்களை முன் வைத்து தான் தமிழகத்தை நாடினர். கிட்டத்தட்ட 20 இடங்களுக்கு அனுமதி வழங்கிய நிலையில் தற்போது அதனை திரும்ப பெறுகிறோம் என்ற அறிவிப்பை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார். இதனால் மத்திய அரசின் முழு எதிர்ப்பையும் பெற முடியும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

முன்னதாகவே மத்திய அரசு தமிழகத்திற்கு என்று எந்த ஒரு நிதியையும் ஒதுக்குவதில்லை. தற்போது இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளதால் மேற்கொண்டு ரிவஞ்சை கொடுக்க அதிக வாய்ப்புள்ளது எனக்கு கூறுகின்றனர்.

அதிமுக-வே வேண்டாம்.. அதிரடியாக வெளியேறிய கூட்டணி கட்சி!! பவர் காட்டிய விஜய்!!

0

ADMK: அதிமுகவுடன் கடந்த தேர்தலில் கைகோர்த்து நின்ற புதிய தமிழகம் வரும் நாட்களில் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்பதை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டனர். விஜய் கட்சி தொடங்கி ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறோம் என்ற அறிவிப்பை எப்பொழுது வெளியிட்டாரோ அப்போதையிலிருந்து மாற்று கட்சியினருக்கு பிரஷர் ஏற தொடங்கிவிட்டது. ஏனென்றால் பலரும் இதே போல தங்களுக்கும் கூட்டணியில் பங்கு வேண்டும் என கேட்க ஆரம்பித்து விட்டனர்.

அதையே பாலோ செய்த பாஜக, தங்களுக்கும் கூட்டணி அதிகாரத்தில் பங்கு உள்ளது என தெரிவித்தது. ஆனால் அதற்கு எதிராக எடப்பாடி, NDA கூட்டணி வெற்றி பெற்றாலும் தாங்கள்தான் ஆட்சி அதிகாரத்தில் இருப்போம் எனக் கூறினார். இந்த ஆட்சி அதிகார மோதல் காரணமாகவே புதிய தமிழகம் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தெரிவித்துவிட்டது. நாளடைவில் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறோம் என்பதையும் தெரிவிக்கவில்லை.

ஆனால் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவானது அதிமுகவை விட்டு வெளியேறியதிலிருந்து விஜய் பக்கம் சாய்ந்துள்ளது. தற்போது பேட்டியளிக்கையில் கூட நாங்கள் இன்னும் அதிமுக கூட்டணியில் உள்ளோமா என்று கேள்வி எழுப்பியதோடு?? விஜய்யின் மாநாடு குறித்து பாராட்டியுள்ளார். அதேபோல கடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரும் கூட்டணி தான் வேண்டும் என்றும் கூறினார்.

அப்படி பார்க்கையில் இதற்கு விஜய் தான் சரியான நபர் இவர்களின் கூட்டணி வரும் காலங்களில் அவருடன் தான் இருக்கும் என கூறி வருகின்றனர்.

இரவோடு இரவாக அதிரடி.. திமுக பக்கம் தாவிய அதிமுக முக்கிய நிர்வாகிகள்!!

0

ADMK DMK: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் 8 மாதங்களில் நடைபெறும் உள்ள நிலையில் திமுக அதிமுக என இரு கட்சிகளும் மாற்று கட்சிகளை இணைக்கும் முனைப்பில் உள்ளனர். அதில், அதிமுக கூட்டணி தகர்த்து தன் வசப்படுத்த முயற்சியில் திமுக களமிறங்கியுள்ளது. வகையில் முக்கிய அமைச்சர் வைத்து பாமக நிறுவனரான ராமதாசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மறுபுறம் அதிமுக நிர்வாகிகள் பலரும் மாற்று கட்சியை தேடி வெளியேறுகின்றனர்.

முன்னதாகவே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது பலருக்கும் பிடிக்கவில்லை. குறிப்பாக பாஜக மேல் மக்களுக்கே ஒரு அதிருப்தி நிலை உள்ளது. இதனால் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் நின்றாலும் வெற்றி பெற முடியாது என பலரும் வியூகிக்கின்றனர். இதன் முக்கிய காரணத்தினால் தான் மாற்றுக் கட்சியை நாடி செல்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அதிமுகவில் எண்ணற்ற நிர்வாகிகள் எனது நிலையில் தற்போது இரவோடு இரவாக அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளனர்.

இந்த அறிவிப்பானது இபிஎஸ் தலைமையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாகவே முக்கிய தலைகள் மாற்றுக் கட்சியை நாடி செல்வதால் தங்கள் கட்சியின் மவுசானது குறைந்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் திமுக பக்கம் சென்றால் மேற்கொண்டு இவர்களுக்கு பின்னடவை தான் ஏற்படும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

எங்களுக்கு கூட்டணி வேண்டாம்.. பாஜக உறவை துண்டிக்க ரெடியான அதிமுக!!

0

ADMK BJP: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பலமான கூட்டணி கட்சியை அமைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அதிமுக மீண்டும் பாஜகவுடன் இணைந்தது. இவர்கள் கடந்த மக்களவைத் தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதால் கூட்டணியை முறித்துக் கொண்டனர். தற்போது திமுகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே கூட்டணியில் இணைந்துள்ளனர்.

ஆனால் இம்முறை கூட்டணி வைத்ததிலிருந்து கட்சிக்குள் பல்வேறு குளறுபடிகள் இருந்து வருகிறது. அதாவது கொள்கை ரீதியாக நாங்கள் வேறு, திமுகவை எதிர்ப்பதற்காக மட்டும்தான் இந்த கூட்டணி என்று எடப்பாடி கூறி வருகிறார். ஆனால் பாஜக இலையின் மீதுதான் தாமரை மலரும் கட்டாயம் கூட்டணி ஆட்சி என தெரிவித்துள்ளது. இது ரீதியாக பொது நிகழ்ச்சியில் அமித்ஷாவே இதை உறுதி செய்துள்ளார்.

மேற்கொண்டு அண்ணாமலையும் நான் கட்சிக்கு எதிராக எதையும் பேச முடியாது இவ்வளவு அழுத்தமாக கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்கையில் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என தெரிவித்தார். இப்படி பாஜக அதிமுகவின் தலையீடு இல்லாமலேயே பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் இவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி கூறியுள்ளதாவது, ஆட்சியில் பங்கு தருவோம் என்று பாஜக எதிர்பார்த்து இருப்பதற்கு நாங்கள் ஒன்றும் ஏமாளி கிடையாது.

அதேபோல கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும் வேண்டாம் என்றால் வேண்டாம், அதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை என நேரடியாகவே தெரிவித்துவிட்டார். இதனால் கூட்டணி ஆட்சி என்று நீங்கள் கூறிக்கொண்டு அடுத்த கட்ட நகர்வை எடுக்க நினைத்தால் உங்களுடன் கூட்டணி வேண்டாம் என்பதை எடப்பாடி நாசுக்காக சொல்லி முடித்துள்ளார். இதனால் வரும் நாட்களில் பாஜகவின் கைகள் ஓங்க வாய்ப்பில்லை.

அதிமுக-வின் முதுகில் குத்தும் பாஜக.. கூட்டணிக்குள் உச்சக்கட்ட பரபரப்பு!!

0

ADMK BJP: தமிழகத்தில் இம்முறை அரசியல் களமானது அனல்பறக்க இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. அதிலும் இம்முறை அதிமுக திமுக தவெக பாஜக என நான்கு முனை போட்டி இருக்கும். அதிலும் தற்போது வந்த தவெக விற்கு எதிர்பாரா அளவிற்கு ஆதரவு உள்ளது என்பதால் வாக்கு வங்கி சிதறக் கூடும். இதனை தடுக்கவே அனைத்து கட்சிகளும் முயற்சித்து வருகிறது. ஆனால் பாஜக அதிமுக வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அந்த கட்சியையே பின்னால் அனுப்பும் முயற்ச்சியில் இறங்கியுள்ளனர்.

அதிலும் வரும் நாட்களில் தான் அதனை புரிந்துக் கொள்ள முடிந்தது. குறிப்பாக ஆட்சியை பிடிக்க வேண்டுமென்பதற்காகத்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தது. ஆனால் தற்போது அதிமுக மூலம் தென் மாவட்ட தொகுதிகளை அதிகளவு கைப்பற்றி ஆட்சி புரிய வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் உள்ளனர். அதாவது கடந்த தேர்தலில் பல தென் மாவட்ட இடங்களில் அதிமுக-வை கடந்து பாஜக இரண்டாம் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. அதவாது முக்குலோத்தோர் வாக்குகளை அதிமுகவை விட பாஜக வால் கவர முடியும் என நினைக்கின்றனர்.

அதனால் அதிமுக-வை காட்டிலும் அதிகள வு தொகுதிகளை பாஜக பெற்று அதற்கேற்ற வாக்களர்களை நிற்க வைக்க ஆலோசனை செய்து வருகின்றனர். அதிலும் ஓபிஎஸ் மூலம் பெறப்பட்ட வாக்குகள் அனைத்தையும் தற்போது நயினார் நாகேந்திரனை வைத்து பெற்றுக்கொள்ளலாம் என நினைக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அமித்ஷா தான் இதற்கான திட்டங்கள் அனைத்தையும் வகுத்து வருகிறாராம்.

கட்டாயம் இவர்களுடன் கூட்டணி இல்லை!! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அதிமுக!!

0

ADMK TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் விஜய் எந்த ஒரு கட்சியும் விடாமல் அனைவரையும் நேரடியாகவே விமர்சனம் செய்திருந்தார். அந்த வகையில் அதிமுக கட்சி குறித்து பேசும்போது, இந்த கட்சியை உருவாக்கியது எம்ஜிஆர் ஆனால் அதன் நிலைமை தற்பொழுது எப்படி உள்ளது என்று நாம் பார்க்கிறோம். அந்தத் தொண்டர்களால் எதையும் வெளியில் சொல்ல முடியவில்லை எனக் கூறியதோடு, உலக மகா ஊழல் கட்சி என்றும் சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.

இந்த மாநாட்டிற்கு முன்பு வரை அதிமுக பாஜக நிலைப்பாட்டை கண்டு, வரும் நாட்களில் விஜய்யுடன் எடப்பாடி கூட்டணி வைப்பார் என்று பேசி வந்தனர். ஆனால் இந்த மாநாட்டின் மூலம் அதன் முடிவு தெரிந்து விட்டது. கட்டாயம் நடைபெறப்போகும் சட்டமன்றத் தேர்தலில் இவர்கள் கூட்டணி இருக்காவே இருக்காது. மாறாக தேமுதிக பாமக போன்ற கூட்டணிகள் இடம் பெறலாம். ஏனென்றால் விஜயகாந்தை அண்ணா என்றும் மாற்று கட்சி என பாமகவை குறித்தும் எதுவும் வாய் திறக்கவில்லை.

மேற்கொண்டு விஜய் பேசியதற்கு எதிராக எடப்பாடி பதிலடி கொடுத்துள்ளார். அதில், கட்சி தொடங்கியதும் ஆட்சி அமைக்க முடியாது, அவர் அறியாமையில் பேசுகிறார் அதேபோல யாரெல்லாம் புதிய கட்சி தொடங்குகிறார்களோ அவர்கலெல்லாம் எம்ஜிஆர் பெயரை பயன்படுத்தி தொடங்கிக் கொள்கிறார்கள். அதேபோல மக்களுக்கு எந்த ஒரு இயக்கமும் உடனடியாக நன்மை செய்து விட முடியாது என்றும்  சினிமாவில் பேசுவது போல டயலாக் வசனம் பேசுகிறார்கள். நாங்கலெல்லாம் உழைப்பால் அடையாளம் காட்டப்பட்டவர்கள்.

அரசியலைப் பொறுத்தவரை மக்களுக்கு சேவை செய்து மட்டுமே நல்ல இடத்தை பெற முடியும் என்று கூறினார். மேற்கொண்டு அதிமுகவின் மூத்த தலைவர் ஒருவரிடம் விஜய்யுடன் இனிவரும் நாட்களில் கூட்டணி இருக்குமா என கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு அவர், அதிமுகவை விமர்சனம் செய்யும் எந்த ஒரு கட்சியுடன் கூட்டணி இருக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதன் மூலம் அதிமுக விஜய் கூட்டணி ஒருபோதும் ஒத்துப்போகாது என்பது தெரிகிறது.

இனி இங்கு உனக்கு வேலை இல்லை.. அண்ணாமலையை தமிழகத்திலிருந்து விரட்டும் பாஜக!!

0

TVK BJP: அதிமுக பாஜக கூட்டணி பிரிவதற்கு முக்கிய காரணமாக அண்ணாமலை இருந்ததால் மீண்டும் இணையும் போது அவர் பாஜகவின் தலைவராக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதேபோல அவரை நீக்குவதற்கு முன்பாக அவரை கட்சியை விட்டு விலகிக் கொண்டார். அவ்வப்போது கட்சி வேலைகளில் ஈடுபடுவது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்று மட்டுமே உள்ளார். இவருக்கு மத்திய அமைச்சரவையில் நல்ல பதவி காத்திருப்பதாக பல தகவல்கள் வெளியானது.

இதற்கு காரணம், அதிமுகவை கூட்டணியில் இருந்து கை கழுவி விட்ட பிறகு மூன்று சதவீத வாக்கு வங்கியை 10 சதவீதத்திற்கும் மேல் உயர்த்தியது இவர்தான். இதனால் அவர் அமைச்சரவையில் இடம்பெறுபவர் என்று அமித்ஷாவால் பாராட்டு பெற்றவர். அப்படி இருக்கையில் கட்டாயம் மாநில தலைமையில் இடமில்லை என்றாலும் மத்திய தலைமையில் இடம் இருக்கும் என யூகித்தனர். ஆனால் இதெல்லாம் வதந்தி என்று வரும் நாட்களில் தான் தெரிந்தது.

தற்போது அனைத்து பேட்டிகளையும் தவிர்த்து வருகிறார். ஆனால் அதிமுகவிற்கு எதிராக கட்சிக்குள் வேலை பார்க்கிறார். எடப்பாடி யாரெல்லாம் ஒதுக்கினாரோ அவர்களையெல்லாம் கட்சிக்குள் இணைக்க இவர்தான் பாலம் போல் செயல்பட்டு வருகிறார். இது மேலும் கட்சிக்குள் நெருக்கடியை தருவதால் மேற்குவங்கத்தில் நடைபெற போகும் தேர்தலுக்கு இவரை பொறுப்பாளராக நியமிக்க உள்ளனர்.

இதனால் அவரின் முழு வேலைகளும் மேற்குவங்கத்தின் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு தான் இருக்கும், தமிழகம் பக்கம் வர இனி எந்த வேலையும் இல்லை எனக் கூறுகின்றனர்.