புதன்கிழமை, மே 8, 2024
Home Blog Page 14

அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்பு  சாசனத்தை அழிக்க பாஜக முயற்சி செய்கிறது!! குற்றச்சாட்டு வைத்த ராகுல் காந்தி!!

அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்பு  சாசனத்தை அழிக்க பாஜக முயற்சி செய்கிறது!! குற்றச்சாட்டு வைத்த ராகுல் காந்தி!!
அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய இந்திய மக்களின் ஆன்மாவாக விளங்கும் இந்திய அரசமைப்பு சாசனத்தை பிரதமர் மோடி அவர்களும் பாஜக தலைவர்களும் இணைந்து அழிக்க நினைப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிண்ட் நகரில் காங்கிரஸ் கட்சி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கலந்து கொண்டார். பின்னர் மக்கள் மத்தியில் பாஜக கட்சி பற்றியும் ஆட்சி பற்றியும் இந்திய அரசமைப்பு சாசனம் பற்றியும் மேலும் பல விஷயங்களை பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி அவர்கள் “மக்களே இந்திய அரசமைப்பு சாசனம் என்பது வெறும் புத்தகம் மட்டும் கிடையாது. இந்திய அரசமைப்பு சாசனமானது மக்களுக்கு உரிமைகளை பெற்றுத் தரும் சாசனம் ஆகும்.
இந்திய அரசமைப்பு சாசனத்தை அம்பேத்கர் அவர்கள் உருவாக்கினார். இந்த அரசமைப்பு சாசனம் இந்திய மக்களின் ஆன்மாவாக விளங்குகின்றது. தற்பொழுது நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து அம்பேத்கர் உருவாக்கிய இந்திய மக்களின் ஆன்மாவாக விளங்கும் இந்திய அரசமைப்பு சாசனத்தை அழிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக கட்சி தலைவர்கள் அனைவரும் முயற்சி செய்கின்றனர்.
பாஜக இந்திய அரசமைப்பு சாசனத்தை அழிக்க முயற்சி செய்கின்றது. ஆனால் இந்தியா கூட்டணி கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் இந்திய அரசமைப்பு சாசனத்தை காப்பாற்ற முயற்சி செய்கின்றோம். பாஜக கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிப்பதா அல்லது காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பதா என்று மக்கள் நீங்களே முடிவு செய்ய வேண்டும்.
வெறும் 25 தொழிலதிபர்களின் ஆதரவை வைத்து ஒட்டுமொத்த இந்தியாவையே ஆட்சி செய்ய வேண்டும் என்று பாஜக கட்சி ஆசைப்படுகின்றது. தொழிலதிபர்களுக்கு வழங்கப்பட்ட 16 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ள மத்திய அரசு விவசாயிகள் வாங்கிய கடன்களையும், தொழிலாளர்கள் வாங்கிய கடன்களையும் மத்திய அரசு தள்ளுபடி செய்யவில்லை.
அதோ போல இந்திய ராணுவத்தில் அக்னிப் பாதை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிபோனது. ரயில்வே உள்பட பொதுத்துறை நிறுவனங்கள் பாஜக கட்சியால் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றது. பாஜக அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் இட ஒதுக்கீட்டை ஒழிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியது ஆகியவற்றால் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்பொழுது வேலைவாய்ப்பின்மை உருவாகி இருக்கின்றது. வேலைவாய்ப்பின்மை போலவே பாஜக ஆட்சியில் பணவீக்கம் உயர்ந்திருக்கின்றது.
தற்பொழுது நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் மத்திய அரசு பணிகளில் 30 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும். அதே போல இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பை அதிகரிக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று ராகுல் காந்தி அவர்கள் உறுதி அளித்து பேசினார்.

#BREAKING | விருதுநகர் : காரியாபட்டி கல்குவாரி வெடி விபத்து! சிதறிய மனித உடல்கள்!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்குவாரியில் நேரிட்ட இந்த வெடி விபத்தில் மேலும் பலர் சிக்கி உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கல்குவாரியில் இன்று காலை பாறை உடைக்கும் பணியின் போது நேர்ந்த இந்த கொடூர விபத்தில் 4 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த கல்குவாரி வெடி விபத்து சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கல்குவாரியை நிரந்தரமாக மூட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தின்போது மக்கள் குரல் எழுப்பினர்.

தொழிலாளர் தினமான இன்று இப்படி ஒரு கோர விபத்து நடந்திருப்பது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரியாபட்டி கல்குவாரி வெடி விபத்து

Kariyapatti Fire Accident

இதற்கிடையே இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளியான அந்த சிசிடிவி காட்சியில் சக்திவாய்ந்த வெடி குண்டு வெடித்தால் ஏற்படும் எப்படி இருக்குமோ அப்படி இருப்பதை உணர்த்துகிறது.

ஏற்கனவே விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளால் நடக்கும் வெடி விபத்துக்கள் பல உயிர்களை பலிவாங்கிவரும் நிலையில், இன்று கல்குவாரியில் நடந்த வெடி விபத்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றி, மக்களின் உயிரை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மக்கள் முன்வைத்துள்ளனர்.

ஓட்டு போட வருபவர்களுக்கு இலவச விமான டிக்கெட்!! அதிரடியான அறிவிப்பு எங்கு தெரியுமா!!

ஓட்டு போட வருபவர்களுக்கு இலவச விமான டிக்கெட்!! அதிரடியான அறிவிப்பு எங்கு தெரியுமா!!
வெளிநாடுகளில் இருந்து தேர்தலில் ஓட்டு போட வருபவர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என்று வெளிநாட்டுவாழ் இந்தியர்களை ஓட்டு போடுவதற்கு ஊக்குவிக்கும் வகையில் இஸ்லாமிய அமைப்பு அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய தேர்தல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன் பின்னர் ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் வாக்களிக்க வரும் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இலவசமாக விமான டிக்கெட் புக் செய்து தரப்படும் என்று கர்நாடக மாநிலத்தில் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதியில் முதல் கட்டமாக 14 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மீதம் உள்ள 14 தொகுதிகளுக்கு வரும் மே 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் தற்பொழுது இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தரகன்னடா தொகுதியில் தான் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
உத்தரகன்னடா தொகுதியில் அதிகமாக இஸ்லாமிய வாக்காளர்கள் இருக்கின்றனர்.  அந்த தொகுதியில் உள்ள இஸ்லாமிய வாக்காளர்கள் பணிக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வாக்களிக்க வரும் இஸ்லாமியர்களுக்கு இலவச விமான டிக்கெட் புக் செய்து தரப்படும் என்று சவுதி அரேபியாவில் உள்ள பட்கல் இஸ்லாமிய அமைப்பு அறிவித்துள்ளது.
உத்தரகன்னடா மக்களவை தொகுதியில் 1200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் ஓட்டுப் போட ஊக்குவிக்கும் வகையில் இலவசமாக விமான டிக்கெட் புக் செய்து தருவதாக பட்கல் இஸ்லாமிய அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த இலவச அறிவிப்பு எதனால் என்று வாக்காளர்களை சிந்திக்க தூண்டியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அதாவது சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்கு வர வேண்டும் என்றால் விமான டிக்கெட்டின் விலை 25000 ரூபாயில் இருந்து 30000 ரூபாய் வரை செலவு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பட்கல் இஸ்லாமிய அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டது வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

டம்மி வரி என்று நினைத்து எழுதப்பட்ட பாடல்.. சூப்பர் டூப்பர் ஹிட்டானாது – வைரமுத்து எதை கூறுகிறார் தெரியுமா??

0

டம்மி வரி என்று நினைத்து எழுதப்பட்ட பாடல்.. சூப்பர் டூப்பர் ஹிட்டானாது – வைரமுத்து எதை கூறுகிறார் தெரியுமா??

தமிழ் படங்களில் பல அற்புத பாடல்கள் உருவாக காரணமாக இருந்தவர்களில் ஒருவர் பாடலாசிரியர் வைரமுத்து.இதுவரை 5800க்கும் அதிகமான பாடல்களை எழுதி இருக்கும் இவர் இளையராஜா,ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.

இவர் பாடல் வரிகளில் இரட்டை அர்த்தத்தை புகுத்தக் கூடிய திறமை கொண்ட பாடலாசிரியர்.ஆபாச வார்தைகளை கூட அனைவரும் ரசிக்கும் படியான அர்த்தத்தில் எழுதி இருக்கும் வைரமுத்து அவர்கள் குஷி படத்தில் வரும் சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான “கட்டிப்புடி கட்டிப்புடிடா” பாடல் எவ்வாறு உருவானது என்பது குறித்த சுவாரஸ்ய தகவலை பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் விஜய்,ஜோதிகா,விஜயகுமார்,விவேக் உள்ளிட்ட பலர் நடித்து வெளிவந்த படம் குஷி. படத்தின் ஹிட்டுக்கு இசையமைப்பாளர் தேவாவின் இசை மற்றும் வைரமுத்துவின் பாடல் வரிகள் முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அதிலும் விஜய் மற்றும் மும்தாஜ் இணைந்து நடனமாடிய “கட்டிப்புடி கட்டிப்புடிடா” பாடலுக்கு இணையான ஒரு பாடல் இதுவரை உருவாகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.பாடலின் ஹைலைட் வரிகளே “கட்டிப்புடி கட்டிப்புடிடா” தான்.அப்படி இருக்கையில் வைரமுத்து எழுதிய இந்த பாடலில் “கட்டிப்புடி கட்டிப்புடிடா” வரி முதலில் இடம் பெறவில்லை.தேவா அவர்கள் ‘ஒரு கமர்ஷியல் சாங்’ மாதிரி இருக்க வேண்டும் என்று கேட்ட பின்னர் ஒரு டம்மியாக தான் “கட்டிப்புடி கட்டிப்புடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா” வரியை சேர்த்திருக்கிறார்.

இந்த வரிகள் இயக்குநர் எஸ்.ஜே சூர்யாவிற்கு பிடித்து போக இதை பாட்டின் தொடக்க வரிகளாக வைத்து கொள்ளலாமா என்று எண்னிடம் தேவா கேட்டார்.நானும் இதையே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்ன பின்னர் பாடல் ரெக்கார்டிங் முடிந்தது.இப்படி தான் கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடல் உருவானது என்று வைரமுத்து கூறி இருக்கிறார்.

பெரும் ஆபத்து.. இவர்களெல்லாம் கட்டாயம் கூழ் குடிக்கவே கூடாது!! மக்களே அலார்ட்!!

0

பெரும் ஆபத்து.. இவர்களெல்லாம் கட்டாயம் கூழ் குடிக்கவே கூடாது!! மக்களே அலார்ட்!!

கோடை வெயிலை சமாளிப்பதற்காக ஏராளமானோர் இளநீர்,நுங்கு, கூழ் போன்றவற்றை தினந்தோறும் குடித்து வருகின்றனர். ஆனால் உடல் உபாதை உள்ளவர்களுக்கு இதனை சாப்பிட்டால் சேராமல் போகும். அந்த வகையில் யாரெல்லாம் கூழ் குடிக்கலாம் யாரெல்லாம் குடிக்க கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாகவே மற்ற தானியங்களை காட்டிலும் கம்பில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. கம்பு சாப்பிடுவதால் அதில் உள்ள முழு சத்துக்களும் நமது உடலுக்கு கிடைக்கும். அதேபோல கம்பில் தான் அதிகளவிலான இரும்பு சத்து அதிகம் உள்ளது.ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்களுக்கு கம்பை எடுத்துக்கொள்ளலாம். இந்த கம்பானது உடல் கொழுப்பை கரைக்க உதவும்.

கம்புடன் சிறிதளவு மோர் சேர்த்து குடிப்பதால் நமது குடலுக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகள் கம்பு சோறு, கூழ் போன்றவற்றை தினந்தோறும் சாப்பிடலாம். சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் கேப்பங்கூழ் குடிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் தைராய்டு மற்றும் செரிமான பிரச்சனை உள்ளவர்களும் இதனை அறவே குடிக்கக் கூடாது. சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்களும் இதனை குடிக்க கூடாது. மேற்கொண்டு வயிறு மற்றும் இவ்வாறன பிரச்சனை உள்ளவர்கள் வாரத்தில் ஒரு முறை குடிக்கலாம்.மேற்கொண்டு குடிக்க உங்களது மருத்துவரிடம் கலந்தாலோசிக்கலாம்.

நுங்கு எப்படி வாங்கலாம்..எந்த நேரத்தில் சாப்பிடலாம்!! மக்களே தெரிந்துக்கொள்ளுங்கள்!!

0

நுங்கு எப்படி வாங்கலாம்..எந்த நேரத்தில் சாப்பிடலாம்!! மக்களே தெரிந்துக்கொள்ளுங்கள்!!

கோடைகாலத்தில் நமது உடலை இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிருட்டு பானங்களை தவிர்த்து விட்டு இளநீர் நுங்கு போன்றவற்றை சாப்பிடலாம். குறிப்பாக இந்த இளநீர் நுங்கு யாரெல்லாம் சாப்பிடலாம் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது எப்படி வாங்க வேண்டும் என்ற வரைமுறை உள்ளது.

நுங்கு எடுத்துக் கொண்டால் முன்பே வெட்டி வைத்து சாப்பிடுவதை தவிர்க்கலாம். நீண்ட நேரம் நுங்கானது வெட்டி வெளியில் இருந்தால் அதனை சாப்பிடக்கூடாது. அதேபோல நுங்கு சாப்பிடுவதற்கு முன் அதனை ஒருமுறை கழுவிக்கொள்ள வேண்டும். பாக்டீரியா தொற்றுகள் ஈக்கள் போன்றவை அதன் மேல் உட்காருவதால் நமது உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்தும்.

இதனால் நுங்கை கழுவி சாப்பிடுவது நல்லது. அதேபோல அதிகளவு முற்றிய நுங்கு  சாப்பிடுவதால் வயிற்று கோளாறு உண்டாகும். அதேபோல நுங்கில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் அதனின் தோலுடன் சாப்பிட வேண்டும். இதனை பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் தவிர்த்துக் கொள்ளலாம். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தோலுடன் சாப்பிட்டால் செரிமான பிரச்சனை உண்டாகும்.

காலை உணவு சாப்பிட்டபின் நுங்கு சாப்பிடலாம். அதற்கு மாறாக மதியம் மற்றும் மாலை நேரத்தில் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளலாம். அதேபோல நுங்கு அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடாது.அளவுடன் மட்டுமே சாப்பிட வேண்டும். நுங்கு வாங்கும் பொழுது மிகவும் வெள்ளையாக உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். மேற்கொண்டு அதிலிருந்து எந்த ஒரு துர்நாற்றமும் அடிக்கக்கூடாது. இவ்வாறு வாங்கினால் அது சாப்பிடுவதற்கு உகந்தது.

உடல் உஷ்ணத்தால் வரக் கூடிய கட்டிகள் மறைய இந்த இலையை அரைத்து மோரில் கலந்து குடியுங்கள்!!

உடல் உஷ்ணத்தால் வரக் கூடிய கட்டிகள் மறைய இந்த இலையை அரைத்து மோரில் கலந்து குடியுங்கள்!!

கோடை வெப்பத்தால் உடலின் சூடு இயல்பை விட அதிகரித்து வருகிறது.ஏற்கனவே உடல் உஷ்ண பிரச்சனை இருபவர்களுக்கு இந்த கோடை காலத்தில் தோல் தொடர்பான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

குறிப்பாக உடலில் சூடு கட்டி ஏற்பட்டு பெரும் தொந்தரவுகளை கொடுக்கும்.அது மட்டுமின்றி உடல் உஷ்ணத்தால் உடற் வறட்சி,கொப்பளங்கள்,தலைவலி,மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகிறது.

இந்த உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை குளுமையாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணவும்.இதற்கு மொத்தம் நான்கு பொருட்கள் தான் தேவைப்படும்.

1)பழம்பாசி இலை – ஒரு கைப்பிடி அளவு
2)சீரகம் – 1/4 தேக்கரண்டி
3)வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
4)மோர் – 1 டம்ளர்

பழம்பாசி இலை உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் கொண்டது.இதை ஒரு கைப்பிடி அளவு எடுத்து வெயிலில் போட்டு நன்கு உலர்த்திக் கொள்ளவும்.

பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/4 தேக்கரண்டி சீரகம் மற்றும் 1/4 தேக்கரண்டி வெந்தயத்தை தனி தனியாக ஒரு நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.இவை இரண்டும் கருகிட கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

பிறகு இதை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.பின்னர் ஒரு கிளாஸில் பிரஸ் மோர் ஊற்றி அரைத்த சீரகம் + வெந்தய பொடியை சேர்த்து கலக்கவும்.பின்னர் அரைத்த பழம்பாசி இலை பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டு கலக்கி குடிக்கவும்.

வெயில் காலம் முடியும் வரை இந்த பானத்தை குடித்து வந்தால் உடல் உஷ்ணம்,மஞ்சள் காமாலை,பித்தம் போன்ற நோய் பாதிப்புகள் உடலை அண்டாமல் இருக்கும்.

இரவு நேரத்தில் உங்கள் தொண்டை வறண்டு விடுகிறதா? இதற்கான காரணங்களும் தீர்வுகளும்!!

0

இரவு நேரத்தில் உங்கள் தொண்டை வறண்டு விடுகிறதா? இதற்கான காரணங்களும் தீர்வுகளும்!!

நள்ளிரவு நேரத்தில் அயர்ந்து தூங்கி கொண்டிருக்கும் பொழுது எழுந்திருப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயமாக இருக்கும்.நிம்மதியான தூக்கத்தை கலைக்கும் செயல்கள் நடந்தால் அவை விரும்பத்தக்க விஷயமாக இருக்கும்.

அதேபோல் இரவு தூக்கத்தின் போது தொண்டையில் வறட்சி ஏற்பட்டால் அவை மிகவும் சிரமத்தை கொடுக்கும்.அதிகப்படியான தொண்டை வறட்சி உடலில் நீர்ச்சத்து குறைபாடு இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.தூக்க காலத்தில் எழுந்து தண்ணீர் அருந்துவதை பெரும்பாலானோர் விரும்ப மாட்டார்கள்.

இரவு நேரத்தில் மட்டும் அதிகப்படியான தொண்டை வறட்சி ஏற்பட வாய் வழியாக சுவாசிப்பது தான் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.தொண்டையில் ஈரப்பதம் இல்லை என்பதை உணர்த்துகிறது.

பகல் நேரங்களில் போதிய நீர் அருந்தாமல் இருப்பதால் அவை தொண்டை வறட்சியை ஏற்படுத்துகிறது.தொண்டை வறட்சியுடன் காலையில் எழுந்தால் அவை உடல் ஆரோக்கியத்தை கெடுக்க தொடங்கி விடும்.மூச்சு திணறல் பிரச்சனை இருந்தால் தொண்டை வறட்சி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

தொண்டை வறட்சியை எவ்வாறு போக்குவது?

தினமும் அதிகளவு நீர் அருந்த வேண்டும்.இரவு தூங்கச் செல்வதற்கு முன் சிறிது தண்ணீர் அருந்துவதன் மூலம் தொண்டையில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படும்.

ஒரு கிளாஸ் நீரில் சிட்டிகை அளவு உப்பு மற்றும் 1/4 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து குடித்தால் இரவு நேர தொண்டை வறட்சி நீங்கும்.

இரவு நேரத்தில் சிறுநீர் வெளியேறும் உணர்வு இல்லாதவர்கள் அதிகளவு நீர் அருந்துவதன் மூலம் தொண்டை வறட்சியாவதை தடுக்க முடியும்.இதை எல்லாம் செய்வதன் மூலம் தொண்டை வறட்சியை சரி செய்து நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்க முடியும்.

கோடையில் 3 நாட்கள் வரை தயிர் புளிக்காமல் இருக்கு இந்த டிப்ஸ் உதவும்!

கோடையில் 3 நாட்கள் வரை தயிர் புளிக்காமல் இருக்கு இந்த டிப்ஸ் உதவும்!

வெயில் காலத்தில் சமைத்த உணவுகள் மற்றும் உணவுப் பொருட்கள் எளிதில் கெட்டுவிடும்.அதிகப்படியான வெயிலால் வெப்பநிலை உயர்ந்து உணவுப் பொருட்களில் பாக்டீரியாக்கள் வேகமாக வளரத் தொடங்கி விடுவதன் காரணமாக அவை எளிதில் கெட்டு விடுகிறது.

எனவே வெயில் காலத்தில் உணவுப் பொருட்டாக்களை கவனமாக பராமரியுங்கள்.சில உணவுப் பொருட்கள் எளிதில் புளித்து விடும்.இதில் தயிரை பற்றி சொல்லவே வேண்டியதில்லை.தயிர் உடலுக்கு குளிர்ச்சி கொடுக்க கூடிய பொருள் என்பதினால் அவை கோடை காலத்தில் அனைவரது வீடுகளிலும் அவசியம் இருக்கும்.

பொதுவாக தயிர் கெட்டியாக,புளிக்காமல் இருப்பதை தான் மக்கள் விரும்புகின்றனர்.ஆனால் கோடை காலத்தில் அவை எளிதில் புளித்து விடும்.ஆனால் சில டிப்ஸை பின்பற்றினால் பல நாட்களுக்கு தயிரை புளிப்பு இல்லாமல் பயன்படுத்தலாம்.

தயிர் புளிக்காமல் இருக்க உதவும் டிப்ஸ் இதோ:

டிப் 01:-

காய்ச்சிய பால் வெது வெதுப்பான சூட்டிற்கு வந்ததும் ஒரு பீங்கான் அல்லது மண் பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தயிர் சேர்த்து கலந்து விடவும்.பிறகு தட்டு போட்டு மூடி வைத்தால் 8 மணி நேரத்தில் புளிப்பு இல்லாத சுவையான தயிர் கிடைக்கும்.

பால் காய்ச்சிய பாத்திரத்தில் தயிர் போடுவதை தவிர்த்தால் அவை எளிதில் புளிக்காது.

டிப் 02:-

வெது வெதுப்பான பாலில் சிறிது தயிர் மற்றும் ஒரு துண்டு தேங்காய் சேர்த்தால் புளிப்பு இல்லாத கெட்டி தயிர் கிடைக்கும்.

டிப் 03:-

ஒரு ஸ்பூன் பொடியாக நறுக்கிய வாழை இலையை தயிரில் போட்டு வைத்தால் அவை விரைவில் புளிக்காமல் இருக்கும்.

சம்மரில் தலை முடியை முறையாக பராமரிக்க உதவும் அசத்தல் டிப்ஸ் உங்களுக்காக!

0

சம்மரில் தலை முடியை முறையாக பராமரிக்க உதவும் அசத்தல் டிப்ஸ் உங்களுக்காக!

ஆண்,பெண் அனைவரும் தங்களை அழகாக வைத்துக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுகின்றனர்.முகம் மட்டும் அல்ல தலை முடியையும் முறையாக பராமரிக்கும் பழக்கம் இருந்தால் மட்டுமே முழுமையான அழகை அடைய முடியும்.

ஆனால் என்னதான் தலை முடியை பராமரித்தாலும் ஒரு சிலருக்கு முடி உதிர்வு,முடி வெடிப்பு போன்ற பிரச்சனைகள் இருக்கத் தான் செய்கிறது.இவை கோடை காலத்தில் தான் அதிகளவு ஏற்படுகிறது.

கோடை காலத்தில் முடிகளுக்கு கூடுதல் அக்கறை கொடுத்து பராமரித்து வந்தால் முடி உதிர்தல் நின்று ஆரோக்கியமான முறையில் முடி வளரத் தொடங்கும்.

கோடை காலத்தில் தலை முடி அதிக வறட்சியை சந்திக்கும்.எனவே தலைக்கு தேங்காய் எண்ணெய் வைப்பது நல்லது.இரவு நேரத்தில் தலைக்கு ஆயில் மசாஜ் செய்து விட்டு படுப்பதன் மூலம் உடல் சூட்டை குறைக்க முடியும்.இதனால் முடி உதிர்தல் பிரச்சனை முடிவு கிடைக்கும்.

தலைக்கு இராசயனம் கலந்த ஷாம்புகளை உபயோகிப்பதை விட சீகைக்காய்,அரப்பு போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்துவது நல்லது.இதனால் தலை சூடு குறைந்து முடி உதிர்தல் நிற்கும்.

தலைக்கு கற்றாழை ஜெல்,வெந்தய பேஸ்ட்,சின்ன வெங்காய பேஸ்ட்டை பயன்படுத்துவதன் மூலம் உடல் சூட்டை குறைக்க முடியும்.இதனால் முடி உதிர்தல்,முடி வெடிப்பு பிரச்சனை சரியாகும்.

செம்பருத்தி பூ,கறிவேப்பிலை,செம்பருத்தி இலை,வேப்பிலையை அரைத்து ஹேர் பேக் போல் தலைக்கு பயன்படுத்தி வர முடி உதிர்தல் நிற்கும்.உடல் சூடு முழுமையாக தணியும்.

தயிரை அரைத்து தலைக்கு பயன்படுத்தி குளிப்பதன் மூலம் உடல் சூடு தணியும்.இதனால் முடி உதிர்தல்,பொடுகு,அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.