திங்கட்கிழமை, அக்டோபர் 27, 2025
Home Blog Page 13

விஜய்க்காக ஒரே மேடையில் மோதிக்கொண்ட நயினார் அண்ணாமலை.. நயினார் கொடுத்த பதிலடி!!

0

BJP: இன்னும் 6 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரிலும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக-பாஜக ஓராண்டிற்கு முன்பே கூட்டணி அமைத்துவிட்டது. சுமார் 160 தொகுதிகளுக்கும் மேல் இபிஎஸ் பிரச்சாரம் செய்து விட்டார்.

மீதமிருக்கும் தொகுதிகளுக்கு தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி இந்த முதல் பிரச்சாரம் நேற்று மதுரையில் தொடங்கியது. இந்த நிகழ்வில் பல்வேறு பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அண்ணாமலை மக்கள் தியேட்டருக்கு போங்க, படம் பாருங்க, விசில் அடிங்க. ஆனால் ஒரு நடிகன் நல்லாட்சி தருவான் என்று நினைக்க வேண்டாம் என்று பேசினார்.

இவர் இவ்வாறு மறைமுகமாக குறிப்பிட்டது விஜய்யை தான் என்பதை அங்கிருந்த அனைவரும் அறிந்து கொண்டனர். இவருக்கு பின் பேசிய நயினார் அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் திமுகவை ஆட்சியை விட்டு அகற்ற முடியும், அனைவரும் என்றால் அனைவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன் என்று அண்ணாமலைக்கு பதிலடி தருமாறு பேசினார். கரூர் விபத்து நிகழ்ந்த போது விஜய்க்கு ஆதரவாக பேசிய அண்ணாமலை இப்போது அவரை எதிர்ப்பதை அனைவரும் விமர்சித்து வருகின்றனர். விஜய்யை ஆதரிப்பதில் அண்ணாமலைக்கு, நயினாருக்கும் இருக்கும் சச்சரவு பெருகி கொண்டு போகிறது என்பது இந்த மூலம் தெளிவாகிறது.

கூட்டணிக்கு மட்டும் வாங்க.. அதிகார பகிர்வு எல்லாம் இருக்காது.. விஜய்க்கு இபிஎஸ் செக்.. கலை கட்டிய தேர்தல் களம்!!

0

ADMK TVK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேலையில் கட்சிகளனைத்தும் கூட்டணி கணக்குகளையும், தேர்தல் வியூகங்களையும் வகுக்க தொடங்கிவிட்டது. அனைத்து தமிழக கட்சிகளும் மக்களை சந்தித்து அவர்கள் மனதில் தங்களை நிலை நிறுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தவெக சார்பில் கரூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில், அதனை ஏற்காத தவெக தரப்பு சிபிஐ விசாரணையை கோரி மனு தாக்கல் செய்திருந்தது. இதனையடுத்து இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்ததுடன், சிபிஐ விசாரணைக்கும் உத்தரவு பிறப்பித்தது. இதனால் தவெக தலைவர் விஜய் மகிழ்ச்சியில் இருந்தார்.

ஆனால் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பெரும்பாலும் மத்திய அரசின் கீழ் இயங்குவதால் தமிழக அரசின் பிடியிலிருந்து தப்பி மத்தியில் அரசின் சதி வலையில் மாட்டிக் கொண்டார் விஜய். இந்த வழக்கை சிபிஐ விசாரிப்பதன் மூலம், பாஜக-அதிமுக கூட்டணியிலிருப்பதால் அதிமுக விஜய்யிடம் கூட்டணிக்கு நீங்கள் வந்து தான் ஆக வேண்டும். ஆனால் ஆட்சி பங்கோ, அதிக தொகுதிகளோ, முதல்வர் பதவியோ தர முடியாது என்று திட்ட வட்டமாக கூறியுள்ளது.

இல்லையென்றால் சிபிஐ விசாரணை உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரித்துள்ளது. இபிஎஸ், இதையெல்லாம் பாஜக மேலிடம் சொல்லி தான் செய்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில் விஜய் என்ன முடிவு எடுப்பார் என்பது தான் அரசியல் சூழலில் பரபரப்பாக உள்ளது.

இனி பெரிதாக லாபமில்லாத 10 கல்லூரி படிப்புகள்! ஹார்வர்ட் அதிர்ச்சி அறிக்கை 

0

ஹார்வர்ட் பல்கலைக்கழக பொருளாதார நிபுணர்கள் கூறியதாவது – கணினி அறிவியல், பொறியியல், வணிகம் போன்ற சில பாரம்பரிய பட்டப்படிப்புகளின் மதிப்பு காலப்போக்கில் குறைந்து வருகிறது.

வேலைத் துறையில் வேகமாக மாறும் திறன்கள் இதற்கு காரணம்.
தொடர்ச்சியான திறன் மேம்பாடு (upskilling) இப்போது அவசியமானது, ஏனெனில் அனைத்து பட்டங்களும் நீண்டகால வேலை வாய்ப்பை உறுதி செய்யாது.

முன்பு உறுதியான பாதை, இன்று சவாலானது

முன்னொரு காலத்தில் வணிகம் முதல் பொறியியல் வரை எந்த பட்டப்படிப்பும் வெற்றிக்கு வழி என்ற நம்பிக்கை இருந்தது.
ஆனால், இன்றைய வேகமான தொழில்நுட்ப மாற்றம், தானியக்கமடைந்த வேலைகள் ஆகியவை கல்வி சான்றிதழ்களின் மதிப்பை மறுபரிசீலனை செய்ய வைத்திருக்கிறது.

பட்டத்தின் கண்ணியம் போதாத நிலை

ஹார்வர்ட் பொருளாதார நிபுணர் டேவிட் ஜே. டெமிங் மற்றும் ஆய்வாளர் கடீம் நோரே 2020 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வில் —
கணினி அறிவியல், பொறியியல், வணிகம் போன்ற பயன்பாட்டு துறைகளில் கிடைக்கும் வருமானம் காலத்துடன் வேகமாக குறைகிறது என்று கண்டறிந்தனர்.

முன்பு “தங்கச் சான்றிதழ்” எனக் கருதப்பட்ட பட்டங்கள், இப்போது தங்கள் பிரகாசத்தை இழந்து வருகின்றன.தொழில் உலகில் வேகமாக நடக்கும் மாற்றங்களுக்கு இணைந்து தன்னைத்தானே மேம்படுத்தாதவர்கள் பின் தள்ளப்படுகிறார்கள்.

பிரபல MBA பட்டங்களும் இதற்கு விலக்கல்ல —
2025 தொடக்கத்தில் ஹார்வர்ட் பிஸினஸ் ஸ்கூல் உள்ளிட்ட நிறுவனங்கள்
உயர் நிலை வேலை வாய்ப்புகளைப் பெற MBA பட்டதாரிகளே சிரமப்படுவதாக தெரிவித்துள்ளன.

மனிதநேயம் சார்ந்த படிப்புகள் – ஆர்வம் குறைவு

பயன்பாட்டு அறிவியல் துறைகள் தங்கள் சவால்களை சந்திக்கும்போது,
மனிதநேய (Humanities) மற்றும் சமூகவியல் (Social Sciences) துறைகள் மாணவர் சேர்க்கையில் மெதுவாக சரிவை எதிர்கொள்கின்றன.2013 முதல், ஹார்வர்ட் தரவுகள் காட்டுவது – மாணவர்கள் STEM மற்றும் வேலை சார்ந்த பாடப்பிரிவுகளுக்கே அதிகம் மாறி வருகின்றனர்.

இது மாணவர்களின் விருப்பம் மட்டுமல்ல, நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளும் மாறிவிட்டதை குறிக்கிறது.2022 ஆம் ஆண்டு ஹார்வர்ட் வெளியிட்ட “Degree Reset” அறிக்கையில் — நிறுவனங்கள் இனி பொதுவான பட்டங்களை விட, குறிப்பிட்ட திறன்கள் (Data Analytics, Digital Skills) கொண்டவர்களையே விரும்புகின்றன என்று குறிப்பிடப்பட்டது.

மதிப்பு இழக்கும் 10 படிப்புகள் (Harvard Report, 2025)

1. பொது வணிக மேலாண்மை (MBA உட்பட) – அதிகமான பட்டதாரிகள் மற்றும் மாறிய வேலை முறை காரணமாக லாபம் குறைவு.
2. கணினி அறிவியல் – ஆரம்பத்தில் உயர்ந்த சம்பளம் இருந்தாலும், தொடர்ந்த திறன் மேம்பாடு இல்லையெனில் மதிப்பு குறைகிறது.
3. இயந்திர பொறியியல் – தானியக்கம் மற்றும் வெளிநாட்டு உற்பத்தி பாதிப்பு.
4. கணக்கியல் – AI மற்றும் Automation மனித பங்களிப்பை குறைக்கிறது.
5. உயிர் வேதியியல் (Biochemistry) – கல்வி துறைக்கு அப்பாற்பட்டு குறைந்த பயன்பாடு.
6. உளவியல் (Psychology) – உயர் படிப்பு இல்லாமல் நேரடி வேலை வாய்ப்புகள் குறைவு.
7. ஆங்கிலம் மற்றும் மனிதநேயம் – மாணவர் சேர்க்கை சரிவு, தெளிவற்ற வேலை வாய்ப்பு.
8. சமூகவியல் மற்றும் சமூக அறிவியல் – வேலை சந்தை இணைப்பு பலவீனம்.
9. வரலாறு (History) – நடுத்தர வயது சம்பள உயர்வு குறைவு.
10. தத்துவம் (Philosophy) – திறன்கள் மதிக்கப்படினும், நேரடி வேலை சந்தை மதிப்பு குறைவு.

புதிய காலத்தின் தேவை – திறன்கள் மற்றும் தழுவும் திறன்

2025 மாணவர் தேர்வு அறிக்கை (Student Choice Report) கூறுவது —
பொறியியல், கணினி அறிவியல், செவிலியப் பாடம் (Nursing) ஆகியவை இன்னும் நல்ல முதலீட்டு வருமானம் தரும் துறைகள்.
ஆனால் எதிர்காலம், படைப்பாற்றல், விமர்சன சிந்தனை, உணர்ச்சி நுண்ணறிவு கொண்டவர்களுக்கே சொந்தமானது.

ஹார்வர்ட் ஆய்வாளர்கள் கூறுவதாவது:

“எதிர்கால கல்வி என்பது ஒரு பட்டம் அல்ல, தொடர்ந்து கற்றுக்கொள்வது தான் வெற்றியின் திறவுகோல்.”

தொழில்நுட்பம், மனிதமையச் சிந்தனை, தொடர்ந்து கற்றல் இந்த மூன்றையும் இணைக்கும் பாடங்கள் பாரம்பரிய துறைகளை விட சிறந்த பயனளிக்கும்.

கல்லூரி பட்டங்கள் அழிந்துவிடவில்லை — ஆனால் அவற்றின் மதிப்பின் வரையறை மாறிவிட்டது. இப்போது வெற்றி பெறுவோர், தங்கள் கல்வியை ஒரு முறை முடிந்தது என்று நினைக்காமல், தொடரும் கற்றல் பயணமாகக் காண்பவர்களாக இருப்பார்கள்.

தொழில்நுட்ப திறன், தழுவும் திறன், படைப்பாற்றல், சமூக அறிவு இந்த நான்கு இணைந்தால் மட்டுமே, ஒரு மனிதன் எதிர்காலத்தில் நிலைத்து நிற்க முடியும்.

வீக் ஆன எடப்பாடி பழனிசாமி.. விஜய்க்காக கொடி பிடிப்பது அதிமுக தொண்டர்கள் அல்ல இபிஎஸ் தான்!!

0

ADMK TVK: 2026 சட்டமன்ற தேர்தலில் அடியெடுத்து வைத்திருக்கும் விஜய் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். தனது முதல் மாநாட்டிலேயே கூட்டணி அமைக்க தயார் என்று கூறிய அவர், கூட்டணி குறித்த முடிவை ஜனவரியில் பொங்கலுக்கு பின் தான் அறிவிப்போம் என்று உறுதியாக உள்ளார். இந்நிலையில் கரூர் சம்பவம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் ஏற்பட்ட கூட்டம் அரசியல் தலைவனை பார்க்க வந்த கூட்டம் அல்ல, நடிகரை பார்க்க வந்த கூட்டம் என்று பலரும் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் கரூர் சம்பவத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரசியலாக்குகிறார் என்ற விமர்சனமும் எழுந்தது. இந்த சூழலில் அதிமுகவின் பிரச்சாரத்தில் தவெக கொடி பறந்ததை பார்த்த இபிஎஸ் பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று கூறினார். இது குறித்து இபிஎஸ்க்கு எதிரானவர்கள், விஜய்க்காக கொடி பிடிப்பது அதிமுக தொண்டர்கள் அல்ல இபிஎஸ் தான் என்று கூறி வருகின்றனர்.

ஏனேன்றால், புதிய கட்சியுடன் இபிஎஸ் இவ்வளவு இணக்கம் காட்டி வருவது, அதிமுகவிற்கு ஏற்பட்டிருக்கும் அவமானமாக சிலர் கருதுகின்றனர். மேலும் கரூர் சம்பவத்திற்கு விஜய் மீதும் தவறு உள்ள பட்சத்தில், திமுக தனது அரசியல் என்ற ஒரே காரணத்தினால் இபிஎஸ் அனைத்து தவறையும் திமுக அரசு மீது சுமத்துவது, எடப்பாடி பழனிசாமி வீக் ஆகி விட்டார் என்பதற்கு எடுத்துக்கட்டாக இருக்கிறது என்றும் சிலர் கூறுகின்றனர். இபிஎஸ்யின் இந்த செயல்முறை ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் பலர் கூறிவருகின்றனர்.

தொடர் சர்ச்சையை எழுப்பிய விஜய்யின் பில்டப் அரசியல்.. பிரபல இயக்குனர் விஜய் மீது கடும் தாக்கு!!

0

TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் வருகையை பலரும் பலவிதமாக விமர்சித்து வந்தனர். விஜய் மக்களோடு மக்களாக கலந்து பேசவில்லை. இன்னும் அரசியல் புரியாதவராகவே இருக்கிறார் என்பது தான் பொதுவாக அனைவரும் விமர்சித்த கருத்து. இந்நிலையில், இயக்குநர் அமீர் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அரசியல் நடத்தை குறித்தும், அவரின் அணுகுமுறையையும் கடுமையாக விமர்சித்தார்.

அமீர் பேட்டியின் போது, நான் பல முறை முதல்வர் ஸ்டாலினை விமானத்தில் சந்தித்திருக்கிறேன். ஆனால் விஜய் தனி விமானத்தில் தான் பயணம் செய்கிறீர்கள். அதுதான் பெரிய பிரச்சனை. நீங்கள் மக்களோடு கலந்துகொண்டு பயணித்தால் தான் மக்களின் விருப்பங்களை அறிய முடியும். அப்போது தான் உங்கள் பேச்சில் இந்த வார்த்தை வேண்டாம், இந்த கருத்து பொருந்தவில்லை என்று சுட்டிக்காட்டுவார்கள். ஆனால் நீங்கள் தனி விமானத்தில் பயணம் செய்து வந்து விடுகிறீர்கள்.

அப்படியானால், மக்களிடம் எப்போது உரையாட போகிறீர்கள்? எனக் கேட்டார். மேலும் அவர், விஜய் இரண்டு வருடங்களுக்கு முன் கட்சியைத் தொடங்கியிருந்தாலும், இதுவரை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தவில்லை. ஒரு அரசியல் தலைவர் மக்களுடன் நேரடியாக உரையாட வேண்டும். பேச்சு வழியாகவே மக்களின் மனதை புரிந்துகொள்ள முடியும். ஆனால் விஜய்யின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது, எனவும் குற்றம்சாட்டினார்.

இந்த பேட்டி நடந்து கொண்டிருந்தபோது, அமீரின் பின்னால் கருப்பு சட்டை அணிந்திருந்த இளைஞர் ஒருவர் திடீரென தன் கையில் இருந்த விஜய் புகைப்படம் பதிக்கப்பட்ட கீச்செயினை கேமரா முன் காட்டி சிரித்தார். அந்த காட்சி செய்தியாளர் மத்தியிலும், பின்னர் சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதனால் சமூக வலைதளங்களில் பலரும் தவெக ஆதரவாளர்களின் நடத்தை குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாற்றுக் கருத்து கொண்டவர்கள் பேசும் போது அவர்களை இப்படி கலாய்ப்பது ஜனநாயக மரியாதைக்கு எதிரானது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிலர் அமீரின் பேச்சை எதிர்த்து விஜய்யின் முடிவுகளை நியாயப்படுத்தியிருக்க, சிலர் அவரின் விமர்சனத்தில் உண்மை இருக்கிறது எனவும் கூறி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில், இயக்குநர் அமீர் கூறிய பேச்சும், பின்னணியில் நடந்த கீச்செயின் சம்பவமும், விஜய்யின் அரசியல் பயணத்தைச் சுற்றி புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது.

தவெகவிலிருக்கும் கருப்பு ஆடு.. கண்டறிந்த விஜய்.. அட இவரா அது.. ஷாக்கில் தவெக தொண்டர்கள்!!

0

TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் அதற்கான ஆதரவு அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் புதிதாக உதயமான கட்சிக்கு இந்த அளவுக்கு ஆதரவு பெருகியது இதுவே முதல் முறையாகும். இக்கட்சி 2 மாபெரும் மாநாடுகளை நடத்தியதோடு, மக்களை சந்திக்கும் பணியிலும் ஈடுப்பட்டுள்ளது. 5 பிரச்சாரங்களை நடத்திய தவெக ஆறாவதாக கரூரில் பிரச்சாரம் மேற்கோளும் போது எதிர்பாராத விதமாக கூட்ட நெறிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் தற்போது கூட்டணி கணக்குகளில் ஆர்வம் காட்டாத விஜய், கரூர் சம்பவத்தில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இது தொடர்பாக தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், அவர்களை கைது செய்த போலிசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், விஜய்யிக்கு தலைமை பண்பே இல்லையென்றும், இது எந்த மாதிரியான கட்சி என்றும் கேள்வி எழுப்பியிருந்தது.

இதற்கு பதிலளித்த விஜய் தரப்பு காவலாளர்களின் உத்தரவின் அடிப்படையில் தான் அங்கிருந்து வெளியேறினோம் என்று கூறினார்கள். இவ்வாறு கரூர் சம்பவத்தில் தொடர்ந்து விஜய் மீது தவறான கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளதால், விஜய்யிக்கு அவருடன் நெருங்கிய உறவில் இருக்கும் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது தான் சந்தேகம் உள்ளதாக கூறப்படுகிறது. அது யார் என்பதை விஜய் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் தகவல் வந்துள்ளது. இந்நிலையில் அந்த கருப்பு ஆடு ஆதவ் ஆர்ஜூனா தான் என்றும் விஜய் கண்டறிந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறி வருகின்றன.

விஜய்யை முதல்வர் வேட்பாளராக்க திட்டம் தீட்டும் டிடிவி தினகரன்.. முழிக்கும் இபிஎஸ்.. குஷியில் விஜய்!!

0

AMMK ADMK TVK: அதிமுகவிலிருந்து இபிஎஸ்யால் வெளியேற்றப்பட்ட டிடிவி தினரகன் இபிஎஸ்யை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். பிறகு பாஜக கூட்டணியில் இணைந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக-பாஜக கூட்டணி அமைத்தது. அப்போது இபிஎஸ் பாஜகவிடம் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோரை கூட்டணியிலிருந்து விளக்க வேண்டுமென நிபந்ததை விதித்தார்.

அப்போது அது கண்டுக்கொள்ளாத பட்சத்தில், அண்மையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் பிடிக்காத டிடிவி தினகரன் பாஜக கூட்டணியிலிருந்து விலகியதோடு, இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்கா முடியாது என்றும் கூறினார். மேலும் இபிஎஸ்யை தவிர வேறு யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினாலும் கூட்டணியில் இணைவோம் என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தினார்.

இதனை தொடர்ந்து தினகரனிடம் பல்வேறு மத்திய அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தியும் அவர் அவருடைய  முடிவில் உறுதியாக இருந்தார். இந்நிலையில் அவர் தவெகவில் இணைவார் என்றும் எதிர்ப்பார்க்கபட்டது. ஆனால் விஜய் கரூர் சம்பவத்திற்கு பிறகு அதிமுக கூட்டணியில் இணையும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் இபிஎஸ்யை முதல்வராக்கவா விஜய் கட்சி ஆரம்பித்தார் என்று விஜய்யை தூண்டிம் வகையில் பேசியுள்ளார். இது விஜய்-இபிஎஸ் இடையே தலைமை போட்டியை ஏற்படுத்தும் நோக்கில் உள்ளது என்று பலரும் கூறி வர, மற்றொரு கோணத்திலிருந்து பார்த்தால், அதிமுக-பாஜக கூட்டணியில் விஜய்யை முதல்வர் வேட்பாளராக்க திட்டமிடும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது.

அவ்வாறு விஜய் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் தினகரன் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைவார், அதுமட்டுமல்லாமல் இபிஎஸ்யை எளிதாக வீழ்த்த முடியும் என்ற நோக்கில் தான் தினகரன் செயல்பட்டு வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

காங்கிரஸ் தலைமையின் தொடர் சதி.. உடன்பிறப்புகள் ஆவேசம்.. விஜய் வசந்த் அதிரடி!!

0

CONGRESS DMK: சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில் திமுக கூட்டணி கட்சிகளிடையே பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அதோடு ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் மக்களை சந்திக்கும் பணியிலும் ஈடுப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்து வண்ணம் உள்ளதால், திமுக அதன் கூட்டணி கட்சிகளின் பலத்தில் சிதைவு ஏற்படாமல் பாதுகாத்து வருகிறது.

ஆனால் கூட்டணி கட்சிகளோ புதிய புதிய அழுத்ததை திமுக தலைமைக்கு கொடுத்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.எஸ். அழகிரி ஆட்சியில் பங்கையும், அதிக தொகுதிகளையும் கேட்போம் என்றும், மேலும் திமுகவின் கோட்டையாக திகளும் ஓரு தொகுதியையும் எங்களுக்கு தர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீதமிருக்கும் 6 மத காலத்திற்காவது துணை முதல்வர் பதவியை திருமாவளவனுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் போதுமான அளவு தியாகங்களை செய்து விட்டது. அது போதுமென்று நினைக்கிறேன், இனிமேல் ஆட்சியில் பங்கை கேட்பதை பற்றி தான் காங்கிரஸ் கட்சியில் விவாதிக்கபடும் என்று கூறினார்.

இதன் சூடு கூட தனியாத சமயத்தில், கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த தமிழகத்தில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது தான் அனைத்து காங்கிரஸ் தரப்பினரின் விருப்பம் என்று தெரிவித்துள்ளார். இந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக சீட்டுக்கள் வாங்குவதில் உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்து அதிக தொகுதிகளையும், ஆட்சி பங்கையும் வலியுறுத்துவது காங்கிரஸ் தலைமையின் திட்டமிட்ட சதி என்றும் உடன்பிறப்புகள் கூறி வருகின்றனர்.

கரூர் விவகாரத்தில் முக்கிய திருப்பம் .. உச்சநீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

0

TVK: 2026யில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களம் காண இருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. தவெகவிற்கு யாரும் எதிர் பாராத அளவு ஆதரவு பெருகியது ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனை அடியோடு சரிக்கும் நிகழ்வாக அரங்கேறியது தான் கரூர் சம்பவம். இந்த சம்பவம் நிகழந்து 15 நாட்களுக்கு மேலாகியும் அதன் தாக்கம் சற்றும் குறையவில்லை.

இதற்கெல்லாம் காரணம் திமுக அரசு என்று தவெக, தொண்டர்களும் விஜய்யும் கூறி வந்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு தனி நபர் ஆணையம் அமைத்தது. இதனை ஏற்காத விஜய் தரப்பு சிபியை விசாரணையை கோரி நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. விஜய்யை தொடர்ந்து இபிஎஸ், அண்ணாமலை போன்ற கட்சியின் முக்கிய தலைவர்களும் சிபியை விசாரணையை கோரியிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஜய்க்கு தலைமை பண்பே இல்லையென்றும், இது எந்த மாதிரியான கட்சி என்றும் கேட்டு கடுமையான விமர்சனத்தை எழுப்பியது. இதற்கு பதிலளித்த விஜய் தரப்பு, அங்கிருந்த காவலாளர்களின் உத்தரவின் பேரில் தான் தான் விஜய்யும், இரண்டாம் கட்ட தலைவர்களும் அங்கிருந்து புறப்பட்டனர். தொண்டர்களை கைவிடும் நோக்கம் எங்களுக்கு இல்லை என்று கூறியிருந்தது.

மேலும் விஜய் மீதான நீதிமன்றத்தின் கருத்து அவர் மீதும், கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீதும் உள்ள மதிப்பை குறைத்து விட்டதாகவும் கூறியது. இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் 13 ஆம் தேதியான இன்று அமர்வுக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐக்கு கைமாற்ற வேண்டுமென தீர்ப்பளித்துள்ளது. இந்த விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.

மோடிக்கு துரோகம் செய்து விட்டு பச்சோந்தி போல பாஜகவில் சேர்ந்துள்ளார்.. கொந்தளிப்பில் டிடிவி தினகரன்!!

0

AMMK: 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, மாநிலம் முழுவதும் அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, அமமுக, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட முக்கிய கட்சிகளனைத்தும் தங்கள் அமைப்புகளை வலுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூரில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த தேர்தலில் அமமுக கூட்டணியே ஆட்சியை அமைக்கும். எங்கள் கூட்டணியில் இணையும் தலைவர்கள் உறுதியுடன் செயல்படுவார்கள்.

துரோகம் செய்தவர்களை மக்கள் கண்டிப்பாக வீழ்த்துவார்கள் என்றார். மேலும், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த தினகரன், பழனிசாமி கட்சித் தொண்டர்களை ஏமாற்றி மாற்றுக் கட்சி கொடியை பிடிக்க செய்கிறார். கொடநாடு வழக்கிலும் பல ஊழல் வழக்குகளிலும் சிக்கியவர். பாஜகவுக்கு எதிராக பேசிவிட்டு இன்று அதே கட்சியோடு கூட்டணி வைத்துள்ளார் எனக் குற்றம் சாட்டினார்.

கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பை குறித்து பேசிய அவர், இதற்கு விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும். தமிழகமே துக்கத்தில் மூழ்கியுள்ளது எனக் கூறினார், மேலும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆனால் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக தூக்கிச் சென்றால் பயணம் மந்தமாகும். அவரை இறக்கிவிட்டால் வேகம் கூடும் எனவும் சாடினார். 2026 தேர்தலை முன்னிட்டு அமமுக மாவட்ட அளவிலான கூட்டணித் திட்டமிடல் தீவிரமாக தொடங்கியுள்ளதாகவும், தேர்தலில் முக்கிய சக்தியாக அமமுக உருவாகும் என்றும் தினகரன் உறுதியளித்தார்.